Sunday, November 24, 2013

ஒன்றிட இருந்தேன் வேலவா


ஒன்றிட இருந்தேன் வேலவா
இருபொழுது உணர்ந்தேன்
முப்பொருள் வேண்டினேன்
நால்வேதம் அறியேன்
ஐம் புலனும் அடக்கேன்
அறு சுவையும் பிரியேன்
ஏழுலகம் வேண்டேன்
அட்டமா சித்தியதும் கிட்டேன்
நவ கோள்களில் சுழன்றேன்
பத்தினி ஓர் தாய் மடியில் பிறப்பு ஏன்
ஒன்றிடவா பிறந்தேன் வேலவா

No comments:

Post a Comment