Friday, August 15, 2014

சிவபூஜையில் பிரதான இடம் வகிப்பது வில்வம் ...

சிவபூஜையில் பிரதான இடம் வகிப்பது வில்வம் ...

சிவபூஜையில் பிரதான இடம் வகிப்பது வில்வம், ஒரு ஒற்றை வில்வ இலை, சிவபூஜையில் ஓராயிரம் மலர்களுக்கு சமமாகிறது. இந்த வில்வம் ஒரு கல்ப மூலிகையும் கூட உஷ்ணம் தப்பதில் ...வில்வம் முன்னிலை வகிக்கறது. இதற்கு நேரானது “ துளசி “ இது உஷ்ணாகாரம் இதன் குணம். உடலின் வெப்பத்தைத் தணிப்பதில் வில்வம் நிகரற்றது. ஒரு ஆச்சரியம்... சிவமாகிய பரமன் அழித்தல் தொழில் புரிபவன். அழிப்பது என்பது ஒரு வினை. எதை அழித்தாலும் அது ஒன்றாகி இரண்டாகிப் பிரிஉம் இறுதியில் சாம்பலே மிஞ்சும். இந்த விளைவால் வெப்பம் உருவாகும். அணு விஞ்ஞானம் இதன் அடி ஒற்றியே உள்ளது. சிவத்தைத் தியானிக்கும் மனதிலும் காம, குரோத, லோப, மத, மாச்சரியங்கள் அழியும். அதனால் உருவாகும் வெப்பம் தணியவே வில்வம் முன் நின்றது. வில்வார்ச்சனை என்பது வெப்பம் தணிப்பது. அகத்திலும், புறத்திலும் வெப்பம் தணிய வைப்பது. உடலில் உயிரும் வெப்பச் சுரளாகவே உள்ளது. வெப்பத்திடம் இயக்க கதியே பிரதானம். அது குளிர்ந்தால் இயக்கமற்ற சமநிலை வாய்க்கிறது; சிவமும் வில்வமும் இப்படிப் பல சூட்சுமங்களைக் கொண்டு விளங்குவதை என்னென்பது

No comments:

Post a Comment