Wednesday, October 16, 2013

எல்லா வருத்தங்களும் இல்லாமல் போக

பலன் தரும் மந்திரம் : (எல்லா வருத்தங்களும் இல்லாமல் போக)

கருத்துகள்

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ கூறிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமதைத் தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி
காமாட்சி.
துக்க நிவாரணி அஷ்டகம்

பொதுப்பொருள்:

வாட்டி வருத்தும் தொல்லைகள் இனிமேல் இல்லை என்ற ஆறுதலான உன் அமுத மொழியை எனக்குக் கூறிடுவாய் அம்மா. சுடர்  போன்ற ஒளி பொருந்திய அமுதம் போன்றவளே, உன் இனிய மொழியால் ஆறுதல் அளித்து எனக்கு சுகத்தை அளிப்பாய். என்னை வாட்டும்  வினைகளை, இருட்டில் ஒளிபோல் வந்துப் பொசுக்கி விரட்டிடம்மா. சங்கரி, கௌரி, க்ருபாகரி, சர்வ துக்க நிவாரணியான காமாட்சியே, எனக்குத் திரு வருள் புரிவாய் அம்மா.

No comments:

Post a Comment