Friday, October 11, 2013

விஜயதசமி வழிபாடு


* வெற்றியின் சின்னமாகத் திகழும் துர்க்கையே! மகிஷனை வதம் செய்து தர்மத்தை நிலைநாட்டியவளே! வேதம் போற்றும் விமலையே! கல்வியை அருளும் கலைமகளாகத் திகழ்பவளே! கல்விச் செல்வத்தைத் தந்தருள்வாயாக! * மும்மூர்த்தியும் போற்றும் உமையவளே! திருமாலின் தங்கையே! கொற்றவையே! திரிசூலத்தைக் கையில் தாங்கியவளே! பதினெட்டு கரங்களைக் கொண்டவளே! நம்பியவரைக் காப்பவளே! எங்களுக்கு செல்வ வளத்தைத் தருவாயாக! * தீமையைப் போக்குபவளே! ஸ்கந்தமாதாவே! மூவுலகையும் காப்பவளே! ஆதிபராசக்தி தாயே! எங்களுக்கு தைரியத்தையும், வீரத்தையும் அருள்வாயாக! * மகிஷாசுரமர்த்தினியே! அபயம் அளிப்பவளே! எட்டுத்திசையும் போற்றும் தயாபரியே! சிங்கத்தின் மீது வருபவளே! மேகம் போல அருள் பொழிபவளே! எங்களுக்கு எப்போதும் துணை நிற்பாயாக.

No comments:

Post a Comment