Thursday, September 29, 2016

புற்றிடம் கொண்ட ஈசா

🐍புற்றிடம் கொண்ட ஈசா🐍

வெற்றிடம் கொண்ட உன்னை
மற்றிடம் தேடியலைந்தேன்
சுற்றயினி யொருமிடமில்லாது...

கூற்றிடம் குலையா திவ்வுடலை
மற்றிடம் புகவே யானும்
புற்றிடம் புகுந்து கொண்டேன்
மாலவன் அரவம்போல...

 கற்றிடம் சேர்ந்து கொண்டேன்
கணக்கனே யவன்
கனியருள் இரசத்ததாலே...

அருளிலார் அவ்விடம்
புகுதாதறிந்து
மருளரை நீக்கியானும்
குருளரை கொடியைப்
போல குறியிடை
 பற்றிக்கொண்டேன்...

பற்றிய பற்றதன் பற்றால்
இருளரை நீக்கியெந்தன்
பிறவிச்சுருளதை வெட்டும்
வாளை என்னக உள்ளுற இருந்தே காட்டிக்கொடுத்த
கருனையே கருனைதானே
குருவதன் குணமதுதானே...

குரு வழி காட்டிய
ஒருவழிப்பாதையாலே
திருவழி சேர்ந்து கொண்டேன்.
சிறுவழிச் சேராதினியே..

திருவடி சார்ந்துகொள்ள
 சதுர்மா மறைமுனிவர்
சார்வழி சாட்சிசொன்னார்
மணிவாசகன் தன்மொழியால்...

இருவடி எடுத்துரைக்கும்
குருவடி பணிந்துகொண்டால்

புருவடி மத்தியில் புணரும்
கருவதையீவார் எவரோ
அவரதின்
கருனைதானே திருவருள்
தேனதாகும் ...

அருளதை பெற்றபேர்கள்
அருளிய பாடல் பெற்றால்
சுருளிய மறையதெல்லாம்
விரிந்ததே விடையைச்
செப்பும்...

விடையிடை விரிந்த மலர்தான்
கடையிடை கிடக்குதய்யா...

மடையதை மறித்துக்கட்டி
சடையதில் சேர்க்க
 வல்லார்தானே
புடையது சூழ எங்கும்
புரவிடை எழுந்த
 அண்ணல்போல
ரவியிடை தண்ணாய்
தகித்திருப்பரே....

விரிமலர் விரிய வேண்டில்...

விரவிய யிருவடி
தெளியவே நீரும்
 திரவிய செல்வம்
இருந்தென்ன்ன...

அறுயிதழ் அங்கு பதிக்கும்
அழகிய பதிகம் யீந்த
நால்வரை பெறவே வேணும்...

நால்வரைப் பெற்றபேர்கள்
ஆழ்வரே அகிலம்தானே...

என்மொழி இனிமையை
நீருடைய நீரும்
தனிமையில் உண்டுபார்த்தால்
தண்டு சிலிர்ப்பதை கண்டுபாரே....

#திருமூலன்Image result for திருமூலர்

திருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்

திருமந்திர  ரகசியம் - ஓர் அறிமுகம்
---------------------------------------------
-------

{ திருமந்திரத்தின் முழு சாரமும் யோகத்தை
அறிய ,பயில விரும்பும் நண்பர்களுக்காக ....
இதோ.......}

"மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது!
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைபவனை நண்ணுவர் அன்றே!"
-திருமூலர்

சைவ சமய திருமுறைகளில் பத்தாவது
திருமுறையாக போற்றப் படுவது திருமூலர்
அருளிய திருமந்திரம்.

பன்னிரு
திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள்
தோத்திர வகையாகவும், பத்தாவது
திருமுறையான திருமந்திரம் சாத்திர
வகையாகவும், பதினோராவது திருமுறை
பிரபந்த வகையாகவும், பன்னிரெண்டாவது
திருமுறை புராணவகையாகவும் குறிக்கப்
பட்டிருக்கிறது.

சாத்திரவகையான
திருமந்திரம்தான் மெய்யான இறையின்
தத்துவத்தையும், அதன் மேலான
மாண்பினையும் தமிழுக்கு உரைத்த ஆதிநூல்
என்றால் மிகையில்லை.

என்னுடைய தனிப்பட்ட அவதானத்தில்,
அழியும் தன்மையுடைய நமது உடலை
யோகத்தின் மூலம் பக்குவமாக்கி,
சிற்றின்பங்களின் பிடியில் இருந்து விலகி,
எல்லா உயிர்களிடத்தும் கபடமில்லாத அன்பு
செலுத்துவதன் மூலம் நம் சீவனை
சிவனாக்கி மரணமில்லா பெருவாழ்வு
வாழ்வதன் நுட்பநிலைகளை விவரிக்கும்
நூலாகவே திருமந்திரத்தை பார்க்கிறேன்.

இந்த நூலில் பொதிந்திருக்கும் பல அரிய
தகவல்கள் இன்னமும் முழுமையாக
கட்டவிழ்க்கப் படவில்லை. எளிய
சொல்லாடல்களால் அமையப் பெற்ற இந்த
பாடல்களின் பின்னே இருக்கும் சூட்சுமங்கள்
சிலதை நானறிந்த வகையில் இந்த வாரத்தில்
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திருமூலரின் வாக்கின் படி மூவாயிரம்
பாடல்களால் ஆன இந்த நூல் நமக்கு
முழுமையாக கிடைத்திருக்கிறது
முதலில் இந்த நூலின் அமைப்பு எத்தகையது
என்பதை பார்ப்போம்.

மொத்தமாக பத்து
பிரிவுகளாய் பிரிக்கப் பட்டுள்ள இந்த நூலின்
முதல் பகுதியை “பாயிரம்” என்கின்றனர்.

மற்ற ஒன்பது பிரிவுகளும் “தந்திரங்கள்”
என்று அழைக்கப் படுகின்றன.

பாயிரம்
-------------

இதில் மொத்தம் நூற்றி ஐம்பத்தியாறு
பாடல்கள் உள்ளது.

இந்த பாடல்கள்
பதின்மூன்று தலைப்புகளில் பிரிக்கப்
பட்டிருக்கிறது.

அவை முறையே,..

கடவுள்
வாழ்த்து, அந்தணர் ஒழுக்கம், அரசாட்சி முறை,
அவையடக்கம், அறஞ்செய்யான் திறம்,
அறஞ்செய்வான் திறம், ஆகமச் சிறப்பு, ஆகுதி
வேட்டல், மும்மூர்த்திகளின் முறைமை,
வானச் சிறப்பு, வேதச்சிறப்பு, குருபரம்பரை,
திருமூலர் தன் வரலாறு கூறுதல் என
பிரிக்கப் பட்டிருக்கிறது.

பாயிரம் என்ற முதல் பிரிவில்
பதின்மூன்று தலைப்புகளின் கீழ் நூற்றி
ஐம்பத்தியாறு பாடல்கள் இருப்பதையும்
பார்த்தோம். இன்று தந்திரங்களின்
கட்டமைப்பினை பற்றி பார்ப்போம்.

முதலாம் தந்திரம்
----------------------------

பதினேழு தலைப்புகளின் கீழ் நூற்றி
அறுபத்தியாறு பாடல்களைக் கொண்டது
முதலாம் தந்திரம்.

இது பொதுவில் ஒழுக்க
நெறிகளைப் பற்றி கூறுகிறது.

இரெண்டாம் தந்திரம்
----------------------------------

இருபத்தி ஐந்து தலைப்புகளின் கீழ் இருநூற்றி
எட்டு பாடல்கலைக் கொண்டது இரெண்டாம்
தந்திரம். இவை சிவனையும், சீவனையும்
விளக்குகின்றன.

மூன்றாம் தந்திரம்
----------------------------

இருபத்தியொரு தலைப்புகளின் கீழ்
முன்னூற்று முப்பத்துமூன்று பாடல்களைக்
கொண்டது மூன்றாம் தந்திரம். இவற்றில்
பெரும்பாலும் யோகம் பற்றிய விளக்கங்கள்
காணக் கிடைக்கிறது.

நான்காம் தந்திரம்
-----------------------------

பதின்மூன்று தலைப்புகளின் கீழ் ஐநூற்று
முப்பது பாடல்களைக் கொண்டது நான்காம்
தந்திரம். இவற்றில் உபாசனை வழிமுறைகள்
கூறப் பட்டிருக்கிறது.

ஐந்தாம் தந்திரம்
--------------------------

இருபது தலைப்புகளின் கீழ் நூற்றி
ஐம்பத்திநான்கு பாடல்களைக் கொண்டது
ஐந்தாம் தந்திரம்.

சைவ சமயத்தின் வகைகள்
மற்றும் சரியை, கிரியை, யோகம், ஞானம்
போன்றவைகளை இந்த பகுதி விளக்குகிறது.

ஆறாம் தந்திரம்
-------------------------

பதின்நான்கு தலைப்புகளின் கீழ் நூற்றி
இருபத்தியெட்டு பாடல்களைக் கொண்டது
ஆறாம் தந்திரம்.

குருதரிசனம், ஞானநிலை,
துறவு, தவம் மற்றும் திருநீற்றின் பெருமைகள்
இந்த பிரிவில் காணலாம்.

ஏழாம் தந்திரம்
-----------------------

முப்பது தலைப்புகளில் நானூற்றிஏழு
பாடல்களைக் கொண்டது ஏழாம் தந்திரம்.

இவை ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள்,
புலனடக்கம், தகாத ஒழுக்கம் பற்றி
விளக்குகின்றது.

எட்டாம் தந்திரம்
-------------------------

முப்பத்தி மூன்று தலைப்புகளில் ஐநூற்றி
பதினெட்டு பாடல்களைக் கொண்டது எட்டாம்
தந்திரம். இவை சித்தாந்த விளக்கம், ஞானிகள்
செயல் மற்றும் முக்குணங்கள் பற்றி
விளக்குகின்றது.

ஒன்பதாம் தந்திரம்
------------------------------

இருபத்தி இரண்டு தலைப்புகளில் நாநூறு
பாடல்களைக் கொண்டது ஒன்பதாம் தந்திரம்.

இவை குரு தரிசனம், மூவகை
பஞ்சாட்சரங்கள், ஞான உதயம், வாழ்த்து
என்பது பற்றி விளக்குவதோடு திருமந்திரம்
நிறைவடைகின்றது.

ஆக மொத்தமாய் பாயிரம் சேர்த்து ஒன்பது
தந்திரங்கள் நூற்று தொன்னூற்றி ஐந்து
தலைப்புகளுடன், மூவாயிரத்தி
எண்பத்தியோரு பாடல்களைக் கொண்ட
பொக்கிஷம்தான் திருமந்திரம்.

குருவருளைப் பெற ஓர் எளிய வழி தினமும்
காலையில் எழுந்து திருமந்திரத்தை உணர்ந்து
படித்து வந்தாலே சித்திக்கும். இப்படி
சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட
திருமந்திரத்தில் மறைபொருளாய்
உணர்த்தப்பட்டு இன்று வரை ரகசியமென
கருதப் படும் ஒன்றினைப் ப்ற்றி பார்ப்போம்......

சித்தர்கள் என்பவர்கள் யார்

சிலர் என்னிடம் இப்படி கேட்பது உண்டு ,இதை பற்றி அறிந்து கொள்ளும் முன் நாம் சில தகவல்களை பற்றி அறிந்து கொண்டால் எளிமையாக புரிந்து கொள்ளமுடியும் ....

முதலில் சித்தர்கள் என்பவர்கள் யார் என்று புரிந்து கொள்ளவேண்டும் ..

இவர்களை பற்றி முகநூலில் பல தகவல்கள் வந்து உள்ளது வந்த படி உள்ளது ,

எளிமையாக புரிந்து கொள்ளவேண்டும் என்றால்..

"பிறந்தோம் வளர்ந்தோம் கடமைகளை செய்தோம் வாழ்த்தோம் என்றவர்கள் சாமானி" ,

"எல்லோரை போல நாமும் பிறந்தோம் ஆனால் நாம் தனிப்பட்ட முறையில் சில அடையாளம்களோடு வளரவேண்டும் வாழவேண்டும் சில சம்பவம்களை சாதித்து புகழ் பெறவேண்டும் என்றவர்கள் அபிமானி"

"இந்த பூமியை விட்டு செல்லும் முன் சில அறிய தகவல்களை கண்டு அறிந்து உலகிற்கு எடுத்து சொல்லி பதித்து மக்களுக்கு பயன்படும்விதம் செய்யவேண்டும் என்றவர்கள் விஞ்ஞானி" ,

"உலகத்தின் சத் விவரங்கள் ,பிரபஞ்ச ரகசியம்கள் ,தெய்வ ரகசியம்கள் போன்றதை அறிந்தவன் ஞானி"

"தன்னை உணர்ந்து, தன்னுள் எல்லாம் இருப்பதை உணர்ந்து , தானே இறைவனிடத்தில் இருப்பதை உணர்ந்தவன் மெய் ஞானி "

சித்தர்களை மெய்ஞானிகள் என்று சொல்லலாம்

அகத்தியர் நூல்களில் சித்தத்தன்மையை பற்றி உரைக்கும் பொழுது மனிதன் சித்தர்களாக மாற பல 10 ஆயிரம் ஜென்மங்கள் கடந்து காய சுத்தி, காய சித்தி பெறவேண்டும் என்கிறார்.

பொதுவாக சித்தம் என்பது மனதின் உச்சப்பட்ட விருப்ப செயல்பாடு /குறிகோள் எனலாம் ,

இது பலபிறவிகளாக நம்மில் கலந்து நம்முடன் வந்தபடி இருக்கும் கர்மம் சார்ந்தது
எனலாம்,

உதாரணமாக எல்லோருக்கும் சோதிடம் புரியாது ,

சிலருக்கு விஞ்ஞானம் புரியாது,

சிலருக்கு சத் விவரங்கள் புரியாது ,

ஒருவருக்கு புரிந்தது ஏன் மற்றவருக்கு புரியவில்லை என்று சிந்தனை செய்து பார்க்கும் பொழுது அவர்கள் பிறப்பில் ஜன்மாந்தர வாசனையாக எது உள்ளதோ அதுவே மீண்டும் தொடரும் ,

இதை அகத்தியர் மனிதனின் முளைக்கும் மண்டை ஓட்டிற்கும் இடையில் ஒரு இடைவெளி உண்டு அந்த இடைவெளியில் தான் மனிதன் செய்யும் கர்மாக்கள் ,

பூசை பலன்கள் அவனுடைய அறிவு பலன்கள் அனைத்தும் அடைபட்டு இருக்கும் இவைகள் ஆன்மாவில் கலந்துவிடும் கர்மத்தின் பலனாக கிடைக்கும் மறு பிறவியில் ஆன்மாவில் உள்ள அணைத்தும் அவர்கள் சிரசில் புகுந்து கொண்டு மீண்டும் செயல்படும் என்று
நூல்களில் சொல்கிறார் .

இதை கவனிக்கும் பொழுது முற்பிறவியில் உண்டான அறிவு ,

செய்த பூசைகள் பலன் ,அவர்களின் நன்மை /தீமை என்கிற அவர்களின் கர்மா தான் அவர்களுக்கு தற்பொழுது உள்ள பிறப்பில் பட்டம், பதவிகளை தருகிறது என்று புரிந்து கொள்ளமுடிகிறது .

உபாசகர்கள் சில நபர்களை பார்க்கும் பொழுது பெருமாளுக்கு மலர் கட்டி அலங்கரித்து அழகு பார்த்த கர்ம பலனால் மனிதர்களை
வசீகரபடுத்தும் பொன்னவனின் பொற்தொழிலை செய்கிறாய் என்பார்கள் ,

சில நபர்களை பார்த்து சுயநலம் இல்லாமல் உன் அறிவால் பலருக்கு நீ
நல்ல தீர்வுகளை தந்தால் இப்பிறவியில் நீதிபதியாக உள்ளாய் என்று சொல்வார்கள் ,

நல்ல கர்மாவால் நல்ல நிலையும் தீய கர்மாவால் வாழ்வில் மேன்மை பெறமுடியாமல் வாழ்வதை நாம் கவனித்து பார்த்தால் புரிந்து கொள்ளமுடியும் ....

சித்தத்தை வென்றவனை சித்தன் என்பார்கள் ,

அது எப்படி சித்தத்தை வெல்வது என்று சிந்தனை செய்தால் சில ரகசியம்
புலப்படும் ,

அது சலிப்பில் உண்டாகிறது ,ஆம் மனதின் வெறுமை தான் சித்தத்தை உணர செய்ய முடியும் .....

எப்படி?

பொதுவாக சித்தர்கள் என்றால் சித்து வேலை செய்பவர்கள் மந்திர தந்திர செயல்களில் கைதேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் குடும்பத்திற்கு ஆகாதவர்கள் என்றும் மனநிலையை மாற்றி மனிதர்களை குழப்பிவிடுவார்கள் என்ற சில மேலோட்டமாக சில கற்பனைகளை மனிதர்களிடத்தில் நாம் காண முடியும்.

இதன் காரணமாக கூட பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு விரைவில் திருமணமும் செய்வது உண்டு ,

மேலும் திருநீர் தரித்து சடை முடிகளை விரித்து பரதேசம் சுற்றிவரும் சிவ சிந்தனை நபர்களை முக்கண்ணன், 

பூச்சாண்டி என்று பிள்ளைகளிடம் கூறி இவர்களிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்று பயமுறுத்தி பால பருவத்திலேயே இப்படி ஒரு பதிவை நம் பெற்றோர்கள்
மனதில் பதித்து விட்டார்கள் என்று சொல்லலாம் .

நான் சிறுவனாக இருந்த பொழுது என் பாட்டியுடன் நான் வெளியில் செல்லும் பொழுது சித்தம் கலங்கிய மனிதர்களை நான் கண்டு பாட்டியிடம் அவர்களை பற்றி கேட்க்கும் பொழுது தப்பு செய்தால் இவர்களிடம் பிடித்து கொடுத்துவிடுவேன் என்பார்கள் .

கேளிக்கையும் ,பயமும், தவறான நம்பிக்கையும் நம்மிடையே நம் முன்னோர்களால் நமக்கு பதியப்பட்ட காலம்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் விலக ஆரம்பித்த காலம் ,சித்தர்களை பற்றிய இந்த தகவல் தொலைக்காட்சிகளினால் என்று சொல்லலாம் ,

எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் தன்னுடைய நாவல் ,வசனம் போன்றதை ,சின்னத்திரைக்கு தந்து தன்னுடைய சித்த அனுபவத்தை வைத்து எழுதிய நாடகம்கள் ,

மேலும் சித்தர்களால் தரப்பட்ட வைத்தியம் ,அவர்கள் சொன்ன சோதிடம்
போன்ற தகவல்களால் இன்று முக நூல், watsup போன்ற தொடர்புகளால் இன்று மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்ச்சி கிடைத்து
அவர்களை பற்றிய சிந்தனைகள் விரிவதை நாம் காண்கிறோம் .

சித்தம் தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று என்று சொல்ல காரணம் ..

நாம் வாழ்க்கையில் நம்மை நாம் ரசிக்கும் ,அனுபவிக்கும் உணவு /பிரயாணம் /உடை /பேச்சு /களிப்பு கொண்டாட்டம்/காமம் /போதை போன்றதுகள் ஒரு கட்டத்தில் அலுத்து விடும் இப்படி அலுத்துவிட்ட விட்ட மனம் ஒரு வெறுமையில் உழன்று
நிரந்தர இன்பம் எதில் கிடைக்கும் அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் உதயமாகும் பொழுது சித்தம் விழித்து கொள்ளும் இது ஒரு புறம்
மறு பார்வை
பழைய புண்ணிய கணக்கில் அருளும் சேரும்பொழுது சித்தம் வேகமாக விழித்து செயல்படும்
சித்தம் விழித்தால் ஏன் பசிக்கிறது என்ற கேள்வியே முதலில் எழும் ,

இவைகளுக்கு விடை தேடினால் சர்வ ஞானமும் புலப்படும்,

ஞானத்தின் துவக்கமே மனதில் இருந்து அடக்குமுறையில்
துவங்குவது,

மனதை அடக்க அடக்க ஆற்றலும் அதிகரித்து புரியாதவைகள் எல்லாம் புலப்பட ஆரம்பம் ஆகும் ...

இப்படி புரியப்பட்ட ஆன்மாக்களே சித்தர்கள் ஆக முதல் படி நிலை எனலாம் .

மனதை அடக்குவது என்பது சாதாரண செயல் இல்லை ,

மொழியினால் அடைபட்டு அவைகளுக்கு கட்டுப்பட்டு மனிதன் தன் வாழ்க்கையை நடத்துகிறான் என்று சொல்லலாம் ,

மேலும் வெறுமனையாக மனதை வைத்து இருப்பது சிரமமான காரியும் கூட .

இப்படி மனதை அடக்கி வைத்து இருப்பவர்களை அடைமொழிவைத்து அழைக்கப்பட்டனர் என்று சொல்லவேண்டும் ,

பாம்பாட்டி சித்தர் ,பிண்ணாக்கு ஈசர் ,சிவவாக்கியர் ,தேரையர் ,குதம்பை சித்தர் ,அகத்தியர் என்று அடைமொழியை தான் நம் அறிந்து அழைத்து வழிபடுகிறோம் ,இது இவர்கள் பெற்றோர் வைத்த பெயர் இல்லை ,

இவர்களின் மூலம் யாரும் அறியார் .

இவர்களை குருவாக வணங்குவது என்பதை விட யாரிடம் இவர்கள் நெருங்குவார்கள் என்ற தகவலை அறிந்து கொண்டோம் என்றால் நாம் எளிதாக இவர்களின் ஆசிகளை பெறலாம் .....

இது வசியம் அல்ல .....மந்திரம் அல்ல ....வழிபாட்டு முறையும் அல்ல
..அது என்ன ?

சித்தர்களுக்களின் மூலத்தை அறியமுடியாது காரண பெயரை தான் நாம் அறிந்து அழைக்கிறோம் ,

மனதை அடக்காமல் மனதின் அற்புதத்தை நாம் அறியமுடியாது ,வயிற்றை அடக்காமல் உடலை அறிய முடியாது
சித்தர்களின் முதல் படி நிலையே உடம்பை அடக்குவது,

உதாரணமாக உடல் நிலை பாதிப்பு அடைந்தால் மனம் சோர்ந்து
விடும் ,

மனம் சோர்ந்தால் உற்சாகம் போய்விடும்,

உற்சாகம் என்பது உயிர் உணர்ச்சி சார்ந்த நிலை என்பதால் உயிரின் சக்திகள் குறைய துவங்கி மரணத்தை அழைத்து வரும் .

சித்தர்கள் பொறுத்தவரை உடலை வெல்வதை இரண்டாக கொண்டார்கள்
ஒன்று
உடலை கல்ப முறையில் வெல்வது இதை காய சுத்தி ,காய சித்தி என்பார்கள் ,

இரண்டாவது அனுபவித்து வெல்வது இது காயத்தில் ஏற்படும் அவஸ்தைகளை அனுபவித்து வெல்வார்கள் .

இதை தான் சித்தன் போக்கு சிவம் போக்கு என்பார்கள் .

மேலும் சித்தர்களுக்கு காலம் என்பது நிகழ் காலம் மட்டுமே ,

நாளை என்பது மாயை என்பது அவர்கள் கணக்கு ,

இன்று என்ன நடக்க வேண்டுமோ அதன் படிதான் நடக்கும் என்பதும் அப்படி நடந்து முடிக்க தான் பூமிக்கு வருகிறோம் என்பதும் அவர்கள் கணக்கு ,

இந்த கணக்கு அவர்களிடம் வசப்பட்டு எழுத பட்டது தான் சோதிட கணக்கு என்று சொல்லலாம் ,இதில் கைதேர்ந்தவர்கள் அகத்தியர் ,
புலிப்பாணி, புஜேந்தர் போன்றவர்கள் ,

இவர்கள் நூல்கள் தான் இன்று பலருக்கு வழிகாட்டியாக உள்ளது எனலாம் .

சரி இவர்களை எப்படி வழிபடலாம் என்பதை விட இவர்கள் யாரை தேடி வருவார்கள் என்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .

இது ஒரு ஜென்மாந்திர தொடர் கணக்கு எனலாம்,பல ஜென்மங்களில் சித்தர்களின் வாசனை உடையவர்களுக்கு தான் இந்த வாசனையை அனுபவிக்கும் பாக்கியம் கிடைக்கும் என்று உறுதி பட சொல்லமுடியும் .

எல்லோருக்கும் மருத்துவம் புலப்படாது ,

எல்லோருக்கும் சோதிடம் புலப்படாது ,

எல்லோருக்கும் மந்திர ஞானம் ,யந்திர ஞானம்புலப்படாது ,

இந்த மூன்றும் தெய்விக ரகசியமும் தேவர்களின் ரகசியமும் கொண்டது,

எந்த மனிதனுக்கு இந்த ரகசியம்கள் தெய்விகம் சார்ந்தது என்று புலப்படுகிறதோ அவர்களுக்கு சித்தர்களின் ஆசிகள் ஏற்படும் என்பதை
என்னுடைய அனுபவம்களே எனக்கு புரிய வைத்தது என்று சொல்வேன்.

மற்ற ஒரு பார்வை பசியாற்றுதல் ,பிறர் உயிர்களின் பசியை உணர்ந்து உணவு வழங்குதல் எனலாம் .

பொதுவாக நட்புகள் மனிதர்களுக்கிடையே உண்டாவது அவரவர் பழக்கத்தின் விருப்பமே என்று கவனித்து பார்த்தால் புரியும் .

உதாரணமாக விளையாட்டு சிலரின் நட்புகளை துவங்கும் ,

சிலருக்கு மது பழக்கம் நட்பை தரும் ,
சிலருக்கு களிப்பு கொண்டாட்டத்தில் நட்பை தரும்,
சிலருக்கு ஆன்மிகம் நட்பை தரும் ,
சிலருக்கு உணவு பழக்கத்தில் நட்பை தரும் இப்படி ஒரு நபரின் ஆன்மாவில் பதிந்த விருப்பம் பிறரிடம் காணும் பொழுது நட்பை வளர்க்கும்
இது போல சித்தத்தில் சுயநலமில்லாத சேவை துவங்கும் பொழுது விண்மண்டலத்தில் கலந்து உள்ள சித்தர்களின் ஆன்மாக்கள் நம் ஆன்மாவை தொடர்ப்பு கொள்ளும்,

ஆடு மேய்த்த இடைக்காடர், பிட்சை எடுத்து உண்ட பிராந்தர் , வாயில்லா உயிரினம்கள் மீது பரிவு வைத்தவர்கல் ,
பசுவிற்காக தன் உடலை மறைத்து மூலன் உடலில் புகுந்த சிவயோகி திருமூலர் ,

சீன தேசத்தில் இருந்து குருவுடன் வந்த புலிப்பாணி மருத்துவம் சோதிடத்தில் வல்லவர் ,

இவர் குரு போகர் புலிக்கும் ,சிங்கத்திற்கும் ஞான உபதேசம் செய்தவர் ,

சப்த சமுத்திரத்தை தாண்டி சென்று மூலிகை கொண்டுவந்தவர் ,

கிளி முகத்தை உடைய காலாங்கி நாதரையும் சீடனாக கொண்டவர் .

பறவைகளின்/விலங்குகளின் பால் ,மலம் ,மூத்திரம் ,இவற்றின் இயல்புகளையும் இவைகள் மருந்துகளாக பயன்படுத்தும் விதத்தையும் ,
மேலும் மரம் செடி, கொடி,பூ,இலை,கொட்டை ,காய் ,கனி முதலியவற்றின் மருத்துவ பயன்களை சொல்லிய தேரையர்,

ரசவாத விதையில் தேர்ந்த வடக்கில் இருந்து வந்து தெற்கில் முருகனின் இருப்பிடத்தில் உறைந்த போகரின் மற்ற ஒரு சீடர் ,மேலும் அகத்தியரின் முதல் சீடர் என்கிற மச்ச முனி .

இருளர் குளத்தில் பிறந்து பாம்புகளின் தன்மை அறிந்து ,பிறகு தன்னுள் இருக்கும் பாம்பை அறிந்த சட்டைமுனி சீடர் பாம்பாட்டி சித்தர்.

முன் ஞானம் நூறு ,பின் ஞானம் நூறு என 200 பாடல்களை கொடுத்த போகரின் மற்ற ஒரு சீடர் சட்டை முனி .

கஞ்சாவை கண்டு அறிந்து அதை மருத்துவத்திற்கு பயன்படுத்தி வயிற்றின் உள்ளே உள்ள உபாதைகளை சரிசெய்யும் கோரக்கர் மூலி என்ற மூலிகையை தந்த மச்சமுனியின் சீடர் கோரக்கர் ,
கொங்கண தேசம் எனும் கேரளத்தில் பிறந்தவரால் கொங்கணர் என்ற போகரால் பெயர் பெற்ற கொங்கணவர் ரசவாதம் செய்வதவரும் அம்பைகையின் ஆசிகளை பெற்றவரும் ஆவர் .

குதம்பை என்கிற மூலிகையை கண்டு அறிந்தவரும் குதம்பை போல உள்ள காதணியை பற்றி பாடியவரும் குதம்பை சித்தர் ,

போலி சாமியார்களை அடையாளம் காட்டியவரும்,
கற்களில் சிலை செய்வதில் ஞானம் உடையவரும் ,கோவில்களில் சிவலிங்க பிரசுதிஷ்டை செய்ய பூசை விதிகளை தந்தவர் கருறார் சித்தர் .

காகத்திற்கும் அன்னத்திற்கும் பிறந்தவர் என்றும் ,
சிவன் சக்தி முருகன் இவர்கள் மூவரும் ஒருவரே என்று சொன்னதும் ,
1008 சீடர்களை உடையவரும் ,
காகம் போல பார்வையும் ,மூக்கும் உடையவர் என்றும்
முருக பெருமானின் அம்சமே என்று அழைக்கப்படும் வைணவ சித்தர் காக புஜேந்தர் .

பேயாக அலையும் மனதை பற்றி 100 பாடல்கள் பாடிய அகப்பேய் சித்தர் ,
அமுக்கனி மூலிகை கண்டு அறிந்து வாத காவியத்தில் சொல்லிய அமுக்கனி சித்தர் ,

பிறப்பால் இஸ்லாமியராக பிறந்து பல மாந்திரிக விவரமக்களை மூலிகையில் தந்த யாக்கோபு என்கிற ராமதேவர் .

புஜண்டரின் மகன் என்று சொல்லப்படும் ரோமா ரிஷி ,

ஆயுர்வேத முறைகளை தந்தவர் என்றும் ,சுசுருத்தர் என்ற வைத்திய மேதையை சீடராக உடையவரும் வாகட நூலில் வல்லவரான தன்வந்திரி சித்தர் ,

இவர்கள் எல்லோராலும் ஆசான் என்று போற்றப்படுபவரும் ,
பொதிகை மலையில் சிரஞ்சீவியாக இருப்பவரும் ,
சிவனை குருவாக கொண்டவரும் ,
நட்சத்திர வடிவில் விண்ணில் இருப்பவரும் ,
ராமபிரானுக்கு ஆதித்திய மகா மந்திரத்தை உபதேசித்தவரும் ,
முருகனை குருவாக ஏற்று தமிழ் சங்கத்தை நிறுவியவரும் ,
"அகத்தியம் என்கிற நிலையால் பசுவாக உருமாறி பல மூலிகைகளை உண்டு அவைகள் என்ன பலன்கள் தருகிறது என்று அறிந்து பிறகு சுவடிகளில் பதித்து மனிதர்களுக்கு மிக பெரிய மருத்துவ மூலிகைகளை தகவல்களை தந்த
குறு முனி ,குட முனி,கும்ப முனி என்று பெயர் பெற்ற அகத்திய முனி "

(இவர் பசுவாக மாறி எந்த மூலிகை நஞ்சை முறிக்கிறது அறிய எல்லா
தவிரம்களையும் உண்டு அது படி அறிந்த மூலிகை தான் இன்று நாம் உண்ணுவதும் பசுக்களுக்கு கொடுக்கப்படும் அகத்திக்கீரை )

எந்த மனிதன் தன் சுயநலத்தை விட்டு தான் கற்ற கலையை பிறருக்கு நன்மையாக பயன்படும் படி வாழ்கிறானோ அவர்களை ,

எவர் தன் தனது தர்மத்தை மதிப்பிடாமல் செய்கிறானோ அவர்களை ,

எவர் தான் போல பிற உயிர்களின் பசியை போகிறானோ அவர்களை ,

எவர் தெய்வ ரகசியம்களை காத்து /பாதுகாத்து சத்தியபடி வாழ்கிறார்களோ அவர்களை ,

எவர் மந்திர ,யந்திர முறைகளை தான் உடலில் உள்ள சக்கரத்தில் ஏற்றி பிறரின் ஊழ்வினையை கழிக்கிறானோ அவர்களிடம் ...

சித்தர்கள் தானாக வாசம் செய்வார்கள் ....

சித்த பூசைகள் என்ற முறைகள் உண்டு அவைகள் சுவடிகள் மூலம் தனி தனியாக நம்முடைய புண்ணிய பலத்தை பொறுத்து நமக்கு பதிக்க பற்றிருக்கும் அவைகளை கண்டு புரிந்து செய்வது மேன்மை தரும் .

அகத்தியரை பொறுத்தவரை அம்மையப்பனை முறையாக அபிஷேகித்து விரும்புவர்களையும்,
சுயநலமில்லாமல் மருத்துவம் ,சோதிடம் சொல்பவர்களும்,
தன்னலம் காணாது தர்மம் செய்பவர்களையும் ஆசீர்வதிப்பார் .

இவருக்கு மந்திரம் உண்டு " அது "ஐயா என்னை காப்பாற்றுங்கள்"
என்கிற கண்ணீர் சொற்கள் ......

அகத்திய முனி நாதமுனி --ஆசிகளுடன்....

Monday, September 26, 2016

ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

எவனோ ஒருவனுக்கு அடிமையாகியே தீர வேண்டும் என்பது மனித குலத்திற்கான விதி! – அது
 சிவனுக்காயிருந்தால் எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

எந்த முதலாளியும் தன் தொழிலாளியை தனக்கு நிகரான வளமையோடு வாழ வைத்துப்பார்க்க எண்ணியதில்லை. ஆனால்

 தன்னிலமை மண்ணுயிர்கள் சாரத்தரும்சக்தி
 பின்னமிலான் எங்கள் பிரான்!

எந்தத் தலைவனும் தன் தொண்டனுக்கு தான் வகிக்கும் அதே பதவியை கொடுக்க எண்ணியதாக வரலாறு இல்லை. ஆனால்

 சித்தமலம் அறுவித்து சிவமாக்கும்
 தன்னிகரில்லாத்தலைவன் சிவபெருமான்!

எந்தத்தாயும் இதுவரை பசித்து அழும் முன்னரே
 தன் சிசுவிற்கு பாலூட்டியதில்லை . ஆனால்

 பால் நினைந்தூட்டும் தாயினும்சாலப்பரிந்தருள் செய்யும்
 தாயிற்சிறந்த தயாவான தத்துவன் எம்சிவபெருமான்!

தோழமையின் பொருட்டு தூது சென்றவனும். பிட்டிற்காய் மண் சுமந்து பிரம்படி பட்டவனும். ஏன் இவ்வுலக உயிர்கள் இன்புற வாழ வேண்டி கொடிய நஞ்சுதனைத் தானுண்டு இன்று வரை அதை தன் கண்டத்தில் சுமப்பவனுமான பெருங்கருணையாüன் சிவபெருமானே!

- அந்தச்சிவனுக்கு அடிமையாயிருத்தல் எத்தனை ஆனந்தம் என உணர ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

சாதி. குலம் எனும் சுழிப்பட்டுத்திரியும் அவல நிலை நீங்கி. சிவக்கோலமே சிவமெனக்கருதி அடியார்க்கு அடியாராய் சிவ குடும்பங்களாய் அன்புசெய்து வாழும் அடியார் திருக்கூட்டத்தின் ஆனந்தத்தை அனுபவிக்க ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

வெற்றித்திருமகள் எப்போதும் உன்தோள் பற்றித்திரிவாள் உன் நெற்றியில் பொலியும் வெண்ணீறு கண்டு, ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

எத்தனை பெரிய கண்டம் தோன்றிடினும் உனை வந்து அண்டாமல் காக்கும் நீ அணிந்திருக்கும் கண்டமணி உருத்திராக்கம், ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

21 தலைமுறையை நரகத்தில் வீழாது காக்கும் நீ படிக்கும் திருவாசகம் ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

துன்பங்களைக்கண்டு நீ ஓடிய காலம் போய். துன்பங்கள் உன்னைக்கண்டு ஓடும் நீ ஓதும் திருவைந்தெழுத்தைக்கேட்டு சிவாயநம! ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்…

• அறியாமை விலகும்
• ஆனந்தம் பெருகும்
• இருள் அகலும்
• ஈசனருள் பெருகும்
• உண்மை விளங்கும்
• ஊழ்வினை துலங்கும்
• எப்போதும் மலர்ந்திருப்பாய்
• ஏகாந்தத்தில் கலந்திருப்பாய்
• ஐம்பூதங்களும் உன்வசமாகும்
• ஒருவன் என்னும் ஒருவன் வருவான்
•ஓங்காரத்துட்பொருளை தானே விரிப்பான்
• ஒளடதமாய் உன் பிறவி நோய்த்தீர்ப்பான்

 சவமாக வேண்டிய நீ சிவமாவாய் ஒருமுறை சிவனடியார் ஆகிப்பார்

ஓம் ஸ்ரீ மஹாகணபதி தோத்ராஷ்டகம் 4

ஓம் ஸ்ரீ  மஹாகணபதி தோத்ராஷ்டகம் 4

மூர்த்தி யாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்த மாகி யறிந்தறியாத் திறத்த னாலுமுயிர்க்குநல மார்த்தி நாளு மறியாமை யகற்றி யறிவிப் பானெவனப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரண மடைகின்றோம்.

ஓம் ஸ்ரீ கருணைகணபதியே உன் பொற்பாதம் போற்றி🙏

ஓம் ஸ்ரீ குருவாயூரப்பனின் பஞ்சரத்ன ஸ்லோகம் 2

ஓம் ஸ்ரீ குருவாயூரப்பனின் பஞ்சரத்ன ஸ்லோகம்  2

நாராயணேத்யாதி ஜபத்பிருச்சை :
பக்தைஸ்ஸதா பூர்ணமஹாலயாய
ஸ்வதீர்த்த காங்கோபம வாரிமக்ன
நிவர்த்திதா ஸேஷரூஜே நமஸ்தே.

( ஹே நாராயண, ஹே குருவாயூரப்பா,  ஹே கோவிந்த, என்றது முதலிய நாமாக்களை உரத்த குரலில் ஜபிக்கின்ற பக்தர்களால் எப்பொழுதும் நிரம்பிய கோவிலை உடையவரும், தங்கள் தீர்த்தமாகிற கங்கா ஜலத்திற்கொப்பான ஜலத்தில் ஸ்நானம் செய்தவர்களின் ஸமஸ்த ரோகங்களையும் போக்கும் தங்களுக்கு நமஸ்காரம். )

ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய

 பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.

ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

🌞அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

🌞அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🌞செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

🌞காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

🌞மகாராஷ்டிரா மாநில எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

🌞பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

🌞திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

🌞ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

🌞பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

🌞தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

🌞 ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

🌞தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

🌞காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்’ என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

🌞மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

ஸ்ரீசூக்த ரஹஸ்யார்தம் .

ஸ்ரீசூக்த ரஹஸ்யார்தம் .

ஜீவன்கள் பிறப்பதற்க்கு காரணமான
ப்ரக்ருதி புருஷர்கள் ,
ஜகன்மாதாவான ஸ்ரீமஹாலக்ஷ்மியை
உபாசித்த மந்த்ரமே ஸ்ரீசூக்தமாகும் .
ஸ்ரீசூக்தத்திர்க்கு அதிஷ்டான தேவதை ஸ்ரீதேவி
இந்த  ஸ்ரீசூக்தம் 15 ருக்குகளாக இருந்து 15 வேதமந்த்ரத்தால் கீர்த்தியாகின்றது.
ப்ரதமை முதல்,பௌர்ணமி வரை திணமும் ஒவ்வொரு கலை வீதம் வ்ருத்தியாகி பௌர்ணமியன்று 16கலையாக அபிவ்ருத்தியாகும் ஜகன்மாதாவின்
சந்த்ரகலா ரஹஸ்ய சங்கேதமாக சொல்லப்படுகிறது,

பௌர்ணமியன்று ஜகன்மாதா ஷோடசியாக காட்சியளிக்கிறாள்,
ஸ்ரீசூக்தத்தை சாதாரண மாணிடர் கூட உபாசிக்கலாம் ,ஆனால் குரு முகமாக தெரிந்து கொள்வதே சாத்பல்யமாகும்,
ஸ்ரீ சூக்தத்தை சத் க்ரமமாக வினியோகிக்கும் சாதகனுக்கு
15ருக்கிர்கும் 15சக்திகளை தேவி ப்ரசாதிக்கிறாள்,
 அவை ,தாரித்ரிய நாசனம்,துக்க நாசனம்,கஷ்டங்கள் தொலைவது,
அண்ண வஸ்த்ரத்ரத்திர்க்கு குறைவின்மை,ஸ்த்ரீகளுக்கு சம்சாரிக சௌக்யம் சௌபாக்யம்[முக சௌந்தரயத்துடன் சதுர்வித கலைகளுடன் இருப்பது}
புருஷர்களுக்கு அஷ்டைஷ்வர்ய சித்தி,சம்ராஜ்ய அதிகார ப்ராப்தி,போகம் ,ஆனந்தம்,சத்சந்தானம்,வம்சவ்ருத்தி,ஸ்ரீ மாதா சாக்ஷ்க்ஷாத்காரம்,மோக்ஷ்க்ஷ ப்ராப்தி,போக மோக்ஷ்க்ஷ ஸ்வரூபமாக ஜீவன் முக்தி ப்ரசாதிக்கும் இந்த 15சக்திகளையும் ,15 மந்த்ர படனம் மூலம் ப்ராதிக்கிறாள் ,

ஆனால் உண்மையான நிகுடார்தமான ஸ்ரீசூக்த ரஹஸ்யமே வேரு ,மேல் சொன்னது கேவளம் ஸ்ரீசூக்தத்தை படனம் செய்வதாள் வரும் பலஸ்ருதியே ,ஸ்ரீசூக்த ரஹஸ்யமே நமது தேஹ ரஹஸ்யம்

ஸ்ரீவித்யாரண்ய சுவாமி ஸ்ரீசூக்த ரஹஸ்யார்த்தத்தை தனது வித்யாரண்ய பாஷ்யத்தில் விவரமாக கூறியுள்ளார் ,அதுவும் ப்ராப்தம் உள்ளவர்கே புரியும் ,

ஸ்ரீவித்யையில் உபாசிக்கும் தேவதா மந்த்ரமுடன் ஸ்ரீ சூக்த ருக்குகளை தகுந்தார் போல் சம்புடிகரணம் செய்ய அந்த தேவதாளின் சூட்சுமம் விளங்க வைத்து சாதகனுக்கு தகுந்த மார்கத்தை உணரவைக்கும் .

சந்தஸ்

த்ருஷ்டுப்,அனுஷ்டுப்,ப்ருஹதி அனுஷ்டுப்,விராட் ப்ரஸ்தார:பம்க்தி
என்ற சந்தஸ்களில்  இந்த 15ருக்குகளும் வரிசையாக சொல்லப்பட்டுள்ளது.

பீஜம்>>ஹிரண்யவர்ணாம் ,என்பது இதன் பீஜம்.

சக்தி>>தாம்ம _ஆவஹ ஜாத ,எனபது இதன் சக்தி

கீலகம்>>>கீர்த்தி வ்ருத்திம் ததாதுமே ,என்பது இதன் கீலகம்.

வினியோகம் >>>ஸ்ரீமஹாலக்ஷ்மீ ப்ரஸாத சித்யர்தே ,என்பது இதன் வினியோகம்

இந்த 15ருக்களுக்கும் யந்த்ரங்கள் உண்டு அவையனைத்தும் சேர்த்தாள்
ஸ்ரீசக்ரமாக வரும்

ஸ்ரீவித்யையில் ஸ்ரீசூக்த ரஹஸ்யார்தத்தை தெரிந்து கொள்வது சாதகனின் பூர்வ ஜன்மானு கர்மவினையை பொருத்தது .

விநாயகரின் ஆறுபடை வீடு

விநாயகரின் ஆறுபடை வீடு



  ஆறுபடை வீடு என்று சொன்னாலே முருகன் தான் நினைவிற்கு வருவார். ஏன்னென்றால் முருகனுக்குத்தான் திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்சோலை, சுவாமிமலை என்னும் ஆறுபடை வீடு உள்ளது. ஆனால் முருகன் மட்டுமின்றி விநாயகருக்கும் ஆறுபடை வீடு உள்ளது. அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.

🌟 திருவண்ணாமலை :

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் 'அல்லல் போம் விநாயகர்". இவரை வழிபட அல்லல்கள் தீரும்.

🌟 விருத்தாசலம் :

இங்குள்ள ஆலயத்தில் எழுந்தருளியுள்ள கணபதிக்கு 'ஆழத்துப் பிள்ளையார்" என்று பெயர். செல்வமும், கல்வியும் மற்றும் சீரான வாழ்வும் நம்மை வந்து சேரும்.

🌟 திருக்கடவு+ர் :

இங்கு எழுந்தருளும் பிள்ளையாருக்கு 'கள்ள வாரணப் பிள்ளையார்" என்று பெயர். இவரை வணங்க நீண்ட ஆயுள் கிடைக்கும்.

🌟 மதுரை :

இங்கு அமைந்துள்ள பிள்ளையாருக்கு 'சித்தி விநாயகர்" என்று பெயர். நினைத்தது நிறைவேற இவரை வணங்கலாம்.

🌟 பிள்ளையார்பட்டி :

இங்கு அருள் புரிபவர் பிள்ளையார்பட்டி 'கற்பக விநாயகர்". இவரை வணங்கினால் தீட்சையும் ஞானமும் கிடைக்கும்.

🌟 திருநாரையு+ர் :

இங்கு ஆட்சி புரியம் பிள்ளையாருக்கு 'பொண்ணாப் பிள்ளையார்" என்று பெயர். இவரை வணங்க அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

 ஆறுபடை விநாயகரை போற்றி வணங்கினால் கர்ம வினைகள் அனைத்தும் நீங்கும். சித்தி பெற்ற விநாயகாரை நாளும் போற்றி நன்மைகளை பெறுவோம்.

**SRI KRISHNASHTAKAM*

**SRI KRISHNASHTAKAM*

அஷ்டகம் என்ற எட்டு ஸ்லோகத்தால் தெய்வங்களைத் துதித்து வணங்குதல் சிறப்பு. அந்த வகையில் ஸ்ரீகிருஷ்ணனைத் துதிக்க உதவும் எட்டு ஸ்லோகங்களின் தொகுப்பு - கிருஷ்ணாஷ்டகம். ‘நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ என்பதை இதன் கடைசி ஸ்லோகமான பலஸ்ருதி சொல்கிறது. கோகுலாஷ்டமியில், தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!

ஸ்ரீகிருஷ்ணாஷ்டகம்

வசுதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகீ பரமானந்தம்      க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம்  ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம் விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம் பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் யாதவானாம் சிரோ ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம் அவாப்த துளசீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம் ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.

ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலா விராஜிதம் சங்க சக்ரதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

பொருள்: ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.

க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய படேத் கோடி ஜந்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி

பொருள்: எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!

வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?

வேதத்திற்கு நிகரான மந்திரம் எது தெரியுமா?

யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே
-திருமூலர் திருமந்திரம்

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும். எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம். பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்ன கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை.
சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார். இதை யாரும் செய்யலாம்.  ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம். தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே. இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையானாலும் பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே.

நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே.

ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார்.

சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார்.

சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.

சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள்.

இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.

ஸ்ரீ தயா சதகம்

ஸ்ரீ தயா சதகம்

ஸ்ரீமதே ராமானுஜாய நம:
ஸ்ரீ ரங்கநாயகி ஸமேத ஸ்ரீ ரங்கநாத பரப்ரஹ்மணே நம:

ஸ்ரீ பத்மாவதி ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸ பரப்ரஹ்மணே நம:
ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகன் திருவடிகளே சரணம்


பெருமாளிடம் உள்ள கருணை என்னும் பண்பை, தாயாக உருவகம் செய்து "தயா சதகம்' என்ற நூல் எழுதப்பட்டது. இதில் நூறு ஸ்லோகங்கள் உள்ளன. அதில் ஒரு ஸ்லோகத்தில், ""தயாதேவியே! மென்மை மிக்க மனம் கொண்டவளே! பக்தர்கள் படும் துன்பத்தைப் பொறுக்காதவளே! தேவர்களைக் காப்பவளே! தன்னையும் விட, உற்சாகத்துடன் பக்தர்களை நீ நல்வழிப்படுத்துவதால், திருமலை (திருப்பதி) பெருமாள் உன் மீது அளவில்லாத அன்பு கொண்டிருக்கிறார். நீ சொல்லும் எதையும் அவர் மறுப்பதில்லை. மங்களம் தருபவளே! பெருமை மிக்க குணங்களால் பெருமாளையும் விட, உன்னையே எல்லோரும் மிகுதியாக போற்றுகின்றனர்,'' என்று சொல்லப்பட்டு உள்ளது. தன்னை வணங்குதை விட, பிறரிடம் கருணை செலுத்துவதை கடவுள் விரும்புகிறார் என்பது இதன் கருத்து.


தனியன்
ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய: கவிதார்க்கிக கேஸரீ
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி

ஸ்லோகம் – 1
ப்ரபத்யே தம் கிரிம் ப்ராய: ஸ்ரீநிவாஸ அனுகம்பயா
இக்ஷுஸார ஸ்ரவந்த்யா இவ யந்மூர்த்யா சர்க்கராயிதம்.

திருமகள் கேள்வனின் கருணை வெள்ளம்
கரும்பின் சாறுபோல் பெருக்கெடுத் ததுவே
ஒருமலை யாகவே உருகிவடுத் ததுவாம்
திருவேங்கட மலையே நீயே சரணம்!

வேங்கடவன் என்ற கருப்பஞ்சாறே,
நதியென பெருகி சக்கரைகட்டியாகி;
வேங்கட மலையென உறைந்திருக்க,
கதியற்ற அடியேன் சரணடைகின்றேன்.

பொருள் – ஸ்ரீநிவாஸனுடைய தயை என்பது கருப்பஞ்சாறாகப் பெருகி உள்ளது. இது ஆறு போன்று ஓடிச்சென்று, சர்க்கரைக் கட்டி போன்று உறைந்து நின்றது.  இப்படிப்பட்ட சர்க்கரை மலையாகிய திருவேங்கடமலையை நான் சரணம் அடைகிறேன்.

விளக்கம் – வேம் என்றால் பாவம் என்று பொருள். கடம் என்றால் கொளுத்துவது எனறு பொருள். ஆக வேங்கடம் என்றால் பாவங்களைக் கொளுத்துவது என்றாகிறது. ஸ்ரீநிவாஸனின் தயை என்ற குணம், பாவத்தை மட்டுமே விரும்பிச் செய்யும் நமது பிழைகளைப் பொறுத்துக் கொள்வதையே தனது இயல்பாக உடையது. ஆக வேங்கடமலையும் இதனையே செய்கிறது. எனவே ஸ்ரீநிவாஸனின் தயை என்ற குணம் செய்கின்ற செயலையே வேங்கடமலையும் செய்வதால், அந்தத் தயை குணமே திருவேங்கட மலையாக நின்றதோ என்று தோன்றுகிறது.
ஸ்ரீநிவாஸன் ஒரு பெரிய கரும்பு என்று வைத்துக் கொண்டால், அந்தக் கரும்பிலிருந்து வரும் சாறானது, ஆறு போன்று பெருகி, மலையாக உறைந்தது. கரும்பின் சக்கைகளை நீக்கி விட்டுச் சாறை மட்டும் எடுத்துக் கொள்வது போல் – ஸ்ரீநிவாஸனிடம் உள்ள “பாவங்களுக்குத் தண்டனை விதிப்பது” போன்ற செயல்களைத் தள்ளி விட்டு, சாறு போன்ற தயை குணத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம்

தயை குணம் இல்லாதவனை கல் போன்றவன் என்பார்கள் . இங்கு தயை குணத்தை, கல் போன்ற ஒரு மலையுடன் ஒப்பிட்டுக் கூறுவது எவ்வாறு பொருந்தும் என்ற கேள்வி எழலாம். இதற்குச் சமாதானம் – மலை எவ்விதம் அசையாமல் உள்ளதோ, அது போன்று நம்மிடம் ஸ்ரீநிவாஸனின் தயை என்பது அசையாமல் உள்ளது என்று கருத்து. இங்கு உள்ள ஆறு என்பது ஸ்ரீநிவாஸனின் தயையானது, ஆகாச கங்கை போன்ற திருமலையில் உள்ள நதிகளைப் போன்று உள்ளதைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

சரணாகதி செய்வதற்கு நமது பாவங்கள் நீங்க வேண்டும். ஆகவே, நமது பாவங்களை நீக்குதல் என்னும் செயலைச் செய்யும் திருவேங்கடமலையை முதலில் சரணம் அடைந்தார்.

அநுகம்பை என்ற பதம் ஒரு ஜீவன் துன்பம் எற்பட்டு நடுங்கும்போது, அவன் மீது கொண்ட இரக்கம் காரணமாகத் தானும் (ஸ்ரீநிவாஸனும்) நடுங்குவதாகப் பொருள். வேதங்களில் சூரியன் முதலானோர் ஸ்ரீநிவாஸனுக்குப் பயந்து நடுங்கியபடி, தங்களது செயல்களைச் செய்கின்றனர் என்று கூறும்போது இங்கு ஸ்ரீநிவாஸன், ஜீவன் ஒருவன் துன்பத்தினால் நடுங்கும்போது தானும் நடுங்குவதாக வியப்பாகக் கூறினார்.
ஸ்ரீமத் பாகவதத்தில் ஆறாவது ஸ்கந்தம், 18ஆவது அத்யாயம், 65 ஆவது ச்லோகத்தில் இந்திரன் “ஸ்ரீநிவாஸா அநுகம்பயா” என்று கூறியதை, இங்கு இவரும் கூறுகிறார்.

Saturday, September 24, 2016

ஐந்தொழில் வல்லான் நிலை

ஐந்தொழில் வல்லான் நிலை – ‘நமச்சிவாய’ என்ற சொல்லுக்கு உரிய விளக்கம்
(நடராசர் சிலை-ஓரு தத்துவ விளக்கம்)
_______________

நடராசர் சிலை – ஆடல்வல்லான் சிலை – கூத்தர்பெருமான்சிலை – பதினெண்சித்தர்களின் செயல்நிலை சித்தாந்தத்தின் தத்துவ விளக்கமே! ஆகும்.

பதினெண்சித்தர்களின் உருவ வழிபாட்டுக் கொள்கையின் மிகப் பெரிய செயல் விளக்கச் சிலையே இந்த ஆடல்வல்லான் சிலை.

இறைவனுக்குரிய ஆக்கல், அழித்தல், காத்தல், அருளல், மறைத்தல், என்ற ஐந்தொழில்களின் விளக்கமாகத்தான் இந்த ஆடல் வல்லான் சிலை உருவாக்கப்பட்டது.

1.வலக்கையில் உள்ள உடுக்கை ஒலி = ஆக்கல் தொழிலை விளக்குகிறது

2.இரண்டாவது வலதுகையின் வாழ்த்துகின்ற தோற்றம் = காத்தல் தொழிலைக் குறிக்கிறது.

3.மேல் இடைக்கையில் உள்ள சுடர் நெருப்பு = அழித்தலைக் குறிக்கிறது.

4.கீழ் இடக்கையும், முயலகனை மிதிக்கும் வலது காலும் மறைத்தலைக் குறிக்கிறது.

குறிப்பு:- கீழ் இடக்கை மட்டும்தான் மறைத்தலைக் குறிக்கிறது என்றும், முயலகனை மிதிக்கும் வலதுகால் கொடியனவற்றை ஒடுக்குதல் என்ற தத்துவத்தைக் குறிக்கின்றது என்றும் பதினெண்சித்தர்களின் வாக்குகளிலும், வாக்கியங்களிலும், வாசகங்களிலும், நான்மறைகளிலும் மிகத் தெளிவாக குறிக்கப்படுகின்றன.

அதாவது நமசிவாய என்ற ஐந்தெழுத்து: நமச்சிவாய என்ற ஆறு எழுத்தாக வடிவப்படும்போது இந்த நடராசர் ஆறுவகை இறைமைச் செயல் நிலை விளக்கத்தை வழங்கிறது.

5. இடக்காலின் தூக்கிய திருவடி அருளுதல் எனும் தத்துவத்தை விளக்குகிறது. இந்த இடக்கால் “தூக்கிய திருவடி” அல்லது “குஞ்சிதபாதம்” எனப்படும். வலக்கால் ‘அனைத்தையும் ஒடுக்கி மறைக்கின்ற் ‘ஆடியபாதம்’ எனப்படும். சிறப்பாக, முயலகனின் (அரக்கன்) ஆட்டங்களை எல்லாம் ‘அடக்கிய பாதம்’ ஒடுக்கிய பாதம்’ அவனால் விளந்த அச்சங்களையெல்லாம் மறைத்த பாதம் அல்லது ‘அழித்த பாதம்’ எனப்படும்.

6. இப்படி 1.ஆக்கல், 2. காத்தல், 3. அழித்தல், 4. ஒடுக்குதல் அல்லது மறைத்தல் 5. அருளல், என்று ஐந்தொழில்களை செய்யும் இறைவனின் நிலையை விளக்கும் இந்த நடராசர்சிலை ‘ஐந்தொழில் வல்லான் சிலை’ அல்லது ‘ஐந்தொழில் வல்லான் நிலை’ என்று சிறப்பிக்கப்படுகிறது.

நமசிவாய – நமச்சிவாய – என்ற சொல்லின் பொருள் விளக்கம்

இதே நடராசர் சிலையினை ‘நமச்சிவாய’ என்ற சொல்லுக்கு உரிய விளக்கமாகவும் விளக்கிக் காட்டியுள்ளார்கள் பதினெண்சித்தர்கள்.

ந – ஆக்கல் – வலது மேல் கை

ம – காத்தல் – வலது கீழ்க் கை

சி – அழித்தல் – மேல் இடக்கை

வா – மறைத்தல் – கீழ் இடக்கை

ய – அருளுதல் – தூக்கிய இடக்கால்

ச் – ஒடுக்குதல் – ஊன்றிய வலதுகால்

இப்படி ஐந்தொழில் வல்லான் சிலை, ஆறு தொழில்களை விளக்கக்கூடிய ஒன்றாகவும் இருக்கிறது.

குறிப்பு:- இதைத்தான் பதினெண்சித்தர்கள் ஐந்தும் ஆறும் அறியாதவன், ஐந்தை ஆறாக்கத் தெரியாதவன், ஐந்தும் ஆறும் ஒன்றென உணரத் தெரியாதவன் .. என்று குறிக்கிறார்கள்.

ஆடல் வல்லான், கூத்தர் பெருமான், தாண்டவ மூர்த்தி, நடராசர், ஆடும்பெருமான், மன்றாடியார்,.., என்று பல பெயர்கள் பதினெண்சித்தர்களின் குருபாரம்பரியத்தில் உள்ளன.

———————————————————
உங்களுக்குத் தெரியுமா!

நடராசர் சிலையும், ஆயிரத்தெட்டு சிவாலயங்களும்

நடராசர் சிலை ஆயிரத்தெட்டு வடிவ வேறுபாடுகளைக்கொண்டு வடிக்கப்பட்டு அமைக்கப்பட்ட ஆலயங்களே ஆயிரத்தெட்டு சீவாலயங்கள்

நவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்!

நவராத்திரி பற்றிய 50 குறிப்புகள்!

1.சோழர் காலத்தில் நவராத்திரி திருவிழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது.

2. நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம்.

3. விஜயதசமி தினத்தன்று பெருமாள் கோவில்களில் வன்னி மரக்கிளையை வைத்து அதில் பெருமாளை எழுந்தருளச் செய்து பூஜை நடத்துவார்கள். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் கிரக தோஷங்கள் விலகி ஓடி விடும்.

4. நவராத்திரி பண்டிகையை முதன் முதலில் ராமர்தான் கொண்டாடியதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.

6. ஈசனம், அம்மையும் ஒன்று சேர்ந்து ஊஞ்சலில் ஆடுகின்ற தரிசனத்தை 9 நாட்களும் கண்டால் நவராத்திரி பூஜை செய்தபலன் கிடைக்கும்.

7. நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதாசகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் ஓதுவது கூடுதல் பலன்களைத் தரும்.

8. பிரம்ம நவராத்திரி, கிருஷ்ண நவராத்திரி, ரிஷி நவராத்திரி, தேவ நவராத்திரி, பஞ்ச கல்ப நவராத்திரி, பாக்ய நவராத்திரி,
போக நவராத்திரி, தாத்பர்ய நவராத்திரி, சற்குரு நவராத்திரி, தேவதா நவராத்திரி என்று பல வகை நவராத்திரிகள் உள்ளன.

9. பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு பிரதமையில் தொடங்கும் லலிதா நவராத்திரி, மாசி மாதம் வரும் ராஜ மாதங்கிநவராத்திரி ஆடியில் வரும் மகாவராகி நவராத்திரி, புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி ஆகிய 4 நவராத்திரிகளையும் பெண்கள் கடைபிடித்தால் அம்பிகையின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.

10. அனைத்திலும் தேவியே உள்ளாள் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது.

11. எல்லாரும் புரட்டாசி நவராத்திரியில் மட்டுமே கொலு வைக்கிறார்கள். ஆனால் 4 நவராத்திரி நாட்களிலும் கொலுவைத்தால்தான் அம்பிகை அருள் கிடைக்கும்.

12. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும்.

13. ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

14. நவராத்திரி பூஜையை அஸ்தம், சித்திரை அல்லது மூலம் நட்சத்திர நாட்களில் தொடங்குவது நல்லது. இந்த நாட்களில் வைதிருதி யோக நேரம் இருந்தால் மிகவும் நல்லது.

15. விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.

16. நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும்.

17. நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து வழிபாட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

18. நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானித்தபடியே தினசரி பூஜையை தொடங்க வேண்டும்.

19. நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. அரிசி மாவைப் பயன்படுத்திதான் கோலமிட வேண்டும். அவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும். சுண்ணாம்பு மாவு பயன்படுத்தினாலோ, எதிர்மறையான விளைவுகளே உருவாகும்.

20. ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து
வந்து உபசரிக்க வேண்டும். நம் வீட்டு அல்லது நம் உறவினர்களின் குழந்தைகளையே தேர்ந்தெடுப்பது கூடாது.

21. தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை (மஞ்சள், குங்குமம், வளையல்,ரிப்பன் போன்றவை) ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும்.

22. தனித்து தானம் செய்வதை விட, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, மங்கலப் பொருட்களை மிகப் பெரிய அளவில் தானமாக அளிப்பதே சிறப்பானது.

23. தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவிகின்றன. ஆகவே நவராத்திரியில் தானமளிப்பதே
மிகமிக முக்கியம்.

24. கன்னிப் பெண்களுக்குப் புதிய ஆடை முதலியவை பரிசாக அளிக்கப்படவேண்டும் என்பது நவராத்திரி விழாவின் முக்கிய
அம்சமாகும்.

25. நவராத்திரி ஒன்பது நாளும் பூஜையைத் திருமகளே ஏற்றுக் கொள்கிறாள்.

26. சரஸ்வதி பூஜை என்ன கிழமையானாலும் கடலை சுண்டல் எதுவும் செய்ய முடியாதவர்கள் பழங்கள் கொடுக்கலாம்.

27. நவதானியச் சுண்டல் நவக்கிரக நாயகர்களைத் திருப்திப்படுத்தும். கோள்களால் வரக்கூடிய துன்பங்களைத் தடுக்கும்.

28.ஷோடச லஷ்மி பூஜை நவராத்திரி வெள்ளிக்கிழமையில் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும். இது கிரியா சக்தி வழிபாடு.

29. நவராத்திரி காலத்தில் முடிந்தவரை பாராயணம் செய்வது தேவிக்கு அளவில்லாத மகிழ்ச்சியைத் தரும்.

30. அந்த நாளில் கொலுவுக்கு வரும் கன்னியரின் நடையுடை, பாவனை, பேச்சு, பாட்டு, நடந்து கொள்ளும் விதம் இவற்றை முனிவர்கள் தீர்மானித்து தன் மகனுக்கோ, தன் உறவினர் மைந்தனுக்கோ இவள் ஏற்றவள் என்று தீர்மானிப்பர். பல திருமணங்கள் அப்படி முடிவாகி கார்த்திகை அல்லது தையில் நடந்திருக்கின்றன.

31. நவராத்திரி விரதம் இருப் பவர்கள் தரையில் தான் படுத்து தூங்க வேண்டும்.

32. அம்பிகை சங்கீதப் பிரியை. எனவே நவராத்திரி நாட்களில் தினமும் ஏதாவது ஒரு பாட்டாவது பாட வேண்டும்.

33. நவராத்திரி 9 நாட்களும் மகா சக்தியை ஐதீகப்படி வணங்கினால் முக்திப் பேறு உண்டாகும்.

34. நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மனமகிழ்ந்து வருவார்.

35. நவராத்திரி 9 நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

36. கொலு வைத்திருப் பவர்கள் அதன் முன் நவக் கிரக கோலம் போட்டால் அம்பாள் அனுக்கிரகமும், நவக்கிரகப் பலன்களும் கிடைக்கும்.

37. நவராத்திரி 9 நாட்களும் வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு பரிசுப் பொருட்களுடன் பூந்தொட்டி, புத்தகத்தை தானமாக கொடுக்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் அதிகரித்துள்ளது.

38. முத்தாலத்தி என்றொரு வகை கோலம் உள்ளது. நவராத்திரி நாட்களில் இந்த வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் நமக்கு எளிதாக கிடைக்கும்.

39. நவராத்திரி 9 நாட்களில் வரும் வெள்ளிக் கிழமையன்று 5 சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

40. நவராத்திரி 5-ம் நாளான வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று 9 சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.

41. நவராத்திரி 9 நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

42. நவராத்திரி தொடர்பான சுலோகம் மந்திரம் தெரியவில்லையாப கவலை படாதீர்கள் ஓம் ஸ்ரீ லலிதா தேவியே நம என்பதை 108 தடவை சொன்னாலே போதும். உரிய பலன் கிடைக்கும்.

43. நெமிலியில் திரிபுர சுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.

44. நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவி யரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.

45. சுகமான வாழ்வு வேண்டும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும், அரசியலிலும், வேலையிலும் பதவி தொடர வேண்டும்,எந்த தொழிலில் ஈடுபட்டாலும் வெற்றி மீது வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் நவராத்திரி பூஜையை அவசியம் செய்ய வேண்டும்.

46. ராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி பாகவதம் சொல்கிறது.

47. கொலு பொருட்களை பாதுகாக்க வேண்டியது முக்கியம். அவைகளில் மந்திர ஆவர்த்தி இருக்கும்.

48. தேவியை நவராத்திரி சமயத்தில் ஒன்பது மடங்கு அதிகமாகப் பூஜிக்க வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

49. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர் நவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.

50. வசதி, வாய்ப்பு உள்ளவர்கள் நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி ஸங்கல்பம், கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை ப்ராணப் பிரதிஷ்டை, அங்கபூஜை, அஷ்டோத்திர நமாவளி, நவதுர்கா பூஜை, ஜோதி பூஜை என்று விஸ்தாரமாகச் செய்யலாம்.

சிவபெருமானின் அரிய வடிவங்கள் பற்றிய சிறப்பு தகவல்கள்

சிவபெருமானின் அரிய வடிவங்கள் பற்றிய சிறப்பு தகவல்கள் 🍁
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

🌞 பிருங்கி முனிவர் வண்டு வடிவெடுத்து சிவ பெருமானை வழிபட்டதால் சிவ லிங்கத்தில் வண்டு துளைத்த அடையாளம் ஏற்பட்டது. இந்த அரிய வடிவினை நாம் திருநல்லூரில் காணலாம். இங்கு இறைவன் பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திரு நாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🌞நீடூரில் ஒரு நண்டு சிவபெருமானை வணங்கியதால் சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு வளை உள்ளது. இங்கு சுவாமியின் பெயர் அருட்சோமநாதர்.

🌞ரத்தினம் வேண்டிய ஒரு அரசனை இறைவன் சோதித்தபோது அவனுடைய வாளால் வெட்டப்பட்ட லிங்கத் திருமேனியை ரத்தினகிரியில் காணலாம். இங்கு சிவபெருமான் ரத்தினகிரீஸ்வரர் என்ற பெயருடன் காட்சி தருகிறார்.

🌞தலைச்சங்காட்டில் திருமால், சிவபெருமானை வழிபட்டு, பாஞ்சஜன்ய சங்கைப் பெற்றதால் அங்கு சங்கு வடிவில் மூலவராகக் காட்சியளிக்கிறார் ஈசன். இறைவனுடைய பெயர் சங்காரண்யேஸ்வரர்.

🌞கேரள மாநிலம் திருச்சூரில் வடக்குநாதர் சுவாமி கோயிலில் சிவன் நெய் மலையாக காட்சி தருகிறார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த லிங்கம் இது.

🌞அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் சந்திரனைப்போலவே 15 நாளில் வளர்ந்து பௌர்ணமியில் முழு லிங்கமாகவும் அடுத்த 15 நாளில் தேய்ந்து அமாவாசையில் மறைவதும் சிறப்பம்சம்.

🌞 கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் வடதுபுறம் சாய்ந்திருப்பதைக் காணலாம்.

🌞அர்ஜுனனின் அம்புபட்ட லிங்கத்தை திருவிஜயமங்கையில் தரிசிக்கலாம். இங்கு இறைவன் விஜயநாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

🌞செம்பனார்கோயிலில் உள்ள சிவபெருமான் சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயருடன் 32 இதழ்களை உடைய தாமரை வடிவ ஆவுடையாரில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியிருக்கிறார்.

🌞காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் சிவன் எட்டுக்கைகளுடன் சிற்பமாகக் காட்சியளிக்கிறார்.

🌞மகாராஷ்டிரா மாநில எல்லோரோ குகைகளுக்கு அடுத்து உள்ள “குஸ்மேசம்’ என்னும் ஊரில் உள்ள சிவலிங்கம் குங்குமத்தால் ஆனது.

🌞பொதுவாக பெருமாள் கோயிலில்தான் சடாரி வைப்பார்கள். ஆனால் மூன்று சிவன் கோயில்களில் மட்டும் சடாரி வைக்கப்படுகிறது. அவை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில், காளஹஸ்தி கோயில், மற்றும் சுருட்டப்பள்ளி சிவன் கோயில் ஆகும்.

🌞திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோயிலில் உள்ள சிவபெருமானது பெயர் சந்திரமௌலீஸ்வரர். அவர் மும்முகலிங்கமாக தரிசனம் அளிக்கிறார். அதில் கிழக்கு முகம் தத்புருஷ லிங்கம் என்றும், வடக்கு முகம் வாமதேவ முகமாகவும், தெற்கு முகம் அகோர மூர்த்தியாகவும் வணங்கப்படுகின்றனர்.

🌞ஆலகால நஞ்சை உண்ட சிவபெருமான் அம்பிகையின் மடியில் சயனித்திருக்கும் அரிய காட்சியை காசியில் உள்ள “அனுமன் காட்’டில் காமகோடீஸ்வரர் கோயிலில் காணலாம். ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளியிலும் பள்ளிகொண்டீஸ்வரர் தரிசனம் கிடைக்கிறது.

🌞பெங்களூருக்கு அருகே சிவகெங்கா என்ற இடத்தில் சிவலிங்கத்தின் மேல் நெய்யை வைத்தால் வெண்ணெயாக மாறுகிறது. இந்த வெண்ணெயை வீட்டுக்குக் கொண்டு வரலாம். எத்தனை நாள் ஆனாலும் வெண்ணெய் உருகுவதில்லை.

🌞தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலில் உள்ள ராஜகம்பீர மண்டபத்தில் மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர் இருக்கிறார்.

🌞 ஐந்துமுகம் கொண்ட சிவபெருமான் ஏழு தலங்களில் அருள்புரிகிறார். 1. காசி, 2. நேபாளம், 3. காளஹஸ்தி, 4. திருவானைக்காவல், 5. சித்தேஸ்வர் மகாதேவ், 6. ராசிபுரம், 7. காஞ்சி கைலாசநாதர் கோயில்.

🌞தஞ்சை மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது நாலூர் திருமயானம். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. சுவாமியின் பெயர் பிலாச வனேஸ்வரர்.

🌞காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு தெற்கே சிறிது தூரத்தில் “ஜ்வரஹரேஸ்வரர்’ என்ற பெயருடன் ஈசன் எழுந்தருளியுள்ளார். வேலூர் கோட்டை கோயிலிலும் மூன்று கால்களுடன் ஜ்வரஹரேஸ்வரர் காட்சியளிக்கிறார்.

🌞மயிலாடுதுறை அருகே திருவிற்குடியில் உற்சவமூர்த்தியான சிவபெருமான் திருக்கரத்தில் சக்கரம் ஏந்தி நிற்கும் காட்சியைக் காணலாம். வலது மேல் கரத்தில், மழுவும், இடது மேல் கரத்தில் மானும் வைத்திருக்கின்றார். இங்கு சிவனுக்கு துளசியால் அர்ச்சனை செய்கின்றனர்.

        திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
அடியாா்களுக்குத் தொண்டு செய்யுங்கள்.,இறைவன் அவா்களுக்குள்ளிருக்கிறான்.

மிக சக்தி வாய்ந்த மந்திரங்கள்

தேய்பிறை  அஷ்டமி. பைரவருக்குரிய சக்தி வாய்ந்த நாளாகும்
மிக சக்தி வாய்ந்த மந்திரங்களை  அனைவரும் பலன் பெறும் பொருட்டு தந்துள்ளேன்.  ஈசனருளால் பயன் படுத்தி  அனைவரும் பலன்பெற அவன் தாள் வணங்கி வாழ்த்துகிறேன்.இதுவும்  பலர் பபயன்படுத்தி வரும்  ஓர்  ரகசிய வழிபாட்டு முறையாகும்.

அஷ்ட பைரவர்,அவரது சக்திகளின் காயத்ரி மந்திரங்கள்.அவரவர்களுக்கு தற்போதைய நடப்பு திசா கிரகத்தை அறிந்து கொண்டு கீழே உள்ள படி அந்த கிரக வழிபாடுகள் செய்ய கெடுபலன்கள் குறைந்து நன்மைகள் நிச்சயம் பைரவர் அருளால்  பெருகும் .

                            🌻🌻🌻
சந்திரனின் பிராண தேவதை கபால பைரவர்+இந்திராணியின் காயத்ரி மந்திரங்கள்

"ஓம் கால தண்டாய வித்மஹே

வஜ்ர வீராய தீமஹி

தந்நோ: கபால பைரவ ப்ரசோதயாத்"

"ஒம் கஜத்வஜாய வித்மஹே

வஜ்ர ஹஸ்தாய தீமஹி

தந்நோ: இந்திராணி ப்ரசோதயாத்"

யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ,அவர்கள் தினமும் அவர்களின் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் 9 இன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை ஜபித்துவரவேண்டும்.இதனால்,சந்திர திசை யோக திசையாக இருந்தால்,யோகங்கள் அதிகரிக்கும்.சந்திர திசை பாதகாதிபாதி திசையாக இருந்தால்,கஷ்டங்கள் குறையும்.
♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧
                 
செவ்வாயின் பிராண தேவதை சண்ட பைரவர்+கவுமாரி

"ஓம் சர்வசத்ரு நாசாய வித்மஹே

மஹாவீராய தீமஹி

தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்"

"ஓம் சிகித்வஜாயை வித்மஹே

வஜ்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ; கவுமாரி ப்ரசோதயாத்"

செவ்வாய் மகாதிசை நடப்பவர்கள்,இந்த மந்திரங்களை உங்கள் ஊரில் இருக்கும் பைரவர் சன்னிதியில் தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் செவ்வாய் ஓரையில் 9 முறை ஜபித்துவருவது நல்லது.
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇

புதனின் பிராணதேவதை உன்மத்த பைரவர்+ஸ்ரீவராஹி

"ஓம் மஹா மந்த்ராய வித்மஹே

வராஹி மனோகராய தீமஹி

தந்நோ: உன்மத்த பைரவ ப்ரசோதயாத்"

"ஓம் மஹிஷத் வஜாயை வித்மஹே

தண்ட ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: வராஹி ப்ரசோதயாத்"

புதன் மகாதிசை நடப்பவர்கள் ,பைரவர் சன்னிதியில் இந்த மந்திரத்தை ஐந்தின் மடங்குகளில் ஜபிக்கலாம்.

♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤♤

குருவின் பிராண தேவதை அசிதாங்க பைரவர்+பிராம்ஹி

"ஓம் ஞான தேவாய வித்மஹே

வித்யா ராஜாய தீமஹி

தந்நோ:அசிதாங்க பைரவ ப்ரசோதயாத்"

"ஓம் ஹம்சத் வஜாய வித்மஹே

கூர்ச்ச ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: பிராம்ஹி ப்ரசோதயாத்"

குருதிசை நடப்பவர்கள் பைரவ சன்னிதியில் ஜபிக்க வேண்டிய மந்திரங்கள்.

○○○○○○○○○○○○○○○○○○○○○○○

சுக்கிரனின் பிராண தேவதை ருரு பைரவர்+மாஹேஸ்வரி

"ஓம் ஆனந்த ரூபாய வித்மஹே

டங்கேஷாய தீமஹி

தந்நோ: ருருபைரவ ப்ரசோதயாத்"

"ஓம் வருஷத் வஜாய வித்மஹே

ம்ருக ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: ரவுத்ரி ப்ரசோதயாத்"

சுக்கிர மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரி மந்திரங்கள்.

□□□□□□□□□□□□□■□■

சனியின் பிராண தேவதை குரோதன பைரவர்+வைஷ்ணவி

"ஓம் க்ருஷ்ண வர்ணாய வித்மஹே

லட்சுமி தராய தீமஹி

தந்நோ: குரோதன பைரவ ப்ரசோதயாத்"

"ஓம் தாக்ஷ்யாத் வஜாய வித்மஹே

சக்ர ஹஸ்தாயை தீமஹி

தந்நோ: வைஷ்ணவி ப்ரசோதயாத்"

சனி மகாதிசை நடப்பவர்கள் ஜபிக்க வேண்டிய பைரவ காயத்ரிகள்.

♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧

ராகுவின் பிராண தேவதை சம்ஹார பைரவர்+சண்டீ

"ஓம் மங்களேஷாய வித்மஹே

சண்டிகாப்ரியாய தீமஹி

தந்நோ:ஸம்ஹாரபைரவ ப்ரசோதயாத்"

"ஓம் சண்டீஸ்வரி ச வித்மஹே

மஹாதேவி ச தீமஹி

தந்நோ: சண்டி ப்ரசோதயாத்"

ராகு தசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னிதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள் இவை.

¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

கேதுவின் பிராணதேவதை பீஷண பைரவர்+சாமுண்டி

"ஓம் சூலஹஸ்தாய வித்மஹே

ஸர்வானுக்ராய தீமஹி

தந்நோ: பீஷணபைரவ ப்ரசோதயாத்"

"ஓம் பிசாசத் வஜாயை வித்மஹே

சூல ஹஸ்தாயை தீமஹி

தந்நோ; காளி ப்ரசோதயாத்"

கேது மகாதிசை நடப்பில் இருப்பவர்கள் பைரவர் சன்னதியில் ஜபிக்க வேண்டிய காயத்ரி மந்திரங்கள்.

காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்

காஞ்சி மாமுனி மஹாபெரியவாளின் நிகழ்வுகள்

  மாமுனியின் கருணையா – கொடையா

(ஸ்ரீ மும்பை விஜயன் ஸ்வாமிகளின் சொற்பொழிவிலிருந்து...)

விதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி

                        அடியேன் கல்கத்தாவில் பயணிகள் கப்பலில் வரும் என் நண்பரைக் காணத் துறைமுகம் சென்றேன். கப்பல் இரண்டு மணி நேரம் தாமதம் எனத் தெரிந்தது. அவருக்காக காத்திருக்க முடிவு செய்து அந்த சாலையில் இருந்த ஒரு ஹோட்டலின் முன் இருந்த பெஞ்சில் அமர்ந்தேன். அது ஒரு சிறிய ஹோட்டல்.  வருவோர் போவோர் அதிகம் இருந்த நிலையில் அந்த ஹோட்டல் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. என் பார்வை கல்லாவில் இருந்தவரின் மீது செல்ல, அவர் அமர்ந்து இருந்த இருக்கைக்குப் பின்னால் ஒரு படம் பூக்களாலும், வண்ணக் காகிதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு பார்வையை இழுக்கும் வகையில் இருந்தது.. அந்தப் படம் என்னை ஈர்க்க, நான் அருகே சென்று பார்க்க, அது மஹா பெரியவாளின் படம். கல்கத்தாவில் 90 சதவிகித இடங்களில் காளி மற்றும்  ராம கிருஷண பரமஹம்சர் விவேகானந்தர் படங்களைப் பார்த்த எனக்கு, என் குரு நாதரைக் கண்டவுடன்  உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

                  கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம். படத்தைக் காட்டி  யார் இவர் என வினவ அந்த நபர் உள்ளம் பூரித்து கண்கள் விரிய “என் தாக்குர்ஜி என் தாக்குர்ஜி” என பரவசப் பட்டார். இவரைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என அடியேன் கேட்க அந்த கேள்விக்கு காத்திருந்தவர் போல நொடியும் தாமதிக்காது மிகுந்த உணர்ச்சி வசப்பட்டவராய் பேசத் தொடங்கினார். அவர் உள்ளத்தில் பெருகிய பக்தி – மடை திறந்த வெள்ளம் என வார்த்தைகளாக பெருக்கெடுத்தது. பக்தியில் நனைந்து நனைந்து வந்து விழுந்த குரு நாதரைப் பற்றிய ஒவ்வொரு சொல்லும் தேனாக என் காதில் பாய்ந்தது. பக்தியில் பொங்கி பொங்கி கொப்பளித்த அவர் உள்ளம் சற்று சம நிலை அடைய, அடியேன் அவர் பேச்சின் இடை இடையே மஹாபெரியவாளைப் பற்றி ஒரிரு வரிகள் சொல்ல, தன் பேச்சை நிறுத்தியவர் கண்களில் வியப்புடன் தாக்குர்ஜி பற்றி தெரிந்தும் என்னிடம் தெரியாதது போல் கேட்டீர்களா என வாய் விட்டு சிரிக்க அந்த சிரிப்பில் கள்ளம் கபடம் இல்லா அவரின் குழந்தை உள்ளம் தெரிந்தது.

                           அருகே இருந்த பணியாளரிடம் கல்லாவைப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து அழைத்து ஒரு இருக்கையில் அமர்த்தினார். இருவரும் மஹாபெரியவாளைப் பற்றி பேசி பேசி  களிப்படைய,  நேரம் போனதே தெரியவில்லை. கப்பல் வந்துவிட்ட அறிவிப்பு வர அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன். என் கைகளை அழுத்திப் பிடித்தவர் உங்களைப் பிரிய ஏனோ மனம் வரவில்லை, இன்று மாலை என் இல்லம் வாருங்கள். தாக்குர்ஜி என் குடும்பத்துக்கு செய்த ஒரு உன்னதமான அதிசயத்தை சொல்லுகிறேன், வருவீர்களா என ஏக்கத்துடன் கேட்க - அவரிடம் , ஐயா அதை விட பெரும் பாக்கியம் என்ன இருக்க முடியும் கட்டாயம் வருகிறேன் என சொல்லி அவர் முகவரியைப் பெற்றுக் கொண்டு விடை பெற்றேன்.
                 அன்று மாலை அவர் இல்லம் சென்றேன். அழகான எளிமையான சிறிய இல்லம். மணம் கமழும் ஒரு சிறு அறையில் மஹா பெரியவாளின் படம். மஹா பெரியவாளின் முன்னிலையில் ஒரு சிறு பெட்டி இருக்க அதிலிருந்து ஒரு பாத்திரத்தை பய பக்தியுடன் வெளியே எடுத்து வைத்தார், அந்த புனிதப் பாத்திரம்  சொல்லாமல் சொன்ன நிகழ்வு இது.

           கல்கத்தாவைச் சேர்ந்த இளம் விதவை. கணவர் குடும்பத்தினர்  பரம்பரை பரம்பரையாக செக்கு வைத்து எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். கணவர் காலத்தில் வியாபாரம் முடங்க ஆரம்பிக்க, அவள் திருமணம் முடித்த  சில வருடங்களில் வியாபாரம் முழுதுமாக நொடித்து விட்டது. வியாபாரத் தோல்வி கணவர் உள்ளத்தையும் உடலையும் உருக்க, நோய்வாய்ப்பட்டு சில வருடங்களிலேயே அவர் இறந்தும் போனார். இளம் விதவை - ஐந்து குழந்தைகளுக்குத் தாய் - கணவர் இறந்த மறு நாளே புகுந்த வீட்டினர் அவளை அண்ட விடாது ஒதுக்கியும் ஒதுங்கியும் விட்டனர். பிறந்த வீட்டில் பாதுகாப்பு கிடைக்கும் எனக் கதவைத் தட்டியவளுக்கு, பிறந்த வீட்டார் ராசியில்லாதவள் அமங்கலி என இரட்டைத் தாழ்ப்பாள் போட்டனர்.

                       தன் உடலையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு - ஒன்றும் புரியாத பிஞ்சுகளாய் இருக்கும் ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பாரம் - எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாயம் ராசியில்லாதவள் என சூட்டிய முள் கிரீடம் - எல்லாம் அவளை அழுத்தியது. கணவர் சேமித்து வைத்து விட்டுப் போன சிறு தொகையைக் கொண்டு பசி பட்டினி இல்லாது குடும்பத்தை நடத்தினாள். அதுவும் சில காலமே. வருடங்கள் செல்ல செல்ல இரு வேளை சோறு ஒரு வேளையானது. பின்னர் அதுவும் கஞ்சியாக மாறியது. கைப் பணம் கரைய கரைய அச்சமும் கவலையும் சூழ்ந்தது. குடும்ப வருமானத்திற்கு குப்பை பொறுக்குவது என முடிவு செய்தாள். நாள் முழுதும் அலைந்து பெரிய அலுவலகங்களாக சென்று காகிதங்களை பொறுக்கி, அவற்றை விற்று அதன் மூலம் வரும் வருமானம் கொண்டு குடும்பம் நடத்தினாள். துறைமுகப் பகுதியில் வாகனங்களிலிருந்து விழும் நெல் அரிசி கோதுமை போன்ற தானியங்களை  சாலையைப் பெருக்கி  எடுத்து வந்தாள். சிதறிய தானியங்களைக் கொண்டு தன் பிள்ளைகளின் வயிற்றுக்கு கஞ்சி ஊற்றினாள். ஆனால் எப்படி ஐந்து பிள்ளைகளையும் கரை சேர்ப்பேன் என்ற கவலை அவளைத் தினமும் வாட்டியது. குடும்பம் மிகவும் பரிதாப நிலையில் இருந்தது. கணவர் இறந்து இப்படியே ஐந்து வருடங்கள் போய்விட்டது.
               இந் நிலையில் நமது மஹாபெரியவா கல்கத்தாவில் முகாமிட்டிருந்தார். அவரைத் தரிசித்த மக்கள் அவரைப் பற்றி பலவாறு ப்ரமிப்புடனும் பக்தியுடனும் பேச பேச அந்த பேச்சுக்கள் இவள் காதையும் எட்டியது. அவளுக்கும் அவர்கள் சொல்லும் தாக்குர்ஜியை பார்க்க வேண்டும் என ஆவல் பிறந்தது.  அவரை தரிசித்து விட்டு வந்தால் என் வாழ்வில் ஒரு விடியல் இருக்கும் என எண்ணினாள். இரவெல்லாம் அதே நினைவுடன் உறங்கியவள், மறு நாள் ஸ்நானம்  செய்து விட்டு, கையில் ஒரு காலி எண்ணெய் தூக்கை எடுத்துக் கொண்டு மஹா பெரியவா முகாமிட்டிருந்த இடம் வந்தாள். தாக்குர்ஜியை சுலபமாக சந்தித்து ஆசி பெற்றுவிடலாம் என நினைத்து வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு திகைத்து நின்றாள். வருவோர் போவோரின் ஏளனப் பார்வையும், அவர்கள் அவளைக் கண்டு விலகிச் செல்வதையும் கண்ட பொழுது தான் - அவளுக்கு அவளின் நிலைப் புரிந்தது.  தாக்குர்ஜியை காண வந்த கூட்டத்தினரின் மீது அவள் பார்வை சென்றது. அனைவரும் நல்ல ஆடை அணிந்தவர்கள் – படித்தவர்கள் – உயர் அதிகாரிகள் – என பலதரப்பட்ட மக்கள்.  தன்னை எண்ணினாள். எண்ணெய் ஆட்டுவதைக் குலத் தொழிலாக கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவளின் தலையில் ஒரு சொட்டு எண்ணெய் இல்லை. வறண்ட கூந்தல்; எத்தனை துவைத்தும் நீங்காது அழுக்குப் படிந்து போன  சேலை; தன் வாழ்க்கை தரத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டும் கிழிந்த ஒட்டுப் போட்ட ஆடை. எப்படி இந்தக் கூட்டதில் நம்மை இணைத்துக் கொள்வது; கூட்டத்தில் கலக்க முயற்சித்தால் நிச்சயம் விரட்டப் படுவோம் என புரிந்துக் கொண்டாள். அந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க உள்ளத்தில் அச்சம் சூழ்ந்தது. ஆனால் தாகுர்ஜியிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் போகவில்லை.

             கூட்டத்திலிருந்து சற்று விலகி நின்றாள். கூட்டத்தினர் பார்வையாலையே அவளை விரட்ட தள்ளி  நின்றாள். அங்கிருந்தவர்கள் மேலும் அவளை விரட்ட - மேலும் மேலும் ஒதுங்கினாள் . இப்படியே கூட்டத்தை விட்டு 60 - 70 அடி தள்ளி விரட்டப்பட்டாள். கூட்டம் கலைந்தவுடன் அவரைத் தரிசிக்கலாம் எனக் காத்திருந்தாள். ஆனால் வருவதும் போவதுமாக இருந்த மக்கள் கூட்டம் குறையவில்லை. நேரம் நகர்ந்துக் கொண்டே போனது. மனதில் தன் வாழ்க்கையில் நடந்த அத்தனை சம்பவங்களும் வந்து போயின. தன் வாழ்க்கை சம்பவங்களால் கண்களும் மனதும் பொங்கியது, தன் நிலையைப் புரிந்துக் கொண்டவள் தாகுர்ஜியை அருகில் சென்று ஆசி பெறும் எண்ணத்தைக் கைவிட்டாள். அவரை தூரத்திலிருந்தாவது தரிசித்து விட்டால் போதும் , தன் வாழ்க்கையில் மாற்றம் வரும் என பரிபூரணமாக நம்பினாள் .கூட்டத்தை விட்டு தள்ளி ஒடுங்கி நின்றவளின் பார்வை மட்டும் தாக்குர்ஜி இருந்த இடத்தை விட்டு விலகாது இருந்தது.
               சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்தவளுக்கு இன்னும் மஹா பெரியவாளின் தூர தரிசனம் கிடைக்கவில்லை. ஆனால் மஹா பெரியவா அவளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார் – உள் முகமாக. அருகே இருந்த தன் உதவியாளரை அழைத்தார். சில குறிப்புகள் சொல்லி அவளிடம் இருக்கும் பாத்திரத்தை வாங்கி வரும் படி சொன்னார். உதவியாளரிடம் பாத்திரத்தை தந்தவளின் கண்கள் தாக்குர்ஜியை காணத் துடித்தது. தாக்குர்ஜி என்னை உள்முகமாக பார்த்துவிட்டார். எனக்கு அவரின் தரிசின பாக்கியம் கிடைக்குமா என உள்ளம் ஏங்கியது. உதவியாளார் சென்ற பாதையிலேயே தன் கண் பார்வையை செலுத்தினாள். உதவியாளர் சென்ற பொழுது ஒரு இடைவெளி கிடைக்க அந்த  இடைவெளியில் தாக்குர்ஜியைப் பார்த்தாள். பரவசப்பட்டாள். கை தொழுது நின்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. தாகுர்ஜியின் முன் பாத்திரம் வைக்கப் பட அதில் மஹாபெரியவா தன் கமண்டத்திலிருந்து  நீரை ஊற்றுவதைக் கண்டாள். கூட்டம் மறைக்க இந்த தரிசினமே போதுமானது என திருப்தி அடைந்தாள். உதவியாளர் கொண்டு வந்து தந்த பாத்திரத்தைத் தன் சேலைத் தலைப்பில் மடிப் பிச்சையாக வாங்கிக் கொண்டாள். அதை பவித்திரமாக பாவித்து தன்னுடன் அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க நன்றி சொன்னாள். அவள் உடலும் உள்ளமும் ஆனந்தப் பரவசப் பட கால்கள் சிறிது தள்ளாட அருகே இருந்த சுவரில் சாய்ந்தாள்.

                 கண்கள் மூடிய பரவச நிலையில் இருந்தவளுக்கு மஹாபெரியவாளின் வார்த்தைகள் இடி முழக்கமாக கேட்டது. “பரவாயில்லை இத்தனை நேரம் காத்திருந்தாயே. உண்மையில் நீ மிகவும் பொறுமைசாலி” என சொல்ல, அந்தப் பெண், “ தாக்குர்ஜி நான் பொறுமைசாலியல்ல. எத்தனையோ மக்கள் தங்களிடம் ஆசி பெறவும் அனுக்ரஹம் பெறவும் காத்திருக்க, வந்த அனைவருக்கும் பல மணி நேரமாக இடை விடாது ஆசி தந்து கருணை மழை பொழிந்துக் கொண்டிருப்பதோடு எங்கோ நின்று கொண்டிருந்த இந்த விதவைக்கும் அல்லவா அனுக்ரஹம்  காட்டினீர். என் காத்திருப்பில் சுய நலம் இருக்கிறது. ஆனால்  தங்களை நாடி வந்த பக்தர்களின் நலம் கருதிய தங்களின் பொறுமையிலோ அன்பும் கருணையும் அல்லவா வழிந்துக் கொண்டிருக்கிறது. நான் பொறுமைசாலி அல்ல. தாங்கள் தான் பொறுமையின் பிறப்பிடமும் அதிபதியும்” என்றாள். “அம்மா உன் நிலை அறிவேன். இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” என ஆசி வழங்கினார். பரவச நிலையிலிருந்து வெளி வந்து சம நிலை அடைந்தாள். தாகுர்ஜியின் திசை  நோக்கி மீண்டும் நன்றியோடு வணங்கினாள். பாத்திரத்தை இறுக்கி பிடித்தபடி தன் வீடு  நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
                        மனதில் தாக்குர்ஜியின் தரிசனமும் அவரின் வார்த்தைகளுமே வியாபித்திருந்தது. ஐந்து கிலோமீட்டருக்கும் மேலான நடை பயணம் களைப்பைத் தரவில்லை. பரவச நிலைக்குப் பின் உலகமே அவளுக்கு புதிதாகத் தோன்றியது. மனதை அழுத்திக் கொண்டிருந்த பாராமும் - பிறர் சூட்டிய பட்டங்களும் - கவலையும் போன இடம் தெரியவில்லை. தாகுர்ஜியின் தரிசனம் கிடைத்துவிட்டது. அவரின் ஆசி வார்தைகளையும் கேட்டு விட்டேன் . இனி தாக்குர்ஜியின் ஆசியே என் குடும்பத்தை வழி நடத்தும் என திடம் கொண்டாள். ஒரு வழியாக தாக்குர்ஜியை தரிசித்த மகிழ்வுடன் வீடு வந்து சேர்ந்தாள். தான் கொண்டு சென்ற பாத்திரத்தில் தாக்குர்ஜி ப்ரசாதமாக கொடுத்த  நீர் , பாத்திரம் முழுதுமாக சுமார் ஒன்றரை லிட்டர் நிரம்பி இருக்க, அதை வேறு பாத்திரத்தில் நிரப்ப நினைத்து மற்றொரு பாத்திரத்தில் ஊற்றினாள். ஊற்றிய பொழுது நடந்த அதிசயத்தை அவள் கண்களால் நம்ப முடியவில்லை.

                   அவள் கொண்டு சென்ற பாத்திரத்திலிருந்தது ப்ரசாத நீர். ஆனால் அதை மற்றொரு பாத்திரத்தில் நிரப்பிய பொழுது அது எண்ணெய்யாக வழிந்தது. வழிந்துக் கொண்டே இருந்தது.  நடக்கும் ஆச்சர்யத்தை அவளால் நம்ப முடியவில்லை. தாக்குர்ஜி ப்ரசாதமாக தந்தது நீர் தானா என பார்த்தாள் . நீர் தான் இருந்தது. அது எப்படி வழியும் பொழுது எண்ணெய் ஆயிற்று? தாக்குர்ஜி தாகுர்ஜி என வாய் முணுமுணுத்தது. உள்ளம் ஆச்சர்யத்திலும் சந்தோஷத்திலும் திளைத்திருக்க , மஹா பெரியவாளின் ஆசி வார்த்தைகள் அவள் மனதில் மோதின. “இதைக் கொண்டு 17 ஆண்டுக் காலம் உன் குடும்பத்தை நடத்தி நீயும் ஜீவித்து வா. இதுவே உன் வாழ்வாதாரம். துளிர்த்து தழைக்கும்” ஆசி வார்த்தைகளின் அர்த்தம் இப்பொழுது புரிய ஆரம்பித்தது. பட்டுப் போன குலத்தொழிலான எண்ணெய் வியாபாரத்தை தாக்குர்ஜி மீண்டும் துளிர்க்க வைத்துவிட்டார் எனப் புரிந்துக் கொண்டாள். இனி இந்த எண்ணெய்யை விற்று குடும்பத்தை நடத்துவது என முடிவு செய்தாள்.
                       ‘தாக்குர்ஜியை நான் அருகில் சென்று கூட வணங்கவில்லை. அவர் முன் என் நிலையை எடுத்தும் சொல்லவில்லை. எங்கோ ஒதுக்கப்பட்டு ஓரமாக நின்ற இந்த விதவையின் மீது தன் உள்ளக் கருத்தைப் பதித்து எத்தனை பெரிய அதிசயத்தையும் அற்புதத்தையும் நிகழ்த்தி ஆசியும் அளித்தார். இதுவரை ஒரு முறை கூட இந்த தாக்குர்ஜியைப் பற்றி நான் அறிந்ததும் இல்லை. நாளும் தொழுததும் இல்லை. ஆனால் எத்தனை பெரிய கருணையைப் பொழிந்திருக்கிறார்’ என எண்ணி எண்ணி அவள் உள்ளம் கசிந்தது. என் தாகுர்ஜிக்கு எப்படி நன்றி செலுத்துவேன் என கலங்கினாள்.  அவள் துக்கம் சந்தோஷம் ஆச்சர்யம் என அனைத்தும்  அழுகையிலேயே கலந்து கரைந்தது. மனதில் தாகுர்ஜியின் ஆசிகளும் அவருக்கான நன்றிகளுமே பதிந்து இருந்தது. தெளிவுக் கொண்டு எழுந்தவள் அந்த பாத்திரத்தை ஒரு பெட்டியில் வைத்துப் பூட்டினாள். பாத்திரத்தோடு ரகசியத்தைக் காக்க தன் வாயையும் மனதையும் சேர்த்து அந்தப் பெட்டியில் பூட்டினாள்.

                              மறு நாள் ஸ்நானம் செய்து விட்டு பெட்டியிலிருந்த தாக்குர்ஜி ஆசிர்வதித்து தந்த பாத்திரத்தை தொட்டு வணங்கினாள்.  மனதில் தாகுர்ஜியை நினைத்தாள். வார்த்தைகள் உள்ளத்திலிருந்த வெடித்துக் கிளம்பின.

        நான் விழுந்துப் போன நேரத்தில் என் மக்கள்
                              எல்லோரும் நகைத்தனர்
         வியாதியஸ்தி (ராசியில்லாதவள்) என சொல்லி என்
                           ஜனமே என்னை வெறுத்தது
          என்னை சுகப்படுத்தி புது வாழ்வு தந்த தாக்குருவே!

என்று மனம் உருகிப் பிரார்த்தித்தாள்.  (இதுவே அவளின் குரு மந்திரம் ஆனது. ஒவ்வொரு நாளும் இதை சொல்லியப் பின்னே எண்ணெய் எடுத்தாள்)

மஹா பெரியவா ஆசிக் கொடுத்தப் பாத்திரத்தை சாய்த்தாள். ஒரு குடம் நிறைய நிரப்பினாள். பாத்திரத்தைப் பூட்டினாள். எண்ணெய்யை எடுத்துக் கொண்டு அக்கம் பக்கத்தினர் அறியா வண்ணம் மூன்று நான்கு மைல்களுக்கு அப்பால் சென்று வியாபாரம் செய்தாள். கையில் குரு நாதரின் கருணையால் கிடைத்தப் பணம் அவளுக்கு திடனைத் தந்தது. அந்த வருவாய் அவளின் குடும்ப ஜீவனத்திற்குப் போதுமானதாக இருந்தது. தாகுர்ஜிக்கு மறவாது நன்றி செலுத்தினாள்.

                     மறு நாள் பாத்திரத்திலிருந்து ஒரு குடம் நிறைய எண்ணெய்  எடுத்தாள். வியாபாரம் செய்தாள். ஒவ்வொரு நாளும் ஒரு குடம் என்பதை அளவாக வைத்துக் கொண்டாள். அவள் அதற்கு மேல் என்றுமே எடுக்கவில்லை. அந்தக் கட்டுப்பாட்டை அவள் தனக்குத் தானே  விதித்துக் கொண்டாள். இப்படியே காஞ்சி மாமுனியின் வாக்குப்படி அவள் தன் குடும்பத்தை நடத்தினாள்.

          வருடங்கள் கடந்தன. பரிதாப நிலையில் இருந்த குடும்பம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறியது. மூத்த மகன் டீக் கடை வைத்து வியாபாரம் செய்தான்.  நான்கு பெண் குழந்தைகளுக்கும் உரிய வயதில் கடன் இல்லாது திருமணமும் முடித்தார் அந்தத் தாய். ஒரு சிறு வீடும் அவர்களுக்கு சொந்தமானது. தாகுர்ஜியின் ஆசியில் மகனின் வியாபாரம் சிறக்க அவன் சிறு ஹோட்டல் வைக்கும் அளவு உயர்ந்தான். மகனின் திருமணமும் நடந்தது. பாரத்தை எப்படி சுமப்பேன் என போராடித் தவித்த அந்த விதவைத் தாய் மாமுனியின் கருணையால் இப்பொழுது பெரும் நிம்மதி அடைந்தாள். 17 ஆண்டுக் காலம் அவரின் கருணையால் ஜீவிதம் நடந்தது. இனி தனக்கு வாழ்க்கையில் என்ன வேண்டும் என உள்ளம்  நிறைவுக் கொள்ள நினைவெல்லாம் தாக்குர்ஜியாகிப் போனார்.

                    ஒரு நாள் இரவு தாக்குர்ஜியின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் பெருக தொழுது நின்றாள். இரவு தாக்குருஜியின் தரிசினம் கிடைத்தது.
மஹரிஷியே மாமுனியே
சித்தனே சுத்தனே
சர்வனே சத்தியனே
நீர் செய்த உபகாரங்கள்
கணக்காலே எண்ண முடியுமா
என தொழ

தாக்குருஜியின் வார்த்தைகள் இடியாய் அவளுள் ஒலித்தன.
ஆதி அன்பு என்றும் குன்றிடாமல்
பேரின்பம் என்றும் பொங்கிட
நீடித்த ஆசிகள் இருக்கும்.

என்றார் மாமுனி கருணை நாதர்.

                                   17 ஆண்டுக் காலம் முடியும் தருவாயில் அவள் சிறு நோய்வாய்ப் பட தாக்குர்ஜி குறிப்பிட்டக் காலம் முடிந்து விட்டதை அறிந்தாள். தன் ஜீவிதம் முடியப் போவதையும் அறிந்தவள் தன் மகனிடம் பாத்திரத்தை ஒப்படைத்து அனைத்து ரகசியத்தையும் கூறினாள். இனி இதிலிருந்து எண்ணெய் வராது. அதன் பெலன் முடிந்தது. தாகுர்ஜியின் கருணையால் நாமும் நன்றாக இருக்கிறோம் என்றாள். ஒரிரு நாளில் தாக்குர்ஜியின் நினைவாலேயே அவள் உயிரும் பிரிந்தது.
                          “ என் தாய் இத்தனை ஆண்டுக் காலம் எங்கள் குடும்பத்துக்குக் கூடத் தெரியாது ரகசியத்தைக் காத்து வந்தது எனக்கு பிரமிப்பைத் தந்தது. என் தாய் சிறு வயது முதல்   எங்களுக்கு யார் மூலமோ  கிடைக்கப் பட்ட தாக்குர்ஜியின் படத்தைக் காட்டி காட்டி பக்தியை ஊட்டி வளர்த்திந்தார். எங்களுக்கு நினைவு தெரிந்தது முதல் தாக்குர்ஜியைத் தவிர வேறு தெய்வம் தெரியாது. என் தாய் மூலம் எப்பொழுது அந்த ரகசியத்தை அறிந்துக் கொண்டேனோ அன்று முதல் என் தாக்குர்ஜியின் மீது எனக்கு இருந்த பக்தி பன்மடங்காகியது. என் தாய் மூலம் ஆறு ஜீவன்களின் வாழ்வைக் காத்து உயர்த்திய  அவரின் கருணையை நினைத்து நினைத்து கண்ணீர் வந்தது. அவரை காஞ்சி சென்று சந்தித்த பின் தான் என் மனம் அமைதி அடைந்தது. என் தாய் அந்த பவித்ர பாத்திரத்தை என்னிடம் தந்து இதை பாதுகாத்து போற்று – என்றும்  நம் தாகுர்ஜிக்கு நன்றி சொல்ல மறக்காதே என்றார். என் தாக்குருஜியின் கருணையாலும் கொடையாலும் ஆசியாலும் ஒவ்வொரு நாளும் எனக்கு மூவாயிரம் ரூபாய்க்கு குறையாமல் வியாபாரம் நடந்துக் கொண்டிருக்கிறது” எனக் கண்கள் கலங்க பக்தியோடு கூறினார் அந்த ஹோட்டல் உரிமையாளர்.  

                                  இந்த நிகழ்வைக் கேட்ட அடியேன் என் குரு நாதர் மஹா பெரியவாளின் சூட்சும வார்த்தைகளைக் கண்டு வியந்தேன். பட்டுப் போன தொழில் துளிர்த்து தழைக்கும் அதாவது பெருகும் என்ற ஆசி வார்த்தைகள். தன் சிறு கமண்டத்திலிருந்து வார்த்த நீர் எப்படி ஒன்றரை லிட்டர் பாத்திரத்தை நிரப்பியது. அங்கேயே குரு நாதர் அமுதசுரபியின் தத்துவத்தைக் காட்டி விட்டாரே. குரு நாதர் இப்படி ஒரு அமுத சுரபியை அப் பெண்ணுக்கு வழங்கினார் என்றால் அந்தத் தாய் எப்படிப்பட்ட குணவதியாக இருந்திருக்க வேண்டும். குரு நாதர் அவரைப் பொறுமைசாலி என்ற பொழுது அவள் பெருமைக் கொள்ளவில்லை. தன்னைத் தாழ்த்தி குருவை வாழ்த்தி வணங்கினாள். அவரின் அடக்கமும் நன்றியுமே அவரின் தூய மனதைக் காட்டுகிறது. ராசியில்லாதவள் என தூற்றிய மக்களின் வார்த்தைகளை பொய்ப்பிக்கும் விதமாக மஹா பெரியவா ஆசி கொடுத்த அமுத சுரபி ஒவ்வொரு நாளும் அவள் ஊற்ற ஊற்ற பொங்கிப் பெருகும் படி அல்லவா ஆசிக் கொடுத்தார். அந்தத் தாயோ கிடைத்த அமுத சுரபியை அந்த வறுமை நிலையிலும் துஷ்பிரயோகம் செய்யாது இது போதும் என்று கட்டுப்பாட்டுடன் வாழ்ந்தாள் என்றாள், மஹா பெரியவா அவளின் குணத்தைப் புரிந்து அல்லவா இப்படிபட்ட அமுத சுரபியை வழங்கியுள்ளார்.  அவள் தன் குடும்பப் பொறுப்பை முடிக்கவும் மற்றும் அவள் ஜீவிதக் காலத்தையும் தன் தீர்க்க தரிசனத்தில் அறிந்து  17 ஆண்டுகள் அந்த அமுதசுரபிக்கு பெலன் தந்தார். மஹா பெரியவா கொடுக்கும் ஆசியில் தான் எத்தனை  நுணுக்கங்கள்! பரிதாப நிலையிலிருந்த அந்தத் தாயின் நிலையை உயர்த்தி பல ஜீவன்களை தழைக்கச் செய்த மஹா பெரியவாளின் கருணை மனதில் கசிய கண்களில் கண்ணீர் துளிர்க்க விடை பெற்றேன்

.
பக்தர் குறைக் கேட்டு
அச்சத்தை  நீக்கி அருள காத்திருக்கின்றீரே
அக் கருணை எங்களைக் காத்தருளட்டும்!
  (ஸ்ரீ மும்பை விஜயம் ஸ்வாமிகள் அருளிய காஞ்சி 6-10-8 ம் பீடாதிபதியின் ஸ்தோத்ரமாலா விலிருந்து..)

மாமுனியே சரணம் சரணமையா!

நம: பார்வதீ பதயே என்பது ஏன்? - விளக்குகிறார் காஞ்சிபெரியவர்

நம: பார்வதீ பதயே என்பது ஏன்? - விளக்குகிறார் காஞ்சிபெரியவர்

சிவன் கோயில்களில் "நம:பார்வதீபதயே' என ஒருவர் சொல்ல, "ஹரஹர மகாதேவா' என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன?

பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். "பார்வதீபதி' என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு "மகாதேவன்' என்றும் பெயர்.

பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை "ஹர ஹர' என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு "ஞானசம்பந்தர்' என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக "ஹர ஹர' நாமத்தைச் சொல்லிக் கொண்டு போவதைப் பார்த்து, எல்லா ஜனங்களும் "அரோஹரா' என்று கோஷம் போட்டார்கள். அந்த கோஷம் கேட்டதும், உலகத்தில் இருந்த கெட்டதெல்லாம் உடனடியாகக் காணாமல் ஓடிப்போய் விட்டது.

வையத்தில் அதாவது உலகத்தில் கஷ்டமே இல்லாமல் போனது. "என்றைக்கும் இதே மாதிரி ஹர ஹர சப்தம் எழுப்பிக் கொண்டே இருக்கட்டும். அதனால், உலகத்தின் கஷ்டங்கள் எல்லாம் போகட்டும்,'' என்று சம்பந்தக் குழந்தை தேவாரம் பாடிற்று.

""அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே'' அரன் என்றால் ஹரன். ஹரன் என்றால் சிவன்.

இப்போது நான் (பெரியவர்) ""நம: பார்வதீபதயே!'' என்று சொல்வேன். உடனே நீங்கள் அம்மையான பார்வதியையும் அவர் பதியான நம் அப்பா பரமசிவனையும் நினைத்துக் கொண்டு அன்றைக்கு அந்தக் குழந்தை சொன்ன மாதிரியே பக்தியோடு ""ஹர ஹர மகாதேவா'' என்று சொல்ல வேண்டும். நம: பார்வதீ பதயே!

.............ஒன்னும் கேட்கல....மனசுக்குள்ளேயே சொல்லிட்டேன் என சொல்லாதிங்க வெட்கப்படம நல்ல வாய்விட்டு சொல்லனும்...

இப்ப மறுபடியும்:
நம:பார்வதீ பதயே!

 ""ஹர ஹர மகாதேவா''

ம்...இப்படி வாய்விட்டு சொல்லி எல்லோரும் ஷேமம இருக்கனும்.

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்.

ஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து
விட்ட கடவுள்,
இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார்.

ஒரு நாள், இரு நாள் அல்ல.

தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.

இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்.

இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.

அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.

சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும்.

அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும்.

இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.

“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை.

ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

அதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள்.

ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள்.

அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள்.

அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்.

கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.

கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு.

தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.

“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.

“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.

அந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே?” என்றது.

“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.

ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்.

இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.

“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”……
கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.  

நந்திகேஸ்வரர்.

சிவபெருமானின் இருப்பிடமான கயிலாயத்தில் வாயிற்காப்பாளனாகவும், பூதகணங்களின் தலைவனாகவும் இருப்பவர் நந்திகேஸ்வரர். இறைவன் சிவபெருமானைச் சந்திக்க வருபவர்கள் அனைவரும் முதலில் தன்னை வணங்கி, தன்னிடம் அனுமதி பெற்ற பின்புதான் இறைவனைச் சந்திக்க முடிகிறது என்று இவருக்குள் தோன்றிய எண்ணம், பின்னர் தற்பெருமையாக மாறியது.

தற்பெருமையின் பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் நந்தியை, அதிலிருந்து விடுவித்து அவருக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைத்த சிவபெருமான், ஒருநாள் நந்தியிடம் ஒரு மலரைக் கொடுத்து, மலர் வாடுவதற்கு முன்பாக விஷ்ணுவிடம் கொடுத்துவிட்டுத் திரும்பும்படி சொல்லி அனுப்பி வைத்தார்.

நந்தியும் சிவபெருமான் கொடுத்த மலரைக் கையில் எடுத்துக் கொண்டு வைகுண்டம் சென்றார். அங்கு அவர், வாயிற்காப்பாளர்களாக இருந்த துவார பாலகர் களான ஜயன், விஜயன் ஆகிய இருவரிடமும் அனுமதி பெறாமல் உள்ளே செல்ல முயன்றார். அதைக் கண்ட வாயிற்காப்பாளர்கள் அவரை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.

தன்னை வாயிலிலேயே தடுத்து நிறுத்தியதைக் கண்டு கோபமடைந்த நந்தி, “வாயிற்காப்பாளர்களே, இறைவன் சிவபெருமான் கொடுத்தனுப்பிய மலரைக் கொண்டு வந்த என்னை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தித் தவறு செய்கிறீர்கள்” என்று சொல்லிச் சத்தம் போட்டார்.

“நந்தியே, ஏன் சத்தம் போடுகிறாய், நீயும் எங்களைப் போன்று வாயிற்காப்பாளன்தானே, முக்கியமானவர் களைச் சந்திப்பதற்கு முன்பு, அங்கிருக்கும் வாயிற்காவலர்களிடம் அனுமதி பெற்றுச் செல்ல வேண்டுமென்பது உனக்குத் தெரியாதா? தவறை நீ செய்து விட்டு, எங்களைத் தவறு செய்ததாகச் சொல்கிறாயே?” என்று அவர்களும் சத்தம் போட்டனர்.

அவர்கள் சொன்னதைக் கேட்டு மேலும் கோபமடைந்த நந்தி, “நான் கயிலாயத்தின் வாயிற்காப்பாளன் மட்டுமில்லை, பூதகணங்களின் தலைவனாகவும் இருப்பவன். நீங்கள் இருவரும் எனக்கு இணையானவர்களில்லை. மேலும், என்னைத் தடுக்கும் தகுதி உங்களிருவருக்குமே இல்லை” என்று சத்தமாகப் பேசினார்.

வாயிற்காப்பாளர்கள் இருவரும், “நந்தியே, இறைவன் விஷ்ணு உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார். நீ வீணாகச் சத்தமிட்டு அவருடைய உறக்கத்தைக் கலைத்து விடாதே” என்று சொன்னார்கள்.

அவர்கள் சொன்னதைக் கேட்ட நந்தி, “அவருடைய உறக்கம் கலைந்தால் கலையட்டும், நான் அவரிடமே நியாயம் கேட்கிறேன். உங்களிருவரிடமும் பேசி எந்தப் பயனுமில்லை” என்று மேலும் சத்தமாகப் பேசினார்.

வெளியில் நடந்த சத்தத்தைக் கேட்டு விழித்த விஷ்ணு, “வாயிற்காப்பாளர்களே, நந்தியை உள்ளே அனுப்பி வையுங்கள்” என்று சொன்னார். விஷ்ணு சொன்னதைக் கேட்டதும், நந்தி அவர்களிருவரையும் மதிக்காமல் உள்ளே சென்று விட்டார். அவர் அங்கிருந்த விஷ்ணுவை வணங்கி, சிவபெருமான் கொடுத்தனுப்பிய மலரை அவரிடம் கொடுத்தார்.

அதைப் பெற்றுக் கொண்ட விஷ்ணு அவரைப் பார்த்துச் சிரித்தபடி, “நந்தியே, மலர் கொடுத்தனுப்பிய இறைவனுக்கு என் நன்றியைச் சொல்லிவிடு” என்றார். நந்தியும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்.

வெளியில் வந்த நந்தி, விஷ்ணுவைக் காண வாயிற்காப்பாளர்கள் அனுமதியில்லாமலே தான் உள்ளே சென்று வந்த பெருமையுடன், அங்கிருந்த வாயிற்காப்பாளர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட நினைத்தார்.

அதைக் கண்ட வாயிற்காப்பாளர்கள் இருவரும் கோபமடைந்து, “நந்தியே, நீ ஒரு வாயிற்காப்பாளனாக இருந்தும், வாயிற்காப்பாளர் அனுமதியின்றி உள்ளே சென்று தவறு செய்ததுமில்லாமல், எங்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கவும் செய்கிறாய். உன்னுடைய இந்தத் தவறுக்குத் தண்டனையாக, உன் உடல் முழுவதும் வெப்பமடைந்து, அதனால் ஏற்படும் எரிச்சலில் பெரும் துன்பமடைவாய்” என்று சாபம் கொடுத்தனர்.

அவர்கள் கொடுத்த சாபத்தைக் கேட்ட நந்தி, “பூத கணங்களின் தலைவனான எனக்குச் சாபம் கொடுக்கும் தகுதியே உங்களுக்கு இல்லை, எனக்கு நீங்கள் சாபம் தருவது வேடிக்கையாக இருக்கிறது” என்று சொல்லிப் பலமாகச் சிரித்தார்.

அவர் சிரிப்பதைக் கண்ட வாயிற்காப்பாளர்கள் இருவரும், “நந்தியே, கயிலாயத்தில் வாயிற்காப்பாளனாக இருந்த உன்னிடம் அனுமதி பெறாமல், உள்ளே செல்ல முயன்ற ராவணனுக்குத் தண்டனையாக அவனது நாடு, ஒரு குரங்கால் அழிந்து போகும் என்று சாபம் கொடுத்த நீ, அதையெல்லாம் மறந்து, அதே தவறைச் செய்திருக்கிறாய். எனவே எங்களின் சாபம் உனக்கும் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்கும்” என்றனர்.

அதைக் கேட்ட நந்தி சிரித்தபடியே, “வாயிற்காப்பாளர்களே, நீங்கள் கொடுத்த சாபம் என்னை ஒன்றும் செய்யாது” என்று சொல்லியபடி அங்கிருந்து வெளியேறினார். அவர் வைகுண்டத்திலிருந்து வெளியேறிய நிலையில் வைகுண்ட வாயிற்காப்பாளர்களான துவாரபாலகர்கள் கொடுத்த சாபம் அவரை வந்தடைந்தது. அவர் உடல் முழுவதும் வெப்பம் பரவி எரிச்சல் ஏற்பட்டது. அந்த எரிச்சலால் அவர் பெரும் துன்பமடைந்தார்.

கயிலாயம் சென்ற அவர் சிவபெருமானை வணங்கி, விஷ்ணுவிடம் தான் மலரை வாடுவதற்கு முன்பாகக் கொடுத்து வந்த தகவலைச் சொன்னார். பின்னர் அவர் சிவபெருமானிடம், “இறைவா, நான் வைகுண்டம் சென்ற போது, அங்கிருந்த துவாரபாலகர்கள் என்னை மதிக்கவும் இல்லை, உள்ளே செல்ல அனுமதிக்கவும் இல்லை. அவர்களைக் கண்டித்த எனக்கு அவர்கள், உடலில் எரிச்சல் ஏற்பட்டுத் துன்பமடைவாய் என்று சாபம் கொடுத்து விட்டனர். அந்தச் சாபத்திலிருந்து தாங்கள் என்னை உடனே விடுவித்தருள வேண்டும்” என்று வேண்டினார்.

அதைக் கேட்ட சிவபெருமான், “கயிலாயத்திற்கு என்னைத் தேடி வரும் அனைவரும் உன்னை வணங்கி, உன்னிடம் அனுமதி பெற்ற பின்பே என்னைச் சந்திக்க வேண்டும் என்று நினைக்கும் நீ, வைகுண்டத்தில் வாயிற்காப்பாளர்களாக இருப்பவர்களிடம் அனுமதி பெற்றுத்தானே சென்றிருக்க வேண்டும். தவறு செய்த உனக்கு அவர்கள் கொடுத்த சாபம் சரியானதுதான்” என்றார்.

உடனே நந்தி, “இறைவா, நீங்களே இப்படிச் சொல்லலாமா? அந்தச் சாபத்திலிருந்து என்னை விடுவித்து, என்னுடைய துன்பத்தைப் போக்கி அருளுங்கள்” என்று வேண்டினார்.

அதைக் கேட்ட சிவபெருமான், “உனக்குச் சாபம் கொடுத்தது வைகுண்ட வாயிற்காப்பாளர்கள் என்று நினைக்காதே, வாயிற்காப்பாளர்கள் வழியாக உன்னுடைய தற்பெருமைக்கு விஷ்ணு கொடுத்த தண்டனை அது. எனவே பூலோகம் சென்று விஷ்ணுவை வழிபட்டு, அந்தச் சாபத்திலிருந்து விடுபட முயற்சி செய்” என்றார்.

இறைவன் சொன்னதைக் கேட்ட நந்தி, அவரிடம் விடைபெற்றுப் பூலோகம் சென்றார்.

விமோசனம்

பூலோகம் வந்த நந்தி தன்னுடைய உடலில் ஏற்பட்ட கடுமையான எரிச்சலால் பெரும் துன்பமடைந்தார். அந்தத் துன்பத்திலிருந்து விடுபடுவதற்காக விஷ்ணு வழிபாட்டைச் செய்ய நினைத்து ஒரு இடத்தில் போய் அமர்ந்தார். ஆனால், அவர் அந்த இடத்தில் அமர முடியாதபடி அவருடைய உடலின் எரிச்சல் முன்பிருந்ததை விட அதிகமாகத் தொடங்கியது.

உடல் எரிச்சல் தந்த துன்பத்தைத் தாங்க முடியாத அவர், அங்கிருந்து எழுந்து ஓடத் தொடங்கினார். ஓடிக் கொண்டேயிருந்த நிலையில், அவரின் உடல் எரிச்சல் சிறிது குறைந்தது. அதனால், அவர் எங்கும் நிற்காமல் ஓடிக் கொண்டேயிருந்தார். பல நாட்களாக ஓடிக் கொண்டே இருந்த அவர், வழியிலிருந்த செண்பகாரண்யம் எனும் வனப்பகுதிக்குள் நுழைந்தார்.

அந்தக் காட்டுப் பகுதிக்குள் நுழைந்தவுடன் அவரது உடலிலிருந்த எரிச்சல் பெருமளவு குறைந்து போனது. சற்று நேரம் இளைப்பாறிய அவர், மெதுவாக நடந்து சென்றார். அங்கே விஷ்ணு கோவில் ஒன்று இருப்பது அவருக்குத் தெரிந்தது.

இறைவன் விஷ்ணுவின் திருவடிகளில் அமர்ந்திருந்த மகாலட்சுமி, இறைவன் மார்பில் வசிக்க வேண்டும் என்று விரும்பிய நிலையில், அந்த இடத்தைப் பெறுவதற்காக இறைவன் விஷ்ணுவை வேண்டித் தவமிருந்து தான் விரும்பிய இடத்தைப் பெற்ற கோவில் அது.  

அந்தக் கோவிலைக் கண்ட நந்தி, அங்கேயே தனது வழிபாட்டைச் செய்ய முடிவு செய்தார். அந்தக் கோவிலைச் சுற்றிலும் இருந்த செடி, கொடிகளைஎல்லாம் அகற்றி, அந்த இடம் முழுவதையும் சுத்தம் செய்தார். பிறகு, கோவிலுக்கருகிலிருந்த குளத்தில்  நீராடினார். அந்தக் குளத்திலிருந்து, நீர் கொண்டு வந்து, அங்கிருந்த விஷ்ணு சிலையைச் சுத்தம் செய்தார். அந்தக் காட்டுப் பகுதியில் மலர்ந்து கிடந்த செண்பக மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து சிலையினை அலங்கரித்துத் தினமும் வழிபாடு செய்து வந்தார்.

அவருடைய தொடர் வழிபாட்டில் மகிழ்ந்த விஷ்ணு ஒருநாள், அவர் முன்பாகத் தோன்றினார். அவர் நந்தியைப் பார்த்து, “நந்தியே, நீ மனம் நிறைந்து செய்த வழிபாட்டால் என் மனம் குளிர்ந்தது போல், என் வாயிற்காப்பாளர்கள் உனக்களித்த சாபம் நீங்கி, இனி உன் உடலும் குளிர்ச்சியடையும்” என்றார்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த நந்தி அவரை வணங்கினார். பின்னர் அவர் விஷ்ணுவிடம், “சுவாமி, நான் சாப விமோசனம் பெற்ற இந்தத் தலம் இனி என்னை நினைவூட்டும் விதமாக அமைந்து சிறப்படைய வேண்டும்” என்று வேண்டினார். விஷ்ணுவும், “நந்தியே, நீ சாப விமோசனம் பெற்ற இத்தலம் இருக்குமிடம் இனி, நந்திபுரம் என்று உன் பெயரையும் சேர்த்து அழைக்கப்பட்டுச் சிறப்படையும்” என்றார்.

அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த நந்தி விஷ்ணுவை வணங்கி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கயிலாயம் சென்றார்.

தனது சிறு செயல்பாட்டைக் கூடப் பெருமையாகப் பேசிக் கொள்ளும் பலர், அதே செயலை அடுத்தவர்கள் செய்யும் போது, அதைச் சாதாரணமாக மதிப்பிடுகின்றனர். இந்தத் தற்பெருமை கொண்டவர்களுக்குத் துன்பமே வந்து சேரும் என்பதை உணர்த்துவதாக நந்தி பெற்ற சாபமும், விமோசனமும் உணர்த்துகின்றன.

சாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!..

சாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!..
1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
8) கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்

அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.


1) பெண் சாபம் :
இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.
பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.


2) பிரேத சாபம் :
இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.
பிரேத சாபத்தால் ஆயுள் குறையும

்.
3) பிரம்ம சாபம்:
நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,
இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.
பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும

்.
4) சர்ப்ப சாபம்:
பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,
சர்ப்ப சாபம்
உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.


5) பித்ரு சாபம்:
முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப
வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம்
பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.


6) கோ சாபம்:
பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.
இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.


7) பூமி சாபம்:
ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.
பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.


8) கங்கா சாபம்:
பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.


9) விருட்ச சாபம்:
பச்சை மரத்தை
வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.
விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.


10) தேவ சாபம்:
தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.


11) ரிஷி சாபம்:
இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்

.
12) முனி சாபம்:
எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.
முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.


13) குலதெய்வ சாபம் :
இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.
குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.
ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.
தீயவர்களை அழிக்கும்.
எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.
ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும். அன்பான இனிய நற்காலைபொழூது வணக்கமும் வாழ்த்துக்களும் நட்பே.