Friday, October 3, 2014

கடலூரில் இருந்து திருவதிகை வழியே...திருமாணிக்குழி தாண்டி.... சின்ன நரிமேடு என்று ஒரு இடம்.... அங்கு ஒரு மிகப் பழைமையான சிவாலயம் உள்ளது....


கடலூரில் இருந்து திருவதிகை வழியே...திருமாணிக்குழி தாண்டி.... சின்ன நரிமேடு என்று ஒரு இடம்.... அங்கு ஒரு மிகப் பழைமையான சிவாலயம் உள்ளது....
அதை தன்னால் இயன்றவரை கவனித்து வருபவர் உண்மையான சிவனடிமை ஒருவர். அவரது சிவபக்தி அலாதியானது.... சிவன் என்று நீங்கள் சொனால் அவர் உடல் சிலிர்க்கும்...அவர் கண்களில் கண்ணீர் பெருகும்....
மிகப்பெரிய பற்றுதலோடு சிவலிங்கத்தை பூஜிக்கிறார்...
கல்வி கேள்விகளில் பட்டம் பெறாதவராயினும், மிகப்பெரிய விஷயங்களை சாதாரண தமிழில் போட்டு உடைப்பார்.... சிவனார் அருளால் சிவஞானம் கைவரப் பெற்ற உன்னத தவ சீலர்.
இவருடைய பூர்வீகம் மரக்காணத்தை அடுத்த ஒரு சிற்றூர். பெரிய நிலச்சுவாந்தார்.... இவர் போகாத சிவ ஸ்தலமில்லை.... எல்லா இடங்களுக்கும் நடந்தே போய்வந்தவர்.... கிட்டத்தட்ட 13 வருடங்களுக்கு முன்பு சின்ன நரிமேடு வந்து அங்கேயே ஐக்யமாகிவிட்டார்....
அங்குவரும் அன்பர்களை அன்போடு உபசரிப்பார்.
இவரை நான் அடிக்கடி சந்திப்பேன். முதலில் அங்குள்ள கங்காதரேஸ்வரரையும்... அதன் பிறகு இவரையும்.!!

No comments:

Post a Comment