Wednesday, February 25, 2015

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்"

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர , வணங்க வேண்டிய "ஸ்ரீவாஞ்சியம்"

ஸ்ரீ வாஞ்சியம்
கும்பகோணத்திலிருந்து நன்னிலம் வழித்தடத்தில் அச்சுத மங்களத்திலிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் உள்ளது ஸ்ரீ வாஞ்சியம் ஆகும்.
இறைவன்-ஸ்ரீ வாஞ்சிலிங்கெஸ்வரர்
இறைவி-மங்கள நாயகி
தீர்த்தம்-குப்த கங்கை
புனித நீராடல்:
திருவாஞ்சியத்தில் இருக்கும் குப்தகங்கையில் மகாசங்கராந்தி, அமாவாசை, அர்த்தோதயம், மஹோதயம், விஷீ,சூரிய,சந்திர கிரகணகாலம் கார்த்திகை, ஞாயிறு, சோமவாரங்கள், மாசிமகம், மார்கழி திருவாதிரை நட்சத்திரம் போன்ற தினங்களில் திருத்தலம் வந்து சிவபெருமானை வழிபடுவதற்கு முன்னரே மனம் உருகி நம் பாவங்களை நினைத்து முறைப்படி வழிபட்டு இப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் இவர்களின் சகல பாவங்கள் நீங்கி வருங்காலங்களில் சகல இன்பங்களும் பெற்று மறுமையில் நற்கதியடைவார்கள்.
காசியை விட 100 மடங்கு புனிதமானது. பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
முதலில் குப்தகங்கையில் நீராடி இடப்புறம் அக்னிமூலையில் தனிகோயில் கொண்டுள்ள எம தர்மராஜனை வணங்கி அதன் பின் வாஞ்சி நாதனை வழிபடவேண்டும்.
சிறப்பம்சம்:
திருவாஞ்சியலிங்கம் மிகவும் பழமையானது. 64 சுயம்பு லிங்கங்களில் ஒன்றான ஸ்ரீ வாஞ்சிநாதர்லிங்கம், மேரு, மந்திரகைலாசர், காசி, ஸ்ரீ சைலம் போன்ற சித்தி தரக்கூடிய தலங்கள் தோன்றுவதற்கு முன்வே தோன்றியது. சிவபெருமானே பார்வதி தேவியிடம் தமக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறியத் தலம் ஸ்ரீவாஞ்சியம் ஆகும்.
உலகிலேயே எம தர்மராஜனுக்காக தனிக்கோயில் அமைக்கப்பட்ட வழிபடும் தலமாக சிறப்பு பெற்றதும் ஸ்ரீ வாஞ்சியம் ஆகும். கோயிலின் அக்னி மூலையில் தனி கோயில் உள்ளது. மனிதன் இறந்த பிறகு தன் சந்ததிகள் யாரும் ஈமகாரியம் செய்வாரோ இல்லையோ என்ற கவலை உடையவன் உயிரோடு இருக்கையிலேயே இங்கு வந்து பிண்டம் போட்டு சடங்குகள் செய்யின் இவர்களது இறப்புகுப் பின் கொடுக்க வேண்டிய தானங்களை முன்னரே செய்தால் இறப்புக்குப் பின் நற்கதி அடைவார்கள்.
இத்தலத்திற்கு வந்து போவோரின் தரித்திரம் நீங்கப் பெற்று வளமுடன் கூடிய வாழ்க்கை பெறுவது நிச்சயம். திருவாஞ்சிநாதரை வழிபட்டவர்கள் பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சூர்யன், எமதர்மர், பைரவர்,கங்கை, அக்னி, கௌதமர், ஜமதக்னி, காச்சியபர், விசுவாமித்திரர், பரத்வாஜர், பராசர், மாமுனிவர், வசிஷ்டர், வால்மீகிஆகியோர்.
பூமியில் தோன்றிய சுயம்பலிங்கங்கள் 64ல் மிகவும் முக்கியமானது திருவாஞ்சியத்தில் இருக்கும்லிங்கம்.இந்தலிங்கம் தான் உலகிற்கு முன்னதாக தொன்றியதாகவம் இந்த லிங்கத்துள் சதாசிவம் இருப்பதால் உலகெங்கும் உள்ளலிங்கங்கள் அனைத்தம் திருவாஞ்சியலிங்கத்தை வழிபட வணங்கிவருகின்றன. இந்த சுயம்லிங்கத்தை எவர் ஒருவர் பக்தியுடன் தரிசிக்கிறாரோ அவர் கைலாய நாதரை நேரில் தரிசித்து சிறப்பு பெறுவார்.
இங்கு பிரகராம் சுற்றிஉள்ள அனைத்து சுவாமிகளையும் தன் கைக்குள் கட்டளைக்குள் அடக்கியிருப்பதாகவும் அனைத்து சக்திகளையும் ஸ்ரீவாஞ்சிநாதரே கையகப்படுத்தியுள்ளவராக அருட்பாலிக்கின்ற காரணத்தால் அனைத்து சிவாலயங்களிலும் பிரசித்து பெற்றதாக திருவாஞ்சியம் திகழ்கின்றது.
பொதுவாக காசி சென்று வந்தவர்களுக்கு எமபயம் இல்லை. ஆனாலும் பைரவ தண்டனை உண்டு. ஆனால் வாஞ்சியில் இறப்பொருக்கு எமபயம் பைரவ வதை கிடையாது. பைரவர் மண்டலத்தின் அதிபதி இத்தலத்தில் தனது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு யோகபைரவராக அமர்ந்து சிவனை வழிபட்டுக் கொண்டு காட்சி புரிகின்றார்.
இத்தலத்தில் எவன் ஒரு நிமிடமாவது அமர்கிறானோ அல்லது ஸ்ரீவாஞ்சியம் செல்ல வேண்டும் என மனதார நினைத்தால் கூட பொதும் அவன் ஊழிவினை நீங்க நற்கதி பெறுவான் என்பது முனிவர்களின் வாக்கு.
ஏவன் ஒருவன் காலை எழுந்தவடன் மனம் உருகி திருவாஞ்சியம் என்று மூன்று முறை சொல்கிறானோ அவனுக்கு பாவம் தீர்ந்து தோஷம் போய் முக்தி கிடைப்பது நிச்சியம்.
திருவாஞ்சியம் வந்து வழிபட பில்லி சூனியம் அதாவது செய்வினை
என்று கூறப்படும் எதிர்வினைகள் அறவே அகன்று தூய்மை பெற முடியம். கொலை, தற்கொலை போன்ற துர்மரணங்கள் ஏற்பட்ட வீடுகளில் வரும் தொல்லை வர்ணிக்க முடியாது இருப்பினும் துர்மரணம் கொண்ட வீட்டில் வசிப்பவர்கள் ஸ்ரீவாஞ்சியம் வந்து பஞ்சதானம் கொடுத்து வழிபட்டால் துர்மரணம் பெற்றவர்களின் ஆத்மாசாந்தி அடைந்து கர்மா விலகி நற்பயன் பெறவர்.
கணவன்-மனைவி இடைவே ஊடல் எற்பட்டு பிரிந்தவர்கள் இங்கு வந்து மங்களாம்பிகையை வழிபட்டால் இருவருக்கமிடையே பாச உணர்ச்சிகளைத் தோற்றுவித்து இருஉள்ளங்களையம் இணைப்பதில் சிறப்பு பெற்றவராகத் திகழ்கிறார். இன்றம் விவாகரத்து பெற்ற தம்பதிகள் கூட இங்கு வந்து வழிபட்டதன் மூலம் இணைகின்றனர்.
இத்தலத்தில் ஆனந்தமாக யோகபைரவராக அமர்ந்திருக்கம் பைரவரை வழிபட நரம்பு சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கி நலன் பெறலாம். தீர்க்க முடியாத வழக்களில் சிறைபட்பவர்கள் இங்குள்ள பைரவரை வழிபட்டால் நீண்டகால வழக்குகள் உடைந்து நல்ல பலன் கிடைக்கம்.
இங்குள்ள சுற்று பிரகாரத்தில் உள்ள பிள்ளையாரை வெண்ணெய் சாத்தி வழிபட தீராத வயிற்று வலி உடனே தீரும்.
ஸ்ரீ வாஞ்சியத்தில் மட்டுமே ராகவும் கேதுவும் ஒன்றாக ஓரே சிலையில் பாம்பு உடலாகவும் மனித முகமாகவும் ஓரே நிலையில் சஞ்சர்க்கின்றனர். ஓரே மூர்த்தியாக எழுந்தருளியுள்ள ராகு-கேதுவை வழிபட்டால் நாகதோஷம் காலசர்ப்பதோஷம் நீங்கி நலம் பெறலாம்.
கிரகங்களில் வலிமை மிக்க சனிபகவானை கிரகமாக இரு என ஆக்ஞை பிறப்பித்த தலம் ஸ்ரீ வாஞ்சியம். சுனிபகவான் அதிதேவதையான எமதர்ம ராஜா தனி சன்னதியில் எழுந்தருளியிருப்பதால் சனி சம்பந்தப்பட்;ட தொல்லைகள் உபாதைகள் நீங்கப் பெறுவர். சனி உபாதையிலிருந்து ஒருவன் விடுபடுவான் என்று விதி இருக்குமேயானால் தன்னுடைய தெய்வ பலத்தினாலேயோ மூதாதையோர் தவ வலிமையினாலேயோ தன்னை அறியாமல் ஏதாவது ஒரு காரணத்ததைச் சொல்லி இங்கு வந்து என்னை வழிபட்டு உன்னை வழிபடுவான் என்பது ஸ்ரீ வாஞ்சிநாதரின் பிரதான வாக்காகும்.
ஓவ்வொரு அமாவாசையும் பிதிர் கர்மங்கள் செய்யாதவர்கள் இங்கு வந்து கொடுப்பின் நன்னை உண்டாகும்

No comments:

Post a Comment