Sunday, February 21, 2016

சிதம்பரம் கோவிலில் உள்ள ஸ்ரீநடராஜருக்கு ஓர் ஆண்டுக்கு 6 முறை அபிஷேகம் நடைபெறுகிறது.

.


சிதம்பரம் கோவிலில் உள்ள ஸ்ரீநடராஜருக்கு ஓர் ஆண்டுக்கு 6 முறை அபிஷேகம் நடைபெறுகிறது

* சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் கனகசபையில் மாலை அபிஷேகம்.
* ஆனி மாதத்தில திருமஞ்சன தரிசன விழா அன்று ஆயிரங்ககால் மண்டபத்தில் அதிகாலை 4 மணிக்கு அபிஷேகம்.
* ஆவணி மாதத்தில் பூர்வபட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்.
* புரட்டாசி மாதத்தில் பூர்வபட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்.
* மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை 4 மணிக்குஅபிஷேகம்.
* மாசி மாதத்தில் பூர்வபட்ச சதுர்த்தசியில் கனகசபையில் மாலையில் அபிஷேகம்.
இதில் ஆனித்திருமஞ்சனம் மற்றும் ஆருத்ரா தரிசன விழாவின் போது நடைபெறும் மகா அபிஷேகம் சிறப்பு பெறுகிறது.
தேவர்களின் வைகரைப் பொழுது மார்கழி மாதம்,காலை பொழுது மாசி மாதம்,உச்சிப்பொழுது சித்திரை மாதம்,மாலை பொழுது ஆனி,இரவு பொழுது ஆவணி, அர்த்தசாமம் புரட்டாசி என்பர்
எனவே இன்று அருகில் உள்ள சிவாலயம் சென்று நடராஜருக்கு நடைபெரும் அபிஷேகங்களில் கலந்து கொண்டு தில்லை அம்பல கூத்தனின் அருள் பெருவோம்
திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment