Sunday, November 24, 2013

திருவாசகம் தந்தருளிய மாணிக்கவாசகப் பெருமானின் பெருமை

திருவாசகம் தந்தருளிய மாணிக்கவாசகப் பெருமானின் பெருமையை, அவரின் கருணையை உலகம் இன்னும் முழுமையாக உணரவில்லை. திருவாசகத்திற்கும் இதுவரை யாரும் முறையான உரை எழுத முடியவில்லை,காரணம்,இறைவனிடம் உருகி உருகி நெருங்கும்பொது அவன் அருளால் அது புலப்படும்.அவன் அருளால் அவன் தாள் வணங்கி என்பதும் மாணிக்க வாசகப்பெருமானின் அனுபவ வாக்காகும்.மரணமிலாப் பெருவாழ்வு அடைய திறவுகோல் திருவாசகமே..

திருப்பெரும்துறை என்னும் ஆவுடையார்கோயிலில் எம்பெருமான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர், மனித உருவில் வந்து மாணிக்கவாசகப் பெருமானுக்கு காட்சியருளி மெய்ப்பொருள் உணர்த்தி ஆட்கொண்டருளினார்கள். குருவாய் இறைவனே வந்து அருளியதால் இதுவே உலகின் குரு தலமாகும்.

குருவின் திருவருள் பெற்றின்புற, பல பிறவிகளில் ஏற்பட்ட குருவின் சாபங்கள் நீங்கி வாழ்வு நலம் பெற, ,நவகோள்களின் தோஷங்கள் நீங்கிட, குறிப்பாக குரு கிரகத்தின் தோஷங்கள் நீங்கி,உங்கள் வாழ்வு சிறக்க, சமயம் வாய்க்கும்போதெல்லாம் இவ்வாலயம் சென்று பக்தியோடு அருள்மிகு ஆத்மநாத சுவாமிகளையும், சத்குரு மாணிக்கவாசக பெருமானையும் பக்தியோடு,மனமுருகி வழிபட்டு வாருங்கள்.வாழ்வில் வளம் சேர்வதை அனுபவத்தில் உணருங்கள்.

புதுக்கோட்டை அல்லது தஞ்சாவூரிலிருந்து, அறந்தாங்கி மார்க்கமாக ஆவுடையார்கோவில் செல்லலாம். புதுக்கோட்டையிலிருந்து 45 கி.மீ தூரம்தான்.

நன்றி: தர்மலிங்கம் அடிகளார்

No comments:

Post a Comment