Saturday, November 30, 2013

" காலை கடம்பர் ,மதியச் சொக்கர் (ஐயர் மலை) மாலை ஈங்கோயார் "
என்பதாய் முன்று ஸ்தங்களிலும் எந்நாளிலும் குறிப்பாய் .கார்த்திகை மாத ஞாயற்றுக்கிழமைகளில் பக்திப் பூர்வமாய் ஒரே தினத்தில் ஆற்ற வேண்டிய மூன்று தல தரிசன வழிபாட்டு முறை ஒன்றுண்டு.
***திருச்சி-கரூர் இடையில் குளித்தலையும் , முசிறி அருகே ஈங்கோய் மலையும் உள்ளன., மிகவும் சக்தி வாய்ந்த பாதயாத்திரை இது.
***முந்தைய யுகமொன்றில் முத்கல மாமுனி எனும் உத்தம மஹரிஷி அகஸ்தியரின் அறிவுரைப்படி இதனை நித்தய வழிபாடாய் பன்னெடுங்காலம் ஆற்றி வந்தார் .
• முத்கல கோத்திரம் எனும் வகை தற்போதும் உண்டு. முத்கல புராணம் என்பதாய் பிரபஞ்சத்திலேயே ஒரு மஹரிஷியின் பெயரிலேயே ஒரு புராணம் அமைந்திருக்கும் ஒரே மாமுனியே முத்கலர்.
-- ஜுன்2012 ஸ்ரீ அகஸ்தியர் விஜயம் இதழில் இருந்து தொகுத்தது
===============================================
1) காலை (கடம்பவனேஸ்வரர் ) இருப்பிடம் :- கரூரில் இருந்து 35 கி.மீ., தூரத்தில் குளித்தலை இருக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து நடந்தே சென்று விடலாம்.
2) மதியம் (ரத்தினகிரீஸ்வரர்) இருப்பிடம் - கரூர் - திருச்சி மார்க்கத்தில் உள்ள குளித்தலை சென்று அங்கிருந்து மணப்பாறை செல்லும் வழியில் அய்யர் மலை உள்ளது.
நகரின் மத்தியில் கோயில் . திருவாட்போக்கி(ஐயர்மலை) ஐவர் மலை, சிவாயமலை, ரத்தினகிரி எனப் பல பெயர்களை தாங்கியிருக்கும் சக்தி வாயிந்த தலம் ., கிரிவலம் வருதல் மிகச் சிறப்பு
3) மாலை (ஈங்கோய் மலை) இருப்பிடம் :- முசிறி சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள இவ்வூருக்கு டவுன்பஸ்சில் செல்லலாம். மாலை 6மணி வரை தாம் திறந்திருக்கும்.,
குறிப்பு : கடம்பர்-ஐயர்மலை நடந்து விடலாம் . ஈங்கோய் சற்று தொலைவில் உள்ளது..,சென்ற வருடம் யாம் முயற்ச்சித்து பார்த்தோம் .. காலை 6மணிக்கு கடம்பர் தலத்தில் தரிசனம் செய்து விட்டு ஐயர் மலை (ஏறி) தரிசனம் செய்து கிரிவலம், வந்து பின்பு மீண்டும் குளித்தலை நோக்கி பாதி தூரம் வருவதற்குள் மணி 4ஆகி விட்ட்து.. பின்பு அங்கிருந்து பேருந்தில் ஈங்கோய் சென்று வழிபட்டோம் .. அவரவரால் முடிந்தவரை முயறச்சி செய்து பார்க்கலாம்.

No comments:

Post a Comment