Saturday, October 12, 2013

நோயை விரட்டும் தியான சுலோகம்

அதர்வண வேத சரப மந்திரன் எல்லா பாபங்களையும் போக்கி நம்மை காக்க வல்லது அந்த தியான சுலோகம் வருமாறு:-

ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:    
பக்ஷீ சதுர் பாஹுக:
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:   
 காலாக்னி கோடித்யுதி:
விச்வ க்ஷோப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:    
பிரும்மேந்திர முக்யைஸ்துத:
கங்கா சந்தரதர: புரஸ்த சாப:    
ஸத் யோரிபுக் னோஸ்து

(சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4 கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என்முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.)

இந்த தியான சுலோகத்தை மனப்பாடம் செய்து தினம் காலை மாலை பாராயணம் செய்கிறவர்கள் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயினின்றும் விடுபட்டு சகல மங்களங்களையும் பெறுவார்கள்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment