Tuesday, March 17, 2015

விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பதற்கான காரணம்:

விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பதற்கான காரணம்:
பூரணம் எனபது நிறைவானது என்ற பொருளாகும்.
வெள்ளையான மாவுப்பகுதி தூய மனமாகும். அதில் நிறைந்துள்ள தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள
தூய பக்தியை குறிக்கிறது.
விநாயகருக்கு மிகவும் விருப்பமானது ”கொழுக்கட்டை” ஆகும்.
இதில் வைக்கப்படுகிற பூரணம்-தேங்காய்த்துருவல், வெல்லம், எள், ஏலக்காய் முதலிய சுவை மிக்க பொருள்களின் கலவையாகும். பூரணம் எனபது நிறைவானது என்ற பொருளாகும். வெள்ளையான மாவுப்பகுதி தூய மனமாகும்.அதில் நிறைந்துள்ள தேங்காய்த் துருவல் பூரணம், மனம் முழுவதும் நிறைந்துள்ள தூய பக்தியை குறிக்கிறது. இதுதான் கொழுக்கட்டையின் தத்துவம் ஆகும்.
அதாவது மனம் நிறைந்த பக்தியுடன் இறைவனைத் தொழுவதே மிகச் சிறந்த வழிபாட்டு முறையாகும். இதைக் “கொழுக்கட்டை” தெரிவிக்கிறது. தேங்காய் “பூரணமாகிறது” விநாயகருக்கு உகந்ததாகிறது.
கொழுக்கட்டையின் கூர்மையான முன் பகுதி, விநாயகர் கூரிய புத்தியை அருள்வார் என்பதைத் தெரிவிக்கிறது. கொழுக்கட்டையின் வெள்ளை நிற வெளிப்பகுதி, எல்லோருக்கும் தெளிவான உள்ளம் தருவார் என்பதைத் தெரிவிக்கிறது.கொழுக்கட்டையின் உட்புறத்தில் இனிப்பான பகுதியோ, கணபதி எப்போதும் இனிய அருள் வழங்குவார் என்பதைச் சொல்லாமல் சொல்கிறது.
Ganesan Pondicherry

12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு 12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்

12 மாதங்களில் பிறந்தவர்களுக்கு
12 மாத தெய்வங்களின் அதிஷ்ட மந்திரங்கள்

சித்திரை- மது: 


சங்க சக்ரோ ஜ்வலகரம் கிரீட்டத்பாசி
மஸ்தகம் ஜகானந்த ஜனனம்
மதுபாஸ முபாஸ்மஹே

வைகாசி- மாதவர்:

கௌமோதகீ சார்ங்க தரம் மாசம் மாதவ
சம்ஜகம் கருத்மத் வாகன
கதம் வந்தே பீஷ்டஸ்ய சக்தயே

ஆனி- சுக்ரர்:

த்ரிசீர்ஷம் ஷட்புஜம் பிரம்ம சூத்ரோஜ்வல
புஜாந்தரம் வ்யாக்ர வாகன
மாரூடம் சுக்ர மாஷ முபாஸ் மஹே

ஆடி- சுசி:

த்வி சீர்ஷகம் சதுர்ஹஸ்தம்
பன்னகேச்வர வாகனம் உபாஸ் மஹே சுசிம்
மாஸம் பக்தா பீஷ்ட ப்ரதாயகம்

ஆவணி - நபோ:

சதுர்முகம் சாஷ்ட புஜம் வராக வர
வாகனம் நபோ மாஸம் கமாம்யத்ய
க்லேசா நாப மனுத்தயே

புரட்டாசி- நபஸ்யர்:

பஞ்ச வக்ரம் தகபுஜம் சாரங்க பிரவாஸ்திதம்
நமாம்யஹம் நபல்யாஜ்யம்
மாஸம் இஷ்டார்த்த சித்தயே!

ஐப்பசி- கிஷர்:

ஷண்முகம் துவாதச புஜம் பல்லூஜவர
சம்ஸ்திதம் பக்தா பீஷ்ட ப்ரதம் நித்யம்
இஷம் மாஸ முபாஸ்மஹே

கார்த்திகை - ஊர்ஜர்:

த்ரிநேத்ரம் சைவஜஷனம் சாருசந்த்ரார்த்த
சோபிதம் கைலாஸ சிகரா வாஸம்
ஊர்ஜம் மாஸ முபாஸ்மஹே

மார்கழி - ஸஹர்: வ்ருஷா ரூடம் சூயபாணிம் ப்ரமதா வலிசேவீதம் நமாமி சிரஸா நித்யம் சகாக்யம் மாஸ மன்வஹம்

தை- ஸஹஸ்யர்:

ஸாரிகா வாகனாரூடம் கட்க கேடக
சத்ரகம் நமாமி சிரசா நித்யம்
ஸகாக்யம் மாச மன்வஹம்

மாசி - தபோ:

சந்த்ர ஹாஸோ ஜ்வலகரம் சுகப்ரவர
வாகனம் த்யாயா மிஷ்டஸ்ய
ஸ்ம்லிஜ்யை தபோ மாஸ மண்யதீ

பங்குனி - தபஸ்யர்:

தபஸ்யம் மாஸ மீடேகம் கோகில
ப்ரவரஸ்திகம் ப்ரம்ம சூத்ரோ
ஜ்வலாம்ஸம்ஸ கிரீடாஞ்சீத மஸ்தகம்.

இப்பிறவியில் `நான்ராசியே இல்லாத துரதிஷ்டசாலி என்று வருந்துபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த பிரயோகராசி மந்திர ரகசியக் கூறுகளைப் பயன்படுத்தி வெற்றி காணலாம்.

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது. ஏன்?

வடக்கு திசையில் தலை வைத்து தூங்க கூடாது. ஏன்?
உலகம் அறிந்தது அறிவியல் நமக்கு இந்து மத பொக்கிஷம்
பூமியானது சூரியனிடமிருந்து வெளிவரும் சக்தி மூலம் காந்த சக்தியை அடைகிறது.பூமி மேற்கிலிருந்து கிழக்காக சுற்றும்போது,அதனால் உண்டாகின்ற மின்சார சக்தியானது,பூமியில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் செல்கிறது.அந்த சக்தி செல்லும் திசைக்கு வடக்கில் பூமியின் வடதுருவம் இருப்பதால் அது காந்ததின் வட துருவமாகிறது.இப்படி பூமியின் தென் துருவம் காந்தத்தின் தென் துருவமாகிறது.
இதனால் ஓரு காந்தமாய் மாறுகிறது பூமி இதனை நீருபிக்க ஒரு காந்த ஊசியை தொங்கவிட்டால் அது வடக்கு-தெற்காக நிற்க்கும். இதை,இயற்பியல் மின்காந்த புலம்,காந்த திசைகளின் ஈர்ப்பு மற்றும் எதிர்ப்புப் பற்றி விளக்குகின்றன.காந்த ஊசி வடக்கு தெற்காக நிற்பதற்க்குக் காரணம்,காந்தத்தின் வடக்கு பூமியின் தென் துருவத்தாலும்.தெற்கு பூமியின் வடக்கு துருவத்தினாலும் இழுக்கபடுதல்
இதே தான் மனித உடலில் காந்த சக்தி உள்ளது உடலில் இரத்ததில் முகிய பாகம் இரும்பு சத்தாகும்.மேலும் பகலில் உட்காரும்போதும், நடக்கும்போதும் அடையும் காந்த சக்தி உடலின் பல பாகங்களிலும் பரந்து விளங்கும்.தூங்கும் போது தெற்கே தலை வைத்து கொண்டால், நமது வடதுருவமும்,பூமியின் தென்துருவமும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு, உடலின் காந்த சக்தி கெடாமல் இருக்கும்.
ஆனால் வடக்கில் தலை வைத்துக் கொண்டால்,பூமியின் வட துருவம் நமது வடதுருவத்துடன் சேராது.ஒன்றையொன்று தாக்கி,தொடர்ச்சியாக உடலுக்கு காந்த சக்தியை அளிக்காது. உடலுடைய இயற்கையான நிலை மாறுபடும்
எனவேதான்,வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக் கூடாது.நம்ம முன்னோர்கள் சொல்வது பழைய பஞ்சாங்கம் என்று ஓதுக்கினால் பாதிக்க படுவது நாம் தான்
இது ஓலைச்சுவடி என்ற ஒரு நூலில் அழகாக விஞ்ஞான பூர்வமாக போட்டுள்ளனர். இது மட்டுமன்று நாம் அன்றாடம் செய்ய வேன்டியவை செய்ய கூடாதவைகள் அனைத்தும் அதில் அடங்கும்..

உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்:-

உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்:-
1) தலை நடுவில் (உச்சி)
2) நெற்றி
3) மார்பு
4) தொப்புளுக்கு(கொப்பூழ்) சற்று மேல்.
5) இடது தோள்
6) வலது தோள்
7) இடது கையின் நடுவில்
8) வலது கையின் நடுவில்
9) இடது மணிக்கட்டு
10) வலது மணிக்கட்டு
11) இடது இடுப்பு
12) வலது இடுப்பு
13) இடது கால் நடுவில்
14) வலது கால் நடுவில்
15) முதுகுக்குக் கீழ்
16) கழுத்து
17) வலது காதில் ஒரு பொட்டு
18) இடது காதில் ஒரு பொட்டு
பலன்கள்:
திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள்,
குறைவற்ற செல்வம்,நல்வாக்கு,நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம்.
உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோட்சம் செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார்.
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே..

ஒரு துறவி நெடுங்காலம் காட்டில் ஒரு மரத்தடியில்.....

ஒரு துறவி நெடுங்காலம் காட்டில் ஒரு மரத்தடியில் தவமியற்றிக் கொண்டிருந்தார். ஒருநாள் அவர் தலைமீது சில சருகுகள் வீழ்ந்தன. அவர் கோபத்துடன் நிமிர்ந்து பார்த்தார். மேலே மரக்கிளையில் சண்டையிட்டுக் கொண்டிருந்த காகமும், கொக்கும் அவரது உக்கிரப் பார்வையினால் எரிந்து சாம்பலாகின. தனது தவ ஆற்றலைக் கண்டு துறவிக்கு மிக்க மகிழ்ச்சி.
சிறிது நேரத்திற்குப் பின்னர் அவர் அருகிலுள்ள கிராமத்தில் ஒரு வீட்டின் முன் பிச்சை கேட்டு நின்றார். கொஞ்சம் பொறு என வீட்டினுள் இருந்து ஒரு பெண்மணியின் குரல் கேட்டது. அப்போது அத்துறவி, ஓ, என்னைக் காக்க வைக்கும் இப்பெண்மணிக்கு எனது தவ வலிமை தெரியவில்லை என எண்ணினார். இப்படி அவர் நினைத்ததுதான் தாமதம், வீட்டின் உள்ளிருந்து, ஓ மகனே, இங்கிருப்பது காக்கையுமல்ல, கொக்குமல்ல என்ற குரல் வெளிப்பட்டது.
துறவி அதிர்ந்து போனார். கடைசியில் அப்பெண்மணி வெளியில் வந்தபோது, துறவி அவளது கால்களில் வீழ்ந்து, எப்படி அவர் தனது எண்ணங்களை அறிந்தார் எனக் கேட்டார். அதற்கு அவள், மகனே, எனக்கு உன்னைப் போல் யோகமோ, தவமோ எதுவும் தெரியாது. எனது நோயுற்ற கணவருக்குத் தவறாது எனது பணிவிடைகளை மனப்பூர்வமாகச் செய்து கொண்டிருக்கிறேன்.
திருமணத்திற்கு முன் என் பெற்றோர்களுக்கு என் கடமையைச் செய்தேன். கடமைகளைச் செய்து வந்ததாலேயே எனது ஞானக்கண் திறந்துவிட்டது. இதற்கு மேலும் ஏதாவது தெரிந்து கொள்ள விரும்பினால், அருகிலுள்ள நகரத்தில் வியாபாரம் செய்யும் ஒரு இறைச்சி வியாபாரியைக் கேட்டுத் தெரிந்து கொள் எனக் கூறினாள்.
துறவியும் அப்பெண்மணி குறிப்பிட்ட இறைச்சி வியாபாரியைத் தேடிக் கண்டுபிடித்தார். அடக் கடவுளே, அசுரன் போல் தோன்றும் இவனிடமிருந்தா நான் உயர்ந்த விஷயத்தைத் தெரிந்து கொள்வது என அவர் நினைத்தார். அதற்குள், துறவியைக் கண்ட அந்த இறைச்சி வியாபாரி, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? சிறிது பொறுங்கள், எனது வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான்.
இங்கே என்ன நடக்கப் போகிறதோ என நினைத்தவாறே அமர்ந்திருந்தார் துறவி. நெடுநேரம் கழிந்தது. வியாபாரியின் வேலை முடிந்ததும், அவன் துறவியை அழைத்துக் கொண்டு தனது இல்லத்திற்குச் சென்றான்.
அவர் அமர இருக்கை ஒன்றை அளித்து விட்டு, வீட்டிற்குள் சென்று அவனது வயது முதிர்ந்த பெற்றோர்களைக் குளிப்பாட்டி, உணவளித்து, அவர்கள் மனம் மகிழும்வண்ணம் அவர்களுக்கு எல்லா சேவைகளையும் செய்தான், பின்னர் துறவியிடம் வந்தான். துறவி அவனிடம் ஆன்மாவைக் குறித்தும், கடவுளைப் பற்றியும் கேள்விகள் கேட்டார்.
அந்த இறைச்சி வியாபாரி அதற்கு அளித்த விளக்கங்களே வியாதகீதை என மகாபாரதத்தில் உள்ளது. பின்னர் துறவி அந்த வியாபாரியிடம், ஏன் இந்த இழிதொழிலைச் செய்கிறாய்? எனக் கேட்டபோது, அவன் அவரை நோக்கி, கடமைகளுள் எதுவும் இழிந்ததோ, கேவலமானதோ இல்லை.
என்னுடைய பிறப்பு என்னை இந்தச் சூழலில் வைத்துள்ளது. நான் பற்றின்றி எனது தொழிலைச் செய்து எனது பெற்றோர்களுக்குத் தொண்டு செய்கிறேன். எனக்கு தவமோ, யோகமோ தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் எனது கடமைகளைப் பற்றின்றி செய்தல் ஆகும் என்றான்.
இக்கதையைத் தொடர்ந்து, சுவாமி விவேகானந்தர் கூறுகிறார்:
நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைப் பற்றின்றி செய்தலாகும். அப்படிச் செய்வதன்மூலம் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்நிலையை அடைந்துவிடலாம்.
Ganesan Po

அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?

அறுபதாம் கல்யாணம் நடத்துவது ஏன்?
கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம்.
இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர். இதற்கு ஒரு தத்துவப்பின்னணி உண்டு. உலகவாழ்வில் ஈடுபட்டிருக்கும் மனிதன் ஆசாபாசங்களை ஏற்று அனுபவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். அவனுடைய அறுபதாம் வயது வாழ்வின் திருப்புமுனையாக அமைகிறது. இளமையில் செய்த திருமணத்தின் அடிப்படையில் குடும்பத்தைப் பேணுதல், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குதல் போன்ற இல்லறக்கடமைகள் நிறைவேறுகின்றன.
அதன்பின் பிள்ளை மற்றும் உறவுகளையும், வாழ்வியல் இன்பங்களையும் சுதந்திரமாக விடுத்து, கடவுளை முழுமையாகச் சரணடைய வேண்டும்.
இந்த ஆன்மிகக் கடமையை நினைவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

செல்வம் மூன்று வகைகளில் வரும் :

செல்வம் மூன்று வகைகளில் வரும் :
1. லட்சுமி செல்வம்,
2. குபேர செல்வம்,
3. இந்திர செல்வம் எனப்படும்.
லட்சுமி செல்வம்.......
பாற்கடலை, மந்தார மலையை மத்தாகவும் வாசுகி பாம்பைக் கயிறாகவும் கொண்டு தேவர்கள் வாலையும் அசுரர்கள் தலையையும் பிடித்துக் கடைய, சந்திரன்,
ஐராவதம், காமதேனு, தன்வந்திரி இவர்களுடன் மகாலட்சுமியும் வெளிப்பட்டாள். இந்த மகாலட்சுமிதான் இந்திரன் இழந்த செல்வத்தை மீண்டும் அவனுக்குக் கொடுத்தாள்.
மேலும் குபேரனை அளகாபுரிக்கு அதிபதியாக ஆக்கினாள். கிருஷ்ணனின் நண்பனான குசேலனுக்கு அளவற்ற நிதியைக் கொடுத்தாள். இவளின் கடைக்கண் பார்வை தன்மேல் விழாதா என ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள் பல. இந்த மகாலட்சுமியின் அருளைப் பெற்றவர்களுக்கு பதினாறு வகையான பேறுகளும் வந்து சேரும்.
லட்சுமி செல்வத்தைப் பெற்றவர்களுக்கு மதி மயக்கம் தோன்றாது. இந்தச் செல்வத்தைப் பெற்றவர்கள் மற்ற மனிதர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். தர்ம வாழ்வை மேற்கொள்வார்கள். இந்த செல்வம் ஏழுதலை முறையையும் தாண்டி நிலைத்து நிற்கும். இந்த செல்வம் வளர்பிறை சந்திரனைப் போன்று ஓங்கி வளரும். இயல்பிலேயே கொடை உள்ளம் கொண்டவர்களின் மீதுதான் லட்சுமியின் கடைக்கண் பார்வை படும்.
குபேர செல்வம்...
குபேரனின் தகப்பனார் ஒரு ரிஷி. தாயாரோ அசுர குலத்தைச் சேர்ந்தவர். குபேரன் ராவணனுக்கு சகோதர முறை. அந்தச் சகோதரனாலேயே இவரது நகரம் கைப்பற்றப்பட்டு விட, லட்சுமியின் அருளால் தனி நகரத்தை ஏற்படுத்திக் கொண்டார். இவர் தவம் செய்து அந்தத் தவ பலத்தினால் சங்கநிதி, பதுமநிதி போன்ற நவநிதிகளுக்கும் அதிபதியானார்.
குபேரனை ஒருவர் மனமுருகிப் பிரார்த்தித்தால், குபேரன் வழங்கும் குபேர செல்வம் அந்த பக்தருக்கு திடீர் செல்வமாக வந்து சேரும். அதாவது லாட்டரி, அறக்கட்டளை களை ஏற்படுத்தி அடையும் சுய லாபம் போன்றவையே அச்செல்வங்கள். திடீரென இந்த செல்வம் எப்படி ஒருவருக்கு வந்ததோ அதைப் போன்றே விரைவில் மறைந்துவிடவும் செய்யும்.
எனவே இத்தகைய செல்வத்தை பெற்றவர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு மரம் நடுதல், அன்னதானம், படிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்குதல், ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற பொதுக் காரியங்களுக்குச் செலவழிக்க வேண்டும். மூன்று தலை முறைகள் வரையிலாவது அந்த செல்வம் கீழிறங்காமல் நிலைத்திருக்கும்.
இந்திர செல்வம்..
போகி என்ற பண்டிகையை இந்திரனை முன் வைத்தே கொண்டாடுகிறோம். கிழக்கு திக்கின் அதிபதியாகத் திகழும் இந்திரன், தேவர்களின் தலைவனும் கூட, இந்திரனைப் பிரார்த்திப்பவர்கள் வெகு சிலரே. பசு, வீடு, அரச போகம் மற்றும் பொன் பொருள் சேர்க்கை போன்றவை இந்திர சம்பத்தின் அடையாளங்கள்.
இந்திரன் அருளால் அடையும் செல்வம் மூன்று தலைமுறைகள் வரை வருவது அரிதிலும் அரிது. சிலருக்கு ஒரே தலை முறையில் கூட மறைந்துவிடும். இந்தச் செல்வம் நிலைக்க விரும்புபவர்கள் கிரிவலம் வருதல், குல தெய்வத்தைப் பூஜித்தல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் நலம் விளையும்.

131 சித்தர்கள் போற்றித் தொகுப்பு


131 சித்தர்கள் போற்றித் தொகுப்பு
-------------------------------------------------------


ஞானியர்களின் திருவடி பூஜைதான்
உண்மை ஆன்மிகம் என்று உலகறியச் செய்யும்
வள்ளல், பரமானந்த சதாசிவ
சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக
சுவாமிகள் தொகுத்து வழங்கிய சித்தர்கள்
போற்றித்தொகுப்பு

அகத்தியர் துணை
--------------------------------
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
ஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி
துவக்கப்பாடல்
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே
திருமந்திரம் - 1598.
ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
ஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் அநுமான் திருவடிகள் போற்றி
ஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள்
போற்றி
ஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி
ஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10

ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
ஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
ஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி
ஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20

ஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கனநாதர் திருவடிகள் போற்றி
ஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி
ஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
ஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி
ஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள்
போற்றி
ஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30

ஓம் கனராமர் திருவடிகள் போற்றி
ஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி
ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி
ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி
ஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி
ஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
ஓம் குறும்பைச்சித்தர் திருவடிகள் போற்றி 40

ஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50

ஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி
ஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி
ஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி
ஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60

ஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி
ஓம் ஜனகர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி
ஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி
ஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70

ஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி
ஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி
ஓம் தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி
ஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி
ஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 80

ஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி
ஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி
ஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் தேரையர் திருவடிகள் போற்றி
ஓம் நந்தனார் திருவடிகள் போற்றி
ஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி
ஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் நாரதர் திருவடிகள் போற்றி
ஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90

ஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி
ஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி
ஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி
ஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி
ஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100

ஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி
ஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி
ஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி
ஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி
ஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110

ஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி
ஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி
ஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி
ஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி
ஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யாகோபு திருவடிகள் போற்றி
ஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 120

ஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வரரிஷி திருவடிகள் போற்றி
ஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி
ஓம் வால்மீகி திருவடிகள் போற்றி
ஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி
ஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி
ஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி
ஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி
ஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131

ஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள்
திருவடிகள் போற்றிபோற்றி

நிறைவுப்பாடல்
வாழ்கவே வாழ்கஎன்நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே

அகத்தியர் தரிசன அருள் பெற!


அகத்தியர் தரிசன அருள் பெற!
----------------------------------------------------

சித்தர் பக்தன் என்கிற அகத்தியர் அடியவர்
அனுப்பித்தந்த அகத்தியர் தரிசன அருள்
விதியை கீழே தருகிறேன். யாம் பெற்ற இன்பம்
இவ்வையகம் பெறுக என்கிற எண்ணத்தில்,
எல்லோரும் அருள் பெறுங்கள்.

அகத்தியரின் பாதார
விந்தங்களை பணிந்து கொண்டு செப்புகிறேன்.
வீட்டில் அகத்தியருக்காக
ஒரு அறையை தேர்ந்தெடுத்து.
அதை கழுவி அதில் மங்சள் நீரை தெளிக்க
வேண்டும். அந்த அறையில் அசைவம்
கொண்டு செல்லலாகாது.. பூசை செய்பவர்
அசைவம் அலையலாகாது. 45 நாள் அகத்தியர்
தரிசனம் காண மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
அகத்தியரின் படத்தின் முன் பத்மாசனத்தில்
அமர்ந்து கீழ் காணும் மந்திரத்தை சொல்ல
வேண்டும்.

ஓம் பசு பதிபஷராஜ
நிரதிசய சித்ருப ஞானமூர்த்தாய
தீர்க்க நே த்ராய
கணகம் கங்கெங் லங் லீங் லங் லாலீலம்
ஆவ் பாவ் ஆம் ஊம் பார்க்கவ்விய ஜோதிமய
வரப்பிரசன்ன
பாத தரிஸ்யே அகத்தியர் சரணாய நமஸ்து.

இவ்வாறு108 தடவை கூற வேண்டும். ”மனதில்
தீய எண்ணத்தை விலக்கி 45 நாளும் மனதார
ஜெபிப்பவர் 45ம் நாள் அகத்தியரை தரிசிக்கலாம்.

தரிசிப்பவர் முதலில் அவரின் காலில்
விழுந்நு ஆசிர்வாதம் பெறவேண்டும். பின்னர்
தேவையான வரத்தை கேட்கவேண்டும்.அதன்
பின்னால் அவர் நம் காதில் ஒரு மூல
மந்திரத்தை சொல்லுவார். அதை யாரிடமும்
கூறக்கூடாது.அதை ஜெபித்து நாமும்
ஞானகுரு ஆகலாம்.

உலகின் சிவன் கோயில்கள்:


உலகின் சிவன் கோயில்கள்:
--------------------------------------------------

மனித வரலாற்றை வகைபடுத்திய அறிஞர்கள்
அதனை பழைய கற்காலம், புதிய கற்காலம்,
இரும்புக்காலம் ,வெண்கலக்காலம் எனப்
பலவகையாகப் பிரித்திருக்கின்றனர்.இவற்றுள்
மனிதன் மிருகம் போல உண்டு ,இனப்பெருக்கம்
செய்த காலத்தில் இருந்து சற்றே
மேம்பட்டு,சிந்திக்கத் தொடங்கிய காலத்தை
பழைய கற்காலம் எனலாம்.இந்த பழைய
கற்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு
இருந்ததற்கான அடையாளக் கூறுகள்
அகழ்வாராய்ச்சியில் கிடைத்திக்கின்றன. இதில்
இருந்தே சைவத்தின் தொன்மையை நாம்
அறிந்து கொள்ளலாம்.

வட அமெரிக்காவில் கொலராடோ என்னும்
இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது சிவன்
கோயிலும் அதில் ஒரு பெரிய சிவலிங்கமும்
1937ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களினால்
கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக்கோயில்
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று
ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிஉற்ற
நிலையில் காணப்படுகின்றன.டெல்கால் என்ற
ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்புசிலை
ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கோயில்களில் இன்றும் கூட
திருவாசகம் ஓதப்படுகிறது.இங்கே
இருப்பவர்களுக்கு தமிழ்மொழி தெரியாததால்
ஏதோ மந்திரம் போல் உச்சரித்து
வருகிறார்கள்.மேலும் ஜாவாவில் உள்ள
பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன்
கோயிலில் தாண்டவத்தின் 32 முத்திரைகளைக்
குறிக்கும் சிற்பங்கள் உள்ளன ,.

சுமத்ராவில் அழிபாடுற்ற சிவன் கோயில்
உள்ளது. இங்கே அர்த்தநாரி வடிவம் ,கணபதி
சிலை,நந்தி சிலை,ஆகியவை
இருக்கின்றன.போர்போநியாவில் உள்ள
மலைகுகையில் சிவன் ,விநாயகர் சிலைகள்
உள்ளன.

சியாம் நாட்டிலும் கம்போடியாவிலும்
சிவலிங்கத்தின் உருவங்கள் கிடைத்துள்ளன.
சியாமில் பழைய சிவன்கோயில்
இருக்கிறது.இந்த கோவிலில் இப்போதும்
பொங்கல் விழ சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பாபிலோனியாவில் நிகழ்ந்த அகழ்வாராய்ச்சியில்
6000 ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பட்ட
சிவாலயங்களும், அவற்றின் இடிபாடுகளும்
கிடைத்துள்ளன.இங்கு கிடைத்த களிமண்
எட்டில் சிவா என்ற பெயர் காணப்படுகிறது.
பாபிலோனியர்கள் தங்கள் கடவுளுக்கு இட்டு
வழங்கும் பெயர்களில் எல்சடை என்ற பெயரும்
உள்ளது. இச்சொல் சூரியனைப்போல சிவந்த
சடையை உடையவன் என்று பொருள்
தரும்.இரண்டு புறங்களிலும் முத்தலை
சூலமும்,கையில் மழுவாயிதமும் கொண்ட
சிவபெருமான் காளையின் மீது நிற்பதாக
இருக்கின்ற சிலை ஒன்று கிடைத்திருக்கிற
து.மேலும் பாபிலோனியர்களின் மாத
பெயர்களில் ஒன்று சிவனின் பெயரைக்
கொண்டதாக இருக்கிறது.

சிரியா நாட்டில் சிவன்சிலையும் ,சிவன்
உருவம் பொறிக்கப்பட்ட வெண்கலத்தட்டும்
கிடைத்திருக்கிறது. இந்தத் தட்டில் உள்ள
உருவம் தந்தைக் கடவுளின் வடிவம் என்று
கூறுகின்றனர்.இவ்வுருவம் வலக்கையில்
மழுவும் ,இடக்கையில் ஆருமுனைகளைக்
கொண்ட இடியேறுந்தாங்கியபடி இட பத்தின்
மீது நிற்பதைப்போலப் பொறிக்கப்பட்டுள்ளது.

எகிப்தில் உள்ள பாலைவனம் ஒன்றுக்கு சிவன்
என்று பெயர் வழங்கி வருகிறது.இங்கு வாழும்
மக்கள் அமன்யூ என்ற கடவுளை
வணங்குகிறார்கள்.அந்தக் கடவுளுக்கு நந்தி
வாகனம் இருக்கிறது.கிரேக்க நாட்டில்
சிவலிங்கங்களைப் பொது இடங்களில்
எண்ணெயில் நீராட்டி வழிபட்டதாக எழுதி
வைத்திருக்கின்றனர். பௌத்த மதத்தில் ஒரு
பிரிவான ஷிண்டோயிசம் என்பதில்
சிவலிங்கத்திற்குப் பெருமதிப்பு தரப்படுகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக இமயமலைக்கு
அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத்
தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால்
ஆன சிவலிங்கத் திருஉருவம் ஆறு மாதத்திற்கு
ஒரு முறை உருவாகிக் கரைந்து வருகிறது.

மேலே கூறப்பட்ட சான்றுகளின் மூலமாக
உலகின் பல்வேறு இடங்களிலும்
சிவன்கோயில்களும், சிவவழிபாடும்,சிவனின்
பல்வேறு நிலையில் அமைந்த உருவங்களும்
விழாக்களும் நடந்து வந்தன என்பதை அறிந்து
கொள்கிறோம்.உலகமெங்கும் சிவ வழிபாடு
பரவிக் கிடந்தது என்பது யாராலும் மறுக்க
முடியாத உண்மை.

இந்தியாவில் பல சிவன் கோயில்கள்
இருந்தாலும் குறிப்பாக பாடல் பெற்ற
சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274
ஆலயங்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன.
மகாபாரதத்தில் வேதவியாசர் அர்ச்சுனனைப்
பார்த்து எவன் ஒருவன் அனுதினமும் சூரியன்
உதிப்பதற்கு முன்னால் எழுந்து
மனத்தூய்மையோடு ருத்ர ஜெபம்
செய்கிறானோ அவன் இந்த உலகில்
எல்லாவகையான இன்பங்களையும் அடைவது
நிச்சயம் என்கிறார்.

"ஓம் நமசிவாய " என்ற சிவா நாமத்தை
அன்போடு உச்சரித்தாலே பல பிறவிகளில்
செய்த பாவம் விலகும்.சிவன் கோயிலில்
எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியைத்
தூண்டிவிட்ட காரணத்தினால் அளவில்லாத
புண்ணியம் பெற்ற சாதாரண
எலி,மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப்
பிறந்ததை புராணங்கள் தெரிவிக்கின்றன.இந்த
உலகத்தில் பிறவி எடுத்தவர்கள் நல்ல
வழியைப் பெறுவதற்கு துணையாக
சிவமந்திரம் ,சிவதரிசனம் ,சிவவழிபாடு ஆகிய
மூன்றுமே ஆகும்.இவை மூன்றும்
ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் மிகவும்
இன்றியமையதாவை.

எல்லா உயிர்களுக்கும் முதன்மையானவன்
சிவபெருமான் .எல்லாம் சிவமயம், எங்கும்
சிவமயம்,எதிலும் சிவமயம் என்பதே ஆன்றோர்
கொள்கை.

செல்வமே சிவபெருமானே - நூலிலிருந்த .

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்


விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடரா:ஜர் தத்துவம்
------------------------------------------------------------------------------------------------


உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.

இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது.
இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.

இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.

இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!

விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற, அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன.

கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.

எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.

பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.

இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!

அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது."

அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:

"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."

நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.

விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)
இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)

செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.
ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?

சிவலிங்க வழிபாடு.


சிவலிங்க வழிபாடு.
--------------------------------


உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர்கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது

உருவ வழிபாடு லிங்கத்திலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத்து. ஏனென்றால் லிங்கம் ஒரு வகையில் உருவமுடையது. மறுவகையில் உருவமில்லாதது.

ஆலயங்களில் சிவன் என்ற பெயரில்
சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து
வழிபடுகிறார்கள். அந்த லிங்கமானது மனித
உருவமோ ! வேறு பிராணிகள் உருவமோ !
இல்லாமல் அது ஒரு வினோத வடிவமாக
இருக்கிறது. அதை ஏன் வழிபட்டார்கள் ?

அதுமட்டுமல்ல யாராவது துறவிகள்
இறந்தாலோ அந்த இடத்திலே சாமி சமாதி
ஆகிவிட்டார் என்று புதைத்த இடத்திலே
சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஆலயம்
கட்டுகிறார்கள். மனிதன் இறந்தால்கூட
சிவபதவி அடைந்துவிட்டார் என்று கூறுகின்ற
நிலையைப் பார்கிறோம். பொதுவாக இந்தக்
கூற்றிலே இருந்து சிவபதவி என்பது மிக மிக
உயர்ந்த உன்னதமான பதவி என்பது மட்டும்
புரிகிறது. ஆனால் எப்படி உயர்ந்த பதவி
என்பது மட்டும் புரிகிறது. ஆனால் எப்படி
உயர்ந்த பதவி எனபது மட்டும் புரிவதில்லை!

ஏன் மனித உருவமோ மிருக உருவமோ
இல்லாத லிங்கத்தை பிரதிஷ்டை செய்து
வழிபட்டார்கள். மனிதனுக்கும் லிங்கதிற்கும்
என்ன தொடர்பு என்பதை ஆராய்வோம்.

ஆண் பெண் புணரும்போது கோடிகணக்கான
ஆண் உயிர் அணுக்கள் கொண்ட சுக்கிலத்தில்
ஒன்றே ஒன்று மட்டும் பெண்ணின் சுரோணித
முட்டையை துளைத்துக் கொண்டு செல்லும்.

உள்ளே சென்று சுரோணித முட்டையின்
உள்ளே தலைமட்டுமே துளைத்து
சென்றுவிடும். அதன் வால்பகுதி வெளியே
துண்டித்து நின்றுவிடும். அதன்வடிவம்
மேல்க்கண்டாற் போல் இருக்கும் .

மேற்கண்ட வடிவத்திலேதான் தாயின் கருவிலே
குழந்தை வளரும். சிவம் என்கிற
வெட்டவெளியிலே இருந்து மூல அணுவான
சிவசக்தியில் தோன்றிய உடலே மனித உடல்.

கோழி முட்டையில் கோழியும் , மான்
வயிற்றில் பிறந்தது மான் போல சிவசக்தி
அணுவில் இருந்து பிறந்த மனிதன் அதன்
சாயலாகத்தான் பிறந்திருக்க வேண்டும் இது
விதி. மனிதன் படைப்புகுண்டான மூல
அணுவான சிவசக்தி வடிவத்தை எப்படி
அறிவது ? பிரபஞ்சத்தில் உள்ளல கோட்கள்
அத்தனையும் சுழன்று கொண்டு இருக்கின்றன.
சுழன்று சுழன்று மிதந்த வண்ணம் உள்ளன.

இந்த பிரபஞ்ச சுழற்சியில் பூமியும் சுழன்று
கொண்டிருகின்றது. சுழன்று கொண்டிருக்கின்ற
பூமியில் வாழும் மனிதனும் சுழலுகிறான்.
சுழன்று கொண்டு இருக்கின்ற இந்த மனிதனை
உட்கார வைத்து சுழல் விட்டால் சிவலிங்க
வடிவத்தோடு காணப்படுவான்.

ஆக மனித உடலானது “ஓம் “ என்ற
அணுசக்தியின் பிரதிபலிப்பு என்பது உண்மை.
மூலசக்தியின் அணு தன்மையே சிவசக்தி
இயக்கம். ஆகவே மேற்கண்ட படம் மூலமும்
விபரங்கள் மூலமும் மனித உடலானது
ஆதிசக்தியின் மூல அணுவின் வடிவு
பிண்டத்தில் சுக்கில சுரோணிதம் சேரும்போது
லிங்க வடிவு எடுத்த பின்பு மனித உடலே
லிங்கமாகக் காட்சி தருகிறது எனபது
தெளிவான உண்மை. இந்த அடிப்படையில்
ஆதி மூல அணுவின் வடிவம் சிவலிங்க
வடிவமாகத்தான் இருந்தாக வேண்டும் .

அதனால் துறவி இறந்த பின்பு சமாதியின்
மேல் லிங்கத்தை வைத்து வழிபடுகிறார்கள்.
சிவமயமாய் ஆகிவிட்டார் யென்று
கூறுகின்றனர். சிவமயம் என்றாலே
வெட்டவெளி ஜோதியிலே ஐக்கியமாகிவிட்டார்
எனபது பொருள்.
சமாதி என்றாலே ஆதியிலே சமம் ஆகிவிட்டார்
எனபது பொருள். ஆகவே சிவலிங்கம்
எனப்படுவது ஆதி மூல அணுவின் வடிவமே .

இந்த மனிதன் சிவலிங்க வடிவுதான்
என்பதற்கு என்ன ஆதாரம் ? இதைப்பற்றி
திருமூலர் என்ன சொல்கிறார் என்று பாப்போம்.

“மானிடராக்கை வடிவு சிவலிங்கம்
மானிடராக்கை வடிவு சிதம்பரம்
மானிடராக்கை வடிவு சதாசிவம்
மானிடராக்கை வடிவு திருகூத்தே “
- திருமந்திரம் 17.26

மேற்கண்ட பாடல் மூலம்
மனித உடம்பு சிவலிங்கம்
மனித உடம்பு வெட்டவெளி
மனித உடம்பு காற்று
மனித உடம்பு திருகூத்து
வெட்டவெளியிலே இருந்து தோன்றிய மூல
அணுவான சிவலிங்கம் உடம்பெடுத்து
சுவாசக் காற்றால் ஆடி , ஓடி மடிகின்றான்.
அதுதான் கூத்து என்று சுருங்கச் சொல்கிறார்.

ஆகவே மனித உடல்தான் சிவலிங்கம்.
சிவலிங்கம் தான் மனித உடல் என்பது
தெளிவாகப் புரிகின்றது.

அறிவியலும் சித்தநெறியும் -
------------------------------------------------

அறிவியலும் சித்தநெறியும் பிரிக்க முடியாத இரட்டைக் குழந்தைகள் என உங்களுக்கு தெரிந்திருக்கலாம். வடக்கே தலை வைத்து படுக்க கூடாதென வீட்டில் சொல்வதற்கு காரணம் மூடநம்பிக்கை இல்லை. அறிவியல். வடக்கு பகுதியின் புவி காந்தம் இருக்கிறது. அதனால் வடக்கே தலை வைத்து உறங்கும் போது அது மூளையை பாதிக்கின்றது என்கிறது அறிவியல். இது போல லிங்கத்திற்கும் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது

லிங்கத்திற்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள உறவை தெரிந்து கொள்வதற்கு முன் கோவிலைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். இந்துக் கோவிலின் அமைப்பு மனித உடலை ஒத்துள்ளது.

கால் – கோபுரம்.
ஆண்குறி – கொடிமரம்.
பெண்குறி – பலிபீடம்.
தலை – கருவறை.

ஒரு கோவிலின் பிரதானப் பகுதி கருவறை. அந்தக் கருவறையில் இருக்கும் கடவுள் சக்தி வாய்ந்தவர். மனித உடலிலும் தலை தான் பிரதானப் பகுதி. அந்த தலையில் இருக்கும் மூளைதான் சக்தி வாய்ந்த உறுப்பு. என்ன ஒரு ஒற்றுமை!.

மூளையில் இருந்து எல்லாவற்றிக்கும் கட்டளைப் பிரப்பித்துக் கொண்டிருப்பது பீனல்சுரப்பி. பீனலின் சுரப்பி முதன்மையான சுரப்பி. பீனல்சுரப்பியானது, உடல்சமநிலையை (ஹீமோஸ்டாஸிஸ்) ஒழுங்குப்படுத்தும் ஹார்மோன்களைச் சுரக்கிறது. இதில் பிற நாளமிள்ளா சுரப்பிகளைத் தூண்டும் ட்ரோபிக் ஹார்மோன்களும் அடங்கும். இதனுடைய செயல்பாடு ஹப்போதலாமஸுடன் மைய நரம்பு மண்டலம் மூலம் இணைக்கப்படுகிறது.

பீனல்சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. எனவே லிங்கம் என்பது பீனல்சுரப்பி( pineal gland)யை வைத்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

பீனல்சுரப்பியின் வடிவமும் லிங்கத்தின் வடிவமும் ஒத்துப்போவதை உங்களால் காண முடியும்.

படங்களும் அதன் விரிவாக்கமும்

1. கோவிலின் அமைப்பு
2. பீனல்சுரப்பியின் வடிவம்
3.பீனல்சுரப்பி
4.மனித மூளையில் பீனல்சுரப்பியின் இடம் .

இறை நம்பிக்கை அவசியமென்றாலும்....




இறை நம்பிக்கை அவசியமென்றாலும் ,அதைச்
சுற்றி ஏராளமான மூட நம்பிக்கைகள்
தோன்றுவதை நிறுத்த வழி இல்லையா? -"
என்ன இல்லை இந்து மதத்தில் "
நூலிலிருந்து.

முதலில் மூட நம்பிக்கை என்றால்
என்னவென்று பார்க்கலாம் .பிறர் செய்யும்
செயல்கள் நமக்கு ஏற்புடையதுதாக
இல்லாமல் போய்விட்டால் ,அவைகளுக்கு
மூட நம்பிக்கைகள் என முத்திரை குத்தி
விடுகிறோம் .மூட நம்பிக்கைகளை இரண்டு
வகையாகப் பிரிக்கலாம் .ஒன்று
அறியாமையால் தோன்றுவது பிரிதொன்று
அறியாததால் தோன்றுவது ,இரண்டாவது
வகைதான் நாத்திக வாதம் .அதாவது
தெய்வத்தைப் பற்றி அறியாத நிலை .
தெய்வங்களுக்கு நர பலி கொடுப்பது
,தெய்வத்தின் பெயரால் கொடுமைகள்
இழைப்பது தெய்வ நம்பிக்கையால் வெறுமனே
இருப்பது போன்றவைகள் ,அறியாமையால்
விளையும் மூட நம்பிக்கைகள்.

தெய்வீக காரியங்கள் இன்னவென்றே புரியாமல்
,தெய்வீக செயல்பாடுகளின் பின்னணிகளை
ஆராய்ந்தறியாமல் வெறுமனே விமர்சனம்
செய்து அலட்சியப்படுத்தும் மனப்பாங்குதான்
,அறியாததால்
விளையும் மூட நம்பிக்கைகளாகும்.

கடவுள் நம்பிக்கை ,பல மூட நம்பிக்கைகளை
உரம் போட்டு வளர்த்திருப்பதை மறுக்கவோ
,மறைக்கவோ முடியாது .கடவுள்
நம்பிக்கையைப் பயன்படுத்தி அப்பாவி
மக்களை ஏமாற்றும் செயல்கள் இன்றல்ல,
காலம் தோறும் நடந்தேறும் செயல்கள் ஆகும்.
படிப்பறிவும், விழிப்புணர்ச்சியும்
மேலோங்கிய இந்த நவீன விஞான
உலகத்திலும் இவைகள் குறையவில்லை
என்பதுதான் வியக்க வைக்கும் செய்தியாகும் .

இதை மத ரீதியிலான வணிகமாகப் பின்பற்றி
,அதையே பிழைப்புத் தொழிலாகவும் செய்து
வருவதுதான் ஏற்புடையச் செயலாக இல்லை
.எனினும் ,மனித பலவீனங்களை மற்றவர்கள்
பயன்படுத்தி காசாக்கி வருவது உலகம்
முழுவதும் நடைபெறுகின்ற
காரியமாகி விட்டது.மெய்யான தெய்வ
பக்தியை பரப்புவதன் வழியாகத் தான் இந்த
மூட நம்பிக்கையை அறவே ஒழித்து விடலாம்
என நம் முன்னோர்கள் முனைப்பு காட்டாமலா
இருந்திருப்பார்கள் ?எனினும் அவை குறைந்த
பாடில்லை .

வெறும் சடங்குகளுக்கு முக்கியத்துவம்
கொடுக்காமல் ,அதன் தத்துவங்களின்
அடிப்படை உண்மைகளை சரியாக தெரிவு
செய்தால் ,மூட நம்பிக்கை பெரும் அளவில்
மறையலாம் .சட்டங்களால் மட்டுமே அவற்றை
சீபடுத்த முடியாது.கலப்படமற்ற ,
உண்மையான ஆன்மிகம் மக்களிடையே
நம்பிக்கையை தோற்றுவிக்கும் வகையில்
பிரசாரத்தின் மூலம் கிட்ட வாய்ப்பு உண்டு.

சாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபமும்!!!

சாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபமும்!!!
--------------------------------------------------------------------------------------------

அண்ணாமலையில் நாம் எந்த நாளிலும்,எந்த நேரத்திலும்,எந்த சூழ்நிலையிலும்அண்ணாமலை செல்லலாம்;அப்படி நாம் செல்லும்போது, நம்முடன் நமது முந்தைய மனிதப்பிறவிகளும் நம்முடன் கிரிவலம் வரும்= இந்த தெய்வீக உண்மையை நமக்குக் கண்டறிந்து சொன்னவர் சித்தர்களின் தலைவர் அகத்தியர் ஆவார்.அகத்தியரின் இந்த தெய்வ வாக்கினை தொகுத்து ஸ்ரீஅகஸ்திய விஜயம் என்னும் மாத இதழ் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.

அண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்லும்போது,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,மனதுக்குள் ஓம்சிவசிவஓம் என்று ஜபித்துக்கொண்டே செல்ல வேண்டும்.அவ்வாறு கிரிவலம் செல்லும்போது,ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும்.வசதியிருந்தால் குறைந்தது ஒன்பது பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம்;

இவ்வாறு 14 கிலோ மீட்டர் தூரத்தையும் கடந்தால் அதனால் நமது கடுமையான கர்மவினைகள் தீரும்.கிரிவலம் முடித்த பின்னர்,கட்டாயமாக அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வேண்டும்.(கிரிவலம் புறப்படும்போது, அண்ணாமலையாரை கோயிலுக்குள் சென்று தரிசிக்க வேண்டியதில்லை;)(நள்ளிரவில் கிரிவலம் முடித்தவர்கள்,மறு நாள் காலையில் அண்ணாமலையாரை தரிசிக்கவேண்டும்)

இப்படி மாதம் ஒருமுறை வீதம் குறைந்தது 1 ஆண்டு வரையிலும்,அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரையிலும் அண்ணாமலையில் அன்னதானம் செய்து கொண்டே கிரிவலம் செல்ல வேண்டும்;அப்படி கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு செய்ததன் மூலமாக எனக்கு பலவிதமான பிரச்னைகள் முழுமையாக தீர்ந்திருக்கின்றன;

(குறிப்பாக அன்னதானத்துடன் கூடிய கிரிவலம் செல்வதை ஒரு தமிழ் வருடத்தில் மூன்று அமாவாசைகளில் செய்வதை வழக்கமாக்கியிருக்கிறேன்.ஆடிஅமாவாசை,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளுமே அதி முக்கியத்துவம் வாய்ந்தவை;முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய கடலோரம் அல்லது நதிக்கரையோரம் செல்ல வேண்டும் என்பது இந்து சாஸ்திர விதியாக இருக்கிறது.அண்ணாமலையானது சோண நதியின் மீது அமைந்திருக்கிறதே! எல்லாம் எனது அப்பா அருணாச்சலத்தின் ஆசிர்வாதத்தால் இவ்வாறு செய்ய முடிந்திருக்கிறது.நீங்களும் இவ்வாறு செய்து பார்க்கலாமே!!!)

பல்வேறு காரணங்களால்,நாம் கோபம்,பொறாமை,திமிர்,அகங்காரம்,செல்வச்செருக்கு போன்றவற்றினால் பல பிறவிகளிலும்,இந்த பிறவியிலும் ஆடாத ஆட்டம் ஆடியிருப்போம்;அவை அனைத்தும் இவ்வாறு 3 ஆண்டுகள் வரையிலும் அன்னதானம் + ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் செல்லுதல் மூலமாக அனைத்துக் கர்மவினைகளும் தீர்ந்துவிடும்.
இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு தடவையும் இவ்வாறு செய்ய செய்ய நாம் நமது சிந்தனை,செயல்,அணுகுமுறை என அனைத்தும் மாறியிருக்கும்.

இந்த ஆன்மீகவழிமுறையை எனக்கு போதித்த ஆன்மீக ஆராய்ச்சியாளர் சிவகடாட்சம் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுள்கால சீடர் சிவமாரியப்பன் அவர்களுக்கும்,நமக்கு போதித்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கும் கோடி கோடி கோடி நன்றிகள்!!!

மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது!

மழை பொழிந்தாலும் கிரிவலத்தை நிறுத்தக்கூடாது!

திருவண்ணாமலையை கிரிவலம் வரும்போது திடீரென்று மழை வந்தால், மழைக்கு ஒதுங்கக்கூடாது. அதற்கு புராணம் கூறும் காரணம் இது:

மனிதனாலோ, மிருகத்தாலோ, பகலிலோ, இரவிலோ சாகாத வரம் பெற்ற இரணியன் மேலும் வரம்பெறும் பொருட்டு மனைவி லீலாவதிக்குத் தெரியாமல் தவம் புரியச் சென்றான். அவன் தவம் புரியும் இடத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒவ்வொரு புனிதத் தலமாகத் தேடினாள் லீலாவதி.

அப்போது அவள் மூன்று மாத கர்ப்பிணி. அவள் நிலை அறிந்து நாரதர், "திருவண்ணாமலை திருத்தலம் சென்று காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் உனக்கு நல்வழி கிட்டும்!' என்று கூறி, காயத்ரி மந்திரத்தை அவளுக்கு உபதேசித்தார்.

அதன்படி திருவண்ணாமலையில் காயத்ரி மந்திரம் ஜெபித்தபடி அவள் கிரிவலம் வருகையில், திடீரென்று அமுத புஷ்பமழை பொழியத் தொடங்கியது.

பூமியில் நடக்கும் அக்கிரமச் செயல்கள் அனைத் தையும் பூமாதேவி மிக்க பொறுமையுடன் தாங்குகிறாள். அப்படிப்பட்ட பூமாதேவியைச் சாந்தப்படுத்த இப்படிப்பட்ட மழை பொழியுமாம். இந்த மழைப்பொழிவு இறைத்தன்மையுடையது. ஒரு கோடி மழைத் துளிகளுக்குப்பின் அமுதத் துளி ஒன்று கீழே இறங் கும். இந்தத் துளி எங்கு விழுகிறதோ, அங்கு மக்கள் நோய் நொடியின்றி வாழ்வர். விவசாயம் செழித்து வளரும். அமைதி நிலவும். அது மட்டுமின்றி, அங்கு "அமுத புஷ்பமூலிகை' என்கிற அரிய வகை தாவரம் தோன்றும்.

மழைத் துளிகள் கனமாக விழவே, பாறை ஒன்றின் ஓரத்தில் ஒதுங்கினாள் லீலாவதி. எனினும், விடாமல் காயத்ரி மந்திரம் ஜெபித்தாள். அப்போது, விழுந்த அமுதத் துளி பாறையில் பட்டு, அதில்
அணுவளவு அவளின் கர்ப்பப் பையையும் அடைந்தது. அதைக் கருவிலிருக்கும் பிரகலாதன் உண்டான். அந்தப் பாறையில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது. அப்போது கிரிவலம் வந்த சித்தர் பெருமக்கள் இந்தக் காட்சியைக் கண்டனர். உரிய மந்திரம் சொல்லி, அந்த மூலிகையைப் பறித்த சித்தர்கள், காயத்ரி மந்திரம் ஜெபிக்கும் லீலாவதியிடம் ஆசி கூறி கொடுத்தார்கள். அவள் வயிற்றில் வளரும் சிசு மூலம் மகாவிஷ்ணு புது அவதாரம் எடுக்க இருப்பதை அவர்கள் உணர்ந்தனர்.

அந்த மூலிகையைத் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள் லீலாவதி. அதனால் அந்த மூலிகையின் சக்தி கருவை அடைந்தது. அதுதான் பின்னாளில் ஸ்ரீநரசிம்மரின் உக்கிரத்தைத் தாங்கும் சக்தியை பிரகலாதனுக்கு வழங்கியது.

மழையும் வெயிலும் சேர்ந்து வரும்போது ஸ்ரீலட்சுமி நரசிம்மர் துதிகளை ஜெபித்தால் நமது வீட்டில் செல்வமழை பொழியுமாம். மழை பொழியாவிட்டாலும் மந்திரம் ஜெபித்தபடி கிரிவலம் வந்தால் நற்பலன்கள் ஏற்படும். தகுந்த குருவிடம் மந்திர உபதேசம் பெற்றே காயத்ரியை ஜெபிக்க வேண்டும் என்பது விதி.

வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்!!!


வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்!!!
--------------------------------------------------------------------------------------


. “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வரும் உண்மைதான் எனக்கும் எனது கணவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்து கொண்டுதான் இருந்தது. நீங்கள் எழுதியதைப் படித்த பிறகுதான் அதற்குக் காரணம் புரிந்தது. எங்கள் படுக்கை அறையில் தையல் மெஷின் ஒன்றை வைத்திருக்கிறேன். உடனே அதை அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றிவிட்டேன். அதை மாற்றிய பிறகு எங்கள் இருவருக்கும் இடையில் சண்டை நடக்கும் வாய்ப்புகள் குறைந்துவிட்டது” என்று கூறிய அவர் மேலும் பல விஷயங்களுக்கு விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

வாஸ்து முறையில் பணக்காரராக சில ரகசியங்கள் வாஸ்து என்பது மிகவும் அற்புதமான ஒரு சாஸ்திரம். இதை சரியான முறையில் பின்பற்றினால் நீங்கள் வாழ்வில் உயர்ந்து கொண்டே போகலாம். ஆனால், அதில் தவறு ஏற்பட்டால், நீங்கள் அதள பாதாளத்தில் விழுந்து விடுவீர்கள் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

உங்கள் கையில் அடிக்கடி பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமானால் நீங்கள் தூங்கும் போது மேற்குப் பக்கம் தலை வைத்துப் படுக்க வேண்டும். அதாவது, நீங்கள் தூங்கும் போது உங்கள் தலை மேற்குப் பக்கமாக இருக்க வேண்டும். சூரியன் உதிக்கும் பக்கத்திற்கு எதிர்ப்பக்கமாக இருப்பது மேற்கு பக்கம். இந்த பக்கம் தலை வைக்கும் விதத்தில் உங்கள் கட்டிலை திருப்பி வைத்துக்கொள்ளுங்கள்.

எவ்வளவுதான் கஸ்டப்பட்டு வேலை செய்தாலும் அதற்கு ஏற்ற விதத்தில் பணம் கிடைக்காமல் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த முறை நிறையவே பயன்தரும். பணம் அதிகமாக கைமாறும் காரியம் ஒன்றில் நீங்கள் கலந்துகொள்ளச் செல்லும் போது, காணி விற்றல், வீடு கட்டல், சிகப்பு அல்லது இளம் சாம்பல் நிற உடைகளை அணிந்து செல்லுங்கள். உடைகள் இல்லையென்றால் இந்த நிறத்தில் கைக்குட்டை ஒன்றையாவது எடுத்துச் செல்லுங்கள். இதனால் சில அதிசயங்களும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள குழாய்களில் அடிக்கடி தண்ணீர் ஒழுகிக் கொண்டிருக்கிறதா என்பதில் கவனமாக இருங்கள் சில வீடுகளில் உள்ள பைப்புகளில் பார்த்தால் சொட்டுச் சொட்டாக தண்ணீர் ஒழுகிக் கொண்டே இருக்கும் இப்படி நடப்பதனால் அந்த வீட்டில் செலவு அதிகமாகவே இருக்கும். இதேபோல், வீட்டினுள் எந்தப் பகுதியிலும் ஈரத்தன்மை இல்லாமலும், பூசணம் பிடிக்காமலும் வைத்திருப்பதில் கவனமாக இருங்கள்.

எக்காரணம் கொண்டும் வடக்குப் பக்கம் தலை வைத்துப்படுக்காதீர்கள். இப்படி செய்வதன் மூலம் நீங்கள் சோம்பேறிகளாகி விடுவீர்கள். அதேபோல், பணம் சம்பாதிக்கும் ஆர்வமும் குறைந்துவிடும்.

உங்கள் வீட்டில் உள்ள கிழக்குப் பகுதியில் எந்த இடத்திலாவது சில்லறை காசுகள் போட்ட பானை ஒன்றை வையுங்கள். இதற்காக சிறுவர்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் பானை ஒன்றை நீங்கள் பயன்படுத்துவதுதான் சிறப்பு. இந்த பானை நிறைய மாற்றப்பட்ட சில்லறைக் காசுகளைப் போட்டு அதன் வாயை மூடாமல் கிழக்கு பக்கத்தின் ஒரு பகுதியில் வையுங்கள். முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், இப்படி ஒரு பானை அந்தப் பகுதியில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. அதாவது, யாருடைய பார்வையிலும் படாத ஓர் இடத்தில் தான் இந்தப் பானையை வைக்க வேண்டும். சாதாரண அறைகளில் குடியிருப்பவர்கள் கிழக்கு பக்கத்தில் உள்ள ஓர் இடத்தில் இந்தப் பானையை வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு மேலதிகமாக பணம் வந்து சேருவதை நீங்கள் அனுபவ ரீதியாக பார்த்துக் கொள்ளலாம்.

உங்களது சாப்பாட்டு அறையில் பிரேம் போட்ட வட்ட வடிவமான கண்ணாடி ஒன்றை மாட்டி வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். அதாவது, சாப்பாட்டு அறை சுவற்றில் மாட்டப்படும் அந்தக் கண்ணாடியில் மேசைமீதுள்ள உணவுவகைகள் தெரிய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், உங்களுக்குக் கிடைக்கும் பணம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

உங்கள் வீட்டுக்குள் தென்கிழக்குப் பகுதி எது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதியில் ஒன்பது மீன்கள் கொண்ட மீன் தொட்டி ஒன்றை வையுங்கள். இதிலும் முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தொட்டியில் இருக்கும் மீன்களின் எண்ணிக்கை ஒன்பதாகத்தான் இருக்க வேண்டும். அதில் எட்டு மீன்கள் கோல்பிஷ் என்று சொல்லப்படும் மீன்களும் (சிவப்பு அல்லது பொன்நிறம்) ஒரு மீன் கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் பணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்டும்

இஸ்லாமியர்களின் முதன்மைக்கடவுள் சிவனே என்கிற அதிர்ச்சிசெய்தி!!!


இஸ்லாமியர்களின் முதன்மைக்கடவுள் சிவனே என்கிற அதிர்ச்சிசெய்தி!!!

சிவலிங்கத்தின் மகிமை.......!

========================
மெக்கா நகர மக்களே! நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக் கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்றார் ராமதேவர்.

யார் இவர்? ராமதேவர் நாகப்பட்டினத்தில் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் அவதரித்தவர். இளம் வயதிலேயே அஷ்டமாசித்திகள் கைவர பெற்றவர். சில சித்தர்கள் தங்கள் உடலை கிடத்திவிட்டு, ஆன்மாவை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைப்பார்கள். ஆங்காங்கு கிடைக்கும் உடல்களில் புகுந்து கொண்டு சேவை செய்வார்கள்.

ராமதேவர் மிகவும் வித்தியாசமானவர். முயற்சி... முயற்சி... முயற்சி... இதுவே அவரது தாரக மந்திரம். இந்த மந்திரத்திற்கு மாபெரும் பலன் கிடைத்தது. ராமதேவர் தன் உடலுடனேயே பிற தேசங்களை விரைவில் அடையும் சித்தியை பெற்றார். ஒருமுறை இவர் கங்கைக்கு நீராடச் சென்ற போது, சட்டைநாதரின் விக்ரகம் அவருக்கு கிடைத்தது.
அதை நாகப்பட்டினம் கொண்டு வந்து ஒரு கோயிலில் பிரதிஷ்டை செய்தார். சில சித்தர்களின் தரிசனமும் இமயமலைக் காடுகளில் அவருக்கு கிடைத்தது.அவர்கள் ராமதேவரிடம், சித்தனே! நீ மெக்கா செல். அங்கே ஏராளமான காயகல்ப மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை ஆய்வு செய்து, மருந்து தயாரித்து மக்களின் பிணி தீர்க்கும் உன்னதமான பணியைச் செய், என்று வற்புறுத்தினர்.

அவர்களது கட்டளையை ஏற்ற ராமதேவர் தன் சித்தியால் மெக்கா சென்றடைந்தார். புதியவர் ஒருவர் தங்கள் நாட்டுக்கு வந்ததும், அரபு நாட்டு மக்கள் அவரை ஏற்க மறுத்தனர். அரபு நாட்டவரைத் தவிர மற்றவர்கள் அங்கு தங்க அனுமதி கிடைக்காது என்று கூறி அவரை திரும்பி விடும்படி எச்சரித்தனர்.

நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்று அவர் அவர்களிடம் சொல்லவே, மிக நல்லது, அப்படியானால், நீங்கள் எங்கள் மதத்தில் இணைந்து விட வேண்டியது தானே! குர்ஆனையும் நீங்கள் ஓத வேண்டும். அவ்வாறு செய்தால், நீங்கள் இங்கிருக்க அனுமதி தருகிறோம், என்று மக்கள் கூறினர்.

அவ்வளவுதானே! அதை நான் செய்கிறேன், என்றார் ராமதேவர். அவருக்கு யாக்கோபு என்று பெயரிட்டு தங்கள் மதத்தில் சேர்த்துக் கொண்டனர் அரபு மக்கள். ராமதேவ சித்தர் இப்போது யாக்கோபு சித்தர் ஆகிவிட்டார். அரபுநாட்டில் கிடைத்த பலவகை மூலிகைகளை ஆய்வு செய்து அவற்றின் குணம், குணப்படுத்தும் நோய்கள் ஆகியவை குறித்து எழுத ஆரம்பித்தார்.

சிறிது காலத்திலேயே அரபு மொழியையும் கற்று, அந்நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் வைத்திய சிந்தாமணி என்னும் நூலை அரபு மொழியில் எழுதினார். அரபு மக்கள் அவரை போற்றத் துவங்கினர். அவரிடம் பலர் மருத்துவ முறைகளையும் கற்றுக் கொண்டனர். இந்நிலையில், போகர் சித்தர் அவர் முன்பு தோன்றினார்.

ராமதேவா! நீ வைத்திய முறைகளை முழுமையாக அறிந்து கொண்டு விட்டாய். இனி நீ நாடு திரும்பு. சதுரகிரி மலைக்குச் சென்று இந்த மூலிகைகளை ஆய்வு செய்தது குறித்து எழுது. மேலும், இம்மூலிகைகளை ஆய்வு செய், என்றார். அதன்படி ராமதேவர் சதுரகிரி மலை வந்து சேர்ந்தார். தனது சீடர்களிடம், போகரின் அறிவுரைப்படி நான் பத்தாண்டுகள் ஒரு சமாதிக்குள் இருந்து பாலைவன மூலிகைகள் குறித்து ஆய்வு செய்யப் போகிறேன்.

நான் வரும் வரை நீங்கள் சமாதி வாசலில் காத்திருங்கள், என்றார்.பத்தாண்டு காலம் சமாதிக்குள் இருக்கும் ஒருவர் எப்படி திரும்புவார்? இது சாத்தியமல்ல என்று நினைத்த சீடர்கள், அவர் சமாதிக்குள் சென்றதும் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரே ஒரு சீடர் மட்டும் தனது குரு நிச்சயம் திரும்புவார் என நம்பி சமாதி வாசலில் காத்திருந்தார்.

சமாதிக்குள் சென்ற சித்தர், மூலிகைகளை ஆய்வு செய்தார். சமாதிக்குள் இருந்தே யாரும் அறியாத வண்ணம் பல்வேறு இடங்களுக்குச் சென்றார். ஒருமுறை சமாதிக்குள் இருந்த காலங்கிநாத சித்தரைத் தரிசித்தார். அவர் தன்னுடைய அனுபவங்களையெல்லாம் ராமதேவருக்கு போதித்தார். ஆக, ராமதேவ சித்தர் மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார்.

எதையும் செய்யும் ஆற்றலைப் பெற்ற பிறகு, அவர் சொன்னபடியே சமாதிக்குள் இருந்து பத்தாண்டுகள் கழித்து வெளிப்பட்டார். தன்னுடைய சீடர்களே தன்னை நம்பாமல் சென்றது பற்றி அவர் சிறிதும் வருந்தவில்லை. ஒரே ஒரு சீடன் விசுவாசத்துடன் தங்கியிருந்தது பற்றி சந்தோஷம் கொண்ட அவர், சீடனே! மற்றவர்கள் என்னைத் தூற்றி விட்டு சென்றது பற்றி நான் கவலைப்படவில்லை.
ஏனெனில், நான் எத்தனை ஆண்டுகாலம் இந்த சமாதிக்குள் தங்கி மூலிகை ஆய்வு செய்தாலும், நோய்கள் தற்காலிகமாக குணப் படுத்தப்பட்டாலும், பல நூறு ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்தாலும், ஒருநாள் மரணம் சம்பவிக்கத்தான் செய்யும். இந்தக் கருத்தின்படி பார்த்தால், நமது குரு தேவையில்லாமல் சமாதிக்குள் அமர்ந்து, மூலிகை ஆய்வு செய்கிறார் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கும்.

அது நியாயமான சிந்தனை தானே! இருப்பினும், வாழும் காலத்தில் மனிதன் சுகமாக வாழவே இந்த ஆய்வை மேற்கொள்கிறேன். நான் மேலும் முப்பதாண்டுகள் சமாதியில் இருக்கப்போகிறேன். மூலிகை ஆய்வைத் தொடர்வேன், எனச் சொல்லிவிட்டு சமாதிக்குள் சென்று விட்டார்.அந்த சீடனும் அங்கேயே காத்திருந்தான்.

முப்பதாண்டுகள் கழித்து வெளிப்பட்ட சித்தர், பொறுமைக்கார சீடனுக்கு தான் கற்றவற்றையெல்லாம் போதித்தார். அந்த சீடன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். அவனது பொறுமைக்கு மிகுந்த பரிசு கிடைத்தது. இதனிடையே ராமதேவர் சமாதிக்குள் சென்ற பிறகு, அவரை நம்பாமல் சென்ற சீடர்களின் பார்வை பறிபோய் விட்டது.

அவர்களும் சித்தரை வணங்கி மன்னிப்பு கேட்டு பார்வை பெற்றனர். அவர்களிடம், நான் இப்போது நிரந்தர சமாதிக்குச் செல்கிறேன். அழகர் மலையில் (மதுரை அருகிலுள்ளது) சமாதியாகி மக்களுக்கு அருள் செய்வேன், என சொல்லிவிட்டு சென்றார். அங்கேயே சமாதியானார்.

=========================================================
மெக்காவில் உள்ள சிவலிங்கம் நவபாசானத்தால் ஆனது. பிரதிஷ்டை செய்தவர் போகர். கூடுவிட்டு கூடு பாய்ந்து செல்கையில் போகர் வைத்த சிலையது. அதற்க்கு முன் அந்த இடங்களில் பூனைக்கடவுள், நாய் கடவுள் மற்றும் பல சிலை வழிபாடு இருந்தது.
இதனால் பல இடங்களில் உங்கள் கடவுள் பெரியதா, என் கடவுள் பெரியாத என்ற சண்டை நடந்துகொண்டிருந்த்து. இதை கண்டஞானி நபிகள் நாயகம் கடவுள் (உயிர்) ஒளியானவன் என்று சொல்லி அதுவரை இருந்த சிலைகளை எல்லாம் அழித்து விட்டார். ஏனெனில் ஆளாலுக்கு ஒரு கடவுளை தற்ப்போது இருக்கும் ஜாதிகட்சிமாதிரி ஆரம்பித்துவிட்டால் உலகின் முதன்மை கடவுளான சிவனின் கீழ் இவர்களை ஒன்றினைக்க முடியாது. அதனால்தான் இந்துக்களின் வழிப்பாட்டை அச்சு அசலாக கடைப்பிடிக்காமல் புது வித முறையை கையாண்டார் இந்த நபிகள் நாயகம் (ஸல்). ஆதனால் இந்த நவபாசான சிலையின் உண்மையை அவர் உணர்ந்ததால் அதைமட்டும் விட்டு வைத்து அதை சுற்றி அமர்து தியானம் செய்ய சொன்னார்.

காலப்போக்கில் பின் வந்த வம்சத்து மன்னர்கள் (அப்போதைய இஸ்லாம்), அதை ஒரு மதமாகவே மாற்றி விட்டனர். இந்த உண்மை அங்குள்ள பலருக்கு தெரியும். இந்த உண்மைகள் வெளிவந்தால் பல பிரச்சனைகள் உண்டாகுமென்று யாரும் உண்மையை கூறுவதில்லை.
ஒரு வேளை அப்படி கூறினால் நாம் தற்ப்போது விளையாடிக்கொண்டிருக்கும் காமவிளையாட்டுக்களுக்கு பலத்த அடி விழுந்துவிடும் என்று அஞ்சி இந்து மதத்தின் புது படைப்பாக இஸ்லாம் மத்த்தை தோற்றுவித்தார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய குர்-ஆனை நீங்கள் எடுத்து படித்தால் பல உண்மைகள் விளங்கும் (ஏனென்றால் குர்-ஆன் என்ற புத்தகமே அப்போதுதான் முதன்முறையாக எழுத்தப்பட்டது). அதில் உள்ள விஷயங்கள் பல நம் தமிழ் நாட்டுடன் ஒத்து போகும்.
அவர்களின் ‘நமாஸ்’ என்கிற இறைவழிபடுதலை கவனித்து பார்த்தால் ஓம் என்பது வேறு வடிவத்தில் ஒலிக்கும். அவர்கள் காலை நாலு மணிக்கெல்லாம் தொழுகையை ஆரம்பித்து விடுவர்.

பிரம்மாமுகூர்தம் என்பது இரவும், பகலும் அற்ற வேளை. நரநாரயணன் வரும் வேளை. இந்துக்களின் கோட்பாடு. ஆன்ம வழிபாடு, ஆத்மா சுத்தி.

இது ஒரு தரப்பினர்:
இந்த படத்தில் நட்சத்திரக்குறியீடு ஆற்றலைக்குறிக்கும் குறியீடாக இருக்கிறது. ஆற்றல் (Energy) என்பதின் மறுமுனை சக்தி.

இன்னொரு தரப்பினர்:
நட்சத்திரங்கள் மின்னி மின்னி மறைவதுப்போல் கங்கா தேவி ஈசனின் தலையில் மறைந்து செயல்படுவதை சுட்டிக்காட்டுவதாக அமைகிறது .
இந்துக்கள் என்றுதான் விழித்துக்கொள்ளப்போகிறார்களோ?"