Thursday, October 16, 2014

கடன் தொல்லை தீர அகத்தியர் பாடல்

செல்வம் பெருகவும், கடன் தொல்லை தீரவும் உதவும் வகையில் பாடல் ஒன்றை அகத்திய முனிவர் எழுதி இருக்கிறார். இந்த பாடலை தினமும் பக்தியுடன் பாடி வந்தால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். இதை தனது பாடலிலேயே அகத்தியர் குறிப்பிட்டுள்ளார். 

கி.பி. 1564 முதல் 1604-ம் ஆண்டு வரை தென்பாண்டி நாட்டை ஆண்ட அதிவீரராம பாண்டியர் என்பவரால் இந்த பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிறப்புமிக்க அந்தப்பாடல் வருமாறு:-     

மூவுலகும் இடரியற்றும் அடலவுணர் உயிரொழிய முனிவு கூர்ந்த 
பூவை உறழ் திருமேனி அருட்கடவுள் அகன்மார்பில் பொலிந்து தோன்றித் 
தேவர்உல கினும் விளங்கும் புகழ்க்கொல்லா புரத்தினிது சேர்ந்து வைகும்
பாவை இருதாள் தொழுது பழமறைதேர் குறுமுனிவன் பழிச்சுகின்றான். 

கொழுதியிசை அளிமுரலும் தாமரையென் பொகுட்டிலுறை கொள்கைபோல 
மழையுறழுந் திருமேனி மணிவண்ணன் இதயமலர் வைகு மானே! 
முழுதுலகும் இனிதீன்ற அருட்கொம்பே! கரகமலம் முகிழ்ந்தெந் நாளுங் 
கழிபெருங்காதலில் தொழுவோர் வினைதீர அருள் கொழிக்குங் கமலக்கண்ணாய்! 

கமலைதிரு மறுமார்பன் மனைக்கிழத்தி செழுங்கமலக் கையாய் செய்ய 
விமலைபசுங் கழைகுழைக்கும் வேனிலான் தனையீன்ற விந்தை தூய 
அழுதகும்ப மலர்க் கரத்தாய் பாற்கடலுள் அவதரித்தோய் அன்பர் நெஞ்சத் 
திமிரகன்றிட வொளிருஞ் செஞ்சுடரே என வணக்கம் செய்வான் மன்னோ 

மடற்கமல நறும்பொகுட்டில் அரசிருக்கும் செந்துவர்வாய் மயிலே மற்றுன் 
கடைக்கணருள் படைத்தன்றோ மணிவண்ணன் உலகமெலாங் காவல் பூண்டான்
யடைத்தனன் நான்முகக் கிழவன் பசுங்குழவி மதிபுனைந்த பரமன் தானும் 
துடைத்தனன் நின் பெருங்கீர்த்தி எம்மனோரால எடுத்துச் சொல்லற் பாற்றோ 

மல்லல் நெடும் புவியனைத்தும் பொதுநீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும் 
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சியோடும் 
வெல் படையில் பகை துரந்து வெஞ்சமரில் வாகை புனை வீரர் தாமும் 
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே! 

செங்கமலப் பொலந்தாதில் திகழ்தொளிரும் எழில் மேனித் திருவே வேலை 
அங்கண்உல கிருள் துலக்கும் அலர்கதிராய் வெண் மதியாய் அமரர்க்கூட்டும் 
பொங்கழலாய் உலகளிக்கும் பூங்கொடியே நெடுங் கானில் யொருப்பில் மண்ணில் 
எங்குளை நீ அவணன்றோ மல்லல்வளம் சிறந்தோங்கி இருப்பதம்மா!

No comments:

Post a Comment