Wednesday, September 9, 2015

பதினாறு திருக்கரங்களுடன் திகழும் உக்ர நரசிம்மர்







அயோத்தி அரசன் நிமி. புகழும் பெருமையும் மிக, நல்லாட்சி நடத்தி வந்தான். நிமியின் பெருமையில் பொறாமை கொண்டிருந்தான் அசுரன் ஒருவன். வலிமையால் வெல்ல இயலாத அசுரன், நிமியை வீழ்த்த தக்க நேரம் பார்த்திருந்தான்.
ஒரு முறை முன்னோர் சிராத்த நாளில் வசிஷ்டரை அழைத்தான் நிமி. அவன் அழைப்பில் அரண்மனை சென்று, சிராத்தம் முடிந்து உணவருந்த அமர்ந்தார் வசிஷ்டர். நிமியை வீழ்த்த நேரம் பார்த்திருந்த அசுரன், சமையல்காரன் வேடத்தில் அரண்மனையில் புகுந்து, சிராத்த உணவில் மாமிசம் கலந்து பரிமாறினான். இதனைக் கண்ட வசிஷ்டர் மிகுந்த கோபமுற்றார். அரசனைப் பார்த்து, ""எனக்கு புலால் உணவு படைத்த நீ அசுரனாகக் கடவது'' என்று சாபமிட்டார்.
ஆனால், பின்னர் உண்மை உணர்ந்த அவர் பெரும் துயரடைந்தார். மனம் கலங்கிய நிலையில், ந்ருஸிம்ஹ வனம் வந்து மனம் அமைதி பெற குகை ஒன்றில் தவத்தில் ஆழ்ந்தார். அவரது தவத்துக்கு மெச்சிய நான்முகன், அவர் முன் தோன்றி, மனம் அமைதி பெற்று இயல்பு நிலையில் வாழ வரம் அருளினார்.
அதன் பின்னர் வெளியே வந்த முனிவர், மேனகையுடன் வாழ்ந்துவந்தார். தன் இலக்கும் தவமும் கலைந்து போனது பற்றி அவர் அறிந்தாரில்லை. ஒரு நாள், வசிட்டரின் காதில் அசரீரி ஒன்று கேட்டது. "வசிட்டனே... உனது தவம் தடைப்பட்டு விட்டது. நீ உண்மையில் உன் தவத்தின் பயனைப் பெற வேண்டுமானால், ஓர் உபாயம் கூறுகிறேன். கேள். நீ நரஸிம்ம வனத்தின் உட்பகுதிக்குச் செல். அங்கே நிருஸிம்ஹ ரூபியாக ஸ்ரீவிஷ்ணுவை தரிசிப்பாய். அவரை எண்ணி தவம் செய். அங்கே கோயில் கொண்ட விஷ்ணுவின் அருளால் பலர் தவமியற்றி சித்திபெற்றிருக்கிறார்கள்' என்றது.
வசிஷ்டரும் அவ்வாறே ந்ருஸிம்ஹ வனத்தின் உள்ளே சென்றார். சிங்கப் பெருமானை தரிசித்து, வலம் வந்து, தவம் புரியத் தொடங்கினார்.
வசிஷ்டர் மீண்டும் கடுந்தவம் செய்யத் தொடங்கியதைக் கண்ட தேவர்கள், இந்திரனிடம் தெரிவித்தனர். இதனால் அவரது தவத்தைக் கலைக்க மீண்டும் முயன்றான் தேவேந்திரன். ஐராவத யானை மீதேறி, ஆயுதம் எடுத்துத் தாக்கி, முனிவரின் தவத்தைக் கலைக்கத் தொடங்கினான்.
ஆனால், தான் செய்வது தவறெனத் தெரிந்தது இந்திரனுக்கு. தன் தவறைப் போக்க, நிருஸிம்மர் சந்நிதி கொண்ட பாவன விமானத்தின் கீழ்ப் புறம் ஒரு தீர்த்தத்தை உருவாக்கி, நீராடி தவம் புரியத் தொடங்கினான். இந்திரன் தோற்றுவித்த தீர்த்தம் இந்திரபுஷ்கரிணி எனப்படுகிறது.
இது புராணப் பெருமை பெற்றுள்ளது. இதன் கரையில் தவம் செய்த யக்ஞகுப்தருக்கு பிரகலாதன் தரிசனம் தந்து, ஆசியளித்தானாம். கெüதமரின் சாபத்தால் துன்புற்ற தேவேந்திரன் இதில் நீராடி பாவம் நீங்கப் பெற்றானாம். தீர்த்தச் சிறப்பு மிக்க இந்தத் தலத்தில், பாவன விமானத்தின் தென்புறத்தில் ஜமதக்னி தீர்த்தம் உள்ளது.
ஜமதக்னியின் புத்திரர் பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட தீர்த்தம். தன் தந்தையைக் கொன்ற கார்த்தவீர்யார்ஜுனனையும் அவனைப் போன்ற துஷ்ட அரசர்களையும் கொல்ல அருள் வேண்டி இங்கே பரசுராமர் நிருஸிம்ஹரை நோக்கி தவம் செய்து, வில்லும் அம்பும் பெற்றார்.
மார்கண்டேய புராணத்துள், நிருஸிம்ஹவன மாஹாத்மியத்துள் உள்ளது இந்தத் தலத்தின் புராணம். ரிஷி ஜைமினி தமக்கு நற்கதி கிடைக்க வழி கேட்டு பிருகு முனிவரை அணுகினார். ""இதே கேள்வியை நாரதரும் பிரம்மாவிடம் கேட்டார். அவர் கூறிய பதிலை உனக்குக் கூறுகிறேன்'' என்று சொல்லி, இந்தத் தலத்தின் மகிமையை ஜைமினிக்கு பிருகு சொல்வதாக அமைந்துள்ளது இந்தத் தல புராணம்.
புராணப் பெருமை பெற்ற இந்தத் தலம் சிங்கிரிக்குடி, சிங்கர்குடி, சிங்கர்கோயில் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. அபிஷேகப்பாக்கம் என்றால் அனைவருக்கும் தெரிகிறது. இங்கே லட்சுமிநரசிம்மர் அபூர்வமான கோலத்தில் கோயில் கொண்டிருக்கிறார். மூலவர் 16 திருக்கரங்களுடன் திகழும் உக்ர நரசிம்மர். ஒவ்வொரு கரத்திலும் ஓர் ஆயுதம் தாங்கியுள்ளார். வலதுபுற 8 கரங்களில் பதாகஹஸ்தம், பிரயோக சக்கரம், குத்துக் கத்தி, பாணம் ஆகியவற்றைத் தாங்கியும், அசுரனின் தலையை அறுத்த நிலையில், கத்தியால் அசுரன் ஒருவனைக் குத்தியவாறு, இரண்யன் காலை அழுத்திப் பிடித்தபடி, இரண்யன் குடலைக் கிழிப்பது போல் எனவும் ஆக எட்டு கரங்களும், இடதுபுற கரங்களில், குடல் மாலையைப் பிடிப்பது, சங்கம், கேடயம், வில், கதை ஆகியவற்றுடன், வெட்டப்பட்ட தலை, இரண்யனின் தலையை அழுத்திப் பிடித்தபடி, குடலைக் கிழிப்பது என இடதுபுற 8 கரங்களுமாய் உக்ர ரூபத்தில் காட்சி தருகிறார் நரசிம்மர்.
பிரகலாதனுக்கு அருள் புரிந்த நிலையில், பிரகலாதன் நரசிம்மரின் கீழே வலப்புறத்தில் கைகள் குவித்துத் தொழுதபடி உள்ளான். பெருமாளின் இடப்புறம் வதம் செய்யப்பட்ட இரணியன் மனைவி நீலாவதி, வசிஷ்டர், சுக்கிரன், மூன்று அசுரர்கள் ஆகியோரும் உடன் உள்ளனர்.
கனகவல்லித் தாயார் தனி சந்நிதியில் உள்ளார். பிரகலாத வரதனாக உற்ஸவ மூர்த்தி. கிருஷ்ணாரண்ய úக்ஷத்ரம் என்ற புராணப் பெயர் கொண்ட தலம். "ஆல்' தல விருட்சமாகத் திகழ்கிறது. ஜமதக்கினி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு(பார்க்கவ) தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம் என ஐந்து தீர்த்தங்கள் உள்ளன.
புரட்டாசியில் புண்ணியம் தரும் அட்டநரசிம்மத் தலங்கள்: இரணியனை சம்ஹரிக்க திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து தங்கள் துயர் தீர்த்ததைக் கொண்டாடிய தவ முனிவர்கள், பின்னர் தாங்கள் எப்போதும் நரசிம்ம அவதாரக் கோலத்தைத் தரிசிக்க வழி செய்யுமாறு கோரினர். முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று நரசிம்ம அவதாரக் கோலம் காட்டினார் பெருமாள். அவ்வாறு தமிழகத்தில் நரசிம்ம அவதாரக் கோலம் காட்டிய எட்டு இடங்கள் அட்ட நரசிம்ம தலங்கள் எனப்படுகின்றன. இவற்றில் நடுவில் அமைந்துள்ள பூவரசங்குப்பத்தைச் சுற்றி சோளிங்கர், நாமக்கல், அந்திலி, சிங்கப் பெருமாள் கோவில் (தென் அகோபிலம்), பரிக்கல், சிங்கர்குடி, சித்தனைவாடி ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. இவற்றுள் சிங்கர்குடி, பூவரசங்குப்பம், பரிக்கல்ஆகிய மூன்று நரசிம்ம தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பு. அருகருகே இருப்பதால், விழுப்புரத்தை மையமாக வைத்து இவற்றை ஒரே நாளில் நாம் தரிசிக்கலாம்.
இந்த சந்நிதி கருவறையில் 16 திருக்கரங்களுடன் இரணியனை வதம் செய்த கோலத்தில் உக்கிர நரசிம்மர், யோக நரசிம்மர், பாலநரசிம்மர் என மூன்று நரசிம்ம மூர்த்திகளை தரிசிக்கலாம். ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் உற்ஸவர் பிரகலாதவரதன் அருள்பாலிக்கிறார். வைகானச ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறுகின்றன. ராஜராஜ சோழன், விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் உள்ளிட்டோர் இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். ஆற்காடு நவாப், பிரெஞ்சு அதிகாரிகள் உள்ளிட்டோரும் நரசிம்மருக்கு அணிகலன்கள் பல அளித்துள்ளனர்.
இங்கே கனகவல்லித் தாயாரை வழிபட்டால் மனநலன் பாதிப்பு, கடன் தொல்லை, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், எதிரிகளால் தொந்தரவு, கிரக தோஷம் ஆகியவற்றால் துன்புறுபவர்கள் நன்மை பெறுவர் என்பது நம்பிக்கை.
வேண்டுதல்: இது ஒரு பரிகாரத் தலமும்கூட. நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும். குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் - பிசாசு பிடித்தவர்கள், நரம்புத் தளர்ச்சியில் துன்புறுபவர்கள் நலம் பெற இங்கே வேண்டிக் கொள்கின்றனர். சுவாதி நட்சத்திரம், பிரதோஷ நாள், செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஹோரையில் நரசிம்மரை தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல் நிறைவேறும். நரசிம்மர் சந்நிதியில் நெய் தீபம் ஏற்றுவது பலன் தரும் நேர்த்திக்கடன்.
தரிசன நேரம்: காலை 7.30- 12 மணி வரை, மாலை 4.30- 9.00 மணி வரை
விழாக்கள்: சித்திரை சுவாதி நரசிம்மர் ஜயந்தியன்று தேர்த் திருவிழா, மாசி மகத்தில் புதுச்சேரி கடலில் தீர்த்தவாரி, ஐப்பசியில் பவித்ர உற்ஸவம், வைகுண்ட ஏகாதசி மாலை கருட சேவை, மாட்டுப் பொங்கலன்று தீர்த்தவாரி.
அமைவிடம்: புதுச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவிலும், கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவிலும் உள்ள தவளக்குப்பம் வழியாக மேற்கு நோக்கிச் செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவு. அபிஷேகப்பாக்கம் என அழைக்கப்படுகிறது.

பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்!!!




பண புழக்கத்திற்க்கு எளிய பரிகாரம்!!!

மேலை நாடுகளில் கடைபிடித்து வரும் தாந்த்ரீக முறைகளில் சிலவற்றை இனி உங்களுக்கு அளிக்கலாம் என உள்ளேன். இவை அனைத்தும் பரிசோதிக்கபட்டவை ஆகும். ஆகையால் அனைவரும் செய்து பயன் அடையலாம்.

இதை வெள்ளிக்கிழமைகளில் 8-9 மணிக்குள் செய்தால் பலன் இரட்டிப்பு ஆகும்.சாதாரண நாட்களிலும் செய்யலாம்-கால நேரம் பார்க்க வேண்டியதில்லை.
சிறிய வெள்ளி அல்லது கண்ணாடி கிண்ணம் எடுத்து கொள்ளவும். அதில் சம அளவு உப்பு, சர்க்கரை மற்றும் அரிசி சேர்க்கவும். அதற்கு நடுவில் ஒரு புத்தூசி அல்லது காப்பூசி எனப்படும் சேஃப்டி பின் ஒன்றை மேல் நோக்கி இருக்குமாறு சொருகவும். பின்பு கிண்ணத்தை கையில் ஏந்தி பிரபஞ்சத்திடம் (கடவுளிடம்) தங்களுக்கு என்றும் உணவு, உடை, உறைவிடம் மற்றும் செல்வம் தங்கியிருக்க பிரார்த்தனை செய்து கொண்டு, கிண்ணத்தை வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் (கிண்ணத்தை மூடாமல்) வைத்து விடவும்.
தென் மேற்கு மூளையில் கிழக்கு நோக்கியும், வட கிழக்கு மூளையில் மேற்கு நோக்கியும் வைப்பது இரட்டிப்பு பலன் தரும். இதை தினமும் ஒரு முறை பார்த்து மனதினுள் மேற்கண்ட பிரார்த்தனை செய்து வந்தால் போதும்.மந்திர உச்சரிப்புகள் ஏதும் தேவை இல்லை. அன்றாடம் சிறு முன்னேற்றமாவது வந்து கொண்டே இருப்பதை கண் கூடாக காணலாம்.
இவை தூசி படர்ந்து அழுக்கானவுடன், வேறு இதே முறையில் மாற்றி வைக்கவும். வாழ் நாள் முழுதும் செய்யலாம். முடிந்த அளவு பொருட்கள் சேர்த்தால் போதும்-அவரவர் வசதிக்கேற்ப்ப

பலன் பெற சில வழிகள்



பண வரவிற்கு:
மிகுந்த மருத்துவ குணம் கொண்ட நொச்சி செடியின் சிறுதளவு வேரை 
எப்போதும் பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து வர பண வரவு உண்டாகும். 
தன அகர்ஷணம் செய்யும் சக்தி மிகுந்தது நொச்சியின் வேர். ஒரு 
மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம்.

தடைகள் விலக தாந்த்ரீக முறை :
இதை வியாழன் காலை 6-7 மதியம் 1-2 அல்லது இரவு 8-9 மட்டுமே செய்ய 
வேண்டும். ஆகாசதாமரை செடியை வியாழன் அன்று பறித்தோ
 (ஏரி மற்றும் நீர் நிலைகளில் காணப்படும்)அல்லது வாங்கியோ 
முழுவதுமாக ஒரு மஞ்சள் நிற துணியில் வெளியில் தெரியாத படி 
முடிந்து வீட்டின் வடகிழக்கு மூளையில் மாட்டி விட வேண்டும். 
இதை எவரும் தொடதபடி பார்த்து கொள்ள வேண்டும். தொட்டால் 
பரிகாரம் தடை படும். 45 நாட்களுக்கு ஒரு முறை இதை மாற்றி விடலாம். 
பலன் அளிக்கும் பரிகாரம் இது என்கிறது தாந்த்ரீகம்

வேலை மாற்றத்திற்கு :
அதிகாலை எழுந்து குளித்து புதிய ஆடைகள் அணிந்து 11 சிவப்பு
 மிளகாய்களை எடுத்து கொண்டு வேலை மாற்றத்திற்காண
 வேண்டுதலை சூரியனை பார்த்தபடி கூறிக்கொண்டே எறிந்து
 விடவேண்டும். இதை தொடர்ந்து 43 நாட்கள் செய்து வர வேண்டும். 
இதற்கிடையில் வேலை மாற்றம் ஏற்பட்டுவிட்டால் நிறுத்தி விடவும்.

சிவப்பு புத்தகம் என்னும் லால் கிதாப் பரிகாரங்கள் (1)
வியாபாரத்தில் / தொழிலில் அதிக லாபம் அடைய கீழ்க்கண்ட
 இரு பரிகாரங்கள் தரபட்டுள்ளன. முழு நம்பிக்கையுடன் செய்தால் 
பலன் நிச்சயம்.
(1) இது செவ்வாய் அல்லது வெள்ளி அன்று செய்ய வேண்டியது. சிறிது 
வெள்ளம் மற்றும் வருத்த (அல்லது) வேக வைத்த கொண்டை கடலை
 இரண்டையும் நமது இஷ்ட தெய்வம் எதுவோ அவருக்கு நிவேதனம் 
செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.

(2) இது வியாழக்கிழமை சூரிய உதயத்திற்கு முன் செய்ய வேண்டியது. 
7 லட்டு அல்லது மஞ்சள் நிற இனிப்பு பண்டத்தை வாங்கி வீட்டில் உள்ள
 யாரேனும் வியாபாரம் / தொழில் செய்யும் நபரை கிழக்கு பார்த்து நிற்க வைத்து 
7 (ஏழு) முறை உடம்பு மற்றும் தலையை சுற்றி தனியாக வைத்து 
விட வேண்டும். பின்பு அடுத்த நாள் சுற்றி போட்ட நபர் சூரிய 
உதயத்திற்கு முன் அந்த லட்டுகளை ஏதேனும் வெள்ளை நிற 
பசுவிற்கு அளித்து விட்டு திரும்பி பார்க்காமல் வீடு வந்து குளித்து
 விட வேண்டும் என்கிறது பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழதப்பட்ட 
சிவப்பு புத்தகம் எனும் லால் கிதாப்.
பெரிய செலவில்லாத பரிகாரமானதால் நம்பிக்கையுடன் செய்து
 பார்ப்பதில் தவறென்ன 

கடன் தொல்லை மற்றும் பண பிரச்னைகள் அகல :
பட்டாணி அளவில் 108 கோதுமை மாவு உருண்டைகள் செய்து அதை
 காலை வேலையில் மீன்களுக்கு உணவாக கொடுக்க வேண்டும். 
ஒவ்வொரு உருண்டைகள் நீரில் வீசும் போதும் " ஓம் ஹ்ரீம் நமஹ" 
என ஜெபிக்க வேண்டும். ஏரி, குலம், கிணறு, ஆறு இவைகளில் உள்ள
 மீன்களுக்கு மேற்கண்ட பரிகாரம் செய்தால் நலம். பிரச்சனைகள் 
விலகும் வரை வாரம் ஒரு முறை நம்பிக்கையுடன் செய்து வர 
பலன்கள் நிச்சயம். மேலும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காலை
 வேலையில் குளித்து முடித்ததும் சிறிது சர்க்கரை எடுத்து வீடு வாசல்
 வெளியே தூவி வரவும். இது சிறு பூச்சிகள் மட்டும் எறும்புகள் உண்ண 
உணவாகும். இதை தினசரி செய்து வரலாம். குடும்பத்தில் உள்ள 
அனைவரும் செய்தால் நலம். சிறு சிட்டிகை அளவு போதுமானது. 
இவைகள் உண்ண உண்ண உங்கள் கஷ்டங்களும் சிறிது சிறிதாக 
விலகுவது கண் கூடாக தெரியும். மிக எளிய பரிகாரமாக தோன்றினாலும்
 மேற்கண்ட இரண்டும் மிக சக்தி வாய்ந்த பரிகாரங்கள் ஆகும்.

திடீர் பண வரவிற்கு :
பவழமல்லி செடியின் வேரை சிறிது எடுத்து அதோடு 11 சிகப்பு குன்றி
 மணி சேர்த்து வெள்ளி தாயத்தில் அடைத்து உடம்பில் படும் படி 
கழுத்தில் அணிய திடீர் பண வரவு உண்டாகுமாம்.
மேற்கண்ட செடியின் வேரை எடுக்க எந்த வித சாப நிவர்த்தியும் கிடையாது

Monday, September 7, 2015

சோழ மன்னன் கரிகால் சோழன் கட்டிய ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட கோயமுத்தூர்‌ பட்டீஸ்வரர்!-



சோழ மன்னன் கரிகால் சோழன் கட்டிய ஐந்து அரிய‌ அதிசயங்கள் கொண்ட கோயமுத்தூர்‌ பட்டீஸ்வரர்!-
அளப்பரிய அபூர்வ தகவல்கள்!
ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து. கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து பேரூர் என்னும் பாடல் பெற்ற‍ தலம்.
நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம்
என்றும் அழைக்கப் படுகிறது. இங்கு நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியபோது
அவர் காலில் அணிந்திருந்த சில சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.
இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்...
1 இறவாத பனை
2.பிறவாத புளி
3.புழுக்காத சாணம்
4.எலும்பு கல்லாவது
5. வலது காது மேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து
இதுதான் அந்த அதிசயங்கள்.
1.இறவாத பனை...
பல ஆண்டுகாலமாக இன்றும் பசு இளமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று 
கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.
2.பிறவாத புளி...
அடுத்து பிறவாதபுளி, என்று போற்ற‍ப் படும் புளியமரம் இங்கு இருக்கிறது. இந்த புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தே இல்லையாம். புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டில் இருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். முளைக்க‍வே இல்லை. இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம். அதனால் பிறவாத புளி என்று அழைக்கிறார்கள்.
3.புழுக்காத சாணம்...
மூன்றாவதாக புழுக்காத சாணம், கோயில் இருக்கிற பேரூர் எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் ஆடு, மாடு போ ன்ற கால் நடைகளின் சாணம் மண் ணில் கிடந்தால் எத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லை யாம்.
மனித எலும்புகள் கல்லாவது...
4.எலும்பு கல்லாவது....
அடுத்து மனித எலும்புகள் கல்லாவது இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை இந்த ஆத்மா புண்ணியம் பெற வேண்டும் என்பதற்காக இங் குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்களாம். அப்ப‍டி ஆற்றில் விடப் படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி கண்டெடுக்க‍ப் படுகிறதாம். என்ன‍அதிசயமாக இருக்கிறது அல்ல‍வா? 
அதுதான் பட்டீஸ்வரரின் திருவருவள்.
5.வலது காது மேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து
இதுதான் அந்த அதிசயங்கள்.
த‌மது வலது காதை மேல் நோக்கி வைத்த ‍படி மரணிப்ப‍து...
ஐந்தாவதாக பேரூரில் மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வரர், இங்கு அமைதியாகத் தான் காட்சித்தருகிறார். ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது. முன்பு இக் கோவில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம். அப் போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொ ண்டிருக்கும் அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம். இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும் போது கிடைத்த‍வர்தான் நமது பட்டீஸ்வரர்.
கிடைக்கும் போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர். இவரின்
திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த‍ நிலை, மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள் இவைகளோடு பட்டீஸ்வரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப் படுகின்றன• இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித்திருக்கிறார்கள். இவர் இருக்கும் பின்புறம் பன்னீர்
மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து கொண்டிருக்கின்றன•
ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் திப்பு சுல்தான். இந்தக் கோயில் அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்திஐ இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். ஆம் இறைவன் குடியிருக்கும் சிவ லிங்கம் அடிக்க‍டி அசையும் என்று, இதை நம்பாமல் சிவா லயத்தின் மீது கை வைத்துப் பார்த்திருக்கிறான் மன்ன‍ன் திப்பு சுல்தான்.அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன• நெருப்பின்மீது கைகள் வைப்ப‍து போல் உணர்ந்து துடித்திருக்கிறான். கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.
கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். இவனைப்போன்றே ஹதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப் படுகின்றன•
இக்கோயிலின் ஸ்தல வி ருட்சம் அரச மரமாகும். பட்டீஸ்வரனின் சிறப்புக்களை எல்லாம் பார்த்தோம். இனி தாயின் சிறப்புக்களைப் பார்போம்.
இங்குள்ள‍ அம்ம‍னின் பெ யர் பச்சை நாயகியாகும். பச்சை நிறமாகிய மரகதக் கல்லில் அன்னை எழில் ஓவியமாக
எழுந்தருளியிருக்கிறாள்.
அன்னையின் அன்பு முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க‍லாம். அவ்வ‍ளவு அழகு...
வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். இவளின்
ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது. அத‌ன் வாயினு ள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. கல் வெளியில் வராதவாறு சிங்கத்தின் பற்கள் நிற்கின்றன• அற்புதமாக கலை நுட்பத்துடன் கண்டோர் வியக்கும் வண்ண‍ம் சிங்கத்தின் சிலை உருவாக்க‍ப்பட்டுள்ள‍து. ஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள்.
இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தில் தத்ரூபமாக வடிவமைக்க‍ப் பட்டுள்ள‍ன• குறிப்பாக கோயிலின் வட பக்க‍ம் உள்ள‍ பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள‍ 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின் றன•
சிற்பங்களால் வடிவமைக்க‍ப் பட்டுள்ள‍ இக்க‍ல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல‍. தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெரு மையால் நமது நெஞ்சு
நிமிர்கின்றது. மேலும் கோயிலின் வட மேற்கில் பிரம்ம‍ குண்ட விபூதி எனப் படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.
அருள் நிரம்பிய இந்த ஆலயத்தைப் பஞ்ச பாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு, வியாக்யபாதர், பதஞ்சலி, காலவரிஷி,கோமுனி, பட்டி முனி போ ன்றவர்களும் வணங்கி அருள் பெற்றுள்ளனர். அருணகிரி நாதரால் பாடல் பெற்றுள்ள‍ முருகன் பழனியில் உள்ள‍தை ப் போன்றே மேற்கு நோக்கி தண்ட பாணித் தெய்வமாய் பக்தர்களுக்கு காட்சி தருகின்றான்.
நால்வரில் ஒருவராகிய சுந்தரர், இங்குள்ள‍ பட்டீஸ்வரரை வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம். எப்போதுமே சுந்தரரிடம் ஒரு நல்ல‍ குணம் உண்டு. எந்த ஊர் சென்றாலும் வழிச் செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார். ஏன் என்றால், இவர் இறை வனின் தோழன் அல்ல‍வா! இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.செல்வச் செழிப்போடு இருந்த ஈசனுக்கே ஒரு முறை பேரூரில் பணம் தட்டுப்பாடாம். சுந்தரர் வந்தால், பணம் கேட்பானே என்ன‍ செய்வது என்று யோசித்த பட்டீஸ்வரர் சுந்தரரிடமிருந்து தப்பித்துக் கொள்வதற்காக
நிலத்தில் நாறும் நடும் கூலித் தொழிலாளியாய் பச்சையம்ம‍னுடன் சேர்ந்து நாற்று நடும்போது சுந்தரர் பார்த்து
விடுகின்றார். அவை அழைத்து வந்து ஆட வைக்கிறாராம்.
அவரிடமிருந்து ஒரு பாட்டும் வருகின்றது. அந்த அற்புமான பாட்டைப் பார்ப்போம்.
பாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள்
பங்கன் பைங்கண் ஏற்ற‍ன்
ஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்
பேரூர்ப் பெருமானைப் புலியூர்ச்
சிற்ற‍ம்பலத்தே பெற்றாம் அன்றே!
சுந்தரர்க்காக அம்பலத்தில் ஆடினான் இறைவன் அதைக்
கண்டு மகிழ்ந்து பாடினார் சுந்தரர். சுந்தரர் பாடிய இறைவனை மட்டுமல்லாமல் நம்மையும் மகிழ்விக்கின்றது.
பேரூரில் இறைவனும் இறைவியும் நடவு நட்ட‍ வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்க‍ள் ஆனி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று உற்சாக‌மாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
என்ன‍ இப்போது உங்களுக்கு இந்த கோயிலுக்குப் போக வேண்டும்.!.

அந்த அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வேண்டும் என்ற எண்ண‍ம் வந்திருக்குமே!.
சரி, கோயிலுக்குப் புறப்படுங்கள். ஆனால் ஒரு சின்ன‍ செய்தி அவனிடம் பணம் கேட்டுப் போகாதீர்கள்.
ஓடி ஒளிந்து கொள்வான்.
அருள் வேண்டி போங்கள்.
மனமிறங்கி அருளை அள்ளித் தருவான்.
இதை அனுபவிக்கும் பிறவியில் நாம் பரவசமடைவோம்.
பகிருங்கள்.