Wednesday, October 16, 2013

பலன் தரும் துதி : (பஞ்சமற்ற, சுக வாழ்வு கிட்ட...)


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் அருளிய திருப்பாவை

பொதுப்பொருள்: மூவடியால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமனுடைய சிறப்பை பாடியபடி பாவை நோன்பு நோற்போம். இவ்வாறு அவன் புகழ் பாடினால், உலகம் முழுதும் மும்மாரி மழை பெய்து தண்ணீர்ப் பஞ்சம் நீங்கும். நெல் செழித்தோங்கி வளரும். மீன்கள் வயல்வெளிகளில் துள்ளிக் குதிக்கும். குவளை மலர்களில் வண்டுகள் தேனருந்தி கிறங்கிக் கிடக்கும். பசுக்கள் பாலை நிரம்பத் தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த பாசுர பாராயண பலன் தரும்.

(வாமனஜெயந்தி அன்று (16.9.2013) இப்பாடலைப் பாடி வாமனரின் பேரருளால், ஆண்டாளின் திருவருளால் பஞ்சம், பட்டினி அற்றப் பெருவாழ்வு பெறுவோம்.)

No comments:

Post a Comment