Saturday, November 30, 2013

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்..!

வலம் புரிச்சங்கு பூஜை சிறப்பும், பலனும்..!
1.ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ëந்து இருக்கும்.
2. கடலில் உள்ள ஒரு வகை நத்தையின் கழிவு மூலம் ஓடு போன்று உருவாகி வருவதே சங்கு என்றாலும் குபேரன் அருளைப் பெற்றுத் தருவது.
3. வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மகத்திதோஷம் இருப்பின் போய்விடும். இதையே தர்ம சாஸ்திரம். ``சங்க மத்யே ஸ்திதம் தோயம் ப்ராமிதம் சங்கரோ ஸ்ரீ! அங்க லஷணம் மனுஷ்யானாம் ப்ரம்மஹத்யாயுதம் தாகத்'' என்று விளக்குகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார்.
4. நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் சங்கு நாதத்தால் ஆழ்வார்கள் பக்திப் பரவசம் அடைவதை, பேதாண்டப் பெதுவி என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றனர்.
5. வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் துளசி தீர்த்தத்தை சங்கில் இட்டு பிரதி வெள்ளி தெளித்து வர தோஷம் விலகி நலம் உண்டாகும்.
6. செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய் தோறும் வலம்புரிச்சங்கில் பால் வைத்து அங்காரக பூஜை செய்ய தோஷம் விலகி திருமணம் நடந்து விடும்.
7. அதிகக் கடன் வாங்கியவர்கள் பௌர்ணமி தோறும் சங்குக்கு குங்கும், அர்ச்சனை செய்து வர கண்ணுக்குத் தெரியாமல் கடன் தீரும். 16-வலம்புரிச் சங்கு கோலமிட்டு நடுவில் தீபம் ஏற்றிட கடன் தீரும்.
8.சுத்தமான உண்மையான வலம்புரிச்சங்கு பூஜிக்கப்படும் வீட்டில் பில்லி சூன்யங்கள், ஏவல்கள் நெருங்காது. ஓடிவிடும்.
9. ஒரு தெய்வத்துக்கு சங்கால் அபிஷேகம் செய்வதால் 10 பங்கு அபிஷேகம் செய்த பலனைப் பெறுகிறோம்.
10. பிறந்த குழந்தைக்கு ஜுரம் வந்தால் சங்கில் நீர்விட்டு உத்ராட்சம் இட்டு அது ஊறிய நீரை மட்டும் ஊட்டி விட ஜுரம், தோஷங்கள் அனைத்தும் விலகும்.
11. பூஜை அறையில் ஒரு சிறு தட்டில் அரிசி போட்டு அதில் சங்கை வைத்து பூ, பொட்டிட்டு வணங்கி வருவதால் உணவுக்குப்பஞ்சமே வராது

" காலை கடம்பர் ,மதியச் சொக்கர் (ஐயர் மலை) மாலை ஈங்கோயார் "
என்பதாய் முன்று ஸ்தங்களிலும் எந்நாளிலும் குறிப்பாய் .கார்த்திகை மாத ஞாயற்றுக்கிழமைகளில் பக்திப் பூர்வமாய் ஒரே தினத்தில் ஆற்ற வேண்டிய மூன்று தல தரிசன வழிபாட்டு முறை ஒன்றுண்டு.
***திருச்சி-கரூர் இடையில் குளித்தலையும் , முசிறி அருகே ஈங்கோய் மலையும் உள்ளன., மிகவும் சக்தி வாய்ந்த பாதயாத்திரை இது.
***முந்தைய யுகமொன்றில் முத்கல மாமுனி எனும் உத்தம மஹரிஷி அகஸ்தியரின் அறிவுரைப்படி இதனை நித்தய வழிபாடாய் பன்னெடுங்காலம் ஆற்றி வந்தார் .
• முத்கல கோத்திரம் எனும் வகை தற்போதும் உண்டு. முத்கல புராணம் என்பதாய் பிரபஞ்சத்திலேயே ஒரு மஹரிஷியின் பெயரிலேயே ஒரு புராணம் அமைந்திருக்கும் ஒரே மாமுனியே முத்கலர்.
-- ஜுன்2012 ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து தொகுத்தது
===============================================
1) காலை (கடம்பவனேஸ்வரர் ) இருப்பிடம் :- கரூரில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் குளித்தலை இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்று விடலாம்.
2) மதியம் (ரத்தினகிரீஸ்வரர்) இருப்பிடம் - கரூர் - திருச்சி மார்க்கத்தில் உள்ள குளித்தலை சென்று அங்கிருந்து மணப்பாறை செல்லும் வழியில் அய்யர் மலை உள்ளது.
நகரின் மத்தியில் கோயில் . திருவாட்போக்கி(ஐயர்மலை) ஐவர் மலை, சிவாயமலை, ரத்தினகிரி எனப் பல பெயர்களை தாங்கியிருக்கும் சக்தி வாயிந்த தலம் ., கிரிவலம் வருதல் மிகச் சிறப்பு
3) மாலை (ஈங்கோய் மலை) இருப்பிடம் :- முசிறி சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள இவ்வூருக்கு டவுன்பஸ்சில் செல்லலாம். மாலை 6மணி வரை தாம் திறந்திருக்கும்.,
குறிப்பு : கடம்பர்-ஐயர்மலை நடந்து விடலாம் . ஈங்கோய் சற்று தொலைவில் உள்ளது..,சென்ற வருடம் யாம் முயற்ச்சித்து பார்த்தோம் .. காலை 6மணிக்கு கடம்பர் தலத்தில் தரிசனம் செய்து விட்டு ஐயர் மலை (ஏறி) தரிசனம் செய்து கிரிவலம், வந்து பின்பு மீண்டும் குளித்தலை நோக்கி பாதி தூரம் வருவதற்குள் மணி 4ஆகி விட்ட்து.. பின்பு அங்கிருந்து பேருந்தில் ஈங்கோய் சென்று வழிபட்டோம் .. அவரவரால் முடிந்தவரை முயறச்சி செய்து பார்க்கலாம்.

Sunday, November 24, 2013

திருவாசகம் தந்தருளிய மாணிக்கவாசகப் பெருமானின் பெருமை

திருவாசகம் தந்தருளிய மாணிக்கவாசகப் பெருமானின் பெருமையை, அவரின் கருணையை உலகம் இன்னும் முழுமையாக உணரவில்லை. திருவாசகத்திற்கும் இதுவரை யாரும் முறையான உரை எழுத முடியவில்லை,காரணம்,இறைவனிடம் உருகி உருகி நெருங்கும்பொது அவன் அருளால் அது புலப்படும்.அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்பதும் மாணிக்க வாசகப்பெருமானின் அனுபவ வாக்காகும்.மரணமிலாப் பெருவாழ்வு அடைய திறவுகோல் திருவாசகமே..

திருப்பெரும்துறை என்னும் ஆவுடையார்கோயிலில் எம்பெருமான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர், மனித உருவில் வந்து மாணிக்கவாசகப் பெருமானுக்கு காட்சியருளி மெய்ப்பொருள் உணர்த்தி ஆட்கொண்டருளினார்கள். குருவாய் இறைவனே வந்து அருளியதால் இதுவே உலகின் குரு தலமாகும்.

குருவின் திருவருள் பெற்றின்புற, பல பிறவிகளில் ஏற்பட்ட குருவின் சாபங்கள் நீங்கி வாழ்வு நலம் பெற, ,நவகோள்களின் தோஷங்கள் நீங்கிட, குறிப்பாக குரு கிரகத்தின் தோஷங்கள் நீங்கி,உங்கள் வாழ்வு சிறக்க, சமயம் வாய்க்கும்போதெல்லாம் இவ்வாலயம் சென்று பக்தியோடு அருள்மிகு ஆத்மநாத சுவாமிகளையும், சத்குரு மாணிக்கவாசக பெருமானையும் பக்தியோடு,மனமுருகி வழிபட்டு வாருங்கள்.வாழ்வில் வளம் சேர்வதை அனுபவத்தில் உணருங்கள்.

புதுக்கோட்டை அல்லது தஞ்சாவூரிலிருந்து, அறந்தாங்கி மார்க்கமாக ஆவுடையார்கோவில் செல்லலாம். புதுக்கோட்டையிலிருந்து 45 கி.மீ தூரம்தான்.

நன்றி: தர்மலிங்கம் அடிகளார்

சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!

சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்!

*தேங்காய், மங்களகரத்தின் அடையாளச் சின்னம் மட்டுமல்ல: மருத்துவத்தின் அடையாளச் சின்னமும்கூட என்கிறது சித்த மருத்தவம். இந்தியாவுக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னை வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வயது 80 ஆண்டுகள் முதல் 200 ஆண்டுகள் வரை. விதை வளர்த்து மரமான பின் விதைத்தவனுக்கு அள்ளி அள்ளிக் கொடுக்கிறது என்பதால் இதை “தென்னம்பிள்ளை” என்று அழைக்கிறார்கள்.


*புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.தேங்காய் உள்பட தென்னை மரத்தின் வெவ்வேறு பாகங்களின் மருத்துவக் குணங்கள் என்ன?

*தேங்காய்ப் பால் உடல் வலிமைக்கு நல்லது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.

*மாதவிடாய் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கிற்கு, தென்னை மரத்தின் வேரிலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து. வெள்ளை படுதலுக்கு தென்னம் பூ மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில் (வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.

*மூல முளை, ரத்த மூலம் போன்றவற்றுக்கு தென்னங்குருத்திலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு.தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.

தைலங்கள்:


*தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

*எளிதில் ஜீரணமாகும் : தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.பெரு வயிறுக்காரர்களுக்கு (வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.

*வயிற்றுப்புண்கள் : தேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

பாத்திரங்களாலும் உண்டு பலன்

பாத்திரங்களாலும் உண்டு பலன்

உணவு, நீர், தானியங்கள், தயிர், மோர், நெய், சாறு, எண்ணெய் போன்ற பொருள்களைச் சேமிக்கவும், சமைக்கவும் பாத்திரங்கள் தேவைப்படுகின்றன.
பயன்படுத்தப்பட்டு வருகின்ற பாத்திரங்கள் காலத்துக்கும் நாகரிக வளர்ச்சிக்கும் ஏற்றவாறு மாறிக்கொண்டே வந்துள்ளன.
உலோகங்கள் கண்டறியபட்டாத காலத்தில் மண், கல், பீங்கான், மரப்பட்டை, மூங்கில், பரங்கி, சுரக்காய், தேங்காய், திருவோடு, இலைகள் போன்றவை பாத்திரங்களாகப் பயன்பட்டன.
பின்னர் உலோகங்கள் கண்டறியப்பட்டன. தங்கம், வெள்ளி, பித்தளை, அலுமனியம், இரும்பு, வெண்கலம், எவர்சில்வர் முதலியவை பயன்படுத்தப்பட்டன. தற்போது, காகிதம், பிளாஸ்டிக் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
எளிதாகக் கிடைக்க வேண்டும்; பயன்படுத்தும்போது இலகுவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, புத்தம்புது பாண்டங்கள் தோன்றின.
செல்வந்தர்களும், மன்னர் போன்றவர்களும் விலை மதிப்பை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களைச் சேர்த்துக்¢கொண்டனர்.
உதாரணமாக, தங்கம், வெற்றி பாத்திரங்கள் ஏழை எளிய மக்களால் பயன்படுத்த முடிவதில்லை. வருவாய் குறைந்தவர்கள், மட்பாண்டமோ, அலுமினிய பாத்திரமோ பயன்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
பாத்திரங்களைப் பயன்படுத்தும் முன் அவற்றினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கருத்திற் கொண்டால், உடல் நலத்துக்கு ஏற்றதாக இருக்கும்.
பயன்கருதாது பயன்படுத்துவோர் ஏராளம். மாவீரன் நெப்போலியன், தான் உணவு உண்பதற்காக அலுமினியத்தினால் செய்யப்பட்டு தட்டு வைத்திருந்தாராம். அன்றைய காலத்தில் அலுமினியம் விலை மதிப்புடையதாக இருந்திருக்கிறது. இன்றைக்கு அது ஏழைகளின் பாத்திரமாக ஆகியிருக்கிறது.
பாத்திரங்களினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளைக் குறிப்பிட வரலாற்று நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடலாம்.
மாவீரன் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தார். அப்போரில், ஈடுபட்ட போர் வீரர்கள் தீராத வயிற்று வலியினால் அவதியுற்றனர். ஆனால் போர்ப் படைத்தளபதிகள் எவ்வித நோயும் இல்லாமல் நலமுடனே இருந்தார்கள்.
அதற்குக் காரணம், படைவீரர்களெல்லாம் நீர் அருந்துவதற்காக வெள்ளீயத்தினாலான குவளைகளைப் பயன்படுத்தினர். படைத்தளபதிகளோ வெள்ளியினாலான குவளைகளைப் பயன்படுத்தினர்.
வெள்ளிக் குவளையைப் பயன்படுத்தியவர்களுக்கு எந்த நோயுமில்லை. வெள்ளீயத்தைப் பயன்படுத்தியவர்கள் வயிற்று வலியால் அவதியுற்றனர்.
படைவீரர்களுக்கு ஏற்பட்ட வயிற்று நோயினால், போரிட போதிய வீரர்கள் இல்லாமல் போயினர். அதனால், மாவீரர் அலெக்சாண்டர் தன்னாட்டுக்குத் திரும்ப நேர்ந்தது.
ஆகவே, பாண்டங்களைப் பயன்படுத்துமுன் அதனால் உண்டாகக்கூடிய நன்மை தீமைகளை அறிந்து கொள்ள வேண்டும்.
அறிவியல் ஆய்வின்படி, வெள்ளியில் நோய்களை உண்டாகக்கூடிய 650 நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது. மேலும் ஒரு லிட்டர் தண்ணீரைச் சுத்தஞ்செய்ய 0.1 கிராம் வெள்ளியே போதுமானது. தண்ணீரிலுள்ள நுண்கிருமிகளை வெள்ளி தூய்மைப் படுத்துவதால், பாலை வெள்ளிப் பாத்திரத்திலிட்டு அருந்துவதால் பாலின் மூலம் பரவும் நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
நோய்க்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட வெள்ளியில் பாத்திரங்களைச் செய்துகொண்டு, அதில் உணவுகளை உட்கொண்டால் பெரும்பகுதி நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து விடுபடலாம்.
வெள்ளி விற்கும் விலையில் வெள்ளிப் பாத்திரங்களை எப்படிப் பயன்படுத்துவது என்கிறீர்களா? விடுங்கள் கவலையை, அடுத்ததைப் பார்க்கலாம்.
செம்பு பாத்திரம்
தமிழர் நாகரிகம் செம்பு நாகரிகத்தில் தொடங்கியதாகக் கூறுவர். செம்பு அதிக அளவில் கிடைக்கப் பெற்றதால் தேவையான கருவிகளும் பாத்திரங்களும் செம்பினால் செய்து கொண்டனர்.
சிந்து, கங்கைச் சமவெளிகளில் வாழ்ந்திருந்த பழந்திராவிட மக்கள் அறுவை மருத்துவத்துக்காகச் செப்புக் கத்திகளைப் பய்னபடுத்தியுள்ளனர். அறுவை மருத்துவத்துக்காகச் செம்பைப் பயன்படுத்துவதனால், பக்க விளைவுகள் ஏதும் ஏற்படாது என்று இன்றைய அறிவியலார்கள் கண்டறிந்துள்ளனர்.
தண்ணீரைச் சேமித்து வைப்பதற்காகவும் செம்புப் பாத்திரங்களை அதிக அளவில் பயன்படுத்தியுள்ளார்கள்.
சித்தர்களும், முனிவர்களும் பயன்படுத்தி வந்த கமண்டலங்கள் செம்பினால் ஆனவை என்பது குறிப்பிடத்தது.
இயற்கையாகவே செம்பினாலான பாத்திரங்களில் நீர் வைத்திருந்தால், நீரிலுள்ள தீய நுண்ணுயிர்கள் (விவீநீக்ஷீஷீ ஷீக்ஷீரீணீஸீவீsனீs) அழிந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
செம்புப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், ரத்தத்திலுள்ள பித்த நோய்கள், சந்தி, கபம், பிலீகம், மந்தம், வெண்மேகம், அழலை, சூதக நோய், புண், பிரந்தி, சுவாசநோய்கள், கிருமி தாதுநட்டம், கண் நோய் ஆகியவை நீங்கிவிடும் என்பது தெரிகிறது.
உலக நல நிறுவனம் (கீபிளி) குடிநீரைப் பற்றிக்கூறும் செய்தியில், குடிநீரில் கோலிஃபோர்ம் பாக்டீரியா உள்ள நீரைப் பருகினால் டைபாஃய்ட் சுரமும், வயிற்றுப் போக்கு நோய்களும் ஏற்படும் என்று தெரிவித்திருக்கிறது. ஆனால் செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் கோலிஃபார்ம் பாக்டிரியா முற்றிலும் அழிந்துவிடுகிறது.
10 தூக்கம்

உடல் நலமும் மன நலமும் நன்றாக இருக்க தூக்கம் ஒரு கருவி. அளவாக இருந்தால் அமைதி. அளவு மிகுந்தாலும் அமைதி. தூக்கம் கெட்டால் துக்கம் என்றெல்லாம் கூறக்கேட்கின்றோம்.
சான்றோர்கள், துறவிகள், வினையாளர்கள் தூக்கத்தைக் குறைத்துக்கொண்டே தாங்களாற்ற வேண்டிய பணியைக் கடமையைச் செய்வார்கள். கடமைக்காகவே வாழந்து வருகின்றவர்கள் உடல்சுகத்தை இழந்து புகழ் பெறுகின்றார்கள். அது எல்லோராலும் இயலுவதில்லை.
விதியாவது! மண்ணாவது! என்று, துண்டை விரித்துப் போட்டுக் கொண்டு படுக்கின்றவர்களுக்கும், படுத்த அடுத்த நிமிடத்தில் 'அம்மனோ சாமியோ! என்று ஆனந்த ராகத்தில் இசையமைத்து குறட்டை விடுபவர்களுக்கும் நோய் நீங்கும். எந்த வித நோயும் வராது, உடலும் நலமாக இருக்கும்.
தூங்குவதற்கான என்பது, சாலை விதி போல, கண்ணை விழித்துக் கொண்டு செயலாற்றுவதல்ல. படுக்கும்போது, எந்தத் திசையில் தலை வைக்க வேண்டும், கையை காலை எப்படி வைக்க வேண்டும். எப்படி படுக்க வேண்டும் என்றெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒருவன் தான் பிறந்த ஊரில் இருக்கும் போது எப்படிச் சுதந்திரமாக மகிழச்சியாக இருப்பானோ, அத்தகைய மகிழச்சியைத் தருகிறது, கிழக்கு.
வேலை செய்வதற்காகவோ வேறு காரணத்துக்காகவோ பிறந்த ஊரை வட்டு வேறு ஒரு ஊருக்கு வந்து வாழக்கை நடத்துகின்றவனுக்குக் கிடைக்கக் கூடிய மகிழச்சியைத் தருவது, மேற்கு.
பிறந்த ஊர், குடிபெயர்ந்த ஊர் ஆகிய இரண்டையும் விட்டுவிட்டு, மனைவியின் ஊராகிய மாமியார் ஊரில் வந்து தங்கும்போது மாப்பிள்ளைக்குக்கிடைக்கும் சுகத்தைத் தருகிறது, தெற்கு.
எவர் வீட்டுக்குப் போனாலும் அவர் வீட்டுக்குப் போக மாட்டேன் என்று சொல்வதைப் போல, எந்தத் திசையில் படுத்தாலும் படுக்கலாம்! வடக்குத் திசையில் மட்டும்தலைவைத்துப் படுக்கக் கூடாது.
பூமியின் வடமுனையிலிருந்து தென்முனைக்கு கதிரிழுப்பு விசை இயங்கிக் கொண்டிருக்கும. உறங்கும்போது வடக்கில் தலை இருந்தால், மூளைப் பகுதி அந்தக் கதிரிழுப்பு விசையால் ஓய்வு பெறுவது குறைந்துவிடும். எனவேதான் வடக்குப் பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்கிறார்கள்.
குறிப்பாக, நோயாளிகள் தங்களுக்கு வந்துள்ள நோய்கள் விரைவாகக் குணமாக வேண்டும் என்பதற்காகவும் திசைகளைப் பற்றி தெரிவித்துள்ளார்கள்.
கிழக்கு சிறந்தது; மேற்கு பரவாயில்லை; தெற்கு ஆயுள் பெருகும்; வடக்கு ஆகாது என்று மருத்துவம் நூலார் கூறியுள்ளனர்.
நோயின்றி இருப்பதுடன் சுகமாகவும் நலமாகவும் இருக்க விரும்பின்றவர்கள் தங்களுக்குப் பிடித்த திசையில் படுக்கலாம்.
தூங்குவதனால் உடம்பில் ஏற்பட்ட சோர்வும், வலியும் நீங்கி உடல் வளர்ச்சி பெறும். வலுவுண்டாகும். ஆகையால், நேரந்தவறாமல் தூங்க வேண்டும்.
தூங்குவதற்கு ஏற்ற படுக்கையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 'இலவம் பஞ்சில் துயில்’ என்று கூறப்பட்டிருப்பதை நினைவில் கொள்வது நலம்.
படுக்கும்போது, இடது பக்கமாகப் படுக்க வேண்டும். இடது கையை மடக்கித் தலையின் கீழே வைத்து கொள்ள வேண்டும். இடது காலை மடக்கி ஒருக்களித்து வலது காலை நீட்டி இடது கால் மேல் வைத்து, வலது கையை நீட்டி வலது கால் மீது வைத்துக் கொண்டு தூங்க வேண்டும்.
இடது புறமாக ஒருக்களித்து தூங்கும்போது, வலது புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்கும். வலப்புறத்து நாசி வழியாக மூச்சுக்காற்று செல்லும்போது, நல்ல தூக்கம் வரும். உடம்புக்குத் தேவையான வெப்பம்கிடைக்கும்.
இதது புறமாக ஒருக்களித்துப் படுக்கும் நோயாளிக்கு நோய் விரைவாகக் குணமாகும்.
எக்காரணத்தைக் கொண்டும் கவிழ்ந்து குப்புறமாகவோ மல்லாந்தோ படுக்க கூடாது. ஏனென்றால், இரவு நேரத்தில்தான் சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. பல மணி நேரம் அசைவில்லாமல் உறங்குவதால், சிறுநீரிலுள்ள கால்சியம், அமிலம் ஆகியவை கூடி கற்களை உருவாக்குகின்றன. குறிப்பாகக் குப்புறப்படுக்கும் போதே சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்பது நினைவிற் கொள்ளத்தக்கது.
எப்போதும், இரவில் மட்டுமே தூங்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது. பகலில் துஹங்கினால், உடம்பிலுள்ள வெப்பம் தணியாமல் வாத நோய்கள் உருவாகும்.
இரவில் தூங்கினால், பூமி குளிர்ச்சி அடைவதுபோல, உழைப்பினால், உடம்பில் ஏற்பட்ட வெப்பம் நீங்கி, உடல் குளிர்ச்சியாகும்.
அன்றாட பழக்கவழக்கங்களில் செய்யவேண்டிய மாற்றங்கள் பற்றி இதுவரை பார்த்தோம். இனி நம் உடலையும், மனத்தையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கான பயிற்சி முறைகளைப் பற்றி இனிவரும் அத்தியாங்களில் பார்க்கலாம்.

கோலம் செய்யும் ஜாலம்

கோலம் செய்யும் ஜாலம்

தோரண வாயில்
விழாக்கள் நடைபெறும்போது இல்லங்களிலும் பொதுவிடங்களிலும் தோரண வாயில் அமைக்கின்றனர். பந்தலிடுவது, கோலமிடுவது, தோரணவாயில் அமைப்பது எல்லாம் விழாவுக்கே உரிய செயல்களாகக் கருதப்படுகிறது. இது பன்னெடுங்காலமாக உள்ள பழக்கம்.

விழாக்களின் சிறப்பே அதன் அலங்காரங்கள் எனலாம். விழாக்களின்போது அலங்காரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்ற பொருள் தொன்றுதொட்டு ஒரே பொருளாக இருப்பதற்குக் காரணம் என்ன?
காரணமில்லாமல் காரியமா? பழங்காலத்திலிருந்தே தோரணம் கட்டுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது தோரணம் என்றால் அது 'மாவிலைத் தோரணம்’ என்றிருப்பதற்கு உரிய காரணம் என்ன?
விழாக்களின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் மக்கள் அதிகம் கூடுவர். 'கும்பல் பெருத்தல் செப்பெருக்கும்’ என்றொரு பழமொழி நினைவுக்கு வருகிறது. கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.
காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும் பாக்டீரியாக்களும், மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.
நோய்க்கிருமிகளிலிருந்தும் பாக்டிரியாக்களிலிருந்தும் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே மாவிலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.
மாவிலைத் தோரணத்துக்கும் சுற்றுப்புறத்தூய்மைக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது! இல்லாமலா தோரணம் கட்டுவார்கள்?

மாவிலைகள் 'புரோஹிஸ்பிடின்’ என்னும் வாயுவைக் காற்றில் பரவவிடுகின்றன. காற்றில் கலந்துள்ள நோய்க் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் 'புரோஹிஸ்பிடின்’ வாயு அழிக்கிறது.
மாவிலைத் தோரணம் சுற்றுச் சூழலைத் தூய்மையாக்கும் கிருமி நாசினி என்று அறிந்திருந்தனர், நம் முன்னோர்கள்.

இப்போது, மாவிலைக்கு மாற்றாக பிளாஸ்டிக் தோரணம் கட்டுகின்றார்கள். அவர்கள் பின்னோர்கள். பிளாஸ்டிக் தோரணத்தினால் ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. தினந்தோறும் இல்லங்களில் மாவிலைத் தோரணம் கட்டினால் இல்லத்திலுள்ளவர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படாமல் பாதுகாக்கலாம்.
வீட்டிலுள்ள நுழைவு வாயிலும் மங்களகரமாகத் தோன்றும்.

வண்ணக்கோலம்
அழகு செய்வது, அழகுக்கு அழகு செய்வது நாகரிகத்தின் இயல்பு. செய்யும் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். காரணம் தெரியாமல் காரியம் செய்வது அறியாமை. காரணத்துக்காகக் காரியம் செய்வது அறிவுடைமை.
தூய்மைக்காக வீட்டைச் சுத்தம் செய்கிறோம். காற்றின் மூலம் வருகின்ற தூசுகளை, மாசுகளைத் தடுக்க ஜன்னல் கதவுகள் இடுகிறோம். ஜன்னலுக்குத் திரைச் சீலையிடுகிறோம். சுவரில் சுண்ணாம்பு பூசுகிறோம். சுவரில் பூசப்படுகின்ற சுண்ணாம்பு வீட்டுக்கு புகுந்துள்ள நுண்ணிய நோய்க் கிருமிகளை அழித்துவிடுகிறது.
சிங்காசனம், மயிலாசனம், மெத்தை இருக்கை, சூழல் இருக்கை, ஆடும் இருக்கை போன்று பல வகையான இருக்கைகளில் அமர்ந்து கொண்டு ஆனந்தமடைகிறோம்.

இவை, கண்ணுக்கு அழகாகத் தோன்றுவதுடன் மனதுக்குள் சில மாற்றங்கள் தருகின்றன.
மனத்துக்குள் ஏற்படும் மாற்றங்களால் நன்மைகளும் தீமைகளும் விளைகின்றன.
அலங்காரங்களினால், வீட்டுக்குள் இருப்பவர்களின் நலன்கள் பாதிக்காமல், பாதுகாக்கப்பட வேண்டும்.
பழந்தமிழர் நாகரிகத்தின் பழக்க வழக்கங்கள் இல்லத்திலுள்ளவர்களின் நலனைப் பாதுகாக்கும் முறைகள் பல. அவற்றில் ஒன்று, வண்ணக் கோலம்.
பெண்கள் அதிகாலையில் எழுந்து வீட்டின் வாசலைப் பெருக்கிப் பசுஞ்சாணத்தைத் தண்ணீரில் கரைத்துத் தெளிப்பர். இது, சுகாதாரத்துக்காக மட்டும் செய்யப்படுவதல்ல! வீட்டின் முன்னும் பக்கங்களிலும் புற வாசலிலும் தெளிக்கப்படுகின்ற பசுஞ்சாண நீர், அந்த வீட்டுக்குள்ளே காற்றினாலும், தூசியினாலும், வீட்டுக்குள் வருவோர்காளாலும் படையெடுக்கிற நோய்க்கிருமிகளைத் தடுக்கின்றது.
பசுஞ்சாண நீர் ஒரு கிருமிநாசினியாகப் பயன்படுத்தப்பட்டது. அம்மை நோய், காலரா, வைசூரி போன்ற நோய் பரவுவதைப் பசுஞ்சாண நீர் தடுக்கும்.
வீட்டினுள் முன் வாசலில் கோலமிடுவர். இந்தக் கோலம் கண்டபடி கண்டவாறு போடப்படுவதில்லை. வார நாள்களுக்குப் பொருத்தமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலமிடுவர். அக்கோலம், முக்கோண வடிவில், நாற்கோண வடிவில், வட்ட வடிவில், பதினாறு கோண வடிவில் இருக்கும்.

பெண்கள் இடுவது கோலமாக இருந்தாலும் அவை வீட்டிலுள்ள மக்களைக் காக்கும் யந்திர சக்ரமாகும்.
வீட்டின் முன்னே இடப்படுகின்ற கோல யந்திர சக்கரங்கள் அந்த வீட்டிலுள்ளவர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போதும், வீட்டுக்குள் நுழையும் போதும் அவர்களுக்கு எந்த தீதும் நடந்து விடாதவாறு பாதுகாக்கும்.
வீட்டிலிருக்கும் குழந்தைகள் தெரிந்தோ தெரியாமலோ சில இடங்களுக்குச் செல்வர். சில பொருள்களைத் தொடுவர். அந்த இடங்களிலிருக்கும் தீய சக்திகள் குழந்தைகள் நலனைக் கெடுத்துவிடாமல் பாதுகாக்கும்.
கோலத்தின் நடுவே பசுஞ்சாணம் வைத்து அதில் பூசணிப் பூவை வைப்பதுண்டு. இப்பூசணிப்பூ மற்றவர்களால் திருஷ்டி கண்ணேறு படாமல் பாதுகாக்கும். பூசணிப்பூவின் மஞசள் வண்ணத்துக்கு அத்தகைய சக்தி உண்டு.

இப்பழக்கம் காலங்காலமாக நடந்து கொண்டு வருகின்ற பண்பாட்டு முறையாம்.
ஆனால், இன்றைய நாகரிக வளர்ச்சியில் எல்லாமும் போலித் தனங்கள். கோலமிடும் பெண்கள் குறைந்து போனார்கள். கோலங்கள் போடாமல், ஏதோ ஒரு கோலத்தை வண்ணத்தில் எழுதி வாசல் முன்னே ஒட்டிக் கொள்கின்றார்கள்.

வார நாள்கள் ஏழும் ஏழு கோள்களின் ஆதிக்கத்தைக் குறிப்பதாகும். ஒரு நாளில் இருக்கும் ஆதிக்கம் மறுநாள் மாறிவிடும். அந்த மாற்றத்துக்கு ஏற்றவாறு கோலங்களை மாற்றி மாற்றிப் போடுவதனால், தீமைகளிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். இதை மறந்துவிட்டு, பிளாஸ்டிக் கோலங்களை ஒட்டி வைத்தால் என்ன பாதுகாப்பு கிடைக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

விருப்பமூட்டி
எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமானாலும், அந்தக் காரியத்தில் எந்த அளவுக்கு விருப்பம் இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்தக்காரியம் வெற்றி பெறும். விருப்பமில்லாமல் செய்யும் காரியம் விருத்தியடையாது. அதைப்போல, வாழ்க்கையில் எந்த அளவுக்கு விருப்பம் இருக்கிறதோ அந்த அளவுக்கே வாழக்கையும் இருக்கும். அதாவது 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்கிறது, வள்ளுவம்.
வாழ்க்கையில் விருப்பத்தை ஊட்டக்கூடிய பல செயல்கள் நிகழ்ந்திருக்கும். நிகழ்ந்து கொண்டிருக்கும். அந்த விருப்ப மூட்டும் செயல்களால் வாழ்ந்து கொண்டிருப்பார்கள், பலர்.
காதலும் ஒருவகையான விருப்பமூட்டி தான். காதலுக்காக வாழ்ந்தவர்களும் வீழ்ந்தவர்களும் இருக்கக் காணலாம். விருப்பமூட்டக்கூடிய காதலைப்போல, ஒரு பழம் இருக்கிறது. அதற்கு விருப்பமூட்டி என்றே பெயரும் உண்டு. அப்பழத்தை எல்லாவிதமான காரியத்துக்கும் பய்னபடுத்துவர்.

களைப்பாகவோ உடம்பு வெப்பமாகவே இருந்தால் அப்பழத்தைப் பிழிந்து சாறு அருந்துவர். உடல் சூட்டைத் தணிக்க தலைக்குத் தேய்த்து குளிப்பர். தோஷமோ திருஷ்டியோ இருந்தால் அதற்குப் பயன்படுத்துவர். மந்திர தந்திரங்களுக்குப் பயன்படுத்துவர். எந்தப்பழம் என்று இன்னும் தெரியவில்லையா?
எழும் இச்சைப் பழம் தான் அது! எலுமிச்சை பழம் என்று ஆகிவிட்டது. எலுமிச்சையினால் என்ன நன்மையென்று பட்டியலிட்டால் மயக்கமே வந்துவிடும். அந்தஅளவுக்கு அப்பழத்தினால் அடையக்கூடிய நன்மைகள் இருக்கின்றன.

எலுமிச்சைப் பழத்தில் 12 விதமான சத்துகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் உடலிலுள்ள முக்கிய உறுப்புகளின் செயப்£ட்டை நன்கு இயக்குவதுடன் அந்த உறுப்புகளில் குறைபாடுகள் ஏதாவது இருந்தாலும் அவற்றையும் சரிசெய்கிறது.
எலுமிச்சை சாற்றினால் இதயம் சக்தி பெறுகிறது. கிட்னியை நன்றாகச் செயல்பட வைக்கிறது. உடலுக்கு வலுவைத் தருகிறது. உடல் உறுப்புகளின் இயங்கும் தினை அதிகரிக்கும். உணர்வு நரம்புகளைப் பலப்படுத்துகிறது. மூளையின் சிந்திக்கும் திறனை வளர்க்கிறது. நுரையீரலை வலுவாக்குகிறது. திசுக்களை இயக்குகிறது. ரத்தத்தைச் சுத்திப்படுத்தி வீறுபெறச் செய்கிறது. சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது. சோகையைப் போக்குகிறது. சுவாசத்தைச் சீராக்குகிறது.
இத்தகைய சக்திகளைத் தன்னகத்தே கொண்டிருக்கும் எலுமிச்சை, அஜீரணத்தைப் போக்கி சீரணத்தை அதிகரித்து அதிக உணவை உண்ண விருப்பத்தை ஏற்படுத்துகிறது. பசிக்கும்போது உண்ண உணவில்லாவிட்டாலும் ஒரு பழம் ஒருவேளை உணவுக்குச் சமம் என்கிற வகையில் உணவாகவும் ஆகிறது. எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து அருந்தி வந்தால் அதுவே காயகற்பமாகவும் ஆகிறது. உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகமாக்கி, நோயகற்றும் மருந்தாகவும் ஆகிறது.

உடம்பில் நோய் வந்தால், எலுமிச்சைச் சாறு மட்டுமே அருந்தி குணமாக்கலாம். வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்து தினந்தோறும் 10&15 தடவை சாப்பிட்டு வந்தால் நோய்கள் நீங்கிவிடும்.
உடம்பிலுள்ள கொழுப்பை அகற்ற எலுமிச்சைச் சாற்றை உணவாக உட்கொள்ளலாம். உடம்பின் எடை, ஊளைச் சதை, தொந்தை, தொப்பை, இடைபெருந்து இருப்பவர்கள் எலுமிச்சையை உணவாக உட்கொண்டால் விரைவாகப் பயன்பெறலாம்.

எலுமிச்சைச் சாறு மட்டுமே சாப்பிட்டுக் கொண்டு ஒரு மண்டலம் வரை இருக்கலாம். அவ்வாறு இருக்கும்போது, உடம்பிலுள்ள குற்றங்கள் அனைத்தும் நீங்குவதுடன், உடம்பில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தெம்பும் புத்துணர்வும் தோன்றுவதைக் காணலாம்.
அதன்பின், வாழவேண்டும் என்னும் விருப்பத்துக்கு அளவேது! அதனால்தான், எலுமிச்சம் பழத்துக்கு விருப்பமூட்டி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி இயற்கையே எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு வைத்திருக்கிறது. நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல் குருடர்களாக இருக்கிறோம். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ளவேண்டும். இயற்கையை மட்டும் நம்பினால் ஆரோக்கியம் வந்து விடாது.

ஓம் என்னும் உயிர்ச்சக்தி

ஓம் என்னும் உயிர்ச்சக்தி

தேவைகள் இரண்டு வகை. ஒன்று புறத்தேவை. மற்றொன்று அகத்தேவை. புறத்தேவைகள் சில மணித்துளிகள் மட்டுமே இன்பம் தரும். அகத்தேவைகள் ஆண்டுக் கணக்கில் இன்பத்தைத் தந்து கொண்டிருக்கும்.
எந்த வகையான தேவையாக இருந்தாலும் அவரின் தேவையை அவரவரே அடைந்து கொள்ள வேண்டும்.
மனித உடல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. அது படைப்பைக் குறிக்கும். வளரும் உடலைப் பேணுதல் வேண்டும். அது காத்தலைக் குறிக்கும். எல்லா உடலுக்கும் இறுதியென ஒன்றிருக்கும். அது அழித்தலைக் குறிக்கும். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழிலையும் செய்பவன் முக்கண்ணன் என்று கூறக் கேட்டிருக்கிறோம்.

முக்கண்ணன் என்பவர் வேறு எங்கும் வெளியில் இல்லை. அவர் அவரவர் உடம்புக்குள்ளேயே இருக்கின்றார். உள்ளேயிருக்கும் முக்கண்ணனை இயக்குகின்ற விசை நம்மிடமிருக்கிறது. கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைந்து கொண்டிருப்பவர்ளைப் போல, முக்கண்ணனைத் தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் அனேகம்.
நம்மிடமிருக்கும் விசையைப் பயன்படுத்தினால் நமக்கு வேண்டிய தேவைகள் எல்லாம் நமக்குக் கிடைக்கும். தேவைகளை வேண்டுமென்று விரும்புகின்ற மனம், தேவைகளை அடைவதற்காகத் தினந்தோறும் சிறிது நேரமாவது முயற்சி செய்ய வேண்டும்.
எந்த முயற்சியும் இல்லாமல் அடைகின்ற 'தேவைகளெல்லாம் நீர்க்குமிழிகள் போல் தோன்றி அடுத்த கணத்தில் மறைந்துவிடும். முயற்சி செய்து அடைகின்ற தேவைகள் நீண்ட காலம் நன்மையடையச் செய்வதுடன் இன்பத்தை நுகரச் செய்யும்.

தேவைகளை அடைவதற்காக மேற்கொள்ளுகின்ற முயற்சிகளை சாதனை என்பர். சாதனை செய்யாமல் எந்தத் தேவையையும் சாதிக்க முடியாது. சாதனை செய்பவர்களே சாதனையாளர்கள். சாதனை செய்யாதவர்கள் வெறும் வேதனையாளர்கள்.
மலையின் உச்சியில் மணி வயிரம் இருக்கிறது என்று தெரிகிறது. மலையேறிச் செல்லாமல் மலையாடிவாரத்தில் நின்றுக்கொண்டு மணியே! என்று சொன்னால் மணி வருமா? என்று சிந்திக்க வேண்டும்.
நம்முன்னே மூன்று சக்திகள் இருக்கின்றன. அச்சக்திகளால் தேவைகள் அனைத்தையும் அடைந்துவிடலாம். அச்சக்தியை இயக்கும் விசை 'ஓம்’ ஆகு.

ஓம் என்னும் விசையை இயக்க இயக்க நமக்குள்ளே இருக்கும் மூன்று சக்திகளும் இயங்கத் தொடங்கும்.
ஓம் என்னும் மந்திர ஒலியை, காலையிலும் மாலையிலும் சுமார் ஒரு சில மணி நேரங்கள் சொல்லிக் கொண்டு சாதனை செய்து கொண்டு வந்தால், திறந்து கிடக்கும் ஐம்புலன்களின் ஆசாபாசங்களின் கதவுகள் மூடிக்கொள்ளும். அகக்கதவு திறக்கும். அப்போது வேதனைகள் எல்லாம் மறைந்துவிடும். சாதனை செய்யச் செய்ய தேவைகள் எல்லாவற்றையும் அடைந்துவிடலாம்.

தேவைகள் நிறைவேறும்போது, சித்திகள் கைகூடும், மனத்துக்குள் புது வகையான ஒழுக்கமும் ஞான அறிவும் உதயமாகும். இளமையுடன் இருக்க காயகற்பம் என்னும் மருந்து இருப்பதாகக் கூறுவார்கள். காயகற்பம் உண்டவர்கள் கற்பகாலம் வரை வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்று சொல்வார்கள்.
அத்தகைய காயகற்பத்தைத் தேடி எங்கும் அலைய வேண்டாம். எந்தக் காயகற்பமும் நம் கையில் தான் & செய்யும் சாதனையில்தான் இருக்கிறது.
நரை, திரை, மூப்பு, சாக்காடு என்னும் நான்கு வகையான துன்பள்ஙகளையும் அகற்றி என்றும் இளமையுடனிருக்க வகை செய்யும் காயகற்பமாகவும் விளங்குகிறது. ஓம் என்னும் மந்திர ஒலி.

இக்காயகற்கப்பயிற்சியை காலை, மாலை, இரவு படுக்கைக்குச் செல்லும் போதும், உதயத்தில் எழும்போதும் தினந்தோறும் தவறாமல் ஒரு பத்து நிமிட நேரம் செய்ய வேண்டும்.

வலது நாசி வழியாகக் காற்றை உள்ளே இழுக்கும் போதும் ஓம், உள்ளே சென்ற காற்று உள்ளே நிறுத்தும் போதும் ஓம் உள்ளே நின்று காற்று வெளியே வரும்போதும் ஓம் என்றும் உச்சரித்துக் கொண்டுவந்தால் உடல் வெப்பமாகும். மூலத்திலே இருக்கும் முக்கண்ணன் விழித்தெழுவார்.
எண்ணியது நடக்கும். சொல்வது கிடைக்கும் வல்லமை உண்டாகும். நல்லவை தோன்றும். ஞாலமே இனியதாகும். வாழ்வில் இன்பமுண்டாகும்.

ஒன்றிட இருந்தேன் வேலவா


ஒன்றிட இருந்தேன் வேலவா
இருபொழுது உணர்ந்தேன்
முப்பொருள் வேண்டினேன்
நால்வேதம் அறியேன்
ஐம் புலனும் அடக்கேன்
அறு சுவையும் பிரியேன்
ஏழுலகம் வேண்டேன்
அட்டமா சித்தியதும் கிட்டேன்
நவ கோள்களில் சுழன்றேன்
பத்தினி ஓர் தாய் மடியில் பிறப்பு ஏன்
ஒன்றிடவா பிறந்தேன் வேலவா

காரணகுரு, காரியகுரு ...!

காரணகுரு, காரியகுரு ...!

'கு' ஆகிய இருளிலிருந்து 'ரு' ஆகிய வெளிச்சத்தைக் காட்டக்கூடிய ஆற்றல் பெற்றவரே குரு என்பவர். உலகில் காரணகுரு, காரியகுரு என இருவகையினர் உள்ளனர்.

காரியகுரு

காரியகுரு எனப்படுபவர் சில சித்திகளை கைவரப் பெற்று, முற்றுப் பெறாமல் பொருளை இச்சித்து செயல்படுவராவர். காரியகுருவாகிய தவறாகப் போதிப்பவரே உண்மையில் 'குருடு' என்ற தமிழ்ப்பதத்திற்குப் பொருத்தமானவர். கண் பார்வையற்றவரைக் 'குருடு' என்பது தவறான சொற் பிரயோகமாகும். இப்போலிக் குருவாகிய குருடுகளை ஆசான் திருமூலர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழு மாறே.
- திருமந்திரம் (10.6.105)

காரணகுரு

எந்தப் பொருளின் மீதும் பற்றற்று இருப்பவரே காரணகுரு ஆவார். முற்றுப்பெற்ற சித்தர்களே காரணகுரு ஆவார்கள். மகான் அகத்தீசர், மகான் நந்தீசர், மகான் திருமூலதேவர், மகான் போகர், மகான் கருவூர்தேவர், மகான் பட்டினத்தார், மகான் சிவவாக்கியார், மகான் காலாங்கிநாதர், மகான் வள்ளலார் போன்ற ஞானிகளே காரணகுரு ஆவார்கள். ஆசான் அகத்தீசரின் ஆசிபெற்ற ஒன்பது கோடி ஞானிகளும் காரணகுரு ஆவார்கள்.

அத்தகு காரணகுருவின் திருவடிப்பற்றி பூசித்து ஆசிமாறாமல் உடம்பைப் பற்றியும், உயிரைப்பற்றியும் அறிய முடியாது. சத்தைப் பற்றியும், அசத்தைப் பற்றியும் அறிய முடியாது.

காலம் உள்ளபோதே அதாவது இளமை இருக்கும்போதே காரணகுருவை அறிந்து, அவரது உபதேசத்தைப் பெற்றுப் பிறவிப்பிணியை நீக்கிக் கொள்ளவேண்டும்.
.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன்!.

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழ் இலக்கியங்களில் ஓசோன்!.

தற்கால அறிவியல் அறிஞர்களால் புவிக்கு மேலே இருக்கும் வான்வெளி ஆறு பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. புவியில் இருந்து ஒன்றன் மேல் ஒன்றா கட்ரோபோஸ்பியர்(troposphere)', ஸ்ட்ரோட்ஸ்பியர் (stratosphere),மீஸோஸ்பியர் (mesosphere), தெர்மாஸ்பியர்(thermosphere), எக்ஸோஸ்பியர் (exosphere), நத்திங்னஸ் (nothingness)என அவை அமைந்துள்ளன.

இவற்றுள் புவிக்கு மேலே முதலில் அமைந்திருப்பது ட்ரோபோஸ்பியர். இது வான்வெளியின் மொத்த கன அளவில் பதினேழில் ஒரு பங்குதான். ஆனால், வான்வெளியில் உள்ள மொத்தக் காற்றின் அளவில் ஐந்தில் நான்கு பகுதி இங்கு தான் இருக்கிறது. இன்றைக்கு ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்கள் வான்வெளியை ஐந்து கூறுகளாகப் பிரித்துக் கூறி இருப்பதை அறியும்போது வியப்பும் மகிழ்வும், பெருமிதமும் ஒருங்கே உண்டாகின்றன. "இருமுந்நீர்க் குட்டமும் வியன் ஞாலத்து அகலமும் வளிவழங்கு திசையும் வறிதுநிலைஇய ஆகாயமும்." (புறநா - 20) என்னும் வரிகளில் புவிக்கு மேல் உள்ள மூன்று பகுதிகள் கூறப்பட்டுள்ளன.

"செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
சூழ்ந்த மண்டிலமும் வளிதரு திசையும் வறிதுநிலை காயமும்." - (புறநா -30) என்னும் வரிகளால் புவிக்கு மேல் ஐந்து பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. "மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக இயங்கிய இருசுடர் கண்ணெனப் பெயரிய வளியிடை வழங்கா வழக்கறு நீத்தம்." (புறநா -365) என்னும் வரிகளில் இரண்டு பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் "திசை" என்னும் பகுதியில் காற்று இருக்கும். "ஆகாயம்", "நீத்தம்" என்னும் பகுதிகளில் எதுவும் இருக்காது எனவும் கூறப்பட்டுள்ளது. "நீத்தம்" என்பது இன்றைய அறிவியலார் கூறும் "வெறுமை" (நத்திங்னஸ்) என்னும் பகுதி. புவிக்கு மேல் இருக்கின்ற இரண்டாவது பகுதியான "ஸ்ட்ரோட்ஸ்பியர்" என்னும் பகுதியில் தான் "ஓசோன்" எனப்படும் காற்றுப்படலம் அமைந்துள்ளது. இப்படலம் கதிரவனிடம் இருந்து வரும் கடும் வெப்பத்தை, தான் தாங்கிக்கொண்டு புவியில் உள்ள உயிர்கள் துன்பம் உறாமல் காத்துவருகிறது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓசோன் படலத்தைப் பற்றி 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் குறிப்பிட்டிருப்பது வியப்பை அளிக்கிறது அல்லவா?

"நிலமிசை வாழ்வர் அலமரல் தீர தெறுகதிர் வெம்மை கனலி தாங்கி
காலுண வாக சுடரொடு கொட்கும் அவிர்சடை முனிவரும் மருள."
(புறநா - 43)

பாடல் வரிகளின் கருத்து, "புவியில் வாழும் மக்களின் துன்பம் தீர கதிரவனின் வெப்பம்மிக்க கனலைத் தாங்கிக்கொண்டு கதிரவனோடு சேர்ந்து சுழல்கின்ற முனிவர்கள்" என்பதாகும். மேலும், முருகக்கடவுளின் ஒரு கை, "விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது" என்று திருமுருகாற்றுப்படை (107) யிலும்,"சுடரொடு திரிதரும் முனிவரும், அமரரும் இடர்கெட அருளி நின் இணையடி தொழுதோம்"என சிலப்பதிகாரத்திலும் (வேட்டுவ வரி - 18)இக்கருத்து கூறப்பட்டுள்ளது.

முனிவர்கள் என்று கூறப்பட்டதாலேயே, மற்ற மதத்தினரும் பகுத்தறிவுவாதிகளும் இது அறிவியல் கருத்தன்று; கற்பகமரம், காமதேனு போன்ற கற்பனைகளுள் ஒன்று தான் என்று சொல்லக் கூடும். முனிவர்கள் என்றாலும் சரி அல்லது பிறவற்றைச் சுட்டினாலும் சரி அது ஒரு பொருட்டன்று. கதிரவனின் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ளும் ஒரு சக்தியைப் பற்றித் தமிழர்கள் (சங்கப் புலவர்கள்) சிந்தித்திருக்கிறார்கள் என்னும் செய்தி நாம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே கூறிவிட்டோம் என்று நினைக்கும் போது, இந்த செந்தமிழ்நாட்டில் பிறந்ததை எண்ணி நாம் பெருமை கொள்ளவேண்டும்!

அப்படிப்பட்ட நம் தமிழ் மொழியை உலகெங்கும்பரவ வழிவகை செய்ய
ஒவ்வொரு தமிழனும் உறுதி ஏற்கவேண்டும்!

திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!


திருமணத்தின் போது பெண்ணிற்கு கட்டப்படும் " தாலி "யின் மகத்துவங்கள் !!

தாலி - தமிழ் பெண்களின் வாழ்கையின் ஆதாரம். திருமணம் ஒரு பெண்ணின் வாழ்வை மாற்றுகிறது. தாலி அதை உறுதிப்படுத்துகிறது.

அந்த மங்கலநாண் திருமணத்தின் போது பொதுவாக ஒன்பது இழைகளால் .ஆனதாக அணிவிக்கப்படுகிறது. அவை வாழ்கையின் ஒன்பது தாத்பரியங்களை குறிக்கிறது.

அவை-

1. வாழ்க்கையை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளுதல்
2. மேன்மை
3. ஆற்றல்
4. தூய்மை
5. தெய்வீக நோக்கம்
6. உத்தம குணங்கள்
7. விவேகம்
8. தன்னடக்கம்
9. தொண்டு

ஆகியவற்றைபிரதிபலிக்கின்றன.

இவற்றை ஒரு பெண் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தில் மாங்கல்யம் அமைக்கப்பட்டதாக காயத்ரி மந்திரம் குறிப்பிடுகிறது. தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு
.
தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுதுபட்டதால் நிரந்தரமாக இருக்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர். ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

(இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர்.
விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின் சூழ்க்குமம் “மஞ்சள், கயிறு, கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய, பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்துகொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாளினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக ஆய்வு சொல்கிறது.

சுத்துரு, சுத்திரி, மாங்களியம், மங்கலியம், மங்கலவணி என சொல்லும் தாலியை - மண அடையாள வில்லையைக் குறிக்கும் தாலி என்பது மஞ்சள் பொருத்திய நாணை முதலில் குறித்திருக்க வேண்டும்;

பின்னால் செல்வம் படைத்தோரால் அந்த மஞ்சள் பொன்னாகி இருக்கிறது. (உடனே பொன் தான்,தாலியின் அடையாளம் என்று நாம் பொருள் கொள்ளக் கூடாது. மஞ்சள் தான் அதன் அடையாளம்.) மற்றும் ‘ஐம்படைத் தாலி, மாமைத் தாலி (ஆமைத் தால]. புலிப்பல் தாலி, புலிநகத் தாலி ,அம்மன் தாலி போன்றவையும் இருந்து இருக்கிறது.

-தர்மத்தின் பாதையில்-

கோபுர தரிசனத்தின் மாண்பும் மகத்துவமும்....

கோபுர தரிசனத்தின் மாண்பும் மகத்துவமும்....


"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்" என்பது பழமொழி என்பதைக் விட அதை ஒரு வாழ்வியல் தத்துவமாய் கருதிட வேண்டும். ஆலய வழிபாட்டுக்கு செல்ல இயலாதவர்கள் கூட தூரத்தே இருந்து கோபுரத்தை வணங்கிச் செல்வதை இன்றைக்கும் காண முடியும்.

கோபுரங்களை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின் பாதங்களாகவும் பாவித்தனர். கோபுர வழிபாடு முழுமையான ஆலய வழிபாட்டுக்கு இனையானது என்ற நம்பிக்கை காலம் காலமாய் இருந்து வருகிறது.

சிற்ப சாஸ்திரத்தின் படி கோவில்களின் அமைப்பானது மனித உடலின் வடிவத்தில் அமைய வேண்டுமென வரையறுத்திருக்கின்றனர். இதனை "ஷேத்திரம் சரீர பிரஸ்தாரம்" என்பர்.

இதனையே திருமூலரும்...

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே"

என்று கூறுகிறார்.

எளிமையாய் விளக்குவதானால்

பாதங்கள் - முன்கோபுரம்
முழங்கால் - ஆஸ்தான மண்டபம்
துடை - நிருத்த மண்டபம்.
தொப்புள் - பலி பீடம்
மார்பு - மகாமண்டபம் ( நடராஜர்)
கழுத்து - அர்த்த மண்டபம் (நந்தி)
சிரம் - கர்ப்பகிரகம்
வலது செவி - தக்ஷிணா மூர்த்தி
இடது செவி - சண்டேஸ்வரர்.
வாய் - ஸ்நபன மண்டப வாசல்
மூக்கு - ஸ்நபன மண்டபம்
புருவ மத்தி - லிங்கம்.
தலை உச்சி - விமானம்.

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்?

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது.

எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.:

பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி.

கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம்.

இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி. பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலை அப்புறம் தான் கோயில் உருவாகும்.

நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.

அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்கும்.

இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி. ரெகுலராய் கோயிலுக்கு செல்லும் ஆட்களுக்கு தெரியும் ஒரு வித எனர்ஜி அந்த கோயிலில் கிடைக்கும் என்று.

அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வரும் காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித பாசிட்டிவ் மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.

மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.

அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம்.

இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் இதை ஒரு 10க்கு 10 ரூமில் நீங்கள் செய்து பாருங்கள் இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது.

அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும். பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது.

இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை ரெகுலராய் உட்கொண்டவர்களுக்கு இது ஒரு ஆன்டிபயாட்டிக் என்றால் அதிகமில்லை.

இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.

இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் ஏன் கிராம்பு, துளசி, வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் காரணம் இது தான் இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம்.

கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.

கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக எனர்ஜி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான்.

கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம். பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.

நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம், கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் எனர்ஜீயை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு எனர்ஜு ரீசார்ஜ் பாயின்ட் தான் இந்த கோயிலின் மூலஸ்தானம்.

அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.

கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.

அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆம் இது தான் பிற்காலத்தில் கண்டெடுக்கபட்ட லைட்னிங் அரெஸ்டர்ஸ்.

அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு டெக்னிக்கல் புரட்டக்டர்.

அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா ஹை வோல்ட்டேஜெயும் நியூட்ர்ல் செய்யும் ஒரு சிறப்பு விஷயம்.

இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான். நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.

சுத்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான், நியதி.

கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த டேஸ்ட்டை எந்த ஒரு ஃபைவ் ஸ்டார் கிச்சனும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி. சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த எனர்ஜி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் எனற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் டெக்னாலஜி.

Friday, November 15, 2013

மஹா தேஜஸ் லிங்கம்


*** மஹா தேஜஸ் லிங்கம்
*** . நவபாஷாணத்துக்கு நிகரான சூரியகாந்த தன்மை கொண்ட ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கம் இது
*** மூலஸ்தானத்தில் காகபுஜண்டரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது .
*** முருகன், 12 திருக்கரங்களுடனும், வள்ளி தெய்வானையுடன் பறக்கும் மயிலில் ஆசனமிட்டு, சுமார் 8 அடி உயரத்திற்கு பிரமாண்டமாக அமைந்திருப்பது மிகவும் விசேஷமானது.
*** காகபுஜண்டர் இந்த கோயிலின் அருகில் சமாதி அடைந்ததை ஒட்டி சமாதி பீடம் அமைக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றப்பட்டு வருகிறது.
*** இத்தலத்து அம்பாள் மகாலட்சுமி அம்சத்துடன் சுவர்ணாம்பிகை என்ற பெயருடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இவள் கிழக்கு பார்த்து நின்றிருந்தாலும், இவளது முகம் சிவன் இருக்கும் திசை நோக்கி சற்று திரும்பியுள்ளது. காகபுஜண்டர், மனைவி பகுளாதேவி ஆகியோரின் ஜீவசமாதி இவளது பார்வையில் படும்படி உள்ளது.
*** இக்கோயிலானது வாயு ஸ்தலத்திற்கும், பஞ்சபூத ஸ்தலத்திற்கும் இணையாக இருப்பதால் இதன் கருவறையானது மிகவும் உக்கிரமானதாக இருக்கும். இதன் கருவறையில் ஏற்படும் தீபமானது துடித்துக்கொண்டே இருக்கும் என்று காகபுஜண்டர் நாடி சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
*** இதனால் கருவறையின் மையத்தில் அமைந்த தீபம் மட்டும் இன்றும் துடிப்புடன் எரிந்து கொண்டிருப்பது நாடி சுவடியின் பூரணத்துவத்தை நமக்கு உணர்த்துவதாக உள்ளது.
*** அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், தென்பொன்பரப்பி-606 201, விழுப்புரம் மாவட்டம்.
இருப்பிடம் : சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும் வழியில் அம்மையகரம் பஸ் ஸ்டாப்பில் இருந்து மேற்கே ஒரு கி.மீ. தூரத்தில் சொர்ணபுரீஸ்வரர் கோயில் உள்ளது.