Friday, June 13, 2014

நிரந்தர கடன்காரர் ஜாதகம்

ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதியும் ஆறாமதிபதியும் பரிவர்த்தனை பெற்றிருந்தால் சாகும் வரையிலும் கடன்போகாது என்பது விதி. ஆனால் பத்தாமிடம் வலுப்பெற்று இருந்தால் கடனே மூலதனமாக இருக்கும்.

மூலதனத்தை விட கையிருப்பு பலமடங்கும் இருக்கும் தன் பணத்தை முதலீடு செய்யாமல் மற்றவர் பணத்திலேயே உழைத்து லாபம் சம்பாதிக்கலாம் என்பதும் விதியாகும்.

எனவே கடனைப்பற்றி கலங்க வேண்டிய அவசியமில்
லை. ஒன்று நூறாகி, நூறு ஆயிரமானாலும் உங்களது கையிப்பு அதிகரித்து கொண்டே வந்தால் கடன் என்பது கூட பக்கத்துனைதான். கடனோடு வாழ்வது என்பது தவறல்ல. கடன் வாங்குவதற்காகவே வாழ்வது தவறாகும்.

நீச்சல் தெரியாமல் ஆற்றில் குதிப்பவனும், திருப்பி அடைக்கும் மார்க்கம் தெரியாமல் கடன் வாங்குபவனும் ஒன்றே என்பதை மனதில் வைத்தால் கடனை பற்றிய கவலை வீண் கவலை.

No comments:

Post a Comment