Wednesday, January 28, 2015

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்

கோவில்
------------
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். அடுத்து ஊரில் உள்ள எல்லாவித வீடுகள் மாளிகைகளை காட்டிலும் கோவிலானது அளவில் பெரியதாகவும் ,உயரமான கோபுரத்தோடும் அமைந்திருக்கும். இதனால் கன்னிமூலை வாஸ்து சாஸ்திரப்படி பாரமாகவும் , உயரமாகவும் இயற்கையாகவே அமைந்துவிடும்.இப்படி அமைத்து விட்டாலே மற்ற திசைகளுக்கு உரிய சக்தி தானாகவே வந்துவிடும்.
ஒரு ஊரின் கன்னி மூலையில் கோவில் அமைவதால் மட்டும் அந்த ஊருக்கு சிறப்புக்கள் வந்து விடாது .அந்த கோவிலில் ஆறுகால பூஜைகள் நடைபெறவேண்டும் .ஊர்முழுக்க கேட்கும்படி மணி சப்தம் ஒலிக்க வேண்டும் .அந்த கோயிலுக்கு என்று மரத்தால் ஆன தேர் ஒன்றும் கட்டாயம் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோயிலுக்கு ஈசான்ய பாகத்தில் திருக்குளம் அமைந்திருந்தால் அந்த ஆலயம் காலத்தால் நாளுக்கு நாள் அருள் அலைகள் பெருகி சிறப்பு மிகுந்த ஆலயமாக திகழும் .அது மாத்திரமல்ல ,அந்த கோவிலின் கோபுர கலசத்தில் தான் எல்லாவித சிறப்புகளும் ஒளிந்துள்ளன .அதன் வழியாக
தான் ஊரில் அமைதியும் செல்வமும் பெருக்கெடுக்கச் செய்யும் சக்தி மிகுந்த அலைகள் பரவுகின்றன .
அந்த காலத்தில் அரசர்கள் தான் கிராமங்களை வடிவமைத்தனர். அப்படி வடிவமைக்கும் பொது ஆறு பாயும் இடமாகப் பார்த்து கிராமங்களை நிறுவினார்கள். கிருஷ்ணா ,ராமா என்று இறை நினைப்போடு இருப்பவர்கள் அமைதியாக வாழும் இடம்
என்கிற பொருளில் வந்து தான் கிராமம் என்று கூறுவார்கள் .அப்படி வடிவமைக்கும் போது வடக்கு பக்கம் ஆறு ஓடும்படி பார்த்துகொண்டு ஆற்றுக்குத் தென் பக்கத்தில் ஊரை வடிவமைப்பார்கள் பெரும்பாலும் செவ்வகமாகவே வடிவமைப்பார்கள் .
இப்படி இருக்கும் போது தென் புறத்தில் மலையோ , காடோ இருந்தால் அந்த ஊரை மிக விசேசமாக கருதுவார்கள். பெரும்பாலும் ஊரில் எல்லோருமே வளமோடு தான் இருப்பார்க்கள்.அப்படி வடிவமைக்க படும் ஊரின் சிறப்பையும் ஏதாவது ஒரு விதத்தில்
குறித்து வைப்பார்கள் .எழுதி வைப்பது ஒரு விதம் ......கோவிலுக்குள் சங்கேத பாஷையில் சிற்பங்கள் மூலமாக செதுக்கி வைப்பது இன்னொரு விதம்! குறிப்பாக ஒரு ஊரின் கோவில் கோபுரம் அந்த ஊரைப்பற்றிய நன்மை தீமைகளை சொல்லும் விதமாக இருக்கும். இதை பார்த்து அறிய நமக்கு பட்டறிவு வேண்டும் .
பொதுவில் ஊரின் கன்னி மூலையில் கோயிலைக் கட்டினால், அக்னி பாதத்தில் மயானம் வரும்படி பார்த்துக் கொண்டார்கள் .அதே போல ஈசான்ய மூலையில் ஆறும் குளமும் அமையும் படியும் பார்த்து கொண்டனர். அது வழியாகவே ஊருக்குள் வந்து செல்லும் பாதையை வடிவமைத்து கொண்டனர்.வாயு மூலையில் பெரிய தோட்டம் மற்றும் மைதானம் அமைத்து அங்கே உடற்பயிற்சிகள் செய்ய வழிவகை செய்தனர் .ஊரின் நட்ட நடுவில் ஒரு பெரிய கல் மண்டபம் எழுப்பி அங்கிருந்து நான்கு புறமும் நான்கு திசைநோக்கி செல்ல தெருக்களை உருவாக்கினார்கள் . கல் மண்டபத்தை சுற்றி வேலிபோட்டு அதன் மையமான பிரம்ம பாகத்தில் எவர்காலும் படாதபடி பார்த்து கொண்டனர்.இப்படி மிக சரியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட எந்த ஒரு ஊரும் காலத்தால் வளராமல் போனதே இல்லை. இப்படிப் பட்ட ஊர்களில் வாழ்பவர்கள் ஒற்றுமையுடனும் நோய் நொடி இன்றியும் வாழ்ந்தனர் .இந்த ஊரின் தேவையான ஆக்க சக்தியை கோயில் கலசம் தவறாமல் வளங்கிகொண்டிருக்கிறது . இருந்தும் காலத்தால் சில கோயில்கள் பாழ்பட்டு போயின .அதாவது திட்டமிட்டு சிலர் அந்த கோயில்களை நாசம் செய்தனர். அப்படி செய்ததன் பின்னால் மிகபெரிய சுயநலம் ஒளிந்திருக்கிறது.
கோவில்
------------
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். இதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. கோவில் என்று ஒன்று இருக்க வேண்டுமானால் ஊரின் எட்டு திசையில் கோலானது பெரும்பாலும் ஊரின் கன்னி மூலையில் தான் அமைந்திருக்கும். அடுத்து ஊரில் உள்ள எல்லாவித வீடுகள் மாளிகைகளை காட்டிலும் கோவிலானது அளவில் பெரியதாகவும் ,உயரமான கோபுரத்தோடும் அமைந்திருக்கும். இதனால் கன்னிமூலை வாஸ்து சாஸ்திரப்படி பாரமாகவும் , உயரமாகவும் இயற்கையாகவே அமைந்துவிடும்.இப்படி அமைத்து விட்டாலே மற்ற திசைகளுக்கு உரிய சக்தி தானாகவே வந்துவிடும்.

ஒரு ஊரின் கன்னி மூலையில் கோவில் அமைவதால் மட்டும் அந்த ஊருக்கு சிறப்புக்கள் வந்து விடாது .அந்த கோவிலில் ஆறுகால பூஜைகள் நடைபெறவேண்டும் .ஊர்முழுக்க கேட்கும்படி மணி சப்தம் ஒலிக்க வேண்டும் .அந்த கோயிலுக்கு என்று மரத்தால் ஆன தேர் ஒன்றும் கட்டாயம் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக கோயிலுக்கு ஈசான்ய பாகத்தில் திருக்குளம் அமைந்திருந்தால் அந்த ஆலயம் காலத்தால் நாளுக்கு நாள் அருள் அலைகள் பெருகி சிறப்பு மிகுந்த ஆலயமாக திகழும் .அது மாத்திரமல்ல ,அந்த கோவிலின் கோபுர கலசத்தில் தான் எல்லாவித சிறப்புகளும் ஒளிந்துள்ளன .அதன் வழியாக 
 தான் ஊரில் அமைதியும் செல்வமும் பெருக்கெடுக்கச் செய்யும் சக்தி மிகுந்த அலைகள் பரவுகின்றன .

அந்த காலத்தில் அரசர்கள் தான் கிராமங்களை வடிவமைத்தனர். அப்படி வடிவமைக்கும் பொது ஆறு பாயும் இடமாகப் பார்த்து கிராமங்களை நிறுவினார்கள். கிருஷ்ணா ,ராமா என்று இறை நினைப்போடு இருப்பவர்கள் அமைதியாக வாழும் இடம் 
 என்கிற பொருளில் வந்து தான் கிராமம் என்று கூறுவார்கள் .அப்படி வடிவமைக்கும் போது வடக்கு பக்கம் ஆறு ஓடும்படி பார்த்துகொண்டு ஆற்றுக்குத் தென் பக்கத்தில் ஊரை வடிவமைப்பார்கள் பெரும்பாலும் செவ்வகமாகவே வடிவமைப்பார்கள் .
இப்படி இருக்கும் போது தென் புறத்தில் மலையோ , காடோ இருந்தால் அந்த ஊரை மிக விசேசமாக கருதுவார்கள். பெரும்பாலும் ஊரில் எல்லோருமே வளமோடு தான் இருப்பார்க்கள்.அப்படி வடிவமைக்க படும் ஊரின் சிறப்பையும் ஏதாவது ஒரு விதத்தில் 
 குறித்து வைப்பார்கள் .எழுதி வைப்பது ஒரு விதம் ......கோவிலுக்குள் சங்கேத பாஷையில் சிற்பங்கள் மூலமாக செதுக்கி வைப்பது இன்னொரு விதம்! குறிப்பாக ஒரு ஊரின் கோவில் கோபுரம் அந்த ஊரைப்பற்றிய நன்மை தீமைகளை சொல்லும் விதமாக இருக்கும். இதை பார்த்து அறிய நமக்கு பட்டறிவு வேண்டும் .

பொதுவில் ஊரின் கன்னி மூலையில் கோயிலைக் கட்டினால், அக்னி பாதத்தில் மயானம் வரும்படி பார்த்துக் கொண்டார்கள் .அதே போல ஈசான்ய மூலையில் ஆறும் குளமும் அமையும் படியும் பார்த்து கொண்டனர். அது வழியாகவே ஊருக்குள் வந்து செல்லும் பாதையை வடிவமைத்து கொண்டனர்.வாயு மூலையில் பெரிய தோட்டம் மற்றும் மைதானம் அமைத்து அங்கே உடற்பயிற்சிகள் செய்ய வழிவகை செய்தனர் .ஊரின் நட்ட நடுவில் ஒரு பெரிய கல் மண்டபம் எழுப்பி அங்கிருந்து நான்கு புறமும் நான்கு திசைநோக்கி செல்ல தெருக்களை உருவாக்கினார்கள் . கல் மண்டபத்தை சுற்றி வேலிபோட்டு அதன் மையமான பிரம்ம பாகத்தில் எவர்காலும் படாதபடி பார்த்து கொண்டனர்.இப்படி மிக சரியாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட எந்த ஒரு ஊரும் காலத்தால் வளராமல் போனதே இல்லை. இப்படிப் பட்ட ஊர்களில் வாழ்பவர்கள் ஒற்றுமையுடனும் நோய் நொடி இன்றியும் வாழ்ந்தனர் .இந்த ஊரின் தேவையான ஆக்க சக்தியை கோயில் கலசம் தவறாமல் வளங்கிகொண்டிருக்கிறது . இருந்தும் காலத்தால் சில கோயில்கள் பாழ்பட்டு போயின .அதாவது திட்டமிட்டு சிலர் அந்த கோயில்களை நாசம் செய்தனர். அப்படி செய்ததன் பின்னால் மிகபெரிய சுயநலம் ஒளிந்திருக்கிறது.

Saturday, January 24, 2015

மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?

மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?
மாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500
கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடி மாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படு கின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'!
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலை வில் இருக்கிறது தேவலபூர். லட்சக்கணக்கில் விவசாயிகளின் தற் கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.
மலை, குன்று... மேடு, பள்ளம்... பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு என பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.
ஊரைக் கடந்து கொஞ்ச தூரத்தில் ... 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற இடம்.
வி.ஹெச்.பி. எனப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் அமைப்புதான் இந்த 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'. இந்தக் கேந்திராவின் இயக்குநர் சுனில்மான் சின்ஹா இந்த அமைப்பு பற்றி விரிவாக கூறுகின்றார்.
அர்க் எனும் அருமருந்து!
"அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பது தான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் அது கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது).
22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டு பராமரிக்கிறோம்.
அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற் றையும்... அடிமாடு களாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக் கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத் துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக் கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.
'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந் தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது, அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கி புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. எங்களுடைய மருந்துப் பொருட்களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது.
உரிய வகையில், அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறு நீரை காய்ச்சினால், கிட்டத் தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளி யில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களு டையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.
மாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக் கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலை யில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது"
இங்கு தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக, இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடு களை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள்" என்று கூறும் சுனில்மான் சின்ஹா, சிறுநீர் சேகரிப்பு பற்றியும் விவரிக்கின்றார்..
விடிற்காலை நான்கு மணிக்கு சிறுநீரைப் பிடிக்கும் வேலை ஆரம்பமாகும். "மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்துவிடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங்கிய வுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுகின்றனர்"
பயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!
அங்கிருக்கும் 22 ஏக்கர் பரப்புக்குள் மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன.
"இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இவர்களுடைய பணி மற்றும் தயாரிப்புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்க தயாராக உள்ளனர். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.
உணவு செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும்" என்று கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள்..
தமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு தினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களை தடுத்தி நிறுத்தி இப்படி நல்ல முறையில் அவற்றை பேணிக்காத்து பயன்பெறலாமே!
மாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்?

மாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500
கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு... கடைசியில், 'அடச்சே, அடி மாடு' என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படு கின்றன பசுமாடுகள். ஆனால், 'இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல... அத்தனையும் காமதேனு' என்று சத்தம் போட்டுச் சொல்கிறது 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'!
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் நகரிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலை வில் இருக்கிறது தேவலபூர். லட்சக்கணக்கில் விவசாயிகளின் தற் கொலை அரங்கேறிய... சபிக்கப்பட்ட பூமியான விதர்பா பகுதியில்தான் இருக்கிறது இந்த தேவலபூர்.
மலை, குன்று... மேடு, பள்ளம்... பொட்டல்வெளி, அடர்ந்தக் காடு என பல பகுதிகளையும் கடந்து இந்த ஊர் உள்ளது. சுமார் முன்னூறு, நானூறு வீடுகளுடன் கண்களில் படர்கிறது தேவலபூர்.
ஊரைக் கடந்து கொஞ்ச தூரத்தில் ... 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா' என்ற இடம்.
வி.ஹெச்.பி. எனப்படும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் அமைப்புதான் இந்த 'கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா'. இந்தக் கேந்திராவின் இயக்குநர் சுனில்மான் சின்ஹா இந்த அமைப்பு பற்றி விரிவாக கூறுகின்றார்.
அர்க் எனும் அருமருந்து!
 "அடிமாடுகளைக் காப்பாற்றி, அவற்றின் வாழ் நாள் வரை பாதுகாப்பது தான் இந்த கேந்திராவின் நோக்கம். இந்த கேந்திரா தொடங்கப்பட்டு, 11 ஆண்டுகள் ஆகின்றன. மாடு என்பது பால் கொடுக்கும், சாணம், மூத்திரம் கொடுக்கும் என்றுதான் எல்லோரும் பார்த்து வருகிறார்கள். ஆனால், நமக்கு வேண்டிய அத்தனை செல்வங்களையும் அது கொடுக்கும் என்று பலருக்கும் தெரிவதில்லை (மாடு என்றால் தமிழில் 'செல்வம்' என்றொரு பொருள் இருக்கிறது).
22 ஏக்கரில் உள்ள இந்த மையத்தில் ஒரு கோசாலை இருக்கிறது. ஏறத்தாழ 400 மாடுகள் உள்ளன. சாகியவால், சிந்து, தார்பார்க்கர் என்று இந்தியாவின் பலபாகங்களில் காணப்படும் பல்வேறு ரக நாட்டு மாடுகளும் இங்கு உள்ளன. 'இனி பால் கறக்காது. இவற்றால் நமக்குப் பயன் இல்லை' என்ற நிலையில் தான் அடிமாடுகள் என்று முத்திரை குத்தி, இறைச் சிக்காக மாடுகள் விற்கப்படுகின்றன. அப்படிப் பட்ட மாடுகளைத்தான் மீட்டு பராமரிக்கிறோம்.
அந்த மாடுகளிடம் இருந்து கிடைக்கும் சாணம், மூத்திரம் போன்றவற் றையும்... அடிமாடு களாக ஒதுக்கப்பட்ட பிறகும், வந்த இடத்திலிருக் கும் காளைகளோடு இணைந்ததால் கன்று ஈனும் பசுக்களிடமிருந்து கிடைக்கும் பாலையும் பயன்படுத்தி அர்க் உள்ளிட்ட ஆயுர்வேத மருத் துவப் பொருட்கள், பல்பொடி, சோப்பு, ஷாம்பு, வாசனைப் பவுடர் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்கள், வேளாண் பயிர்களுக்குத் தேவையான வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் என்று என 36 விதமான பொருட்களை தயாரிக் கிறோம். இவற்றை உள்நாட்டில் விற்பனை செய்வதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.
 'அர்க்' என்பது, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் ஒரு சாதனை மருந் தாக எங்களால் கண்டுபிடிக்கப்பட்ட பொருளாகும். இது, அமெரிக்காவின் காப்புரிமை பெற்ற மருந்துப் பொருள். பசு மாட்டின் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த 'அர்க்', சர்க்கரை நோய் தொடங்கி புற்றுநோய் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. எங்களுடைய மருந்துப் பொருட்களுக்கு 'இந்தியன் மெடிக்கல் கவுன்சில்' சான்று வழங்கியுள்ளது.
உரிய வகையில், அதற்குரிய உபகரணங்களுடன் 20 லிட்டர் மாட்டு சிறு நீரை காய்ச்சினால், கிட்டத் தட்ட 13 லிட்டர் அர்க் கிடைக்கும். ஒரு லிட்டர் அர்க் 160 ரூபாய் என்று இங்கே விற்பனை செய்கிறோம். ஆனால், வெளி யில் அதன் விலை 500 ரூபாயையும் தாண்டி விற்கப்படுகிறது. எங்களு டையது சேவை அமைப்பு என்பதால் குறைந்த விலைக்கே கொடுக்கிறோம்.
மாடுகளின் சிறுநீரைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இயற்கை பூச்சிக் கொல்லி, அமுதக்கரைசல், பஞ்சகவ்யா போன்றவை குறைந்த விலை யில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது"
இங்கு தினமும் இரவு ஏழு மணிக்கு இப்பூஜை நடக்கும். இதன் மூலம் இயல்பாகவே மாடுகளின் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிடுகிறது. இதன் காரணமாக, இங்குள்ள பணியாளர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் மாடு களை குச்சியால் அடிக்கவோ, அதட்டவோ மாட்டார்கள்" என்று கூறும் சுனில்மான் சின்ஹா, சிறுநீர் சேகரிப்பு பற்றியும் விவரிக்கின்றார்..
விடிற்காலை நான்கு மணிக்கு சிறுநீரைப் பிடிக்கும் வேலை ஆரம்பமாகும். "மாட்டின் சிறுநீரை எளிதாக நாங்கள் சேகரிக்கிறோம். பழக்கத்தின் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது. காலை நான்கு மணிக்கும், இரவு ஒன்பது மணிக்கும் தினசரி சிறுநீர் சேகரிக்கப்படுகிறது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் மாட்டின் சிறுநீர் உறுப்பில் கை வைத்ததும் சிறுநீர் கழித்துவிடுகிறது. உலோகம் அல்லது பிளாஸ்டிக் பாத்திரத்தில் அதைச் சேகரித்துவிடுவோம். ஒரு மாடு சிறுநீர் கழிக்கத் தொடங்கிய வுடன் பக்கத்தில் உள்ள மாடுகள் அடுத்தடுத்து கழிக்கத் தொடங்கிவிடும். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு சேகரித்துவிடுகின்றனர்"
பயிற்சிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்!
அங்கிருக்கும் 22 ஏக்கர் பரப்புக்குள் மருத்துவப் பொருட்கள், வேளாண் இடுபொருட்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. 
 "இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம், இந்தியக் கால்நடை ஆராய்ச்சிக் கழகம் போன்றவை இவர்களுடைய பணி மற்றும் தயாரிப்புகளை அங்கீகரித்துள்ளன. முழுக்க சேவை அடிப் படையில் இயங்கும் இந்த மையத்தில் ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் தயாரிப்புக் குறித்த பயிற்சியும் கொடுத்து வருகின்றனர்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து விவசாயிகளும், சுய உதவிக்குழு பெண்கள், தொழில்முனைவோர் என்று பலரும் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர். விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சிக் கொடுக்க தயாராக உள்ளனர். பயிர் வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்க விரும்புகிறார்களா... அல்லது அர்க் போன்ற மருந்து பொருட்கள் தயாரிக்க விரும்புகிறார்களா என்பதைப் பொறுத்து பயிற்சியின் கால அளவு நிர்ணயிக்கப்படும்.
உணவு செலவுக்காக மட்டும் சிறிய தொகையினைக் கட்டணமாக செலுத்தினால் போதும்" என்று கூறுகின்றனர் இந்த அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள்..
தமிழகத்திலிருந்து லாரி லாரியாக கேரளத்து கசாப்புக் கடைகளுக்கு தினசரி அனுப்பப்படும் ஆயிரக்கணக்கான 'காமதேனு'க்களை தடுத்தி நிறுத்தி இப்படி நல்ல முறையில் அவற்றை பேணிக்காத்து பயன்பெறலாமே!

Friday, January 23, 2015

சூரியனுக்கு உகந்த ரத சப்தமி

சூரியனுக்கு உகந்த ரத சப்தமி :
உலகுக்கு ஒளி தரும் பகலவனைப் பொங்கல் வைத்து வழிபட்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடும் தை மாதத்தில் வருகிறது. அதுதான் ரத சப்தமி. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கிப் பயணப்படுகிறார்.
அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. உத்திராயண தை அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாகக் கடைபிடிக்கப்படுகிறது.
ரத சப்தமியன்றுதான் சூரியன் உதித்தார், அவரது ஜெயந்திநாளே ரத சப்தமி என்றும் சொல்லப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சூரியன் உதயம்
சூரியன் அவதரித்தது குறித்து ஒரு கதை உண்டு. காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, கர்ப்பம் தரித்திருந்த நேரம் அது. அதிதி தன் கணவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அப்போது அந்தணர் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அதிதி, தன் கணவனுக்கு உணவு பரிமாறிய பிறகு, தளர் நடையுடன் வந்து அந்தணருக்கு உணவு அளித்தாள்.
அதிதியின் இந்தச் செயலால் அந்தணர் கோபம் கொண்டார். தர்மத்தைப் புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தைக் காப்பதற்காக அதிதி மெதுவாக நடந்து வந்ததால், அந்தக் கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் இட்டார். அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, தன் கணவரிடம் நடந்தவற்றைச் சொன்னாள். காஷ்யப முனிவர், அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் பிறப்பான் என்று வாக்களித்தார். காஷ்யபரின் வாக்குப்படி ஒளி பொருந்தியவனாக, உலகைக் காக்கும் சூரியன் பிறந்தான்.
விரதமிருக்கும் முறை
ரத சப்தமியன்று நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவர். அன்று சூரிய உதயத்துக்கு முன் துயிலெழ வேண்டும். ஏழு எருக்க இலைகளை எடுத்துத் தலை மீது வைத்துக் கொண்டு, ஆண்கள் அதன் மீது சிறிது அட்சதையையும் விபூதியையும் வைத்து கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் அட்சதையும் மஞ்சளும் வைத்து நீராட வேண்டும்.
இப்படி நீராடுவதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் கரைந்துபோகும் என்பது நம்பிக்கை. பொதுவாகச் சூரிய உதயத்துக்கு முன் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுவது உகந்தது. இயலாதவர்கள் வீட்டிலேயே புனித நீராடலாம். எருக்க இலைகளைத் தலை மீது வைத்து நீராடுவதால் உடல் நலம் காக்கும் என்பது நம்பிக்கை.
நீராடிய பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். தெரிந்த சூரிய துதிகளைச் சொல்லலாம். சூரியனுக்கு அர்க்ய மந்திரம் சொல்லி, நீர்விட வேண்டும். தெரியாதவர்கள், வேதம் படித்தவர்களிடம் உபதேசம் பெற்றுச் செய்யலாம். சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். வழிபாடு முடிந்த பிறகு சூரிய பகவானுக்குப் படையலிட்ட பொங்கலை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கலாம்.
பெருமாளின் அம்சமே சூரியன். அதனால் ரத சப்தமியன்று கோயில்களில் பெருமாள் சூரிய பிரபையில் எழுந்தருள்வார். ரத சப்தமியன்று விரதமிருப்பது சிறந்தது.
அன்றைய தினம் விரதமிருந்தால் நீடித்த ஆயுளும், உடல் நலமும் பெறலாம். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்துக்குப் பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொழில் தொடங்கினால், விருத்தியடையும். பெண்கள் உயர்நிலையை அடைவர்.
இந்த விரதம் பெண்களின் சுமங்கலித்துவத்தை நீடிக்கச் செய்யும் என்றும் நம்பிக்கை உண்டு.
எருக்க இலையின் மகத்துவத்தை பீஷ்ம புராணம் மூலம் வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி, தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில், திருமலை ஸ்ரீ நிவாசப் பெருமாள் உள்பட பல ஆலயங்களில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமலையின் ஏழு மலைகளை ஏழு குதிரைகளாகப் பாவித்து, ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் ரத சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
உலகின் இருள் நீக்கும் பகலவனை வணங்கி, வாழ்வில் ஒளி பெறுவோம்.
சூரியனுக்கு உகந்த ரத சப்தமி :

உலகுக்கு ஒளி தரும் பகலவனைப் பொங்கல் வைத்து வழிபட்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடும் தை மாதத்தில் வருகிறது. அதுதான் ரத சப்தமி. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கிப் பயணப்படுகிறார்.

அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச் சிறுக அதிகரித்து, பூமியின் வெம்மையைக் கூட்டுகிறான். அதைக் குறிக்கும்விதமாகவும் அன்று சூரியனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. உத்திராயண தை அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாவது நாள் ரத சப்தமியாகக் கடைபிடிக்கப்படுகிறது.

ரத சப்தமியன்றுதான் சூரியன் உதித்தார், அவரது ஜெயந்திநாளே ரத சப்தமி என்றும் சொல்லப்படுகிறது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலா வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

சூரியன் உதயம்

சூரியன் அவதரித்தது குறித்து ஒரு கதை உண்டு. காஷ்யப மகரிஷியின் மனைவி அதிதி, கர்ப்பம் தரித்திருந்த நேரம் அது. அதிதி தன் கணவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள். அப்போது அந்தணர் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். நிறைமாத கர்ப்பிணியான அதிதி, தன் கணவனுக்கு உணவு பரிமாறிய பிறகு, தளர் நடையுடன் வந்து அந்தணருக்கு உணவு அளித்தாள்.

அதிதியின் இந்தச் செயலால் அந்தணர் கோபம் கொண்டார். தர்மத்தைப் புறக்கணித்துவிட்டு கர்ப்பத்தைக் காப்பதற்காக அதிதி மெதுவாக நடந்து வந்ததால், அந்தக் கர்ப்பம் கலைந்து போகட்டும் என்று சாபம் இட்டார். அந்தணரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி, தன் கணவரிடம் நடந்தவற்றைச் சொன்னாள். காஷ்யப முனிவர், அமிர்தம் நிறைந்த உலகில் இருந்து என்றைக்கும் அழிவில்லாத மகன் பிறப்பான் என்று வாக்களித்தார். காஷ்யபரின் வாக்குப்படி ஒளி பொருந்தியவனாக, உலகைக் காக்கும் சூரியன் பிறந்தான்.

விரதமிருக்கும் முறை

ரத சப்தமியன்று நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி சூரிய பகவானை வழிபடுவர். அன்று சூரிய உதயத்துக்கு முன் துயிலெழ வேண்டும். ஏழு எருக்க இலைகளை எடுத்துத் தலை மீது வைத்துக் கொண்டு, ஆண்கள் அதன் மீது சிறிது அட்சதையையும் விபூதியையும் வைத்து கிழக்கு திசை நோக்கி நீராட வேண்டும். பெண்கள் அட்சதையும் மஞ்சளும் வைத்து நீராட வேண்டும்.

இப்படி நீராடுவதன் மூலம் நம் பாவங்கள் அனைத்தும் கரைந்துபோகும் என்பது நம்பிக்கை. பொதுவாகச் சூரிய உதயத்துக்கு முன் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுவது உகந்தது. இயலாதவர்கள் வீட்டிலேயே புனித நீராடலாம். எருக்க இலைகளைத் தலை மீது வைத்து நீராடுவதால் உடல் நலம் காக்கும் என்பது நம்பிக்கை.

நீராடிய பிறகு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். தெரிந்த சூரிய துதிகளைச் சொல்லலாம். சூரியனுக்கு அர்க்ய மந்திரம் சொல்லி, நீர்விட வேண்டும். தெரியாதவர்கள், வேதம் படித்தவர்களிடம் உபதேசம் பெற்றுச் செய்யலாம். சூரியனுக்கு உகந்த நிவேதனம் சர்க்கரைப் பொங்கல். வழிபாடு முடிந்த பிறகு சூரிய பகவானுக்குப் படையலிட்ட பொங்கலை அனைவருக்கும் பிரசாதமாக வழங்கலாம்.

பெருமாளின் அம்சமே சூரியன். அதனால் ரத சப்தமியன்று கோயில்களில் பெருமாள் சூரிய பிரபையில் எழுந்தருள்வார். ரத சப்தமியன்று விரதமிருப்பது சிறந்தது.

அன்றைய தினம் விரதமிருந்தால் நீடித்த ஆயுளும், உடல் நலமும் பெறலாம். ரத சப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்துக்குப் பல மடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொழில் தொடங்கினால், விருத்தியடையும். பெண்கள் உயர்நிலையை அடைவர்.

இந்த விரதம் பெண்களின் சுமங்கலித்துவத்தை நீடிக்கச் செய்யும் என்றும் நம்பிக்கை உண்டு.

எருக்க இலையின் மகத்துவத்தை பீஷ்ம புராணம் மூலம் வியாசரால் மகாபாரதத்தில் விளக்கப்பட்டுள்ளது. ரத சப்தமி, தஞ்சை மாவட்டம் சூரியனார் கோயில், திருமலை ஸ்ரீ நிவாசப் பெருமாள் உள்பட பல ஆலயங்களில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. திருமலையின் ஏழு மலைகளை ஏழு குதிரைகளாகப் பாவித்து, ரத சப்தமி விழா கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலிலும் ரத சப்தமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

உலகின் இருள் நீக்கும் பகலவனை வணங்கி, வாழ்வில் ஒளி பெறுவோம்.

நீரில் நனையும் சிவலிங்கங்கள்..!



நீரில் நனையும் சிவலிங்கங்கள்..!
வித்தியாசமான லிங்கங்கள் சில திருத்தலங்களில் காணப்படுவதுபோல புனிதமான நீரில் நனையும் சிவலிங்கங்களும் உள்ளன.
ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்கா ஆலயத்தில் அருள்புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் .ஊறிக்கொண்டேயிருக்கும். லிங்கம் தண்ணீரில் மூழ்கி மறையாமலிருக்க நீரை அடிக்கடி முகந்து வெளியேற்றிக்கொண்டிருப்பார்கள். இந்த சிவலிங்கத்தை கருவறையின் மேற்குப் பகுதியில் உள்ள சாளரத்தின் வழியாகத்தான் தரிசிப்பார்கள்.
சீர்காழி திருக்காளமுடையார் கோவிலிலும் லிங்கம் தண்ணீரில் மூழ்கியிருப்பதைக் காணலாம்.
திருவேடகம் திருத்தலத்தில் மூலவர் லிங்கத்தின் முடியிலுள்ள பள்ளத்திலிருந்து தண்ணீர் ஊறி வெளிவந்து கொண்டிருக்கும்.
தஞ்சை பெரிய கோவில் மூலவர் பெரிய திருவுருவில் அருள்புரிகிறார். கருவறையைச் சுற்றி சந்திரகாந்தக் கற்கள் அமைந்திருப்பதால், கோடைக்காலத்தில் கருவறையின் உட்சுவர்களில் நீர்த்துளிகள் படிந்து, சிவலிங்கம் குளிர்ச்சியாக இருக்கும். மேலும், பெரிய கோவிலிலுள்ள சிவகங்கைத் தீர்த்தக்குளத்தின் நடுவில் ஒரு லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கம் தீர்த்தக்குளத்தில் மூழ்கியே இருக்கும். கடுமையான கோடைக்காலத்தில் நீர் வற்றும்போது மட்டும் லிங்கத்தை தரிசிக்கலாம்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கருவறையின் மேல்தளம் சந்திரகாந்தக் கற்களால் அமைந்துள்ளதால், எப்பொழுதும் சொட்டுச் சொட்டாக நீர்த்துளிகள் சிவலிங்கத்தின்மீது விழுந்த வண்ணம் உள்ளது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மூலவரின் திருவடியில் தேவதீர்த்த நீர் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும். இந்த நீர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

Monday, January 19, 2015

கோயில் மற்றும் வீடுகளில் செய்யக் கூடாதவைகள்


கோயில் மற்றும் வீடுகளில் செய்யக் கூடாதவைகள்
1. புண்ணிய தீர்த்தங்களில் வந்தவுடன் காலை வைக்கக்கூடாது. முதலில் ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும். குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
2. பூஜை வேளையில் தீபத்தை ஆடவர்கள் அணைக்கக் கூடாது. பூசணிக்காயை பெண்கள் உடைக்கக் கூடாது.
3. கோயிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
4. எவருடனும் வீண் வார்த்தைகள் கோயிலில் வைத்து பேசக்கூடாது.
5. தாம்பூலம் தரித்துக் கொண்டு கோயிலுக்குள் செல்லக்கூடாது.
6. மூர்த்தகளைத் தொடுதலோ, மூர்த்திகளின் திருவடிக்கருகில் கற்பூரம் ஏற்றுதல் கூடாது.
7. சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
8. வஸ்திரத்தை போர்த்திக் கொண்டு ஜபம், பிரதக்ஷிணம், நமஸ்காரம், பூஜை, ஹோமம் செய்யக்கூடாது.
9. பசுவிற்கும், அந்தணருக்கும் நடுவிலும், அந்தணர் அக்னியின் நடுவிலும், தம்பதிகளின் நடுவிலும், தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், குரு சிஷ்யரின் நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது
10. இரவில் துணி துவைக்கக் கூடாது. குப்பையை வெளியே கொட்டக் கூடாது. மரத்தில் நிழலில் தங்கக் கூடாது. ரகசியமான விஷயத்தைப் பேசக் கூடாது.
11. அன்னம், உப்பு, நெய் இவைகளை கையால் பரிமாறக் கூடாது.
12. ஒரே சமயத்தில் தனது இரு கைகளாலும் தன்னுடைய தலையை சொறியக்கூடாது.
13. ஆயுள், பொருள், வீட்டுத் தகராறு, மந்திரம், உடலுறவு, மருந்து, வருமானம், தானம், அவமானம் இந்த ஒன்பதும் பிறருக்குத் தெரியக்கூடாது.
14. சந்தியா கால வேளையில் சாப்பாடு, தூக்கம், உடலுறவு, அத்யயனம் இவைகள் செய்தல் கூடாது.
15. தீபாவளி தவிர மற்ற நாட்களில் அதிகாலைப் பொழுதில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளக்கூடாது.
16. இடது கையினால் ஜலம் அருந்தக்கூடாது.

கருணையின் மறுபெயர்தான் காமதேனு கோமாதாவை பாதுகாப்போம்


கருணையின் மறுபெயர்தான் காமதேனு கோமாதாவை பாதுகாப்போம்
அயோத்தியை ஆண்டு வந்த திலீபன் என்ற மன்னன், மகத நாட்டு இளவரசியை மணந்தான். பல ஆண்டுகளாகியும் அவர்களுக்கு மகப்பேறு இல்லாததால் மனவேதனை கொண்டனர். பல யாகங்களும் நடத்தி வந்தனர்.
திலீபனின் அரச குரு வசிஷ்டர், ஒருமுறை தம்பதியரை தனது ஆசிரமத்திற்கு அழைத்து உபசரித்தார். பின்னர் திலீபனுக்கும் இளவரசிக்கும் குழந்தை பாக்கியம் இல்லாததற்கான காரணத்தைக் கூறினார். ‘திலீபா! நீ ஒரு சமயம் தேவலோகம் சென்றிருந்தபோது, கற்பக விருட்சத்தின் கீழ் நின்றிருந்த காமதேனுவை அலட்சியம் செய்தாய்.
அதனால் இந்த நிலையை அடைந்திருக்கிறாய். காமதேனுவின் மனம் குளிரும்படி, நீ ஏதேனும் செய்தால் சாபம் நீங்கி உனக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்’ என்று வசிஷ்டர் கூறினார். மேலும் அதற்கான உபாயத்தையும் கூறியருளினார்.
‘திலீபா! காமதேனுவுக்கு நந்தினி என்ற ஒரு கன்று இருக்கிறது. அது என் ஆசிரமத்தில்தான் இருக்கிறது. அது இப்போது நதிக்கரையில் புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. நந்தினிக்கு தக்க உணவு உறைவிடம் தந்து, அதற்கு எந்த தீங்கும் வராமல் பாதுகாத்து வந்தால் தாய் பசுவாகிய காமதேனுவின் உள்ளம் குளிரும்.
உன் சாபமும் நீங்கும்’ என்றார். உடனே திலீபன் கற்றைத் தேடிப் புறப்பட்டுச் சென்றான். பாதுகாப்புக்காக வில்லையும், அம்பையும் உடன் எடுத்துச் சென்றான். நதிக்கரையோரம் புல் மேய்ந்து கொண்டிருந்த நந்தினியைக் கண்டதும் திலீபன் ஆவலுடன் அதை நெருங்கினான். நந்தினியை தன் அரண்மனைக்கு அழைத்து வர அவன் மனப்பூர்வமாக விரும்பினான்.
ஆனால் அவனைக் கண்டதுமே கன்று ஓடத் தொடங்கியது. திலீபனும், நந்தினியை தொடர்ந்து சென்றான். கன்று நிற்பதும், புல்லைத் தின்பதும், ஓடுவதுமாகவே இருந்தது. திலீபனும் சளைக்காமல் நந்தினியை பின்பற்றி ஓடினான். கன்று இமயமலைச் சாரலை அடைந்து ஒரு மரத்தடியில் நின்று இளைப்பாறியது.
அப்போது அதைப் பிடித்துவிட கூடிய வாய்ப்பு இருந்ததை திலீபன் உணர்ந்தான். ஆனால் சற்றும் எதிர்பாராத விதமாக திடீரென்று புதருக்குள் இருந்து ஒரு சிங்கம் வெளிப்பிட்டு கன்றின் மீது பாயத் தயாரானது. அதிர்ச்சி அடைந்த திலீபன், வில்லின் அம்பை பொருத்தி சிங்கத்தை வீழ்த்த முயன்றான்.
அந்த நேரத்தில் சிங்கம் தனது வடிவத்தை நீக்கி, ஒரு அசுரனாக மாறியது. திலீபன் அதிர்ந்து போனான். அசுரன் சிரித்த சிரிப்பு விண்ணை முட்டும் அளவு அதிர்ந்தது. அசுரன் பேசத் தொடங்கினான். ‘ஏய்! திலீபா! என்னை யார் என்று நினைத்தாய்? சிவபெருமானின் அஷ்ட மூர்த்திகளில் ஒருவன் நான்.
என் பெயர் கும்பாசூரன்’ என்று உரக்க கத்தினான். திலீபனும் சளைக்காமல், ‘உனக்கு இங்கு என்ன வேலை?’ என்றான். ‘இந்த மரம் பார்வதி தேவிக்கு பிரியமானது. இதன் மீது அவன் கந்தக் கடவுளைவிடவும் அளவுகடந்த பாசம் வைத்துள்ளார். இந்த மரத்தைப் பாதுகாப்பது என் வேலை.
இந்த மரத்தில் முதுகை தேய்த்து பட்டையை உதிர்க்கும் மிருகம் எதுவானாலும், அதை நான் உண்பது வழக்கம். மரத்தின் நிழலில் நிற்பது, படுப்பது, புல் மேய்வது எதையும் நான் அனுமதிப்பதில்லை. அதற்கான தண்டனை, அந்த மிருகம் எனக்கு இரையாவதுதான்.
இந்த கன்றும் எனக்கு இரையாகப் போகிறது’ என்று அசுரன் கர்ஜித்தான். ஆனால் திலீபனோ, ‘கன்றைக் காப்பது என் கடமை, அது வசிஷ்ட மகரிஷியின் ஆணையும் கூட. உன்னுடன் போரிட்டாவது கன்றை நான் மீட்பேன்’ என்று கூறினான். ‘என்னுடன் போரிடுவது என்பது இயலாதது.
நான் சர்வ சக்தி படைத்த இறைவனின் அனுக் கிரகம் பெற்றவன். நீ சாதாரண மனிதன். உன்னால் என்னை வெல்ல முடியாது’ என்று கும்பாசூரன் கூறினான். அதைக் கேட்டு மனம் சேர்ந்த திலீபன், ‘கன்றைக் காக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றான்.
‘நீயே வலிய வந்து எனக்கு இரையாக வேண்டும்’ என்று அசுரன் தெரிவித்தான். கன்றுக்காக தன் உயிரை இழக்க முன் வந்தான் திலீபன். அப்போது வானில் மின்னல் ஒளி தோன்றியது. ஒளியின் ஊடே காமதேனு தோன்றியது. ‘திலீபனே! நான்தான் காமதேனு.
எவரது நெஞ்சம் உயிர்களுக்காக இரங்குகிறதோ, அவர் மீது என் அருட்பார்வை படுகிறது. உள்ளத்தில் சுரக்கம் கருணையின் மறுபெயர்தான் காமதேனு. கன்றை காப்பாற்றும் பொருட்டு உயிரை விடத் துணிந்த உன் கருணையை மெச்சினேன்.
உனக்கு சத்துவ குணம் நிறைந்த ஆண் மகன் பிறப்பான்’ என்று கூறிரையானது. இறைவன், மனிதர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் தந்துள்ளார். அவற்றை இறைவனை வழிபடுவதற்கும், உலகில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் பயன்படுத்த வேண்டும்.
பிறர் மனம் புண்படும்படியாக பேசுவதோ, செயல்புரிவதோ இறைவனுக்கு ஒவ்வாத செயலாகும். அது நம்மையே அழித்து விடக்கூடியதும் ஆகும். அந்த அழிவில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டுமானால், தவறை உணர்ந்து நொந்து, உடலையும் உணர்வையும் வருத்தி நோன்பிருந்தால்தான் பயன்பெற முடியும்.

Sunday, January 18, 2015

அகத்திய மகரிஷியை நேரில் தரிசிக்க மந்திரம்


அகத்திய மகரிஷியை  நேரில் தரிசிக்க மந்திரம்                                                                                                                                                                            நீங்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பழக்கம் இருந்தால், 
கிரிவலப் பாதையில் 
அகஸ்திய ஆசிரமம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் அகஸ்திய விஜயம் என்ற மாத இதழை 
விற்பனை செய்கின்றனர். அவர்களின் நிறைய இதழ்கள் , வெளியீடுகள் - ஆன்மிகத் தேடல் 
உள்ளவர்களுக்கு நல்ல தீனியாக உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் 
வாங்கிப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் நாடி ஜோதிடம் எப்போதாவது பார்த்து இருக்கிறீர்களா? தமிழ் நாட்டில் இப்போது எத்தனையோ போலிகள் வந்து விட்டார்கள். அகஸ்தியர், வசிஷ்டர் என்று நிறைய நிறைய நாடி ஜோதிட நிலையங்கள் வந்துவிட்டன. 
ஆனால் உங்களுக்கான நாடி கிடைத்துவிட்டால், உங்கள் பெருவிரல் ரேகை மட்டுமே வைத்து உங்கள்
 பெயர், அப்பா, அம்மா பெயர் , பிறந்த நட்சத்திரம் , வருடம் என்று ஜாதகமே கணித்துவிடுகிறார்கள். 
இது வரை ஒன்றும் பிரச்னை இல்லை. ஆனால் அதன் பிறகு.... எல்லோரும் ஒரே பார்முலா  தான். 
யாரவது, நல்ல , பக்காவான நாடி ஜோதிடர்கள் உள்ளார்களா என்று நண்பர் வட்டாரத்தில் விசாரித்துக் கொண்டிருந்தபோதுதான் எதேச்சையாக , ஒரு அகத்திய விஜயம் இதழ் கிடைத்தது.
உங்களுக்கு அகஸ்திய  தரிசனம்  வேண்டுமா?  கீழ்க்கண்ட முறையை பின்பற்றுங்கள் என்று... ... 
எனக்கு மிகவும் தெரிந்த நண்பர்ஒருவர் இதைச் செய்ய ஆரம்பித்தார். அவருக்கு அகஸ்திய தரிசனம் 
கிடைத்ததா இல்லையா என்று தெரியவில்லை. அதைப் பற்றி கூற மறுத்துவிட்டார்.. ஆனால் 
அவரது நடவடிக்கையில் நிறையவே நல்ல மாற்றங்களை உணர முடிகிறது.  விருப்பம் உள்ள 
அன்பர்கள் பின்பற்றிப் பாருங்கள்


கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் காலை அல்லது இரவில் 108 முறை ஜபிக்கவும்.
ஒரு வெள்ளைத்துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.அதை தினமும் காலை 4.30 மணிமுதல்
6.00 மணிக்குள் ஏதாவது ஒரு மணி நேரம் (4.30 டூ 5.30 அல்லது 5.00 டூ 6.00 இப்படி) அல்லது
 இரவு 8 மணி முதல் ஏதாவது ஒரு மணி நேரம் இந்த வெள்ளைத்துண்டினை விரித்து அதில் 
அமர்ந்து, விநாயகரை நினைத்துவிட்டு,இந்த அகத்திய தியானத்தை 108 முறை ஜபித்துவரவும்
45 நாட்களில் அகத்தியரை நேரில் அல்லது கனவில் சந்திக்கலாம்.
நாம் முற்பிறவிகளில் கடுமையான பாவம் செய்திருந்தால்,இந்த கட்டுரையைக்கூட வாசிக்கும் 
சந்தர்ப்பம் அமையாது;ஓரளவு பாவம் செய்திருந்தால் கனவில் அகத்தியர் தோன்றுவார்.அல்லது 
நேரில் வருவார்.
மந்திரம்:
ஓம் சிம் பம் அம் உம் மம் மகத்தான அகத்தியரே
என் குருவே வா வா வரம் அருள்க
அருள் தருக அடியேன் தொழுதேன்.


இந்த 45 நாட்களில் தெரியாமல் கூட அசைவம் சாப்பிடக்கூடாது.மது கூடாது.துக்க,ஜனன வீடுகளுக்குச்செல்லக்கூடாது.இந்த தியானத்தை முடித்தப்பின்னர் வேண்டுமானால் மனைவியுடன் கூடலாம்.முறையற்ற உறவைத்தவிர்க்க வேண்டும்.
கடும் பாவம் சிலர் முற்பிறவிகளில் செய்திருந்தால்,45 நாட்களுக்கும் மேலாக தியானம் செய்ய
 வேண்டும்.பெண்களும் இந்த தியானத்தை மேற்கொள்ளலாம்.அவர்கள் தீட்டுநாட்கள்
 5 நாட்கள் வரை அகத்திய தியானத்தைக் கண்டிப்பாக தவிர்க்கவும்.

அகத்தியரை நேரில் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர்கள்,முதலில் அவரை கையெடுத்துக்கும்பிட 
வேண்டும்.பிறகு, அவரது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கவேண்டும்.
ஒளிரும் தங்க நிறத்தில் 4 அல்லது 5 அடி உயரத்தில் தங்க நிற தாடியும்,ஜடாமுடியும் வைத்திருப்பார்.

பொதுவாக கும்ப ராசி மற்றும் கும்ப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு விரைவில் அகத்திய சித்தரின் 
தரிசனம் கிட்டும்.முற்பிறவிகள் ஒன்றில் அகத்திய வழிபாடு செய்திருந்தாலும், 
அகத்தியருக்கு கோவில் கட்டியிருந்தாலும் அகத்தியரின் புகழைப் பாடியிருந்தாலும், ஏராளமான
 புண்ணியம் செய்திருந்தாலும் விரைவில் அகத்திய தரிசனம் கிட்டும் என்பது நிஜம்.
அகத்திய மகரிஷியை தரிசியுங்கள்; என்னை சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் குருதேவா 
என வேண்டுங்கள்.அதை விட பிறவிப்பயன் வேறில்லை; 

சித்தர்களை நேரில் தரிசிக்க ஒரு வழிமுறை!



சித்தர்களை நேரில் தரிசிக்க ஒரு வழிமுறை!


நம்புவதற்கு சற்று சிரமமான ஒரு தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை நேரில் தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. ஒரு வேளை இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியதை இங்கே தருகிறேன்.

அந்த வகையில் அகத்தியர் அருளிய பாடலொன்றினை இன்றைய பதிவில் ப்கிர்ந்து கொள்கிறேன். இந்த பாடல் ”அகத்திய பூரண சூத்திரம்” என்ற நூலில் இருக்கிற்து.

"அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு"

- அகத்தியர் -

சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்....

"ஓம் கிலீம் சிவாய நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் அவர்கள் இந்த வழிமுறையை எப்படி அறிந்தாய் எனக் கேட்டால் அகத்தீசர் அருளால் அவர் நூலிலிருந்து அறிந்து கொண்டேன் என்று சொல் என்கிறார்.

நம்புவதற்கு சிரமமான ஒரு தகவல்தானே...!

ஆர்வமும்,விடாமுயற்சியும், குருவருளும் கூடியவர்கள் இதை முயற்சித்துப் பார்க்கலாமே!

”நந்தீசர்” மனிதன் பிறந்த மாதத்தினை வைத்து அவர்தம் இயல்புகளை வரையறுத்திருக்கிறார், அந்த தகவல்களுடன் நாளை சந்திக்கிறேன்.

அதிசயப் பத்து - வைப்பு மாடு

அதிசயப் பத்து - வைப்பு மாடு
இறைவனை எப்போது நினைப்போம் ?

எப்போதாவது துன்பம் வந்தால் அவனை நினைப்போம். ஐயோ, இந்த துன்பம் என்னை இப்படி வாட்டுகிறதே, இதற்கு ஒரு விடை இல்லையா, நான் என்ன செய்வேன், இறைவா நீ தான் இதற்கு ஒரு வழி சொல்ல வேண்டும், உன் கோவிலுக்கு வருகிறேன், பூஜை செய்கிறேன் என்று மனிதன் துன்பம் வரும் போது இறைவனை நினைக்கிறான்.
துன்பம் வரும். அந்த காலத்தில் நமக்கு உதவுபவன் இறைவன் என்ற எண்ணம் எப்போதும் இருக்க வேண்டும்.
துன்பம் வரவே வராது. வந்தாலும் நான் தனி ஆளாக அவற்றை சமாளித்துக் கொள்வேன் என்று ஆணவம் கொள்ளக் கூடாது.
அப்படி இறைவனை நினைக்காமல், பெண்கள் பின்னால் சுற்றித் திரிந்த என்னையும் ஆட்கொண்டு, தன் அடியவர்களோடு சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்ன என்று சொல்லுவது என்று அதிசயிக்கிறார் மாணிக்க வாசகர்.
பாடல்
வைப்பு, மாடு, என்று; மாணிக்கத்து ஒளி என்று; மனத்திடை உருகாதே,
செப்பு நேர் முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை
ஒப்பு இலாதன, உவமனில் இறந்தன, ஒள் மலர்த் திருப் பாதத்து
அப்பன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!
பொருள்
வைப்பு, மாடு, = இளைத்த காலத்தில் உதவும் செல்வம். சேமித்து வைத்த செல்வம். சேம நிதி. மாடு என்றால் செல்வம்.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
என்பது வள்ளுவம்
என்று = என்று
மாணிக்கத்து ஒளி என்று = மாணிக்கத்தின் ஒளி என்று
மனத்திடை உருகாதே = மனதில் நினைத்து உருகாமல்
செப்பு நேர் முலை = செப்புக் கிண்ணங்கள் போல உள்ள மார்பகங்களைக் கொண்ட
மடவரலியர்தங்கள் = இளம் பெண்களின்
திறத்திடை = மையலில்
நைவேனை = நைந்து கிடக்கும் என்னையும்
ஒப்பு இலாதன = தனக்கு ஒப்பு ஒருவன் இல்லாத
உவமனில் இறந்தன = உவமை என்று காட்ட ஒன்றும் இல்லாத
ஒள் மலர்த் திருப் பாதத்து = சிறந்த மலர் போன்ற திருவடிகளில்
அப்பன் ஆண்டு = என் அப்பன் என்னை ஆட்கொண்டு
தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! = தன்னுடைய அடியவர்களில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்ட அதிசயத்தை கண்டு வியக்கிறேன்
நான் என்ன செய்து விட்டேன் என்று என்னை இறவன் ஆட்கொண்டான் என்று அவ்வளவு பணிவுடன் சொல்கிறார் மணிவாசகப் பெருந்தகை.
உங்களுக்கும் அருள்வான் என்பது அவர் தரும் நம்பிக்கை.

Saturday, January 17, 2015

கால் மாறி ஆடிய படலம் / வலது காலைத் தூக்கி ஆடிய வரலாறு


ஓம்......
கால் மாறி ஆடிய படலம் / வலது காலைத் தூக்கி ஆடிய வரலாறு..
.
இந்த கதையின் சமயத்தில் மதுரையில் விக்கிரமபாண்டியனின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அவன் மறைந்து விட்டதால், அவனது மகன் ராஜசேகரன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். அவனும் தன் முன்னோர் களைப் போல சிவபக்தியில் ஆழ்ந்து கிடந்தான். அவனுக்கு ஆயகலைகள் அறுபத்து நான்கையும் படிப்பதற்கு ஆசை. அதில் அறுபத்து மூன்றை முழுமையாகப் படித்து தேர்ந்து விட்டான். ஒரே ஒரு கலையான நாட்டியக்கலை மட்டும் படிக்கவில்லை. அதிலும் பரதக்கலையில் வல்லுவனாக வேண்டும் என்பது அவனது ஆசை. மற்ற கலைகளை முடித்தவனுக்கு இதைக் கற்றுக் கொள்வதில் என்ன தடை இருந்திருக்க முடியும் என நீங்கள் நினைக்கலாம். அவன் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம், சன்னதியின் முன் உள்ள வெள்ளியம்பல நடராஜரைத் தரிசிப்பான். எம்பெருமானே! சகல கலைகளும் கற்றேன். பரதம் மட்டும் கற்கவில்லை. காரணம் அந்தக்கலைக்கு தலைவனாக நீ இருக்கிறாய். நீ ஆடும் இந்த மண்ணில், உனக்குச் சமமாக நான் ஆடலாமா? அது அபச்சாரம் இல்லையா? என்பான். நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். எது வேண்டாம் என நினைக்கிறோமோ அது பலரது வாழ்வில் நடந்து விடுவதை கண் கூடாக இப்போதும் காணத்தானே செய்கிறோம்! அதனால் தானே தெய்வத்தின் பெயரை திட்டுவதற்காகவாவது பயன்படுத்துகிறோம். அடேய் சிவனே! ஏனடா இப்படி சோதிக்கிறாய்? என்று அவனிடம் மட்டும் தானே நம்மால் உரிமையுடன் கோபித்துக் கொள்ள முடிகிறது! அதுபோல, ராஜசேகர பாண்டியன் ஒன்று நினைக்க நடந்தது வேறொன்றாக இருந்தது. வெள்ளியம்பல கூத்தனான சுந்தேரஸ்வரர் அவன் வாழ்வில் சதிராட எண்ணினார். தனது விளையாடலைத் துவங்கி விட்டார்.
ஒருசமயம் சோழமன்னன் கரிகால் பெருவளத்தானின் அவைப்புலவர் மதுரைக்கு வந்தார். அவர் பாண்டியனின் அரண்மனைக்கு வந்ததும், ராஜசேகரன் அவரை வரவேற்று தனக்கு நிகரான ஆசனம் அளித்து கவுரவித்தான். இருவரும் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினர். அவர்களின் பேச்சு 64 கலைகளின் பக்கமாக திரும்பியது. பாண்டிய மாமன்னரே! எங்கள் சோழச்சக்கரவர்த்தி கரிகால் பெருவளத்தான் 64 கலைகளிலும் வல்லவர். அவரைப் போல் அத்தனை கலைகளையும் அறிந்தவர் உலகில் யாருமில்லை, என்று பெருமையாகச் சொன்னார். பாண்டியனும் அதை ஆமோதித்து, சகலகலாவல்லவர் ஒருவர் இருப்பது உலகுக்கு நன்மை தானே, என்றான். இப்போது, புலவர் தனது சேஷ்டையான பேச்சைத் துவக்கினார். அதிருக்கட்டும் மன்னா! தாங்கள் 63 கலைகளை மட்டும் கற்று, பரதக்கலையை மட்டும் கற்காதது குறித்து எங்கள் மன்னர் அடிக்கடி பேசுவார். அந்தக் கலை உங்களுக்கு வர மறுக்கிறதாம். பாண்டியனுக்கு நடனமாட தெரியவில்லை என்பார். நீங்கள் ஏன் அதை மட்டும் கற்கவில்லை? என்று பாண்டியனைக் குத்திக் காட்டுவதுபோல் குதர்க்கமாகப் பேசினார். ராஜசேகர பாண்டியன் இதற்காக கோபிக்கவில்லை. கரிகால் பெருவளத்தான் ஏவிய அம்பு இவன்! நமக்கும், அவனுக்கும் தான் பிரச்னை. மேலும், இவன் ஒரு புலவன். இவனிடம் கோபிக்கக்கூடாது, என்ற எண்ணத்தில், புலவரே! நடராஜப் பெருமானின் ஆட்டத்தை சற்றே கவனியுங்கள். அவர் ஆடுவதால் தான் இந்த உலகமே இயங்குகிறது. அப்படிப்பட்ட உயரிய ஆட்டத்தை சாதாரண மனிதனாகிய நான் கற்றுக் கொண்டால் சிவநிந்தனை செய்ததாக அர்த்தமாகும். அதனால் தான் நான் அதைக் கற்றுக்கொள்ளவில்லை, என்றான்.
மன்னனின் இந்தப் பதில் புலவரை வியப்பில் ஆழ்த்தியது. பாண்டியனிடம் தவறாகப் பேசிவிட்டோமே என வருந்தினார்.மன்னா! தங்கள் மனம் அறியாமல் தவறாகப் பேசிவிட்டேன். இருப்பினும், எம் சோழமன்னர் கரிகால்பெருவளத்தான் தங்களை இவ்வகையில் குறைத்துப் பேசுகிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள், என்றார் புலவர். இன்னா செய்தவர்க்கும் இனியது செய்தல் என்பது பெரிய பண்பு. ராஜசேகர பாண்டியன் தன்னைக் குறைத்துப் பேசிய புலவர் மீது கோபம் கொள்ளாமல் அவருக்கு விலையுயர்ந்த பரிசுகளை அளித்து கவுரவப்படுத்தி விடை கொடுத்தான். நெகிழ்ந்து போன புலவர் மன்னனையும், பாண்டிய நாட்டு மக்களின் மாண்பையும் புகழ்ந்து பேசி புறப்பட்டார். புலவர் சென்ற பிறகு ராஜசேகரனின் மனம் அலை பாய்ந்தது.எனக்கு நாட்டியக்கலையும் தெரிய வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறானா? என்னை ஆட வைத்து பார்க்க வேண்டுமென்பதில் அவனுக்கு ஆர்வம் போலும்! எதற்கும், சொக்கநாதப் பெருமான் சன்னதிக்குச் சென்று, அங்கே நடனமாடிக் கொண்டிருக்கும் வெள்ளியம்பல வாசனான நடராஜரையே கேட்டுவிடுவோம், என அங்கு சென்றான். நடன சபாபதியான அவரை வணங்கி, இறைவா! பிறர் என்னைத் தனித்து குறைத்து மதிப்பிட்டால் கவலைப்படமாட்டேன். இது பாண்டிய தேசத்தின் கலையுணர்வுக்கு வந்த இழுக்கு. நான் பரதம் படிக்க ஆர்வமாயிருக்கிறேன். உன்னுடைய அருட்கடாட்சம் வேண்டும், என்று கெஞ்சலாகச் சொன்னான். அப்போது, அவன் கண்களில் கண்ணீர் பெருகி விட்டது. அடியவரின் கண்ணீருக்கு உடனே பதிலளிக்கும் நடராஜப் பெருமான் அசரீரியாக ஒலித்தார்.
ராஜசேகர பாண்டியனே! என் அன்பு மகனே! தேசத்தின் புகழைக் காப்பாற்ற நீ உடனே பரதம் படி. உனக்கு என் நல்லாசிகள், என்று கேட்டது குரல். ராஜசேகர பாண்டியன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. உடனடியாக பரதநாட்டியத்தில் தேர்ந்த ஒரு கலைஞர் அழைக்கப்பட்டார். அவருக்கு குருதட்சணை கொடுத்து, பயிற்சியை துவக்கினான் பாண்டியன். அப்பப்பா! பரதம் என்றால் சாதாரண கலையா! ஏழு ஸ்வரங்கள், ஏழு வகை தாளம், ராகம், பாவம், இருபது வகையான அங்கபேதங்கள் என மிகுந்த அக்கறையுடன் கற்றான் அவன். ஒவ்வொரு நாளும் வகுப்புக்குச் சென்று திரும்பியதும், பஞ்சணையில் அப்படியே சாய்ந்து விடுவான் மன்னன். அவனது கால்கள் கடுமையாக வலிக்கும். சில சமயங்களில் வலி தாங்காமல் புலம்புவான். அப்போது அவன் மனதில் மின்னல் கீற்றாய் ஒரு எண்ணம் எழுந்து மறைந்தது. ஆம்! சில நாட்கள் தான் நாட்டியம் கற்றிருக்கிறோம், கால்களில் வலி தெறிக்கிறது. ஆனால், எம்பெருமான் நிறுத்தாமல் ஆடுகிறான். அதிலும் இடது காலை தூக்கிக் கொண்டு எத்தனை யுகங்களாக நிற்கிறானே! அவனுடைய கால்கள் எந்தளவுக்கு வலிக்கும்? சற்று கால் மாறி ஆடினால், அவனுக்கு வலி குறையுமே! சரி... அந்த ஈசனிடமே செல்வோம். காலை மாற்றி ஆடச் சொல்வோம், என்ற எண்ணத்துடன் கோயிலுக்குள் சென்றான்.
சபாபதியே! எம்பிரானே! சில நாட்கள் ஆடிய எனக்கே இந்தக்கதி என்றால், உன் கால்கள் எந்தளவுக்கு வலிக்கும்? காலை மாற்றி ஆடு, என்றான். நடராஜரோ அவனது பேச்சைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. ராஜசேகரன் இது விஷயத்தில் விடாப்பிடியாக இருந்தான். இதோ பார்! உடனே காலை மாற்று. இல்லாவிட்டால், உன் முன்னாலேயே வாளால் தலையைச் சீவிக்கொண்டு உன் திருப்பாதம் அடைவேன், என்று வாளை உருவினான். அப்போது அங்கே பேரொளி பிறந்தது. சிவபெருமான் ரிஷப வாகனத்தில் அவன் முன் காட்சி தந்தார். மகனே! உன் விருப்பம் போல் நடக்கும். இதோ என் காலை மாற்றுகிறேன், என்றார். அன்றுவரை இடதுகால் தூக்கி ஆடியவர் வலதுகாலை தூக்கி திருநடனம் புரிந்தார். பாண்டியன் அகம் மகிழ்ந்தான். கண்ணீர் ஆறாய் பெருகியது. எம்பிரானே! மற்ற தலங்களில் நீ எப்படி நின்றாலும், இந்த தலத்தில் வலதுகால் தூக்கியே ஆட வேண்டும். இந்த திருக்காட்சியை உலகம் உள்ளளவும் காண வேண்டும், என்று வரம் கேட்டான். சிவபெருமானும் அவ்வாறே அருளினார். இன்றுவரை மதுரையம் பதியில் உள்ள வெள்ளியம்பலத்தில் வலதுகால் தூக்கியே ஆடுகிறார். ராஜசேகரபாண்டியன் அதன் பிறகு சிவசிந்தனையிலேயே காலம் கழித்து இறைவனின் திருவடி எய்தினான்

Wednesday, January 14, 2015

இது பதிவு அல்ல இந்துகளின் பொக்கிஷம்

இது பதிவு அல்ல.... இந்துகளின் பொக்கிஷம்
கல்திரை.
பல ஆண்டுகள் முன்னால் மாலிக்கபூரின் படையெடுப்பு.
மதுரைக்கு வந்து கொண்டிருந்தான். வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான். முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள்.
இப்படியாக துவங்கியதுதான் கல்திரை.
கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.
இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள். தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும்வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள்.
சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள். வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள்.
வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான். பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான்.
அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது.
அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது. முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள். அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.
அப்போது தள்ளாத வயதான ஒரு சிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள். இதோ இடித்துவிட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார். சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார். உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால்.......
......
.
.
.
.
உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!!!!
48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது.
திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.
இன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக பொற்றாமரை குளம் சுவரருகில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் ஒரு பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது. யாரும் பார்ப்பதில்லை அதை. எம்.ஜி.ஆர் அப்போது முதலமைச்சர். கோவிலுக்கு வந்தார். அருங்காட்சியகத்திற்கு வந்து பார்த்தார். இதை படித்து விட்டு, எப்பேர்ப்பட்ட நடப்பு இது, இதை எதற்கு அருங்காட்சியகத்தில் வைத்தீர்கள்? வெளியே கோவிலில் வையுங்கள். விவரமாக எழுதிபோடுங்கள். அனைவரும் படிக்கட்டும் என்றார்.
சம்போ மகாதேவா!!

Tuesday, January 13, 2015

அநுமார் அநுக்கிரஹிப்பார்

அநுமார் அநுக்கிரஹிப்பார்
ஆஞ்சநேய ஸ்வாமியின் விசேஷமே அலாதியானது. அவர் பக்தர்களுக்கு என்னென்ன அநுக்கிரஹம் செய்கிறார் என்பதைப் பார்த்தால், அவருக்கு என்ன விசேஷம் என்று தெரியும்.
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமாத் ஸ்மரணாபவேத் ||
ஆஞ்சநேயரை ஸ்மரிப்பவர்களுக்கு அவர் என்னென்ன அநுக்கிரஹிக்கிறார் என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது. புத்தி, பலம், புகழ், உறுதிப்பாடு, அஞ்சாநெஞ்சம், ஆரோக்கியம் விழிப்பு, வாக்குவன்மை இத்தனையும் தருகிறார் அவர்.
சாதாரணமாக இவையெல்லாம் ஒரே இடத்தில் அமையவே அமையாது. நல்ல புத்திமான் ஆரோக்கியம் இல்லாமல் சோனியாக இருப்பான். பெரிய பலசாலி மண்டுவாக இருப்பான். இரண்டும் இருந்தாலும் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக இருப்பான். எத்தனை திறமை இருந்தாலும், அவற்றைப் பிரயோகிக்கிற சுறுசுறுப்பு, விழிப்பு இல்லாமல் சோம்பேறியாக இருப்பான். பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்குத் தெரிந்ததை எடுத்துச் சொல்கிற வாக்கு வன்மையில்லாமல் இருப்பான். இந்த மாதிரி ஏறுமாறான குணங்கள் இல்லாமல் எல்லா சிரேயஸ்களையும் ஒரே இடத்தில் பொழிகிறார், ஆஞ்சநேயர்.
இதற்குக் காரணம், சாதாரணமாக நாம் ஒரே இடத்தில் சேர்ந்து பார்க்காத குணங்கள், சக்திகள் அத்தனையும் அவரிடமே பூரணமாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. நாம் எதிரெதிர் குணங்கள் என்று நினைப்பவைக்கூட, அவரிடம் ஸ்வபாவமாகச் சேர்ந்திருக்கின்றன. உதாரணமாகப் பெரிய பலசாலிக்கு விநயம் இருக்காது. பெரிய புத்திசாலிக்கு அகங்காரமில்லாத பக்தி இராது. ஆஞ்ஜநேயரோ தேக பலம், புத்தி பலம் இவற்றைப் போலவே விநயம், பக்தி இவற்றிலும் முதலாக நிற்கிறார். மகா சக்திமானாக இருந்தும், அத்தனை சக்தியும் ராமன் போட்ட பிச்சை என்ற அடக்கத்தோடு தனக்கு ஒரு பதவியும் கேளாமல் ராமதாஸனாகவே இருந்தார். அப்படி அடிமையாக இருந்ததாலேயே நிறைந்து இருந்தார். பக்தி இருக்கிறவர்களுக்கேகூட அதில் ஞானத்தில் தெளிவு இல்லாமல் மூடபக்தியாகவோ, முரட்டுபக்தியாகவோ இருப்பதுண்டு. ஞானமும் பக்தியும் வேறு வேறு என்றே அவர்கள் சண்டைகூடப் போட்டுக் கொள்வார்கள். ஆஞ்சநேயரோ ராமச்சந்திர மூர்த்தியின் பரமபக்தராக இருக்கும்போதே, பரமஞானியாகவும் இருந்தார். எப்படி தக்ஷிணாமூர்த்தி ஸநகாதி முனிவர்களை முன்னிட்டு உபதேசம் செய்கிறாரோ, அப்படியே ஸ்ரீ ராமன் ஆஞ்சநேய ஸ்வாமியை முன்னால் வைத்துக் கொண்டு ஞானோபதேசம் செய்கிறார் என்று 'வைதேஹீ ஸஹிதம்' சுலோகம் சொல்கிறது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் இருந்துகொண்டு கீதோபதேசத்தை நேரிலேயே கேட்டவர் அவர். பைசாச பாஷையில் கீதைக்குத் தத்துவமயமான ஒரு பாஷ்யம் இருப்பதாகவும், அது ஆஞ்சநேயர் செய்தது என்றும் சொல்வார்கள். ஒன்பது வியாகரணமும் தெரிந்த 'நவ வ்யாகரண வேத்தா' என்று ராமரே அவரைப் புகழ்கிற அளவுக்குப் பெரிய கல்விமான். ஆனாலும் புத்திப் பிரகாசம், சக்திப் பிரபாவம் எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு பக்தியிலேயே பரமானந்தம் அநுபவிக்கிறார்.
பக்தி என்பதால் லோக காரியத்தைக் கவனிக்காதவர் அல்ல. மகாபௌருஷத்தோடு போராடி அபலைகளை ரக்ஷித்தவர்களில் அவருக்கு இணை இல்லை. லோக சேவைக்கு அவரே உதாரணம். (ideal)
ஞானத்தில் உச்சநிலை, பலத்தில் உச்சநிலை, பக்தியில் உச்சநிலை, வீரத்தில் உச்சநிலை, கீர்த்தியில் உச்சநிலை, சேவையில் உச்சநிலை, விநயத்தில் உச்ச நிலை இப்படியெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிற ஸ்வரூபம் ஒன்று உண்டு என்றால் அது ஆஞ்சநேய ஸ்வாமிதான்.
இதெல்லாவற்றுக்கும் மேலாக அவருடைய பிரம்மச்சரியத்தைச் சொல்ல வேண்டும். ஒரு க்ஷணம்கூடக் காமம் என்கிற நினைப்பே வராத மகா பரிசுத்த மூர்த்தி அவர். தனக்கென்று எதுவுமே நினைக்காதவர். ஒரு காமனையும் இல்லாமல் ராமனுக்கு சேவை செய்தே நிறைந்துவிட்டார்.
அவரை நம் சீமையில் பொதுவாக 'ஹநுமார்' என்போம். கன்னடச் சீமையில் அவரே 'ஹநுமந்தையா'. சித்தூருக்கு வடக்கே போய்விட்டாலல் ஆந்திரா முழுவதும் 'ஆஞ்சநேயலு' என்பார்கள். மகாராஷ்டிரம் முழுக்க 'மாருதி, மாருதி' என்று கொண்டாடுவார்கள். அதற்கும் வடக்கில் 'மஹாவீர்' என்றே சொல்வார்கள்.
ஆஞ்சநேயருக்கு ஈடு கிடையாது. அவரை ஸ்மரித்த மாத்திரத்தில் தைரியம் வரும். ஞானம் வரும். காமம் நசிந்துவிடும். பரம விநயத்தோடு பகவத் கைங்கரியம் செய்துகொண்டு எல்லோருக்கும் நல்லது செய்வோம்.
'ராம், ராம்' என்று எங்கெங்கே சொல்லிக் கொண்டிருந்தாலும், ரகுநாத கீர்த்தனம் எங்கே நடந்தாலும், அங்கெல்லாம் நம் கண்ணுக்குத் தெரியாமல் ஆஞ்சநேயர் தாரை தாரையாக ஆனந்த பாஷ்பம் கொட்டிக்கொண்டு நின்று கேட்கிறார்.
இந்தக் காலத்தில் நமக்கு மற்ற எல்லா அநுக்கிரஹங்களோடு, முக்கியமாக அடக்கமாக இருக்கற பண்பு ரொம்பவும் அவசியப்படுகிறது. எத்தனை வந்தாலும் போதாமல் இப்போது, நாம் உயர உயரத் துள்ளிக்கொண்டேயிருக்கிறோம். இதனால் புதுப்புது அதிருப்திகளை, குறைகளைத்தான் உண்டாக்கிக் கொள்கிறோம். துள்ளாமல் அடங்கிக் கிடந்தால்தான் ஈசுவரப் பிரஸாதம் கிடைக்கும். அதுதான் நிறைந்த நிறைவு. நமக்கு ஆச்சநேயர் அநுக்கிரகம் பண்ண வேண்டும்.
அவரைப் பிரார்த்திப்பவர்களுக்கு ஒரு குறையும் இல்லை. லோகம் முழுவதும் தர்மம் பரவியிருக்க அவரையே பிரார்த்தனை பண்ணுவோம். அவருடைய சகாயத்திலேயே ராவணாதிகள் தோற்று ராமராஜ்யம் ஏற்பட்டது. அர்ஜுனனின் தேர்க்கொடியில் அவர் இருந்த விசேஷத்தால் பிறகு தர்மராஜ்யம் ஏற்பட்டது. பிற்காலத்தில் நம் தர்மம், பக்தி எல்லாம் நசிந்தபோது ஆஞ்சநேய அவதாரமாக ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமி தோன்றித்தான் சிவாஜி மூலம் மறுபடி தர்ம ஸம்ஸ்தாபனம் செய்தார். இன்னும் சகல தேசங்களிலும் தர்மமும் பக்தியும் ஏற்பட அவர் அநுக்கிரஹம் வேணும். நாம் மனமுருகிப் பிரார்த்தித்தால் இந்த அநுக்கிரஹத்தைச் செய்வார்.
Like ·  · Share

விநாயகருக்கும் அறுபடை வீடுகள்

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:- 


* முதல்படை வீடு - திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் `அல்லல் போம் விநாயகர்'. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே `அல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்' என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும். 

* இரண்டாம் படை வீடு - விருத்தாசலம் :
இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

* மூன்றாவது படைவீடு - திருக்கடவூர் :
எந்தவிதமான வாழ்க்கை வசதிகள் நமக்கு அமையப் பெற்றிருந்தாலும் அதை அடைய நமக்கு மிக முக்கியத் தேவை நீண்ட ஆயுள். இந்த ஆயுளை அள்ளி வழங்குகிறவராக திருக்கடவூர் கள்ளவாரணப் பிள்ளையார் விளங்குகிறார்.

* நான்காம்படை வீடு - மதுரை :
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள சித்தி விநாயகர் நான்காம்படை வீடு விநாயகராக கருதப்படுகிறார். மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் முன்னர் இவரின் தரிசனத்தைப் பெறலாம். நாம் விரும்புகின்றவாறு காரியங்களை நிறைவேற்றித் தருபவராக இவர் உள்ளார். மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காக குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரையே தரிசித்துச் சென்றதாக திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

* ஐந்தாவது படை வீடு - பிள்ளையார்பட்டி: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ஐந்தாம் படை வீட்டின் அதிபதியராகத் திகழ்கிறார். அனைத்துப் பேறுகளும் நம்மை வந்தடைந்தாலும் ஞானம் இல்லையேல் அந்தப் பேறுகளால் ஒரு பலனும் இல்லை. அந்த ஞானத்தை வழங்குபவராக இவர்அருள்பாலிக்கிறார். இவர் சிவலிங்கத்தைக் கையில் தாங்கி அருள்புரிகிறார். சிவலிங்கத்தை கையில் ஏந்தி சிவபூஜை செய்பவராகத் திகழும் இந்த கற்பக விநாயகரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

* ஆறாம்படை வீடு - திருநாரையூர் :
திருநாரையூரில் அருள்பாலிக்கிறார் பொள்ளாப் பிள்ளையார்.அப்பரும் சம்பந்தரும் பாடிய இத்தலத்தில் இவரை வழிபட புதிய முயற்சிகளில் கை மேல் வெற்றி பலன் கிடைக்கும்


ஆன்மீக சிந்தனையில் அடியேன்  கணேசன் பாண்டிச்சேரி

சடாரி எனப்படுவது என்ன?

திருமால் ஆலயங்களுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சந்நதிகளிலும் தீர்த்தம், திருத்துழாய் என்கிற துளசி அல்லது மஞ்சள் காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் அந்தந்த சந்நதிகளில் வழிபாடு பூர்த்தியானதாகக் கருதுவார்கள்.
சடாரி எனப்படுவது என்ன?
திருவடி அடியார்களைக் காப்பது திருவடி நிலை
திருவடி நிலையே பாதுகை
பாதுகையே சடாரி
சடாரியே நம்மாழ்வார்
பாதுகை, சடாரி, ஆழ்வார் எல்லாம் ஒன்றே
சடகோபன் என்னும் பாதுகை அல்லது சடாரி மூலமேதான் ஸ்ரீய:பதியான பகவான் திருவடிகளை நம் தலையில் சமர்ப்பித்துக் கொள்வது. யஸ்ய ஸாரஸ்வது: ச்ரோதோ வகுளாமோத வாஸிதம் சடாரி தம் உபாஸ்மஹே. சடம் என்பது ஒரு வகைக் காற்று (வாயு). அதன் ஸ்பரிசத்தால் ஞானம் மங்கி அஞ்ஞானம் மூடிக்கொள்ளும். அரி என்றால் சத்ரு(பகை). சடம் என்னும் காற்றைத் தம்மேல் படாமல் தடுத்து உத்தம ஞானியாய் அவதரித்தவர் நம்மாழ்வார். ஆகவே அவருக்குச் சடாரி என்ற பெயர் வழங்கிற்று. சடகோபன், சடஜித் என்பன போன்ற இதர சொற்களும் இதே பொருளைத்தான் தரும்.
வைணவ ஆலயங்களில் எம்பெருமான் திருவடிக்கு முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடி ‘மகுடம்’ சடாரி எனப்படுகிறது. அதற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? ஸ்ரீமன் நிகமாந்த மகாதேசிகன் அருளிச் செய்த ஸ்ரீமத் பாதுகா ஸஹஸ்ரத்தில் இரண்டாவது பத்ததியான ஸமாக்யா பத்ததியில் இதற்கான விளக்கத்தைக் காணலாம். ஆழ்வாரும் பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது. பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது. பாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி சம்பந்தம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.
இதை முதல் முதலில் காட்டியருளியவர் ஆளவந்தார். ஸ்ரீஸ்தோத்திர ரத்னம் ஐந்தாம் ஸ்லோகத்தில் வகுளாவிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா(மகிழம்பூவின் நறுமணம் வீசும் அந்த ஆழ்வாருடைய இணையடிகளை எனது தலையில் ஏற்று வணங்குகிறேன்) என்றதும் பெருமாள் திருவடிகளே அவர் சிரசில் சேவை சாதித்தனவாம். அந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தோன்ற அடுத்தபடியாக யந்மூர்த்நிமே பாதி (என் தலையில் பிரகாசிக்கிற) என்று அந்த பாதார
விந்தத்திற்குப் பாசுரம் பாடுகிறார். அந்தக் கருத்தையே தமிழில், ‘சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் வள்ளல் தனித்திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபனருளாலே’ என்று தனித்தமிழில் நமக்கு அருள்கிறார்.
இந்த வகையில், நமக்குப் பெருமாள் திருவடியை ஸ்பரிசம் அருளியவர்கள் இருவர். ஒருவர் ஆழ்வார், மற்றது பாதுகை. ஆகவே இருவருக்கும் சடாரி என்ற திருநாமம் இருப்பதில் வியப்பில்லை. ஆழ்வாருடைய அமுதத் திருவாய் ஈரத்தமிழைப் பயின்று எம்பெருமானை அடிபணிவோர்க்குப் பரமனருள் சித்திக்கும். அதற்குப் பாக்கியமில்லாதவர்களுக்கு, பாதுகை அப்பேற்றை அளிக்கிறது. சுவாமி தேசிகனின் பெருமைக்கு உவமை கூறும் திவ்ய ஸுக்தி அவர் வடமொழியில் அருளிச் செய்துள்ள ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் ஸ்தோத்திர மாகும். அதை அருளுவதற்கான காரணம் என்ன? பகவானுடைய திருவடி மகிமையை பக்தர்களாகிய நாம் அறிந்து உய்யும்படி தாய் போன்ற கருணையுடன் ஆயிரம் பாடல்கள் பாடினார் சடகோபன்.
அந்த இன்தமிழ் ஆயிரத்துக்கு பிரதி சம்பாவனையாக ஆழ்வாருக்கு வட மொழியில் ஆயிரம் சமர்ப்பித்தார் நம் தேசிகன். எவ்வாறு பகவானுடைய திருவடிகளின் பெருமையை அவனுடைய பாதுகையான சடகோபனால் மட்டுமே கூறமுடியுமோ, அங்கனமே அந்த சடகோபனின் பெருமையை அவனுடைய பாதுகைகளான சீடன் மதுரகவியால் தானே கூறமுடியும்? இந்த வகையில் இவர் அருளிச் செய்த ‘கண்ணிநுண் சிறுத்தாம்பின்...’ ஒரு பகுதியைப் பார்க்கலாம். ‘பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்’ சடகோபனின் பெருமையை மிக எளிமையாக ஆனால், விளக்கமாக விவரிக்கும் இரு அடிகள் இவை. பகவானுக்கும் சடகோபனுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் இதுதான். செயல் திருந்தியவரையே பகவான் ஆட்கொள்வான்.
ஆனால், சடகோபனோ திருந்தத்தக்க பாங்கற்றவர்களையும் தாமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தண்டித்துத் திருத்தி பகவானின் திருவடிகளை அடையச் செய்வான். இந்தப் பெருமைக்கு மதுரகவியாழ்வாரே பிரதான உதாரணம். அதாவது, நம்மாழ்வாரும் இதர ஆழ்வார்களும் ஆயிரக்கணக்கிலே எம்பெருமானின் பெருமையைப் பாடியதாலேயே ஆழ்வார்கள் எனும் பெருமையைப் பெற்றார்கள். ஆனால், மதுரகவியாழ்வாரோ எம்பெருமானைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடாமல், குருவான நம்மாழ்வார் மீது பத்து பாசுரங்கள் பாடியே ஆழ்வார்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டார்.
சடாரி, பகவானுடையது மட்டுமின்றி, பிராட்டியினுடைய பாதுகைகளையும் குறிப்பதாகும். ஆனால், நம்மாழ்வாருக்குப் பின்னால் வந்த ஆழ்வார்
ஆச்சார்யர்களுடைய பாதுகைகளும் சடாரி என்றே குறிப்பிடப்படுகின்றன. ஆனால், இது தவறு. நம்மாழ்வார் மற்றும் பிற ஆழ்வாராச்சார்யார்களுக்கு அபசாரம் தோற்றுவிப்பது என்றும் ஒரு வாதம் உண்டு. அப்படியானால் அவர்களுடைய பாதுகைகளை என்ன சொல்லி அழைப்பது? அந்தந்த ஆச்சார்யார்களுடைய பாதுகைகளை அவர்களின் பிரதான சிஷ்யர்களின் திருநாமத்தைக் கொண்டே அழைக்க வேண்டுமென்று பெரியோர்கள் கூறுவர். இதை அடிப்படையாகக் கொண்டு
ஆழ்வார்கள்-ஆச்சார்யார்கள் பாதுகைகளின் திருநாமங்களுக்குச் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
கருடபகவான் சடகோபன்
ஆஞ்சநேயர் ராமதாசர் அல்லது
கம்பநாட்டாழ்வான்
சேனை முதலியார் சடகோபன்
ஆண்டாள் சடகோபன்
நம்மாழ்வார் மதுரகவிகள்
மதுரகவிகள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசைப்பிரான்
பெரியாழ்வார்
குலசேகரர்
தொண்டரடிப்பொடிகள் ராமானுஜன்
திருப்பாணாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரியநம்பி
திருக்கோட்டியூர்நம்பி
பெரிய திருமலை நம்பி
திருக்கச்சி நம்பி
திருவரங்க பெருமாள் அரையர்
பாஷ்யகாரர் முதலியாண்டான்
வேதாந்த தேசிகன் நயினாராசார்யார்
எம்பார் பட்டர்
பட்டர் நஞ்ஜீயர்
நம்பிள்ளை வடக்கு திருவீதிப்பிள்ளை
வடக்கு திருவீதிப்பிள்ளை - லோகாச்சாரியார்
லோகாச்சாரியார் - மணவாளமாமுனிகள்
மணவாளமாமுனிகள் - பொன்னடியாம்
செங்கமலம்.
பகவானுடைய திருப்பாதுகைகளுக்கு உரித்தான பெருமைகளெல்லாம் ஆழ்வார் ஆச்சாரியார்களுடைய திருப்பாதுகைகளுக்கும் உண்டு என்பதில் ஐயமேதுமில்லை. எனவே, கோயில்களுக்குச் செல்லும்போது அனைத்துச் சந்நதிகளிலும் சடாரி பெற்றுக்கொண்டு நம்மை புனிதப்படுத்திக் கொள்வது நமக்கு நல்ல கதியை அளிக்கும்.
வானமாமலையில் தெய்வநாயகனை நம்மாழ்வார் சரணாகதி செய்ததால் பெருமானின் சடாரியிலேயே நம்மாழ்வாரின் திருவுருவம் பொறித்துள்ளதைக் காணலாம். அதனால் இங்கு நம்மாழ்வாருக்கு தனிச் சந்நதி கிடையாது.
திருக்கடிகை என்ற சோளிங்கர், பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில் சடாரி ஒரு நாகம் போன்ற அமைப்பில் இருக்கும். ஆதிசேஷனே சடாரியாக விளங்குவதாக பெரியோர்கள் கருத்து.
ஸ்ரீபெரும்புதூரில் பகவத் ராமானுஜரின் முதன்மைச் சீடரான முதலியாண்டான் சடாரியாக அமைந்துள்ளதால் இத்திருக்கோயிலில் முதலியாண்டாருக்குச் சந்நதி இல்லை.
திருப்பதியில் பகவத் ராமானுஜரின் திருவுருவத்தை அவருடைய சீடர் அனந்தாழ்வார் பிரதிஷ்டை செய்ததால் அங்கு பகவத் ராமானுஜரின் சடாரிக்கு அனந்தாழ்வான் என்றே பெயர்.
சென்னை-நங்கநல்லூரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் வேணுகோபாலசுவாமி திருக்கோயிலிலும் நாகவடிவில் சடாரி அமைந்துள்ளது.
ஆழ்வார்களின் சடாரி, பகவத் ராமானுஜர் என்று மேலே குறிப்பிட்டுள்ளபடி அவதாரத் தலங்களில் ஆழ்வார்களின் திருவுருவங்களிலேயே பகவத் ராமானுஜரின் திருவுருவமும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
திருமால் ஆலயங்களுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சந்நதிகளிலும் தீர்த்தம், திருத்துழாய் என்கிற துளசி அல்லது மஞ்சள் காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் அந்தந்த சந்நதிகளில் வழிபாடு பூர்த்தியானதாகக் கருதுவார்கள்.

சடாரி எனப்படுவது என்ன? 

திருவடி அடியார்களைக் காப்பது திருவடி நிலை

திருவடி நிலையே பாதுகை

பாதுகையே சடாரி

சடாரியே நம்மாழ்வார்

பாதுகை, சடாரி, ஆழ்வார் எல்லாம் ஒன்றே

சடகோபன் என்னும் பாதுகை அல்லது சடாரி மூலமேதான் ஸ்ரீய:பதியான பகவான் திருவடிகளை நம் தலையில் சமர்ப்பித்துக் கொள்வது. யஸ்ய ஸாரஸ்வது: ச்ரோதோ வகுளாமோத வாஸிதம் சடாரி தம் உபாஸ்மஹே. சடம் என்பது ஒரு வகைக் காற்று (வாயு). அதன் ஸ்பரிசத்தால் ஞானம் மங்கி அஞ்ஞானம் மூடிக்கொள்ளும். அரி என்றால் சத்ரு(பகை). சடம் என்னும் காற்றைத் தம்மேல் படாமல் தடுத்து உத்தம ஞானியாய் அவதரித்தவர் நம்மாழ்வார். ஆகவே அவருக்குச் சடாரி என்ற பெயர் வழங்கிற்று. சடகோபன், சடஜித் என்பன போன்ற இதர சொற்களும் இதே பொருளைத்தான் தரும். 

வைணவ ஆலயங்களில் எம்பெருமான் திருவடிக்கு முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடி ‘மகுடம்’ சடாரி எனப்படுகிறது. அதற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? ஸ்ரீமன் நிகமாந்த மகாதேசிகன் அருளிச் செய்த ஸ்ரீமத் பாதுகா ஸஹஸ்ரத்தில் இரண்டாவது பத்ததியான ஸமாக்யா பத்ததியில் இதற்கான விளக்கத்தைக் காணலாம். ஆழ்வாரும் பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது. பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது. பாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி சம்பந்தம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது. 

இதை முதல் முதலில் காட்டியருளியவர் ஆளவந்தார். ஸ்ரீஸ்தோத்திர ரத்னம் ஐந்தாம் ஸ்லோகத்தில் வகுளாவிராமம் ஸ்ரீமத் ததங்க்ரியுகளம் ப்ரணமாமி மூர்த்நா(மகிழம்பூவின் நறுமணம் வீசும் அந்த ஆழ்வாருடைய இணையடிகளை எனது தலையில் ஏற்று வணங்குகிறேன்) என்றதும் பெருமாள் திருவடிகளே அவர் சிரசில் சேவை சாதித்தனவாம். அந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் தோன்ற அடுத்தபடியாக யந்மூர்த்நிமே பாதி (என் தலையில் பிரகாசிக்கிற) என்று அந்த பாதார 
விந்தத்திற்குப் பாசுரம் பாடுகிறார். அந்தக் கருத்தையே தமிழில், ‘சந்தமிகு தமிழ் மறையோன் தூப்புல் வள்ளல் தனித்திருமால் தாளில் தலைவைத்தோம் சடகோபனருளாலே’ என்று தனித்தமிழில் நமக்கு அருள்கிறார். 

இந்த வகையில், நமக்குப் பெருமாள் திருவடியை ஸ்பரிசம் அருளியவர்கள் இருவர். ஒருவர் ஆழ்வார், மற்றது பாதுகை. ஆகவே இருவருக்கும் சடாரி என்ற திருநாமம் இருப்பதில் வியப்பில்லை. ஆழ்வாருடைய அமுதத் திருவாய் ஈரத்தமிழைப் பயின்று எம்பெருமானை அடிபணிவோர்க்குப் பரமனருள் சித்திக்கும். அதற்குப் பாக்கியமில்லாதவர்களுக்கு, பாதுகை அப்பேற்றை அளிக்கிறது. சுவாமி தேசிகனின் பெருமைக்கு உவமை கூறும் திவ்ய ஸுக்தி அவர் வடமொழியில் அருளிச் செய்துள்ள ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் ஸ்தோத்திர மாகும். அதை அருளுவதற்கான காரணம் என்ன? பகவானுடைய திருவடி மகிமையை பக்தர்களாகிய நாம் அறிந்து உய்யும்படி தாய் போன்ற கருணையுடன் ஆயிரம் பாடல்கள் பாடினார் சடகோபன்.  

அந்த இன்தமிழ் ஆயிரத்துக்கு பிரதி சம்பாவனையாக ஆழ்வாருக்கு வட மொழியில் ஆயிரம் சமர்ப்பித்தார் நம் தேசிகன். எவ்வாறு பகவானுடைய திருவடிகளின் பெருமையை அவனுடைய பாதுகையான சடகோபனால் மட்டுமே கூறமுடியுமோ, அங்கனமே அந்த சடகோபனின் பெருமையை அவனுடைய பாதுகைகளான சீடன் மதுரகவியால் தானே கூறமுடியும்? இந்த வகையில் இவர் அருளிச் செய்த ‘கண்ணிநுண் சிறுத்தாம்பின்...’ ஒரு பகுதியைப் பார்க்கலாம். ‘பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்’ சடகோபனின் பெருமையை மிக எளிமையாக ஆனால், விளக்கமாக விவரிக்கும் இரு அடிகள் இவை. பகவானுக்கும் சடகோபனுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் இதுதான். செயல் திருந்தியவரையே பகவான் ஆட்கொள்வான். 

ஆனால், சடகோபனோ திருந்தத்தக்க பாங்கற்றவர்களையும் தாமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தண்டித்துத் திருத்தி பகவானின் திருவடிகளை அடையச் செய்வான். இந்தப் பெருமைக்கு மதுரகவியாழ்வாரே பிரதான உதாரணம். அதாவது, நம்மாழ்வாரும் இதர ஆழ்வார்களும் ஆயிரக்கணக்கிலே எம்பெருமானின் பெருமையைப் பாடியதாலேயே ஆழ்வார்கள் எனும் பெருமையைப் பெற்றார்கள். ஆனால், மதுரகவியாழ்வாரோ எம்பெருமானைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடாமல், குருவான நம்மாழ்வார் மீது பத்து பாசுரங்கள் பாடியே ஆழ்வார்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டார். 

சடாரி, பகவானுடையது மட்டுமின்றி, பிராட்டியினுடைய பாதுகைகளையும் குறிப்பதாகும். ஆனால், நம்மாழ்வாருக்குப் பின்னால் வந்த ஆழ்வார் 
ஆச்சார்யர்களுடைய பாதுகைகளும் சடாரி என்றே குறிப்பிடப்படுகின்றன. ஆனால், இது தவறு. நம்மாழ்வார் மற்றும் பிற ஆழ்வாராச்சார்யார்களுக்கு அபசாரம் தோற்றுவிப்பது என்றும் ஒரு வாதம் உண்டு. அப்படியானால் அவர்களுடைய பாதுகைகளை என்ன சொல்லி அழைப்பது? அந்தந்த ஆச்சார்யார்களுடைய பாதுகைகளை அவர்களின் பிரதான சிஷ்யர்களின் திருநாமத்தைக் கொண்டே அழைக்க வேண்டுமென்று பெரியோர்கள் கூறுவர். இதை அடிப்படையாகக் கொண்டு 
ஆழ்வார்கள்-ஆச்சார்யார்கள் பாதுகைகளின் திருநாமங்களுக்குச் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

கருடபகவான் சடகோபன்
ஆஞ்சநேயர் ராமதாசர் அல்லது
கம்பநாட்டாழ்வான்
சேனை முதலியார் சடகோபன்
ஆண்டாள் சடகோபன்
நம்மாழ்வார் மதுரகவிகள்
 மதுரகவிகள்                  
பொய்கையாழ்வார்         
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசைப்பிரான்
பெரியாழ்வார்
குலசேகரர் 
தொண்டரடிப்பொடிகள் ராமானுஜன் 
திருப்பாணாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரியநம்பி
திருக்கோட்டியூர்நம்பி
பெரிய திருமலை நம்பி
திருக்கச்சி நம்பி
திருவரங்க பெருமாள் அரையர்
பாஷ்யகாரர் முதலியாண்டான்
வேதாந்த தேசிகன் நயினாராசார்யார்
எம்பார் பட்டர்
பட்டர் நஞ்ஜீயர்
  நம்பிள்ளை    வடக்கு திருவீதிப்பிள்ளை
வடக்கு திருவீதிப்பிள்ளை   -  லோகாச்சாரியார்
லோகாச்சாரியார்             -   மணவாளமாமுனிகள்

மணவாளமாமுனிகள் -  பொன்னடியாம் 
செங்கமலம்.

பகவானுடைய திருப்பாதுகைகளுக்கு உரித்தான பெருமைகளெல்லாம் ஆழ்வார் ஆச்சாரியார்களுடைய திருப்பாதுகைகளுக்கும் உண்டு என்பதில் ஐயமேதுமில்லை. எனவே, கோயில்களுக்குச் செல்லும்போது அனைத்துச் சந்நதிகளிலும் சடாரி பெற்றுக்கொண்டு நம்மை புனிதப்படுத்திக் கொள்வது நமக்கு நல்ல கதியை அளிக்கும்.

வானமாமலையில் தெய்வநாயகனை நம்மாழ்வார் சரணாகதி செய்ததால் பெருமானின் சடாரியிலேயே நம்மாழ்வாரின் திருவுருவம் பொறித்துள்ளதைக் காணலாம். அதனால் இங்கு நம்மாழ்வாருக்கு தனிச் சந்நதி கிடையாது.

திருக்கடிகை என்ற சோளிங்கர், பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் ஆலயங்களில் சடாரி ஒரு நாகம் போன்ற அமைப்பில் இருக்கும். ஆதிசேஷனே சடாரியாக விளங்குவதாக பெரியோர்கள் கருத்து.

ஸ்ரீபெரும்புதூரில் பகவத் ராமானுஜரின் முதன்மைச் சீடரான முதலியாண்டான் சடாரியாக அமைந்துள்ளதால் இத்திருக்கோயிலில் முதலியாண்டாருக்குச் சந்நதி இல்லை.

திருப்பதியில் பகவத் ராமானுஜரின் திருவுருவத்தை அவருடைய சீடர் அனந்தாழ்வார் பிரதிஷ்டை செய்ததால் அங்கு பகவத் ராமானுஜரின் சடாரிக்கு அனந்தாழ்வான் என்றே பெயர்.

சென்னை-நங்கநல்லூரில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் வேணுகோபாலசுவாமி திருக்கோயிலிலும் நாகவடிவில் சடாரி அமைந்துள்ளது.

ஆழ்வார்களின் சடாரி, பகவத் ராமானுஜர் என்று மேலே குறிப்பிட்டுள்ளபடி அவதாரத் தலங்களில் ஆழ்வார்களின் திருவுருவங்களிலேயே பகவத் ராமானுஜரின் திருவுருவமும் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.